Jump to content

திருகுறளும் தெருகுரலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருகுறளை பற்றி எல்லோரும் கேள்விபட்டு இருப்பீங்கள் அதனை இன்றைய முறையில் ஜம்மு கோஷ்டி கதைத்தா எப்படி இருக்கும் என்று பார்போமா

1)கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவான்

நற்றாள் தொழாஅர் எனின்

பொருள்

தூய்மையான அறிவு வடிவா விளங்கும் கடவுளுடைய நல்ல திருவடிகளை வணங்காமல் ஒருவர் இருந்தால்,அவர் கற்ற கல்வியினால் ஏற்படும் பயன் என்ன?

யம்மு கோஷ்டி கதைத்தா

தலை என்ன தான் படிச்சு டிகிரி முடித்தாலும் சாமியின்ட காலை கும்பிடாட்டி வேலையில்லை

2)யானோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

பொருள்

நான் பார்க்கும் போது அவள் தலைகுனிந்து நிலத்தை பார்ப்பாள்,நான் பார்க்காத போது

அவள் என்னை பார்த்து மெல்லச் சிரித்து தனகுள் மகிழ்வாள்.

ஜம்மு கோஷ்டி கதைத்தா

மச்சி நான் பார்க்கும் போது துண்டு கீழே பார்கிறா நான் பார்காம இருக்கும் போது துண்டு

நேரபார்கிறாள்டா.

3) கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்சொற்கள்

என்ன பயணும் இல

பொருள்

கண்களோடு கணகள் நோக்கால் பொருந்திய அன்பு செய்யுமானால் வாய்சொற்களால் எந்தப் பயணும் இல்லை

ஜம்மு கோஷ்டி சொன்னா

மச்சி கணணியில் அடிக்கிற அரட்டை மாதிரி வராது என்ன தான் வாயால அரட்டை அடித்தாலும்

Link to comment
Share on other sites

புத்து இது என்ன யம்முகோஷ்டியை இழுத்து இருக்கிறீங்க

:angry: :angry:

Link to comment
Share on other sites

புத்தன் நீங்கள் தெருக்குரலில் பயன்படுத்திய துண்டு என்ற சிலேடை வார்த்தையை ரொம்ப ரொம்ப நாட்களுக்குப் பின் இப்போது கேள்விப்படுகிறேன். மீண்டும் பழைய ஞாபகங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துண்டு? மொழியைத் தாண்டிய சொல் அது,

நல்ல துண்டு= ஹெட கால்ல= நல்ல பீஸ்

Link to comment
Share on other sites

ஹீ ஹீ புத்து இதெல்லாம் என்னப்பா கதை..........? இலங்கையில இருக்கிற காவியல்தான் அட்டகாசம் என்றால். காவி தரித்த நீரும் இப்படியா

ஆனல் 100% சரி, துண்டு பார்த்து நாளாச்சு, முந்தியெல்லாம் படிக்கும் போது ஒரு நாளுக்கு குறைஞ்சது ஒரு 5 துண்டாச்சும் பாக்கலாம்

Link to comment
Share on other sites

ஹீ ஹீ புத்து இதெல்லாம் என்னப்பா கதை..........? இலங்கையில இருக்கிற காவியல்தான் அட்டகாசம் என்றால். காவி தரித்த நீரும் இப்படியா

ஆனல் 100% சரி, துண்டு பார்த்து நாளாச்சு, முந்தியெல்லாம் படிக்கும் போது ஒரு நாளுக்கு குறைஞ்சது ஒரு 5 துண்டாச்சும் பாக்கலாம்

ஏன் இப்ப கூட தான் நான் பார்கிறனான்

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4)குறள்(336)

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருள்

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லாம இறந்து போனால் என்று சொல்லபடும் நிலையான்மை எனும் பெருமை படத்தது இவ்வுலகு.

தெருகுரல்

இன்றைக்கு செத்தா நாளைக்கு பால் மச்சி

Link to comment
Share on other sites

புத்து எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்து எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது

உங்கட மாமாவாச்சே அதனால தான் இப்படி :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட மாமாவாச்சே அதனால தான் இப்படி :P

அவர் உங்களுக்கு அண்ணாவும் ஆச்சே

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் உங்களுக்கு அண்ணாவும் ஆச்சே

:P

என்ன செய்யிறது ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி யாராவது இருக்க தானே செய்வார்கள்??? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி யாராவது இருக்க தானே செய்வார்கள்??? :P

பக்கத்தில தான் நிற்கிறார் சொல்லிவிடுறேன்

:P

Link to comment
Share on other sites

அவர் உங்களுக்கு அண்ணாவும் ஆச்சே

:P

பெரிய கண்டுபிடிப்பு புத்து

:angry:

என்ன செய்யிறது ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி யாராவது இருக்க தானே செய்வார்கள்??? :P

ஏன் சொல்லமாட்டீங்க

:angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கண்டுபிடிப்பு புத்து

:angry:

அட மருமோனை அப்படி சொல்வேனா உங்களின்ட அருமை தங்கைச்சி தான் சொன்னவா

:unsure::(

Link to comment
Share on other sites

அட மருமோனை அப்படி சொல்வேனா உங்களின்ட அருமை தங்கைச்சி தான் சொன்னவா

:unsure::(

அது தானே பார்த்தேன் மாம்ஸ் என்னை பற்றி சொல்லுறதாவது அவா விளையாட்டுக்கு தான் சொல்லி இருப்பா அதற்கு ஓவரா சிரிக்க தேவையில்லை

:angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5)

குறள் (280)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்து ஒழித்து விடின்

பொருள்

உலகு பழிக்கும் தீய ஒழுக்கங்கத்தை விட்டுவிட்டால் மொட்டை அடித்தால் ,சடைவளர்த்தல் ஆகிய புறகோலங்கள் வேண்டாம்.

தெருகுரல்

ஏன்டா கள்ளசாமி வேசம் ஒழுங்காக மனிசனா வாழு

6)கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.

பொருள்

நேராக இருந்தாலும் அம்பு கொடியது,வளைவுடன் இருந்தாலும் யாழின் கொம்பு நன்மையானது மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணரவேண்டும்.

தெருகுரல்

மச்சி யாழில தேசியத்திற்கு எதிராக கருத்து எழுதுற ஆட்களை வெட்டாம நம்ம்ன்டை அரட்டையை குறை சொல்பவர்கல் உணரவேண்டும் .

7)சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்துவிடு

பொருள்

சிறிய படை உடையவன் தக்க இடத்தில் பொருந்தி நின்றால் பெரிய படை உடையவனும் தன் ஊக்கம் அழிவான்

தெருகுரல்

பரமசிவன் கழுத்தில இருந்து பாம்பு கேட்டதாம் கருடா செளக்கியமா

Link to comment
Share on other sites

புத்து திருவள்ளுவர் ஆகிற பிளானோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து திருவள்ளுவர் ஆகிற பிளானோ

நான் திருவள்ளுவர் ஆகல்ல தெருவள்ளுவர் ஆகிற பிளான்

அவன் அவன் பெரிசாகிறான் சும்மா இருக்கிற ஜம்முவை சில பெரிய மனிசன் ஆக்கிறாங்க நாம ஆகினா தான் என்ன மருமோனே

:P

Link to comment
Share on other sites

நான் திருவள்ளுவர் ஆகல்ல தெருவள்ளுவர் ஆகிற பிளான்

அவன் அவன் பெரிசாகிறான் சும்மா இருக்கிற ஜம்முவை சில பெரிய மனிசன் ஆக்கிறாங்க நாம ஆகினா தான் என்ன மருமோனே

:P

அட மாம்ஸ்க்கு பெரிய ஆள் ஆகிற பிளான் போல கவனம் மாப்ஸ் கூட இருந்தே ஆப்பு வைத்திடுவாங்க பெரிய ஆள் ஆகினீங்க என்றா

:P

Link to comment
Share on other sites

தெருவள்ளுவரின்ட சிஷ்யனா நான் இணையிறன் வேற யாரும் இணைய போறீங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருவள்ளுவரும் தெருக்குறள் பிரமாதம்

நன்றி நன்றி

:P

தெருவள்ளுவரின்ட சிஷ்யனா நான் இணையிறன் வேற யாரும் இணைய போறீங்களோ?

தாராளமாக இணையலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.