Jump to content

5 முறை உலக சாம்பியன், 25 தங்கப் பதக்கம்,`சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' - யார் இந்த சிமோன் பைல்ஸ்?


Recommended Posts

Simone Biles won five gold medals at this week’s world championships.

ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை.

சிமோன் பைல்ஸ்... எங்கேயோ கேட்ட பெயர் போல் உள்ளதா... 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில், ஆர்டிஸ்ட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸின் `வால்ட்' பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். தீபா, நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டபோது, வெள்ளி வென்ற மரியா பஸேகாவை விட 0.713 புள்ளிகள் அதிகம் பெற்று தங்கத்தை வென்றவரே சிமோன் பைல்ஸ்.

அதே ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய 19 வயதிலேயே 4 தங்கம், 1 வெண்கலம் வென்ற இவருக்கு, நிறைவு விழாவின்போது அமெரிக்க நாட்டு கொடியை ஏந்தும் வாய்ப்பும் கிடைத்தது. அன்று அனைவரையும் அசத்திய அந்த இளம் வீராங்கனை, இன்று அமெரிக்காவின் அடையாளமாக நிற்கிறார்.

சிமோனுடன் சேர்த்து நான்கு குழந்தைகளைப் பெற்ற அவரது தாயால், அவர்களை முறையாக வளர்க்க முடியாமல் போய்விட்டது. அமெரிக்காவின் `ஃபாஸ்டர் கேர்' கட்டமைப்புக்குள் சிமோன் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, சிமோனையும் அவரது தங்கையையும் ஒரு தாத்தாவும் பாட்டியும் தத்தெடுத்து வளர்த்தனர். ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகிற்கு வந்த சிமோன், அந்தத் துறையில் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை.

5 முறை உலக சாம்பியன் பட்டம், மொத்தமாக 25 தங்கப்பதக்கங்கள், 2015 மற்றும் 2019-ல் `அமெரிக்காவின் சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' பட்டம் எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்த சிமோன், மீண்டும் மீண்டும் தன்னுடைய சாதனைகளையே முறியடித்துக்கொண்டிருக்கிறார் . பல நேரங்களில் ஜிம்னாஸ்டிக்ஸில் 0.1 மற்றும் 0.01 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். அப்படிப்பட்ட விளையாட்டில், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பின் ஆல்ரவுண்ட் பிரிவில், 2.1 புள்ளிகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றார் சிமோன்.

ஜிம்னாஸ்டிக்ஸில் ஏற்கெனவே இருக்கும் வல்லமை பெற்றிருக்கும் வீரர்கள், தாங்களாகவே உருவாக்கிய திறன்களைப் போட்டிகளில் செய்து காட்டியபின், அதற்கான மதிப்பீடு புள்ளிகளைப் பெற, சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் களகத்துக்கு அனுப்பப்படுவர். அந்தத் திறன்களும் புதிதாக சேர்க்கப்பட்டு, அந்தந்த வீரர்களின் பெயரில் அழைக்கப்படும். அப்படி சிமோன் பைல்ஸ் தன் பெயரில், தரை பயிற்சியில் 2 திறன், (பைல்ஸ், பைல்ஸ் II ), வால்ட் பிரிவில் ஒரு திறன், பேலன்ஸ் பீமில் ஒரு திறன் எனப் பல்வேறு திறன்களை வைத்துள்ளார்.

இத்தனை திறன்களைத் தன் பெயரில் பொறித்து வைத்திருக்கும் சிமோன், ``என்னைப் பொறுத்தவரை என் பெயரில் வெற்றிகளைப் பெறுவதே எனக்கு உற்சாகம் அளிக்கிறது. களத்திற்குச் சென்று என்னால் புதிய திறன்களை எத்தகைய அழுத்தத்திலும் செய்துகாட்ட முடியும். இப்படி நிரூபித்துக் காட்டுவது எனக்குப் பெரும் உந்துதலாக உள்ளது" என்கிறார்.

2018-ம் ஆண்டு, தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது, நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டபோதும் 4 தங்கம், 1 வெண்கலம் வென்றார் சிமோன். அவர் களத்தில் மட்டும் வீராங்கனையல்ல. தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைத் தைரியமாக உலகிற்குச் சொல்லி மற்ற பெண்களையும் மனம்திறக்கவைத்தவர்.

லேரி நாஸர் என்ற விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவர், தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக வெளியுலகிற்குச் சொன்னார். இவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் குற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பற்றி பேசிய சிமோன், ``நாங்கள் அவர்களை (அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் கழகம்) எப்படி நம்ப முடியும்? எப்போதும் புது ஆள்களைக் கொண்டுவருகிறார்கள். பல வருடங்களாக எனக்குத் தெரிந்தவர்களே என்னை ஏமாற்றியதால், புது ஆள்களைக் கொண்டுவரும்போது என்னைச் சுற்றி சுவர்களை எழுப்பிக் கொள்கிறேன். எங்களால் செய்ய முடிந்தது, அவர்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புவது மட்டுமே. ஆனால், அந்த நம்பிக்கையும் ஒரு `டைம் பாம்'தான். காத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

2016-ல் தன் வாழ்க்கை வரலாற்றை `கவரேஜ் டு சோர்' என்ற தலைப்பில் 'மிசேல் பர்ல்போர்ட்' என்ற பத்திரிகையாளருடன் சேர்ந்து எழுதினார். இந்தப் புத்தகம், அதிகம் விற்பனையானது. 2020 ஒலிம்பிக் தான் பங்கேற்கப் போகும் கடைசி போட்டி என்று அறிவித்துள்ளார் சிமோன். தங்க மங்கையாகவே ஓய்வுபெற வாழ்த்துகள்!

https://sports.vikatan.com/sports-news/gymnast-simone-biles-ready-to-rock-in-2020-olympics

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.