Jump to content

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா


Recommended Posts

33 minutes ago, கிருபன் said:

அண்ணே, 

நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும்.

 

மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும். 

100% சரியான கருத்து. 

Link to comment
Share on other sites

  • Replies 162
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணித்துணிந்த கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அண்ணே, 

நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும்.

 

மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும். 

எப்படி ?   காக்கை வன்னியன் என்று தற்போது கூறுவது போன்றா ?

வெளிப்படையாகவே துரோகம் செய்த ஒருவரை நூறு வருடங்கள் கழித்தா தீர்ப்பிடுவீர்கள்  ? யாரை தீர்ப்பிப்டுவீர்கள் ?அவரின் பூட்டப் பிள்ளைகளையா ?

அப்படியானால் கோத்தபாய விடயத்தில் மட்டும் ஏன் அவசரம் ? இனப்படுகொலை செய்தவரா என்று வரலாற்றிடம் விட்டுவிடுவோமா ?

சிங்களம் செய்தது இனவழிப்புதான் என்பதையும் வரலாறே தீர்ப்பிடட்டும் . விடலாமா ?

என்ன சொல்லப் போகிரீர்கள் ? இரண்டையும் ஒப்பிடக்கூடாது என்பீர்களா ?

( உலக வரலாறு முழுவதும் யுத்தத்தால் வந்த அழிவுகளைவிட நடுநிலைவாதிகளால் ஏற்பட்ட சேதம் அதிகம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

வெள்ளை சட்டை அணிந்த ஒருவரை கூறமுடியுமா ?

உதாரணத்துகெல்லாம்  ஒருவரை கூற முடியுமா சின்ன பிள்ளைதனமா இருக்கே உங்க கேள்வியெல்லாம்🙃🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உதாரணத்துகெல்லாம்  ஒருவரை கூற முடியுமா சின்ன பிள்ளைதனமா இருக்கே உங்க கேள்வியெல்லாம்🙃🙃

காட்டில் வாழ்ந்துவந்த ஒரு கழுதையும் குதிரையும் ஒர் நாள் சந்திதுக்கொண்டபோது கழுதை குதிரையிடம் கேட்டதாம் இரண்டுமிரண்டும் எத்தனை என்று. குதிரை சொன்னது நான்கு என்று. அதற்கு கழுதை சொன்னது இல்லை இரண்டும் இரண்டும் ஐந்து என்று. இரண்டுமே ஒரு முடிவுக்கு வர முடியாமல் இறுதியாக சிங்கத்திடம் சென்றன. 

சிங்கம் இருவரின் வாதத்தையும் கேட்டபின் தீர்ப்பை பிவருமாறு கூறியது.

கழுதை கூறியதுதான் சரி , எனவே கழுதையார் போகலாம், ஆனால் குதிரைக்கு 25 சவுக்கடி கொடுக்கும்படி தீர்ப்பிட்டது.

ஐயோ சிங்கமே ஏன் இப்படி தீர்ப்பிட்டீர்கள், இரண்டும் இரண்டும் நான்குதானே. அதெப்படி இரண்டும் இரண்டும் ஐந்தாகும் என குதிரை கதறியது.

சிங்கம்  பின்வருமாறு கூறியது..

இரண்டும் இரண்டும்  ஐந்துதான். ஆனால்  யார் உன்னை கழுதையிடம் விவாதம் செய்யச்சொன்னது ?   யாரிடம் நீ விவாதம் செய்கிறாய்  என்பதை உணராதபடியால் தான் இவ்வளவு சங்கடமும். ஆதலினால் உனக்கு இதுதான் தண்டனை. 

(சத்தியமா  நான் குதிர ல்லீங்கோ)

 

நன்றி, இவ்வணக்கம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

காட்டில் வாழ்ந்துவந்த ஒரு கழுதையும் குதிரையும் ஒர் நாள் சந்திதுக்கொண்டபோது கழுதை குதிரையிடம் கேட்டதாம் இரண்டுமிரண்டும் எத்தனை என்று. குதிரை சொன்னது நான்கு என்று. அதற்கு கழுதை சொன்னது இல்லை இரண்டும் இரண்டும் ஐந்து என்று. இரண்டுமே ஒரு முடிவுக்கு வர முடியாமல் இறுதியாக சிங்கத்திடம் சென்றன. 

சிங்கம் இருவரின் வாதத்தையும் கேட்டபின் தீர்ப்பை பிவருமாறு கூறியது.

கழுதை கூறியதுதான் சரி , எனவே கழுதையார் போகலாம், ஆனால் குதிரைக்கு 25 சவுக்கடி கொடுக்கும்படி தீர்ப்பிட்டது.

ஐயோ சிங்கமே ஏன் இப்படி தீர்ப்பிட்டீர்கள், இரண்டும் இரண்டும் நான்குதானே. அதெப்படி இரண்டும் இரண்டும் ஐந்தாகும் என குதிரை கதறியது.

சிங்கம்  பின்வருமாறு கூறியது..

இரண்டும் இரண்டும்  ஐந்துதான். ஆனால்  யார் உன்னை கழுதையிடம் விவாதம் செய்யச்சொன்னது ?   யாரிடம் நீ விவாதம் செய்கிறாய்  என்பதை உணராதபடியால் தான் இவ்வளவு சங்கடமும். ஆதலினால் உனக்கு இதுதான் தண்டனை. 

(சத்தியமா  நான் குதிர ல்லீங்கோ)

 

நன்றி, இவ்வணக்கம். 

 

இப்படியே சொல்லி திரிந்த கழுதையார் ஓர் நாள் புலியிடம் சொல்ல புலி  சிங்கத்தை போல  பதில் சொல்லாமல் ஓங்கி அறைஞ்சதாம் ஓவறா தண்ணியடிச்சிட்டு ஒளறப்படாது என😎😁😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

ரதி, கருணா போன்ற அரசியல்வாதிகளின்  செயல்களை இப்படி ஜோக்காக விமர்சிப்பது இயல்பானதே. சும்மா சிரித்துவிட்டு நகரவேண்டிய எனது ஜோக்கை  இவ்வளவு சீரியசாக நீங்கள் எடுத்திருக்க தேவையில்லை என்பது எனது எண்ணம். போராட்டதை  அதன்  சரியான தவறான முடிவுகளை வி மர்சிக்கும் நான் போராளிகளை விமர்சிப்பதில்லை. மற்றப்படி கருணா 10  பொண்டாட்டி வைத்திருப்பது அவரது சுதந்திரம். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை( எண்டாலும் லைற்றா எனக்கு  பொறாமை தான். நம்ம வீட்ட எண்டா செருப்பு பிஞ்சுடுமே அந்த பொறாமை.) 😂

ஓ..கொஞ்சம் ஓவராய் ரியாக்ட் பண்ணிட்டேன் என்று நினைக்கிறேன்...மன்னிக்கவும் 

12 hours ago, கிருபன் said:

அண்ணே, 

நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும்.

 

மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும். 

இதைத் தான் நானும் சொல்லிட்டு வாறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு யாழ்ப்பாணி-மட்டக்களப்பான் குஸ்தியில இறங்கி இருக்கியள் போல.

1. ஒரு பகுதி ஏதோ கருணா மட்டுமே துரோகம் செய்தவர், அவரால் மட்டுமே போராட்டம் குட்டி சுவரானது என்பது போல எழுதுகினம். மிக இலகுவாக யாழில் இருந்து வந்த கோடாரிகாம்புகளை மறந்து விட்டு. மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான் மட்டும்தான் கண்டியளோ, யாழ்பாணத்தில போராடப்போறம் எண்டு வெளிக்கிட்டு ஆளையாள் போட்ட நபர்களை பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் காணாது 😂. கருணாவை குட்டும் போது ஓங்கி குட்டும் கைகளை கேபி ( கருணாவைவிட அதிகம் பாதிப்பு இவராலேயே) யை பற்றிய திரியில் காணவே கிடைக்காது? ஏன் ? ஏனென்றால் - அடிமனதில் ஊறிய யாழ் மையவாதம். வேறு ஒருவனை கைகாட்டி, அவனாலேதான் எம் அற்புத கனவு கலைந்ததென இலகுவாக கடந்து செல்லும்.

2. மற்றைய பகுதி - ஏதோ கருணா தப்பே செய்யவில்லை என்பது போலவும், அவர் சமாதானத்தை விரும்பினார், அசோகர் போல யுத்தத்தை வெறுத்தார் அதனால் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என சப்பை கட்டு கட்டுகிறனர். கருணா புலிகளிடம் இருந்து பிரிந்ததும், அதன் பின் செய்த அரசியலும், இப்போ செய்யும் அரசியலும் அனைத்துமே - கருணா என்ற தனிநபரின் சுயநலத்தை முன்வைத்தே செய்யப்பட்டன. செய்யப்படுகிறன. இதில் துளியளவும் தமிழர் நலனோ, மட்டகளப்பு மக்களின் நலனோ, யுத்த வெறுப்போ இல்லை. இங்கே பலர் தளம்பினாலும், மட்டில் இதையொட்டி மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். இன்றுவரை மட்டு மக்கள் இவரை அரசியலில் ஆதரிக்கவில்லை என்பது கண்கூடு.

முடிவாக இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கிய தமிழர்கள் (துரோகி என்ற பதத்தை வேண்டும் என்றே தவிர்கிறேன்) என்ற வரிசையில் கருணாவுக்கு ஏனையவர்களுடன் சேர்த்து ஒரு இடம் நிச்சயம் உண்டு. ஆனா அவரின் செயல் ஏனையோரைவிட மோசமானது என்பது யாழ்மையவாத சிந்தனையே.

2009 க்கு முன் எங்கோ வாசித்த நியாபகம். இத்தனை பொருள், உயிர் இழப்பை சந்திகாமல் - இலகுவாக தமிழர் போராட்டத்தை இலங்கை அடக்கி இருக்கலாமாம். தமிழர்களுக்கு தனிநாட்டை கொடுத்தால் போதுமாம். பிரபாவின் இறப்பின்  பின் தமிழர் தம்மில் அடிபட்டு அழிய, நாடு முழுமைக்குக்கும் 100% சிங்களமயமாகி இருக்குமாம்.

இப்பவே இப்படி, நல்ல வேளையாக உங்களுக்கு நாடு கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு யாழ்ப்பாணி-மட்டக்களப்பான் குஸ்தியில இறங்கி இருக்கியள் போல.

1. ஒரு பகுதி ஏதோ கருணா மட்டுமே துரோகம் செய்தவர், அவரால் மட்டுமே போராட்டம் குட்டி சுவரானது என்பது போல எழுதுகினம். மிக இலகுவாக யாழில் இருந்து வந்த கோடாரிகாம்புகளை மறந்து விட்டு. மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான் மட்டும்தான் கண்டியளோ, யாழ்பாணத்தில போராடப்போறம் எண்டு வெளிக்கிட்டு ஆளையாள் போட்ட நபர்களை பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் காணாது 😂. கருணாவை குட்டும் போது ஓங்கி குட்டும் கைகளை கேபி ( கருணாவைவிட அதிகம் பாதிப்பு இவராலேயே) யை பற்றிய திரியில் காணவே கிடைக்காது? ஏன் ? ஏனென்றால் - அடிமனதில் ஊறிய யாழ் மையவாதம். வேறு ஒருவனை கைகாட்டி, அவனாலேதான் எம் அற்புத கனவு கலைந்ததென இலகுவாக கடந்து செல்லும்.

2. மற்றைய பகுதி - ஏதோ கருணா தப்பே செய்யவில்லை என்பது போலவும், அவர் சமாதானத்தை விரும்பினார், அசோகர் போல யுத்தத்தை வெறுத்தார் அதனால் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என சப்பை கட்டு கட்டுகிறனர். கருணா புலிகளிடம் இருந்து பிரிந்ததும், அதன் பின் செய்த அரசியலும், இப்போ செய்யும் அரசியலும் அனைத்துமே - கருணா என்ற தனிநபரின் சுயநலத்தை முன்வைத்தே செய்யப்பட்டன. செய்யப்படுகிறன. இதில் துளியளவும் தமிழர் நலனோ, மட்டகளப்பு மக்களின் நலனோ, யுத்த வெறுப்போ இல்லை. இங்கே பலர் தளம்பினாலும், மட்டில் இதையொட்டி மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். இன்றுவரை மட்டு மக்கள் இவரை அரசியலில் ஆதரிக்கவில்லை என்பது கண்கூடு.

முடிவாக இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கிய தமிழர்கள் (துரோகி என்ற பதத்தை வேண்டும் என்றே தவிர்கிறேன்) என்ற வரிசையில் கருணாவுக்கு ஏனையவர்களுடன் சேர்த்து ஒரு இடம் நிச்சயம் உண்டு. ஆனா அவரின் செயல் ஏனையோரைவிட மோசமானது என்பது யாழ்மையவாத சிந்தனையே.

2009 க்கு முன் எங்கோ வாசித்த நியாபகம். இத்தனை பொருள், உயிர் இழப்பை சந்திகாமல் - இலகுவாக தமிழர் போராட்டத்தை இலங்கை அடக்கி இருக்கலாமாம். தமிழர்களுக்கு தனிநாட்டை கொடுத்தால் போதுமாம். பிரபாவின் இறப்பின்  பின் தமிழர் தம்மில் அடிபட்டு அழிய, நாடு முழுமைக்குக்கும் 100% சிங்களமயமாகி இருக்குமாம்.

இப்பவே இப்படி, நல்ல வேளையாக உங்களுக்கு நாடு கிடைக்கவில்லை.

குப்பைகளுள் ஒரு குண்டுமணி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு யாழ்ப்பாணி-மட்டக்களப்பான் குஸ்தியில இறங்கி இருக்கியள் போல.

1. ஒரு பகுதி ஏதோ கருணா மட்டுமே துரோகம் செய்தவர், அவரால் மட்டுமே போராட்டம் குட்டி சுவரானது என்பது போல எழுதுகினம். மிக இலகுவாக யாழில் இருந்து வந்த கோடாரிகாம்புகளை மறந்து விட்டு. மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான் மட்டும்தான் கண்டியளோ, யாழ்பாணத்தில போராடப்போறம் எண்டு வெளிக்கிட்டு ஆளையாள் போட்ட நபர்களை பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் காணாது 😂. கருணாவை குட்டும் போது ஓங்கி குட்டும் கைகளை கேபி ( கருணாவைவிட அதிகம் பாதிப்பு இவராலேயே) யை பற்றிய திரியில் காணவே கிடைக்காது? ஏன் ? ஏனென்றால் - அடிமனதில் ஊறிய யாழ் மையவாதம். வேறு ஒருவனை கைகாட்டி, அவனாலேதான் எம் அற்புத கனவு கலைந்ததென இலகுவாக கடந்து செல்லும்.

2. மற்றைய பகுதி - ஏதோ கருணா தப்பே செய்யவில்லை என்பது போலவும், அவர் சமாதானத்தை விரும்பினார், அசோகர் போல யுத்தத்தை வெறுத்தார் அதனால் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என சப்பை கட்டு கட்டுகிறனர். கருணா புலிகளிடம் இருந்து பிரிந்ததும், அதன் பின் செய்த அரசியலும், இப்போ செய்யும் அரசியலும் அனைத்துமே - கருணா என்ற தனிநபரின் சுயநலத்தை முன்வைத்தே செய்யப்பட்டன. செய்யப்படுகிறன. இதில் துளியளவும் தமிழர் நலனோ, மட்டகளப்பு மக்களின் நலனோ, யுத்த வெறுப்போ இல்லை. இங்கே பலர் தளம்பினாலும், மட்டில் இதையொட்டி மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். இன்றுவரை மட்டு மக்கள் இவரை அரசியலில் ஆதரிக்கவில்லை என்பது கண்கூடு.

முடிவாக இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கிய தமிழர்கள் (துரோகி என்ற பதத்தை வேண்டும் என்றே தவிர்கிறேன்) என்ற வரிசையில் கருணாவுக்கு ஏனையவர்களுடன் சேர்த்து ஒரு இடம் நிச்சயம் உண்டு. ஆனா அவரின் செயல் ஏனையோரைவிட மோசமானது என்பது யாழ்மையவாத சிந்தனையே.

2009 க்கு முன் எங்கோ வாசித்த நியாபகம். இத்தனை பொருள், உயிர் இழப்பை சந்திகாமல் - இலகுவாக தமிழர் போராட்டத்தை இலங்கை அடக்கி இருக்கலாமாம். தமிழர்களுக்கு தனிநாட்டை கொடுத்தால் போதுமாம். பிரபாவின் இறப்பின்  பின் தமிழர் தம்மில் அடிபட்டு அழிய, நாடு முழுமைக்குக்கும் 100% சிங்களமயமாகி இருக்குமாம்.

இப்பவே இப்படி, நல்ல வேளையாக உங்களுக்கு நாடு கிடைக்கவில்லை.

ஐயா நான் ஒன்றும் யாழ்ப்பாணத்தான் இல்லை.  KP யையும் ஒளித்துவைக்கவில்லை. தலைப்புக்குத்தான் எனது கருத்தை பதிவு செய்தேன்.

Just now, Kapithan said:

ஐயா நான் ஒன்றும் யாழ்ப்பாணத்தான் இல்லை.  KP யையும் ஒளித்துவைக்கவில்லை. தலைப்புக்குத்தான் எனது கருத்தை பதிவு செய்தேன்.

ஆனால் இறுதிப் பகுதியில் நீங்கள் கூறியது 100 விகிதமும் உண்மையான வார்த்தைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்களை தனித்து சொல்லவில்லை ஐயா. இங்கே பொதுவாக நடப்பதை மட்டுமே கூறினேன்.

16 minutes ago, Kapithan said:

ஐயா நான் ஒன்றும் யாழ்ப்பாணத்தான் இல்லை.  KP யையும் ஒளித்துவைக்கவில்லை. தலைப்புக்குத்தான் எனது கருத்தை பதிவு செய்தேன்.

ஆனால் இறுதிப் பகுதியில் நீங்கள் கூறியது 100 விகிதமும் உண்மையான வார்த்தைகள்.

 

Link to comment
Share on other sites

5 hours ago, goshan_che said:

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு

என்னை நித்தியானந்தா மதம் மாற்றியதால் தான் இந்த நிலை.😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு யாழ்ப்பாணி-மட்டக்களப்பான் குஸ்தியில இறங்கி இருக்கியள் போல.

1. ஒரு பகுதி ஏதோ கருணா மட்டுமே துரோகம் செய்தவர், அவரால் மட்டுமே போராட்டம் குட்டி சுவரானது என்பது போல எழுதுகினம். மிக இலகுவாக யாழில் இருந்து வந்த கோடாரிகாம்புகளை மறந்து விட்டு. மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான் மட்டும்தான் கண்டியளோ, யாழ்பாணத்தில போராடப்போறம் எண்டு வெளிக்கிட்டு ஆளையாள் போட்ட நபர்களை பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் காணாது 😂. கருணாவை குட்டும் போது ஓங்கி குட்டும் கைகளை கேபி ( கருணாவைவிட அதிகம் பாதிப்பு இவராலேயே) யை பற்றிய திரியில் காணவே கிடைக்காது? ஏன் ? ஏனென்றால் - அடிமனதில் ஊறிய யாழ் மையவாதம். வேறு ஒருவனை கைகாட்டி, அவனாலேதான் எம் அற்புத கனவு கலைந்ததென இலகுவாக கடந்து செல்லும்.

2. மற்றைய பகுதி - ஏதோ கருணா தப்பே செய்யவில்லை என்பது போலவும், அவர் சமாதானத்தை விரும்பினார், அசோகர் போல யுத்தத்தை வெறுத்தார் அதனால் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என சப்பை கட்டு கட்டுகிறனர். கருணா புலிகளிடம் இருந்து பிரிந்ததும், அதன் பின் செய்த அரசியலும், இப்போ செய்யும் அரசியலும் அனைத்துமே - கருணா என்ற தனிநபரின் சுயநலத்தை முன்வைத்தே செய்யப்பட்டன. செய்யப்படுகிறன. இதில் துளியளவும் தமிழர் நலனோ, மட்டகளப்பு மக்களின் நலனோ, யுத்த வெறுப்போ இல்லை. இங்கே பலர் தளம்பினாலும், மட்டில் இதையொட்டி மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். இன்றுவரை மட்டு மக்கள் இவரை அரசியலில் ஆதரிக்கவில்லை என்பது கண்கூடு.

முடிவாக இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கிய தமிழர்கள் (துரோகி என்ற பதத்தை வேண்டும் என்றே தவிர்கிறேன்) என்ற வரிசையில் கருணாவுக்கு ஏனையவர்களுடன் சேர்த்து ஒரு இடம் நிச்சயம் உண்டு. ஆனா அவரின் செயல் ஏனையோரைவிட மோசமானது என்பது யாழ்மையவாத சிந்தனையே.

2009 க்கு முன் எங்கோ வாசித்த நியாபகம். இத்தனை பொருள், உயிர் இழப்பை சந்திகாமல் - இலகுவாக தமிழர் போராட்டத்தை இலங்கை அடக்கி இருக்கலாமாம். தமிழர்களுக்கு தனிநாட்டை கொடுத்தால் போதுமாம். பிரபாவின் இறப்பின்  பின் தமிழர் தம்மில் அடிபட்டு அழிய, நாடு முழுமைக்குக்கும் 100% சிங்களமயமாகி இருக்குமாம்.

இப்பவே இப்படி, நல்ல வேளையாக உங்களுக்கு நாடு கிடைக்கவில்லை.

இந்த இரண்டாம் பகுதியோடு முரண்படுகிறேன்...அவரின் பிரிவில் அவரது சுய  நலனும் கலந்து இருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு பொது நலம் இருந்தது...இனி மேல் யுத்தம் செய்வதால் பிரயோசனமில்லை என்பது அவருக்கு தெரிந்திருந்தது...தனியே நானும் மட்டும் போகாமல் தன்னால் உருவாக்கப்பட்ட படையை கலைத்து விட்டுப் போனார்...அதில் பிழை இல்லை....உங்களிடம் திரும்பவும் இந்த கேள்வியை கேட்கிறேன் ...ஏன் அந்த 5000ம் போராளிகளும் வன்னிக்கு போகாமல் வீட்டுக்கு போனார்கள்?

அங்கிருக்கும் மக்கள் அவரை நிராகரிக்க காரணம் அவர் மகிந்தாவோடு சேர்ந்திருப்பதால் ஒழிய இந்த புலிகளை ஏமாத்திட்டு வந்திட்டார் என்பதால் இல்லை என்பது என் கருத்து

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

என்னை நித்தியானந்தா மதம் மாற்றியதால் தான் இந்த நிலை.😩

நித்தியானந்தா வசம் இருக்கும்  அந்த அபார சக்திகளை விரும்பித் தானே மதம் மாறினீங்க சார். 😂😂

Link to comment
Share on other sites

On 12/14/2019 at 12:43 PM, கிருபன் said:

அம்பாறை மாவட்டத்துக்கு கருணா வெள்ளிக்கிழமை(13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.

ஒரு சிலர் இரவில தான் ஊர் சுத்துவார்கள். குறிப்பா கள்ளர்கள்.
கருணாவுக்கும் இரவென்டாத்தான் உஷார் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

இந்த இரண்டாம் பகுதியோடு முரண்படுகிறேன்...அவரின் பிரிவில் அவரது சுய  நலனும் கலந்து இருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு பொது நலம் இருந்தது...இனி மேல் யுத்தம் செய்வதால் பிரயோசனமில்லை என்பது அவருக்கு தெரிந்திருந்தது...தனியே நானும் மட்டும் போகாமல் தன்னால் உருவாக்கப்பட்ட படையை கலைத்து விட்டுப் போனார்...அதில் பிழை இல்லை....உங்களிடம் திரும்பவும் இந்த கேள்வியை கேட்கிறேன் ...ஏன் அந்த 5000ம் போராளிகளும் வன்னிக்கு போகாமல் வீட்டுக்கு போனார்கள்?

அங்கிருக்கும் மக்கள் அவரை நிராகரிக்க காரணம் அவர் மகிந்தாவோடு சேர்ந்திருப்பதால் ஒழிய இந்த புலிகளை ஏமாத்திட்டு வந்திட்டார் என்பதால் இல்லை என்பது என் கருத்து

உங்களுக்கு கருணா-போதை. ரஜனி ரசிகர், கமல்ரசிகர், பிரபாகரன் ரசிகர் இவர்களை போல் உங்களுக்கு கருணா செய்த எல்லாவற்றிலும் ஒரு நல்லெண்ணம் தெரிய காரணம் - அவரை நீங்கள் கதாநாயக வணக்கம் (ஹீரோ வேர்சிப்) செய்கிறீர்கள்.

இங்கே பலரும் இதையே பிரபாகரனுக்கும் செய்வதை நீங்கள் பார்க்கலாம். அந்தாள் பருப்புக்கு உப்புக்காணாது என்று சொன்னாலும் “ஆகா என்னே தலைவரின் தூர திருஸ்டி” என்பார்கள். 

வெளியில் இருந்து பார்க்கும் எமக்கு உங்கள் வியாக்கியானங்கள் சிரிப்பாய் இருந்தாலும், உங்களுடன் தர்க்கித்து வெல்ல முடியாது, ஏனெண்றால் உங்களுக்கு ஒரு போதும் போதை இறங்காது.

கருணா 5000 பேரை அனுப்பியது நல்லமா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. 2001 இல் வீடுவீடாக மட்டக்களப்பில் இப்படி பிள்ளைகளை வலுக்கட்டயமாக பிடித்த அவர், 2002 இல் தான் பிரிந்த பின்பும் இந்த பிள்ளைகளை வைத்திருந்த அவர், இதே பிள்ளைகளை சக தமிழனோடு தனக்காக வெருகலில் சண்டையிட்டு சாகக்கொடுத்த இவர், ஏன் 2003 இல் வீட்டை அனுப்பினார் ?

தான் தெற்கிற்கு போகப் போரேன், இவர்களை புலியிடம் கொடுத்து அவர்களின் வலுவை அதிகரிக்காமல் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற சுயநலம் மட்டுமே ஒரே காரணம்.

இப்படி இவரின் ஒவ்வொரு செயலிலும் இருப்பது 100% சுயநலமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு யாழ்ப்பாணி-மட்டக்களப்பான் குஸ்தியில இறங்கி இருக்கியள் போல.

1. ஒரு பகுதி ஏதோ கருணா மட்டுமே துரோகம் செய்தவர், அவரால் மட்டுமே போராட்டம் குட்டி சுவரானது என்பது போல எழுதுகினம். மிக இலகுவாக யாழில் இருந்து வந்த கோடாரிகாம்புகளை மறந்து விட்டு. மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான் மட்டும்தான் கண்டியளோ, யாழ்பாணத்தில போராடப்போறம் எண்டு வெளிக்கிட்டு ஆளையாள் போட்ட நபர்களை பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் காணாது 😂. கருணாவை குட்டும் போது ஓங்கி குட்டும் கைகளை கேபி ( கருணாவைவிட அதிகம் பாதிப்பு இவராலேயே) யை பற்றிய திரியில் காணவே கிடைக்காது? ஏன் ? ஏனென்றால் - அடிமனதில் ஊறிய யாழ் மையவாதம். வேறு ஒருவனை கைகாட்டி, அவனாலேதான் எம் அற்புத கனவு கலைந்ததென இலகுவாக கடந்து செல்லும்.

2. மற்றைய பகுதி - ஏதோ கருணா தப்பே செய்யவில்லை என்பது போலவும், அவர் சமாதானத்தை விரும்பினார், அசோகர் போல யுத்தத்தை வெறுத்தார் அதனால் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என சப்பை கட்டு கட்டுகிறனர். கருணா புலிகளிடம் இருந்து பிரிந்ததும், அதன் பின் செய்த அரசியலும், இப்போ செய்யும் அரசியலும் அனைத்துமே - கருணா என்ற தனிநபரின் சுயநலத்தை முன்வைத்தே செய்யப்பட்டன. செய்யப்படுகிறன. இதில் துளியளவும் தமிழர் நலனோ, மட்டகளப்பு மக்களின் நலனோ, யுத்த வெறுப்போ இல்லை. இங்கே பலர் தளம்பினாலும், மட்டில் இதையொட்டி மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். இன்றுவரை மட்டு மக்கள் இவரை அரசியலில் ஆதரிக்கவில்லை என்பது கண்கூடு.

முடிவாக இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கிய தமிழர்கள் (துரோகி என்ற பதத்தை வேண்டும் என்றே தவிர்கிறேன்) என்ற வரிசையில் கருணாவுக்கு ஏனையவர்களுடன் சேர்த்து ஒரு இடம் நிச்சயம் உண்டு. ஆனா அவரின் செயல் ஏனையோரைவிட மோசமானது என்பது யாழ்மையவாத சிந்தனையே.

2009 க்கு முன் எங்கோ வாசித்த நியாபகம். இத்தனை பொருள், உயிர் இழப்பை சந்திகாமல் - இலகுவாக தமிழர் போராட்டத்தை இலங்கை அடக்கி இருக்கலாமாம். தமிழர்களுக்கு தனிநாட்டை கொடுத்தால் போதுமாம். பிரபாவின் இறப்பின்  பின் தமிழர் தம்மில் அடிபட்டு அழிய, நாடு முழுமைக்குக்கும் 100% சிங்களமயமாகி இருக்குமாம்.

இப்பவே இப்படி, நல்ல வேளையாக உங்களுக்கு நாடு கிடைக்கவில்லை.

 

உங்களது  பார்வையில் இவை  சரியே

ஏன் ஏராளமான தமிழர்கள் இவ்வாறு  தான் தற்பொழுது  கடந்து  போகிறார்கள்

உண்மையில்  தமிழரின்  போராட்டம் முக்கியமான  நிலைகளுக்கு  வரும்  போதெல்லாம்

கிழக்கை  சேர்ந்த எவராவது குறி  வைக்கப்படுகிறார்கள்

கிழக்கின் புவிசார் நிலையும் மூவின கலப்பு வாழ்வும்

இதற்கு  உகந்ததாக  சிங்களத்துக்கு வழியமைத்து

 தொடர்ந்து வெற்றி தருகிறது.

அது  ராசதுரையிலிருந்து தொடர்கிறது.......

நீங்கள் மேலே  எழுதியவாறு அங்குவாழ்   மக்கள்  தெளிவாகவே  உள்ளனர்

ஏனெனில் அவர்கள்  நீண்ட  தூரம்  சிந்திக்கின்றனர்

இருந்தபோதும் குறி  வைக்கப்படுபவர்கள் வலைக்குள் விழும்போது அந்த  மக்களும்  அவமானத்தை  சுமக்கவேண்டியுள்ளது.

ஏன் தாயகத்தின்  வேற  பகுதியிலுள்ளவர்கள் மாறவில்லையா  என்றால் தாயகத்தின் கனவை  சிதைக்கும் வீரியம் இவர்கள்  அளவுக்கு இருந்திருக்காது  என்பதையும் கருத்தில் கொள்க.

நான்  ஒன்றும் பிரதேசவாசி அல்ல.  அதை  நான்  உங்களுக்கு  சொல்லவேண்டியதில்லை  என  நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அது  ராசதுரையிலிருந்து தொடர்கிறது.......

ராசதுரை அவர்களும் தான் வெளியிட்ட புத்தகத்தில்  தன்னை ஏமாற்றியவர்கள் அரசியலில் இடம் பிடிக்க தன்னை துரோகி போல பல பல தடவை சித்தரிக்கப்பட்டதையும் கன நாட்களின் முன்னர் படித்த ஞாபகம் நீங்கள் ராசதுரையை எந்த லிஸ்டுக்குள் அடக்குறீர்கள் என்பதை சொல்லுங்கள் 

 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டு இசைநடனக்கல்லூரியில் வந்து உரையாற்றினார் பல சங்கதிகள் புதைந்து உள்ளன அவர் உரையில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ராசதுரை அவர்களும் தான் வெளியிட்ட புத்தகத்தில்  தன்னை ஏமாற்றியவர்கள் அரசியலில் இடம் பிடிக்க தன்னை துரோகி போல பல பல தடவை சித்தரிக்கப்பட்டதையும் கன நாட்களின் முன்னர் படித்த ஞாபகம் நீங்கள் ராசதுரையை எந்த லிஸ்டுக்குள் அடக்குறீர்கள் என்பதை சொல்லுங்கள் 

 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டு இசைநடனக்கல்லூரியில் வந்து உரையாற்றினார் பல சங்கதிகள் புதைந்து உள்ளன அவர் உரையில் 

 

தமிழ்மக்களின் அபிலாசைகளை  வலியுறுத்தி

1977  தேர்தலில் கூட்டணியினர்  தாம்  தேர்தலில் நின்ற அத்தனை இடங்களிலும் வென்றனர்

அந்த  வெற்றியின் பயனை  சிதைத்தவர் ராசதுரை

இப்ப  வந்து  எதுவும்   சொல்லலாம் 

ஆனால் அவருடைய  அன்றைய  பெறுமதியும் தமிழ் மக்களுக்கான  இழப்பும் ஈடுசெய்யமுடியாதது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 

தமிழ்மக்களின் அபிலாசைகளை  வலியுறுத்தி

1977  தேர்தலில் கூட்டணியினர்  தாம்  தேர்தலில் நின்ற அத்தனை இடங்களிலும் வென்றனர்

அந்த  வெற்றியின் பயனை  சிதைத்தவர் ராசதுரை

இப்ப  வந்து  எதுவும்   சொல்லலாம் 

ஆனால் அவருடைய  அன்றைய  பெறுமதியும் தமிழ் மக்களுக்கான  இழப்பும் ஈடுசெய்யமுடியாதது

அப்படியானால் ராசதுரை அவர்கள் எந்த இடத்தில் கூட்டணி சார்பாக நின்று வெற்றி பெற்றார் அண்ண??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியானால் ராசதுரை அவர்கள் எந்த இடத்தில் கூட்டணி சார்பாக நின்று வெற்றி பெற்றார் அண்ண??

காசி  ஆனந்தனும்  இவரும் மோதிக்கொண்டதால் உடைந்தது  எல்லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

உங்களுக்கு கருணா-போதை. ரஜனி ரசிகர், கமல்ரசிகர், பிரபாகரன் ரசிகர் இவர்களை போல் உங்களுக்கு கருணா செய்த எல்லாவற்றிலும் ஒரு நல்லெண்ணம் தெரிய காரணம் - அவரை நீங்கள் கதாநாயக வணக்கம் (ஹீரோ வேர்சிப்) செய்கிறீர்கள்.

இங்கே பலரும் இதையே பிரபாகரனுக்கும் செய்வதை நீங்கள் பார்க்கலாம். அந்தாள் பருப்புக்கு உப்புக்காணாது என்று சொன்னாலும் “ஆகா என்னே தலைவரின் தூர திருஸ்டி” என்பார்கள். 

வெளியில் இருந்து பார்க்கும் எமக்கு உங்கள் வியாக்கியானங்கள் சிரிப்பாய் இருந்தாலும், உங்களுடன் தர்க்கித்து வெல்ல முடியாது, ஏனெண்றால் உங்களுக்கு ஒரு போதும் போதை இறங்காது.

கருணா 5000 பேரை அனுப்பியது நல்லமா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. 2001 இல் வீடுவீடாக மட்டக்களப்பில் இப்படி பிள்ளைகளை வலுக்கட்டயமாக பிடித்த அவர், 2002 இல் தான் பிரிந்த பின்பும் இந்த பிள்ளைகளை வைத்திருந்த அவர், இதே பிள்ளைகளை சக தமிழனோடு தனக்காக வெருகலில் சண்டையிட்டு சாகக்கொடுத்த இவர், ஏன் 2003 இல் வீட்டை அனுப்பினார் ?

தான் தெற்கிற்கு போகப் போரேன், இவர்களை புலியிடம் கொடுத்து அவர்களின் வலுவை அதிகரிக்காமல் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற சுயநலம் மட்டுமே ஒரே காரணம்.

இப்படி இவரின் ஒவ்வொரு செயலிலும் இருப்பது 100% சுயநலமே.

ஹாஹா கடைசியில் நீங்களும் மற்றவர்கள் மாதிரி சலாப்பிட்டீங்கள்...எதிர் பார்த்தேன் ... நான் கேட்டது அவர் அனுப்பினது பற்றி அல்ல, ஏன் அந்தப் போராளிகள் வன்னிக்கு போகவில்லை அல்லது ராமோடு சேரவில்லை...அதற்கு உங்களிடம் பதில்  இல்லை ...நீங்களும் பத்தோடு பதின்னொன்று தான் என்று உங்களை நிரூபித்து  விட்டீ ர்கள் .
2004யில் தான்  கருணாவுக்கும் ,தலைமைக்கும் பிரச்சனை வந்தது ...நீங்கள் என்னடா என்றால் 2001,2002  கதையெல்லாம் கதைக்கிறிங்கள்   கடைசியாய் ஒன்றை சொல்கிறேன் நாளைக்கே அவரை ரோட்டில் சுட்டுப் போட்டாலும் அதை பற்றி நான் கவலைப் பட மாட்டேன் .
உருப்படியாய் பதில் சொல்ல முடியா விட்டால் அடுத்தவரை மட்டம் தட்டுவதை இது வரை தேசியவாதிகள் தான் செய்ததை கண்டு உள்ளேன் ...இன்று தாங்களும் 
நன்றி...வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

காசி  ஆனந்தனும்  இவரும் மோதிக்கொண்டதால் உடைந்தது  எல்லாம்

அவர்கள் மோதியது அண்ண அரசியல் விவகாரம் அதான் ராசதுரையை கேட்க விடக்கூடாது தேர்தலில்  ஆனால் நின்று வெற்றி பெற்றார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ராசதுரை அவர்களும் தான் வெளியிட்ட புத்தகத்தில்  தன்னை ஏமாற்றியவர்கள் அரசியலில் இடம் பிடிக்க தன்னை துரோகி போல பல பல தடவை சித்தரிக்கப்பட்டதையும் கன நாட்களின் முன்னர் படித்த ஞாபகம் நீங்கள் ராசதுரையை எந்த லிஸ்டுக்குள் அடக்குறீர்கள் என்பதை சொல்லுங்கள் 

 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டு இசைநடனக்கல்லூரியில் வந்து உரையாற்றினார் பல சங்கதிகள் புதைந்து உள்ளன அவர் உரையில் 

அந்த புத்தகத்தின் விபரத்தை தரமுடியுமா ?

(நான் உண்மையாகத்தான் கேட்கிறேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

ஹாஹா கடைசியில் நீங்களும் மற்றவர்கள் மாதிரி சலாப்பிட்டீங்கள்...எதிர் பார்த்தேன் ... நான் கேட்டது அவர் அனுப்பினது பற்றி அல்ல, ஏன் அந்தப் போராளிகள் வன்னிக்கு போகவில்லை அல்லது ராமோடு சேரவில்லை...அதற்கு உங்களிடம் பதில்  இல்லை ...நீங்களும் பத்தோடு பதின்னொன்று தான் என்று உங்களை நிரூபித்து  விட்டீ ர்கள் .
2004யில் தான்  கருணாவுக்கும் ,தலைமைக்கும் பிரச்சனை வந்தது ...நீங்கள் என்னடா என்றால் 2001,2002  கதையெல்லாம் கதைக்கிறிங்கள்   கடைசியாய் ஒன்றை சொல்கிறேன் நாளைக்கே அவரை ரோட்டில் சுட்டுப் போட்டாலும் அதை பற்றி நான் கவலைப் பட மாட்டேன் .
உருப்படியாய் பதில் சொல்ல முடியா விட்டால் அடுத்தவரை மட்டம் தட்டுவதை இது வரை தேசியவாதிகள் தான் செய்ததை கண்டு உள்ளேன் ...இன்று தாங்களும் 
நன்றி...வணக்கம் 

அக்காச்சி,

நான் சொன்ன பதில் கொஞ்சம் விளக்கம் இல்லாமல் போய்விட்டது. மன்னிக்கவும். இப்போ தெளிவாக சொல்கிறேன்.

ஏன் அந்த 5000 பேரும் வன்னிக்கு போகவில்லை ? காரணக்கள் இதோ:

1. அவர்களில் பலர் கருணா தன்னை பிரபாவின் குட்புக்ஸில் வைத்திருப்பதற்காக மட்டில், குறிப்பாக படுவான்கரையில் வலுக்கட்டாயமா சேர்க்கப்பட்டவர்கள். புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு பின்னாளில்தான் வன்னியில் தலைவிரிதாடியது, ஆனால் கருணா காலத்திலேயே மட்டக்களப்பில் இது தொடங்கி விட்டது. கருணா திறந்து விட்டதும், கிளிக்கு ரெக்க முளைசிடுத்து, பறந்துடுத்து. 5000 தில் 80% இப்படியான பொடியள்.

2. விரும்பி சேர்ந்த பலர், கருணாவின் பக்தர்கள். 2004 க்கு முதல் கருணாவிற்கு பிரபாவுக்கு நிகரான கெத்து இருந்தது மட்டக்களப்பில். அவரே பிரிந்து போனதும், பலர் விரக்தி காரணமாக மத்திய கிழக்கு போனார்கள்.

3. மேலும் சிலர் - கருணா சொன்னதை நம்பினார்கள் - ஆகவே அவர்களும் வன்னிக்கு போகவில்லை.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - யாழ் மையவாதம், பிரதேசவாதம் என்பன எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை கருணா அதை தன் சுயநலத்துக்காக பாவித்தார் என்பதும்.

பொட்டு-கருணா முறுகல் வந்துராவிடின், இன்றைக்கும் அவர் பிரபாவை புகழ்ந்து பேசியபடி, கரடியனாற்றில் பொடியளை பிடித்து வன்னிப் போர் முனைக்கு அனுப்பிக் கொண்டுதான் இருப்பார்.

பிகு: வயசு வட்டுக்குள் போவதால் ஆண்டை தவறாக குறிப்பிட்டு விட்டேன். ஒரு ஆண்டை தள்ளி வாசிக்கவும். உதாரணமாக 2003 எனும் இடத்தில் 2004 என.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.