Jump to content

மலையகத்தின் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீ


Recommended Posts

மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. 

IMG_1576229245276.jpg

இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை தனதாக்கி கொண்டார். 

இது இலங்கைக்கும் குறிப்பாக மலையகத்திற்கும் மலையக பெண்களுக்கும் பெருமையை தேடிக் கொடுத்து உள்ளது

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்டம் என்பது மலையகத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பிரசேத்தில் இருந்து இந்த சாதனையை நிலை நாட்டியமை பெருமையிலும் பெருமை, சாதனையிலும் சாதனை என்று தான் சொல்ல முடியும்.

சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தனது ஆரம்ப கல்வியை பெரட்டாசி தோட்டம் மேமொழி தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்து அயரி பிரிவில் அமைந்திருக்கும் அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரை கல்வி பயின்று உள்ளார். தொடர்ந்து வறுமை காரணமாக கல்வியை நிறுத்திவிட்டு தொழிலுக்கு சென்றுள்ளார். தாய் ஏ.தனலெட்சுமி தந்தை எம். சின்னக்கருப்பன் இருவரும் தோட்ட தொழிலாளிகள் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர்.

சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தற்போது கண்டி பல்லேகலையில் அமைந்திருக்கும் லீனியா என்று அழைக்கப்படும் பிரபல ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்து வருகின்றார். இந்த ஆடைத் தொழிற்சாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆசிரி விஜேசிங்க தலைமையில் எல்.எப்.சீ (LFC) விளையாட்டு கழகம் ஒன்று நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது. 

இந்த விளையாட்டு கழகம் மூலம் நேபாளத்தில் இம்முறை நடைபெற்ற 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இந்த பெண்மணியுடன் 23 பேர் கலந்துக் கொண்டனர். 

இதன் போதே சின்னகருப்பன் பவாணிஸ்ரீ கத்தி சண்டை போட்டியில் கலந்துக் கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். 

இவருடன் சென்ற அனைவரும் பதக்கங்கள் வென்று நாடு திரும்பி உள்ள அதேவேளை மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சின்னகருப்பன் பவாணிஸ்ரீ வெற்றி பெற்றமை சாதனைக்குறியதே.

https://www.virakesari.lk/article/71006

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.