Jump to content

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

(பாறுக் ஷிஹான்)

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்துக்கு கருணா வெள்ளிக்கிழமை(13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.
இதுத் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கருணா அம்மான், “அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம் இவ்வாறு குறைகளுடன்  நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

இங்கு பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றதை நேரடியாக நான் பார்த்தேன்.இந்த பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாகக் காணப்படுவதை ஏற்க முடியாதுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இந்த பஸ் தரிப்பிடத்திற்கு 10 பில்லியன் நிதியுதவியை முதற்கட்டமாக வழங்க  நடவடிக்கை  மேற்கொள்ள உள்ளேன்.

நீண்ட தூரம் பிரயாணம் செய்யவரும் பயணிகள் தங்குவதற்கும்  குறிப்பாக அமர்ந்து கொள்வதற்கான வசதிகளும்  என்னால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” எனவும் தெரிவித்துள்ளார்.
 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கலமன-பஸ-தரபப-நலயம-இரவல-சனற-ஆரயநதர-கரண/175-242446

Link to comment
Share on other sites

  • Replies 162
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பகலில் ஆய்வு செய்ய படாதா.?  அதென்ன.. ஒரே நைற் ரூட்டி .. ஓவர் ரைம்..?  😊

நல்லது நடந்தால் சரி ; வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஏன் பகலில் ஆய்வு செய்ய படாதா.?  அதென்ன.. ஒரே நைற் ரூட்டி .. ஓவர் ரைம்..?  😊

நல்லது நடந்தால் சரி ; வாழ்த்துக்கள்..💐

நைற்ரைம்ல  பஸ் ஸ்ராண்ட் சைற் போய் பழக்கத்திலை வந்த பழக்க தோசமா இருக்கும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலில் ஆய்வு செய்தால் இரண்டு மனுசி மாரும்  சிங்கனை பிச்சு எடுத்து போடுங்கள் என்ற பயமாக்கும் தலைக்கு  மேல் பிள்ளைகளை வளர்ந்துவிடடன இனித்தானே இருக்கு அக்கினி நட்ச்சத்திரம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் தரிப்பு நிலைய புனரமைப்பு பணிகளுக்கு பில்லியன் கணக்கில் காசு புரழுதென்றால் நம்பமுடியுமா? சரி இவர் யார் இது எல்லாம் செய்வதற்கு? மந்திரியா நாடாளுமன்றத்தில் பிரதிநிதியா எங்கோ ஊழல் நடக்கப் போவது என்பது மட்டும் உறுதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

பகலில் ஆய்வு செய்தால் இரண்டு மனுசி மாரும்  சிங்கனை பிச்சு எடுத்து போடுங்கள் என்ற பயமாக்கும் தலைக்கு  மேல் பிள்ளைகளை வளர்ந்துவிடடன இனித்தானே இருக்கு அக்கினி நட்ச்சத்திரம் .

ஒரு இனத்தையே காட்டிக்கொடுத்து அழித்தவருக்கு தன்ணுடைய குடும்பத்தை அழிக்க எவ்வழவு நேரமாகும். ?

ஆதலால் பொண்டாட்டிகள்மார் ஒண்ணுமே செஞ்ஞப்போறதில்ல ஓய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

ஒரு இனத்தையே காட்டிக்கொடுத்து அழித்தவருக்கு தன்ணுடைய குடும்பத்தை அழிக்க எவ்வழவு நேரமாகும். ?

ஆதலால் பொண்டாட்டிகள்மார் ஒண்ணுமே செஞ்ஞப்போறதில்ல ஓய்.

நீங்கள்  களத்துக்கு  புதுசு நாங்க எழுதி களைத்த விடயத்தை தொடங்கிறின்கள்  பின்னேரம் அவரின் தங்கை என்று ஒரு பாசமலர் வேலையால்  வந்து அண்ணனுக்கு வக்காலத்து வாங்குவா பாருங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ராசா .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் கருணா அம்மான் என்றாலே கருத்துக்கள் தெறிக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் என்பதே  அவரது பெயர்  

தற்போதைய  முகவரி  எல்லாமே...

அதிலிருந்தே அவரைப்பற்றி  பேசவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்களத்தில் கருணா அம்மான் என்றாலே கருத்துக்கள் தெறிக்கிறது 

ஒட்டுமொத்த இனத்தயும் வித்தவனெல்லோ. அதுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

ஒட்டுமொத்த இனத்தயும் வித்தவனெல்லோ. அதுதான் .

ஒருவந்தானா விற்றான்???

Link to comment
Share on other sites

சான்றோர்களே சிலசமயம் ஊரைக் காப்பாற்ற சண்டியர்களை தேடி அலைய நேர்ந்துவிடுகிறது. சமூக அரசியல் வரலாற்றின் புதிர்களை முழுமையாக விடுவித்தவர் யாருமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஒருவந்தானா விற்றான்???

துரோகம் தமிழரின் இரத்தத்தில் ஊறியுள்ளது . அதன் உச்சம் தொட்டவர் வினாயகமூர்த்தி முரளீதரன். 

(ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு 🤔 ?)

1 hour ago, poet said:

சான்றோர்களே சிலசமயம் ஊரைக் காப்பாற்ற சண்டியர்களை தேடி அலைய நேர்ந்துவிடுகிறது. சமூக அரசியல் வரலாற்றின் புதிர்களை முழுமையாக விடுவித்தவர் யாருமில்லை.

உண்மைதான் கவிஞரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு இரவில எல்லோரும் தூங்கின பிறகு  சாதிச்சுதான் பழக்கம் பாருங்கோ

Link to comment
Share on other sites

Quote

இந்த பஸ் தரிப்பிடத்திற்கு 10 பில்லியன் நிதியுதவியை முதற்கட்டமாக வழங்க  நடவடிக்கை  மேற்கொள்ள உள்ளேன்.

ஒரு பஸ் தரிப்புக்கே இவ்வளவு எனில் ..................... அல்லது தமிழ்மிரருக்கு மில்லியன், பில்லியன் தெரியாமல் போனதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிதியின் தொகை தான்   நேரம் காலம்  தெரியாமல் ஆளை சுத்த வைக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

துரோகம் தமிழரின் இரத்தத்தில் ஊறியுள்ளது . அதன் உச்சம் தொட்டவர் வினாயகமூர்த்தி முரளீதரன். 

(ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு 🤔 ?)

உங்களுக்கு விநாயகமூர்த்தி மூர்த்தி முறளிதரன் என்ற ஒருத்தரை மட்டுமே தெரியும் இன்னும் பலர் பெயர தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியாது போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு விநாயகமூர்த்தி மூர்த்தி முறளிதரன் என்ற ஒருத்தரை மட்டுமே தெரியும் இன்னும் பலர் பெயர தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியாது போல

உங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள்.

முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு விநாயகமூர்த்தி மூர்த்தி முறளிதரன் என்ற ஒருத்தரை மட்டுமே தெரியும் இன்னும் பலர் பெயர தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியாது போல

ஐயா,  

உங்களுக்கு தெரியும்தானே. வெளிப்படையாக கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

முரளிதரன் என்பதே  அவரது பெயர்  

தற்போதைய  முகவரி  எல்லாமே...

அதிலிருந்தே அவரைப்பற்றி  பேசவேண்டும்

தலைவர் பிரபாகரன் கருணாவின் படங்களை அழிக்க வேண்டாம் என்றும் கருணா அம்மானின் வரலாறும் போராட்டத்தின் வரலாற்றின் ஒரு அங்கம் என்றும் சொன்னதாக செந்தமிழன் சீமான் கூட அவரது அட்டகாசமான பேச்சு ஒன்றில் சொல்லியிருந்தார்!

கருணா அம்மான் ஜெயந்தன் படைகளோடு வந்து வன்னியில் ஜெயசுக்குறுவை நிறுத்தியிருக்காவிட்டால் போராட்டம் 2000 க்கு முன்னரே முடித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனையிறவு பெரும் தளத்தை புலிகள் வென்ற வரலாறும் இல்லாமல் போயிருக்கும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

தலைவர் பிரபாகரன் கருணாவின் படங்களை அழிக்க வேண்டாம் என்றும் கருணா அம்மானின் வரலாறும் போராட்டத்தின் வரலாற்றின் ஒரு அங்கம் என்றும் சொன்னதாக செந்தமிழன் சீமான் கூட அவரது அட்டகாசமான பேச்சு ஒன்றில் சொல்லியிருந்தார்!

கருணா அம்மான் ஜெயந்தன் படைகளோடு வந்து வன்னியில் ஜெயசுக்குறுவை நிறுத்தியிருக்காவிட்டால் போராட்டம் 2000 க்கு முன்னரே முடித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனையிறவு பெரும் தளத்தை புலிகள் வென்ற வரலாறும் இல்லாமல் போயிருக்கும்!!!

கருணா அம்மான் வரலாற்றில் இருப்பார் ஆனால் புலியாக அல்ல. வரலாற்றில் பெரும் தவறுகளை இழைத்தவர்களை வரலாறு மறக்காமல் பதிந்து வைத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் என் கருத்தை எதற்காக நீக்கினார்கள் என்று சொன்னால் நியாயமாய் இருக்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தலைவர் பிரபாகரன் கருணாவின் படங்களை அழிக்க வேண்டாம் என்றும் கருணா அம்மானின் வரலாறும் போராட்டத்தின் வரலாற்றின் ஒரு அங்கம் என்றும் சொன்னதாக செந்தமிழன் சீமான் கூட அவரது அட்டகாசமான பேச்சு ஒன்றில் சொல்லியிருந்தார்!

கருணா அம்மான் ஜெயந்தன் படைகளோடு வந்து வன்னியில் ஜெயசுக்குறுவை நிறுத்தியிருக்காவிட்டால் போராட்டம் 2000 க்கு முன்னரே முடித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனையிறவு பெரும் தளத்தை புலிகள் வென்ற வரலாறும் இல்லாமல் போயிருக்கும்!!!

பிரபாகரன் ஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் இவ்வளவு அழிவும் வந்திருக்காது ......

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பொடியள உசுப்பபேத்தியிருக்காவிட்டால் போராட வேண்டியிருந்திருக்காது .....

சிங்களம் நியாயமாக நடந்திருந்தால் அப்பாப்பிள்ளை உசுப்பேத்தியிருக்கமாட்டார் ........

வெள்ளயள் ஒட்டுமமொத்த நாட்டயும் சிங்களத்திடம் மட்டும் கொடுக்காதிருந்தால் இனப்பிரச்சனையே வந்திருக்காது .......

சங்கிலியன் போரில் தோற்காதிருந்திருந்தால் நாடு வெல்ள்ளயளிடம் போயிருக்காது........

...........................து......து ......து...

நாஞ் சொல்ரது ச்சரிதானே . ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள்.

முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ?

தான் துரோகம் செய்தாலும் பல ஆயிரம் போராளிகளை வெளியேற்றினார் இன்று பலர் உயிரோடு இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தான் துரோகம் செய்தாலும் பல ஆயிரம் போராளிகளை வெளியேற்றினார் இன்று பலர் உயிரோடு இருக்கிறார்கள் 

பிரபாகரன் ஒரு துரோகி என கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.