Jump to content

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

அமிர் தலைமையிலான யாழ்பாணத்தவர்கள் ராசதுரைக்கு செய்தது அநியாயம். 

ஆனால் இது எத்தனை யாழ்பாணத்தவருக்குத் தெரியும்? ஊரில் உள்ளவர்களும், வெளிநாட்டில் வசிக்கும் யாழ்பாணத்தவரும், ராசதுரை துரோகி என பட்டம் கட்டி இலகுவில் கடந்து போக என்ன காரணம் ?

அமிர் தரப்பு ராசதுரை பற்றி யாழ் மக்களிடயே பரப்பிய அவதூறு?

அப்படியாயின் பிரபாகரன் பற்றி அமிர் பரப்பிய அவதூறுகள் ஏன் யாழ் மக்களிடம் எடுபடவில்லை?

ஏனென்றால் பிரபாவும் ஒரு யாழ்பாணத்தவர். 

ஆனால் ராசதுரை அப்படி இல்லையே? ஆகவேதான் அவரை காலாகாதுக்கும், இன்றும் துரோகி என இலகுவில் முத்திரை குத்த முடிகிறது.

#இச்சையின்றிய பிரதேசவாதம்

 

நுணாவிலன் மிக்க நன்றி அந்த ப்புத்தகத்திலும் இதைதான் எழுதியிருந்தார் ராசதுரை அவர்கள்

கோசான் பழைய வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள புத்தகங்களும் பழையவர்களும் தான்  துணை ஆனால் அவர் யார் பக்கம் சாய்கிராரோ என்பதுதான் பிரச்சினை 

Image may contain: 1 person, smiling

Link to comment
Share on other sites

  • Replies 162
  • Created
  • Last Reply
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

நுணாவிலன் மிக்க நன்றி அந்த ப்புத்தகத்திலும் இதைதான் எழுதியிருந்தார் ராசதுரை அவர்கள்

கோசான் பழைய வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள புத்தகங்களும் பழையவர்களும் தான்  துணை ஆனால் அவர் யார் பக்கம் சாய்கிராரோ என்பதுதான் பிரச்சினை 

Image may contain: 1 person, smiling

ராஜதுரை அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் மன்னாரில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார். அவருக்கு பெரிய விழா வைத்து அவரை வரவேட்டார்கள்.

அப்போது அங்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார் தான் ஒரு லட்ச்சம் ரூபாய் தருவதாகவும் அதனைக்கொண்டு ஒரு வாசிகசாலையை அமைக்கும்படி கூறி சென்றார். அங்கு பெரிய தட புடலாக விருந்தும் கொடுக்கப்பட்ட்து.

பின்னர் அந்த கிராமத்து பெரியவர்கள் அவரிடம் அந்த பணம் சம்மந்தமாக பேசியபோது அவர் சொன்னது இதுதான். நான் போற போற இடமெல்லாம் ஏதோவெல்லாம் சொல்லுவேன் , நான் ஒரு அரசியல்வாதி. நான் சொன்னதை வைத்துக்கொண்டு இங்கு வந்து அப்படி எல்லாம் இங்கு வரக்கூடாது என்று கூறினாராம். மிக சிறந்த அரசியல்வாதி. தமிழ் மக்களின் பாதுகாவலன். 

நான் அவர் பணம் கொடுக்கவில்லை அதனால் அந்த கிராமம் அழிந்து விட்ட்து என்று சொல்லவில்லை.

இவருடைய சரித்திரம் எங்களுக்கு நல்லாவே தெரியும். பல்டி அடிப்பதில் இவரைப்போல ஆளே கிடையாது. இருந்தாலும் பல்டி அடிப்பதில் சோனவனை இவரால் முந்த முடியவில்லை.

 

On 12/15/2019 at 2:51 PM, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு விநாயகமூர்த்தி மூர்த்தி முறளிதரன் என்ற ஒருத்தரை மட்டுமே தெரியும் இன்னும் பலர் பெயர தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியாது போல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

ராஜதுரை அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் மன்னாரில் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார். அவருக்கு பெரிய விழா வைத்து அவரை வரவேட்டார்கள்.

அப்போது அங்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார் தான் ஒரு லட்ச்சம் ரூபாய் தருவதாகவும் அதனைக்கொண்டு ஒரு வாசிகசாலையை அமைக்கும்படி கூறி சென்றார். அங்கு பெரிய தட புடலாக விருந்தும் கொடுக்கப்பட்ட்து.

பின்னர் அந்த கிராமத்து பெரியவர்கள் அவரிடம் அந்த பணம் சம்மந்தமாக பேசியபோது அவர் சொன்னது இதுதான். நான் போற போற இடமெல்லாம் ஏதோவெல்லாம் சொல்லுவேன் , நான் ஒரு அரசியல்வாதி. நான் சொன்னதை வைத்துக்கொண்டு இங்கு வந்து அப்படி எல்லாம் இங்கு வரக்கூடாது என்று கூறினாராம். மிக சிறந்த அரசியல்வாதி. தமிழ் மக்களின் பாதுகாவலன். 

நான் அவர் பணம் கொடுக்கவில்லை அதனால் அந்த கிராமம் அழிந்து விட்ட்து என்று சொல்லவில்லை.

இவருடைய சரித்திரம் எங்களுக்கு நல்லாவே தெரியும். பல்டி அடிப்பதில் இவரைப்போல ஆளே கிடையாது. இருந்தாலும் பல்டி அடிப்பதில் சோனவனை இவரால் முந்த முடியவில்லை.

அரசியல் வாதி ஆர்தான் பல்டி அடிக்கல இன்றுவரைக்கும் தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கி கொடுப்போம் என்று கூட்டமைப்பு மக்களை ஏமாற்றல 

அதுதான் கோட்டபாய சொல்லிவிட்டார் தமிழர்களுக்கு சமஸ்டியும் கொடுக்க முடியாது என்று பிறகென்ன இவர்களும் காலத்தை ஓட்ட வேண்டாமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

1;  எல்லாவற்றையும் பபிரதேச மையவாதம் என்பதற்குள் பொதுமைப் படுத்துகிறீர்கள்

2; இங்கே கருத்தெழுதுவோரில் பெரும்பான்மையோரின் வயதை கருத்தில் கொள்ளவில்லை

3; பிரதேசவாதம் பேசிய அரசியல்வாதிகளின் பின்ணணியை கவனத்தில் கொள்ளவேண்டும்.

4; ஒருவர் தனது பின்புலத்தை பெருமையாக கூருவதில் தவறு இருப்பதாக கருதுகிறீர்களா ?

5; சுதந்திரத்தின் பின்னான இலங்கையில் தமிழருக்கு சனனாயக வழியில் தலைமையேற்ர அரசியல்வாதிகளின் கல்விப் பின்னணி

6; பிரதேசவாதம் யாழ்ப்பாணத்திற்கும் மட்டும் செல்லுபடியாகுமா அல்லது தென் தமிழீழத்திற்கும் பொருந்துமா.

 

உண்மையில் இதனைதோண்டத்தொடங்கினால், பல்லைத் தோண்டி மணக்க கொடுத்த கதையாக முடியுமென பயப்படுகிறேன்.

[அதுசரி புலவர் ஏன் மௌனமாக உள்ளார். அவருக்கு ஒரு தொகை விடயங்கள் தெரிய வேண்டுமே ?]

 

கப்பித்தான்,

பல்லைத்தோண்டி மணக்கும் படி ஆகாதவண்ணம் நாமிருவரும் உரையாடமுடியும் என்ற நம்பிக்கை மிக குறுகியகாலத்திலேயே உங்கள் மீது ஏற்பட்டுள்ளதால் தொடர்கிறேன்.

கருத்து ஒழுங்கு கருதி உங்கள் புள்ளிகளின் ஒழுங்கை மாற்றியுள்ளேன்.

6. பிரதேசவாதம் சற்று வித்தியாசமாக ஆனால் அதே வலுவுடன் முல்லைதீவிலும், திருமலையிலும், மட்டு-அம்பாறையிலும் இருக்கிறது. குறிப்பாக தொழில் போட்டி என்று வரும் போது அல்லது செய்த ஒரு தவறை மறைக்க - மிக இலகுவாக யாழ்-எதிர்வாதம் கையில் எடுக்கப்படும். ஆகவேதான் இவற்றை சம்பவம்-சம்பவமாக சீர்தூக்கி பாக்க வேண்டுமே ஒழிய. ஒட்டு மொத்தமாக ஒரு தரப்பை குற்றம் சுமத்த முடியாது. 2004 இல் யாழ் வம்சாவளி வர்தகர்கள் மட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். அதை அங்கே வாழ்ந்த மக்கள் செய்யவில்லை, ஆனால் இலங்கையில் ஒரே ஒரு தரம், தமிழர்கள், தமிழர் நிலத்தில் இருந்து, தமிழர்களாலேயே விரட்டப்பட்டது அதுவே. ஆகவே இது ஒரு பகுதிக்கு மட்டுமானது அல்ல. ஆகவேதான் ஒவ்வொரு சம்பவத்தையும் பார்க்க வேண்டியதாகிறது.

அமிருக்கு சளைக்காத தலைவர், எந்த விதத்திலும் அமிரை போல தலைவர் பதவிக்கு தகுதியானவர், எங்கே பிறந்தார் என்ற அடிப்படையில் தலைவர் ஆகும் வாய்ப்பு பறிபோனது மட்டுமல்ல, கட்சிக்குள்ளே குழிபறிப்பு வெளிபடையாகவே நடந்தது, எம்பி பதவிக்கும் ஆபத்து வந்தது எனும் போது - அங்கே தலைவர்கள் எப்போதும் யாழில் இருந்தே வரவேண்டும் என்ற மையவாதம்தானே முன்னுக்கு நிற்கிறது?

2004 இல் இப்படி நடக்கவில்லை. ஆனால் அப்போதும் பிரதேசவாதத்தால் என்னை வஞ்சிக்கிறார்கள் என்ற கூச்சல் ஒரு கவசமாக கிளப்பபட்டது. ஆரம்பத்தில் பல நடுநிலையாளர்களே அதற்கு பலியான போதும் அதன் பின்னரான நிகழ்வுகள் அந்த காரணம் பொய்யானது என நிரூபித்தன.  

5. அந்தந்த காலத்தை அந்த கால தராசை கொண்டே நிரைக்க வேண்டும் ஆனாலும் -  அந்த காலத்து பிழைகளை பிழை என இனம் காணலாம்தானே?

3. உண்மைதான். ஆனா பிரதேசவாதத்துக்கு எதிர்வினையாற்றியவர்களையும் பிரதேசவாதிகளாக சித்தரிக்க கூடாது.

2&1. வயது குறைந்தவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுக்கமாட்டார்களா? வயதில் இளையவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுத்த போது (அமிர், கருணா, புள்ளையான்), வயதில் மூத்தவர்கள் எதிர்வினையாற்றியும் உள்ளார்கள் (செல்வா, பிரபா, ஜோசப் பராராஜசிங்கம்). பொதுமை படுத்தவில்லை. பிரதேசவாதம் உண்டு, ஆனால் அதை case-by-case ஆகவே ஆராயமுடியும்.

4. பின்புலத்தையிட்டு பெருமை படுவது வீண்வேலை என்பது என் எண்ணம். இன்ன சாதி என்பதும் ஒரு வகை பின்புலம்தானே? அதையொட்டி பெருமை கொள்வதை சிறுமை என ஏற்கும் நாம். இன்ன இடம் என்பதை இட்டு பெருமை கொள்வதை மட்டும் ஏன் ஏற்கிறோம்?

யாழில் - நாம்தான் கெட்டிக்காரர்கள், கல்விமான்கள், Jaffna Jew என்ற்ரெல்லாம் தம்மை பற்றித் தாமே பெருமைப்படுவார்கள். ஆனால் 2009-2019 மாவட்ட வெட்டுப் புள்ளிகளை எடுத்துப் பார்த்தால் யாழிற்கும் மட்டகளப்பிற்கும் பெரிய வித்யியாசமில்லை என்பது தெரியும். ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்போ இல்லை. இது எதை காட்டி நிற்கிறது? கல்விக்கான வளங்கள் யாழில் குவிந்தமையால் யாழ் கல்வியில் முண்ணனியில் இருந்தது. வளங்கள் சமனாக பகிரப்படும்போது (40 வருடங்களின் பின்)  பெரிய வித்தியாசமில்லை.

இதே போலதான் மட்டகளப்பில் ஏதோதாம் விருதோம்ப என்றே பிறந்தவர்கள் என்பது போல் சிலரின் தற்பெருமை இருக்கும். ஆனால் யாழில் கண்ட கஞ்ச பிசிநாறிகளை போலவே மட்டிலும் கண்டுள்ளேன் 😂

எனவே எந்த இயல்பையும் குழுநிலை படுத்தி பெருமை கொள்வது வீண்வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே ஆரம்பத்தில் சொன்னது - ஒரே செயலை செய்த யாழ்பாணத்தவர்கள் மீதான உக்கிரத்தை விட கருணாவின் மீதான உக்கிரம் ஏன் என்பதுதான்.

கருணா தொடர்ந்தும் அரசியல் செய்கிறார் என்றார் விசுகு. டக்லசும், சுரேசும், சித்தரும் என்ன செய்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கப்பித்தான்,

பல்லைத்தோண்டி மணக்கும் படி ஆகாதவண்ணம் நாமிருவரும் உரையாடமுடியும் என்ற நம்பிக்கை மிக குறுகியகாலத்திலேயே உங்கள் மீது ஏற்பட்டுள்ளதால் தொடர்கிறேன்.

கருத்து ஒழுங்கு கருதி உங்கள் புள்ளிகளின் ஒழுங்கை மாற்றியுள்ளேன்.

6. பிரதேசவாதம் சற்று வித்தியாசமாக ஆனால் அதே வலுவுடன் முல்லைதீவிலும், திருமலையிலும், மட்டு-அம்பாறையிலும் இருக்கிறது. குறிப்பாக தொழில் போட்டி என்று வரும் போது அல்லது செய்த ஒரு தவறை மறைக்க - மிக இலகுவாக யாழ்-எதிர்வாதம் கையில் எடுக்கப்படும். ஆகவேதான் இவற்றை சம்பவம்-சம்பவமாக சீர்தூக்கி பாக்க வேண்டுமே ஒழிய. ஒட்டு மொத்தமாக ஒரு தரப்பை குற்றம் சுமத்த முடியாது. 2004 இல் யாழ் வம்சாவளி வர்தகர்கள் மட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். அதை அங்கே வாழ்ந்த மக்கள் செய்யவில்லை, ஆனால் இலங்கையில் ஒரே ஒரு தரம், தமிழர்கள், தமிழர் நிலத்தில் இருந்து, தமிழர்களாலேயே விரட்டப்பட்டது அதுவே. ஆகவே இது ஒரு பகுதிக்கு மட்டுமானது அல்ல. ஆகவேதான் ஒவ்வொரு சம்பவத்தையும் பார்க்க வேண்டியதாகிறது.

அமிருக்கு சளைக்காத தலைவர், எந்த விதத்திலும் அமிரை போல தலைவர் பதவிக்கு தகுதியானவர், எங்கே பிறந்தார் என்ற அடிப்படையில் தலைவர் ஆகும் வாய்ப்பு பறிபோனது மட்டுமல்ல, கட்சிக்குள்ளே குழிபறிப்பு வெளிபடையாகவே நடந்தது, எம்பி பதவிக்கும் ஆபத்து வந்தது எனும் போது - அங்கே தலைவர்கள் எப்போதும் யாழில் இருந்தே வரவேண்டும் என்ற மையவாதம்தானே முன்னுக்கு நிற்கிறது?

2004 இல் இப்படி நடக்கவில்லை. ஆனால் அப்போதும் பிரதேசவாதத்தால் என்னை வஞ்சிக்கிறார்கள் என்ற கூச்சல் ஒரு கவசமாக கிளப்பபட்டது. ஆரம்பத்தில் பல நடுநிலையாளர்களே அதற்கு பலியான போதும் அதன் பின்னரான நிகழ்வுகள் அந்த காரணம் பொய்யானது என நிரூபித்தன.  

5. அந்தந்த காலத்தை அந்த கால தராசை கொண்டே நிரைக்க வேண்டும் ஆனாலும் -  அந்த காலத்து பிழைகளை பிழை என இனம் காணலாம்தானே?

3. உண்மைதான். ஆனா பிரதேசவாதத்துக்கு எதிர்வினையாற்றியவர்களையும் பிரதேசவாதிகளாக சித்தரிக்க கூடாது.

2&1. வயது குறைந்தவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுக்கமாட்டார்களா? வயதில் இளையவர்கள் பிரதேசவாதத்தை கையில் எடுத்த போது (அமிர், கருணா, புள்ளையான்), வயதில் மூத்தவர்கள் எதிர்வினையாற்றியும் உள்ளார்கள் (செல்வா, பிரபா, ஜோசப் பராராஜசிங்கம்). பொதுமை படுத்தவில்லை. பிரதேசவாதம் உண்டு, ஆனால் அதை case-by-case ஆகவே ஆராயமுடியும்.

4. பின்புலத்தையிட்டு பெருமை படுவது வீண்வேலை என்பது என் எண்ணம். இன்ன சாதி என்பதும் ஒரு வகை பின்புலம்தானே? அதையொட்டி பெருமை கொள்வதை சிறுமை என ஏற்கும் நாம். இன்ன இடம் என்பதை இட்டு பெருமை கொள்வதை மட்டும் ஏன் ஏற்கிறோம்?

யாழில் - நாம்தான் கெட்டிக்காரர்கள், கல்விமான்கள், Jaffna Jew என்ற்ரெல்லாம் தம்மை பற்றித் தாமே பெருமைப்படுவார்கள். ஆனால் 2009-2019 மாவட்ட வெட்டுப் புள்ளிகளை எடுத்துப் பார்த்தால் யாழிற்கும் மட்டகளப்பிற்கும் பெரிய வித்யியாசமில்லை என்பது தெரியும். ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்போ இல்லை. இது எதை காட்டி நிற்கிறது? கல்விக்கான வளங்கள் யாழில் குவிந்தமையால் யாழ் கல்வியில் முண்ணனியில் இருந்தது. வளங்கள் சமனாக பகிரப்படும்போது (40 வருடங்களின் பின்)  பெரிய வித்தியாசமில்லை.

இதே போலதான் மட்டகளப்பில் ஏதோதாம் விருதோம்ப என்றே பிறந்தவர்கள் என்பது போல் சிலரின் தற்பெருமை இருக்கும். ஆனால் யாழில் கண்ட கஞ்ச பிசிநாறிகளை போலவே மட்டிலும் கண்டுள்ளேன் 😂

எனவே எந்த இயல்பையும் குழுநிலை படுத்தி பெருமை கொள்வது வீண்வேலை.

சே, 

நான் சொல்லத் தயங்கிய விடயங்களில் சிலவற்றை மேலோட்டமாகத் தொட்டிருப்பதாக கருதுகிறேன்.

வயது.

எனது வளர்பராயத்தின் Adulthood  மிகப்பெரும் பகுதி யுத்தகாலத்தின் போது கழிந்தது. யுத்தத்தின் வலிகள் தமிழரில் மிகப் பெரும்பாலானோருக்குத் தெரியும். இங்கு கருத்தெழுதுவோவோரில் பலர் அந்த சூழலில் இருந்து வந்தவர்கள். ஆனால் அவர்கள் [யாழ்ப்பாணிகள்] எல்லோரையும் பொதுப்படையாக யாழ் மைய வாதத்திற்குள் உள்ளடக்குவது சரியானதாக அமையுமா ?

நான், எனது குடும்பம், எனது அயல், எனது ஊர், எனது மாவட்டம்.......... என்கின்ற போக்கு பிழை என கூறலாமா ?

பிழை எனில் எப்போது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் இங்கே ஆரம்பத்தில் சொன்னது - ஒரே செயலை செய்த யாழ்பாணத்தவர்கள் மீதான உக்கிரத்தை விட கருணாவின் மீதான உக்கிரம் ஏன் என்பதுதான்.

கருணா தொடர்ந்தும் அரசியல் செய்கிறார் என்றார் விசுகு. டக்லசும், சுரேசும், சித்தரும் என்ன செய்கிறார்கள்?

டக்லசு, சுரேசு, சித்தர் போன்றோரை முரளீதரனுடன் ஒப்பிடுவது சரியானதுதானா ?

கருணா அம்மான் மீது நாங்கள் வைத்திருந்த அன்பும் மரியாதையும் இவர்கள் மீது வைக்கவில்லையே தவிர முரளீதரன் மீது வரும் வெறுப்பும் கோபமும் அவர் போராட்டத்திற்கும் , தென் தமிழீழத்திற்கும் ஏற்படுத்தியது சேதம் தொடர்பானது.

பன்றியையும் புலியையும் ஒப்பிடுதல் தகுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்காலத்தில் முளீதரனும் ஒரு புத்தகம் எழுதுவார் , மனமும் வருந்துவார்.

ஆனால் தென் தமிழீழம் என்கின்ர ஒன்றே இருக்கப் போவதில்லை.  

அப்போதும் சிலர் இருப்பர் யாழ் மைய வாதத்தை கைகாட்டுவதற்கு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

சே, 

நான் சொல்லத் தயங்கிய விடயங்களில் சிலவற்றை மேலோட்டமாகத் தொட்டிருப்பதாக கருதுகிறேன்.

வயது.

எனது வளர்பராயத்தின் Adulthood  மிகப்பெரும் பகுதி யுத்தகாலத்தின் போது கழிந்தது. யுத்தத்தின் வலிகள் தமிழரில் மிகப் பெரும்பாலானோருக்குத் தெரியும். இங்கு கருத்தெழுதுவோவோரில் பலர் அந்த சூழலில் இருந்து வந்தவர்கள். ஆனால் அவர்கள் [யாழ்ப்பாணிகள்] எல்லோரையும் பொதுப்படையாக யாழ் மைய வாதத்திற்குள் உள்ளடக்குவது சரியானதாக அமையுமா ?

நான், எனது குடும்பம், எனது அயல், எனது ஊர், எனது மாவட்டம்.......... என்கின்ற போக்கு பிழை என கூறலாமா ?

பிழை எனில் எப்போது ?

 

கப்பித்தான்,

1. போராட்டம் பல தளைகளை பலவீனமாக்கியது என்பது மறுப்பதற்கில்லை. அதனால் 70களிற்கு பின்னானவர்களின் மனநிலை முந்தியோர் போல இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இங்கே, குறிப்பாக கருணா பற்றிய திரிகளில் எழுதுபவர்களில் மிகமிகச் சிலரே 70 க்கு பின் பிறந்தவர்கள் என நினைக்கிறேன்.

2. நான், என் குடும்பம் இத்யாதி தற்பெருமைகள் அறவே வீண்வேலை.  ஆனால் தவிர்க இயலாதன. ஆனால் குறைந்த பட்சம் இதை குடும்பத்தோடு நிப்பாட்டுவதே உசிதம். அடுத்த கட்டத்துக்கு நகர்தி நான் இந்த ஊர்காரன்- நாம் எல்லோரும் இப்படித்தான் - இது எம் பெருமை என்பதெல்லாம் என்னளவில் சுத்த பைத்தியகாரத்தனம். 

19 minutes ago, Kapithan said:

டக்லசு, சுரேசு, சித்தர் போன்றோரை முரளீதரனுடன் ஒப்பிடுவது சரியானதுதானா ?

கருணா அம்மான் மீது நாங்கள் வைத்திருந்த அன்பும் மரியாதையும் இவர்கள் மீது வைக்கவில்லையே தவிர முரளீதரன் மீது வரும் வெறுப்பும் கோபமும் அவர் போராட்டத்திற்கும் , தென் தமிழீழத்திற்கும் ஏற்படுத்தியது சேதம் தொடர்பானது.

பன்றியையும் புலியையும் ஒப்பிடுதல் தகுமா ?

87 ற்கு முன் பல பன்றிகள் புலிகளாகவே கருதப்பட்டன. 

தமிழர் தரப்பை பலவீனப்படுத்திய தமிழர்கள் வரிசையில் வேணும் எண்டால் முதல் 5 பேருக்குள் கருணா வரக்கூடும். ஆனால் அவர் மட்டுமே ஒரு மாபெரும் காரணி என்பது உண்மைக்குப் புறம்பானது.

ஏன் இது மீள மீள நிறுவப்படுகிறது என பார்க்கும் போது, இச்சையின்றிய பிரதேசவாதமே காரணியாக முன்னெழுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கப்பித்தான்,

1. போராட்டம் பல தளைகளை பலவீனமாக்கியது என்பது மறுப்பதற்கில்லை. அதனால் 70களிற்கு பின்னானவர்களின் மனநிலை முந்தியோர் போல இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இங்கே, குறிப்பாக கருணா பற்றிய திரிகளில் எழுதுபவர்களில் மிகமிகச் சிலரே 70 க்கு பின் பிறந்தவர்கள் என நினைக்கிறேன்.

2. நான், என் குடும்பம் இத்யாதி தற்பெருமைகள் அறவே வீண்வேலை.  ஆனால் தவிர்க இயலாதன. ஆனால் குறைந்த பட்சம் இதை குடும்பத்தோடு நிப்பாட்டுவதே உசிதம். அடுத்த கட்டத்துக்கு நகர்தி நான் இந்த ஊர்காரன்- நாம் எல்லோரும் இப்படித்தான் - இது எம் பெருமை என்பதெல்லாம் என்னளவில் சுத்த பைத்தியகாரத்தனம். 

2 - அப்படியானால் எம்மை தமிழர் என்பது எங்ஙனம் சரியாகும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

பிற்காலத்தில் முளீதரனும் ஒரு புத்தகம் எழுதுவார் , மனமும் வருந்துவார்.

ஆனால் தென் தமிழீழம் என்கின்ர ஒன்றே இருக்கப் போவதில்லை.  

அப்போதும் சிலர் இருப்பர் யாழ் மைய வாதத்தை கைகாட்டுவதற்கு. 

 

ரதி அக்காச்சி போன்ற ஒரு சிலரைத் தவிர கருணாவின் பிரிவுக்கு யாழ் மையவாதம் உடனடி காரணமாகவோ அல்லது, நீண்டகால காரணமாகவோ இருந்தது என்பதை மட்டக்களப்பில் யாரும் ஏற்பதில்லை என்பதற்கு அவரின் தொடர் தேர்தல் தோல்விகளே சாட்சி.

ஆனால் ராஜதுரையின் கதை வேறு. களம் வேறு. அதனால்தான் அவர் காசி ஆனந்தனை வெல்ல முடிந்தது.

ஆனாலும் - மேலே கட்டுரை ஆசிரியர் இரா துரைரத்தினம் கூறுவது போல, யு என் பியில் சேராமல், தனித்துவ அரசியலை ராஜதுரை செய்திருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

2 - அப்படியானால் எம்மை தமிழர் என்பது எங்ஙனம் சரியாகும் ?

தமிழர் என்பது வெற்றுப் பெருமை அல்ல. எம் அடையளம். எம் மொழி வளம். எம் கலாச்சார முதிசம். இதில் பெருமை பட ஏதுமில்லை. ஆனால் கட்டிக்காக்கும் கடமை இருக்கிறது.

சும்மா பெருமைக்கு கெமர் மன்னர்கள் கம்போடியாவில் கட்டிய கோவிலை தமிழர் கோவில் என்பதும். 

சுமேரியர் தமிழர் என்பதும்.

ஆப்கானிஸ்தானில் தமிழ் ஊர் என்பதும் பைத்தியகாரத்தனமே.

ஆனால் கீழடியில் எம் வரலாற்றை தேடுவதும்,

எம் நிலத்தில் எம் மொழிக்கு தேவைப்படும் அந்தஸ்தை கோருவதும்.

எம் நிலத்தில் எம் இனவிகிதாசாரத்தை பேண விழைவதும் (தனியார் குடியேற்றத்தை தடுக்காமல்)

பெருமை அல்ல - எம் உரிமை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

கப்பித்தான்,

1. போராட்டம் பல தளைகளை பலவீனமாக்கியது என்பது மறுப்பதற்கில்லை. அதனால் 70களிற்கு பின்னானவர்களின் மனநிலை முந்தியோர் போல இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இங்கே, குறிப்பாக கருணா பற்றிய திரிகளில் எழுதுபவர்களில் மிகமிகச் சிலரே 70 க்கு பின் பிறந்தவர்கள் என நினைக்கிறேன்.

2. நான், என் குடும்பம் இத்யாதி தற்பெருமைகள் அறவே வீண்வேலை.  ஆனால் தவிர்க இயலாதன. ஆனால் குறைந்த பட்சம் இதை குடும்பத்தோடு நிப்பாட்டுவதே உசிதம். அடுத்த கட்டத்துக்கு நகர்தி நான் இந்த ஊர்காரன்- நாம் எல்லோரும் இப்படித்தான் - இது எம் பெருமை என்பதெல்லாம் என்னளவில் சுத்த பைத்தியகாரத்தனம். 

87 ற்கு முன் பல பன்றிகள் புலிகளாகவே கருதப்பட்டன. 

தமிழர் தரப்பை பலவீனப்படுத்திய தமிழர்கள் வரிசையில் வேணும் எண்டால் முதல் 5 பேருக்குள் கருணா வரக்கூடும். ஆனால் அவர் மட்டுமே ஒரு மாபெரும் காரணி என்பது உண்மைக்குப் புறம்பானது.

ஏன் இது மீள மீள நிறுவப்படுகிறது என பார்க்கும் போது, இச்சையின்றிய பிரதேசவாதமே காரணியாக முன்னெழுகிறது.

 

உங்களுடய சில கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை. எல்லாவற்றையும் மையவாதத்தினுள் பொமைப்படுத்துகிறீர்கள் என்கிறேன்.

பிரதேசவாதம் கதைப்போர், அவர்களின் பின்ணனி, அவர்கள் யார், அவர்கள் கல்வியின் பின்புலம், மிக முக்கியமாக எத்தகைய சந்தர்ப்பங்களில் பிரதேசவாதம் கையிலெடுக்கப்படுகிறது என்பதை நாம் ஆராயத்தவற விடுகிறோம் என நினைக்கிறேன்.

எனது பார்வையில்   சாதி, சமயம், பிரதேசவாதம், பால் வேறுபாடு, உடற் குறைபாடு போன்றவற்றினை ஆயுதமாக பாவிப்போர் உண்மையில் தங்கள் பவீனத்தை மறைப்பதற்காகவே இதனை கையிலெடுப்பதாக நம்புகிறேன்.

நான் உன்னைவிட மேலானவன் ஆதலால் நான்தான் தகுதியானவன் என்பதாகவோ அல்லது நான் தகுதியானவன் ஆனால் இதனால்தான் தோற்றேன் என்பதாகவோ அவர்களின் வாதம் இருக்கிறது. 

தோல்வியின் இறுதிக்கணத்தில் அவ்ர்கள் எல்லோரினதும் இறுதி ஆயுதம் இதுதான்.

Link to comment
Share on other sites

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியல் வாதி ஆர்தான் பல்டி அடிக்கல இன்றுவரைக்கும் தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கி கொடுப்போம் என்று கூட்டமைப்பு மக்களை ஏமாற்றல 

அதுதான் கோட்டபாய சொல்லிவிட்டார் தமிழர்களுக்கு சமஸ்டியும் கொடுக்க முடியாது என்று பிறகென்ன இவர்களும் காலத்தை ஓட்ட வேண்டாமா 

எல்லா அரசியல்வாதிகளும் பல்டி அடிக்கிறார்கள் எண்டு சொல்ல முடியாது. நேர்மையான அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள் , இப்பவும் இருக்கிறார்கள்.

கோத்தபாய சமஷடி மட்டுமல்ல 13 மே முழுமையாக தர முடியாது எண்டுதான் கூறி இருக்கிறார்.

இப்போது வருகிற தேர்தலில் சம், சும் எல்லோரும் வெளியே. இவர்களால்தான் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

எனவே புதிதாக நிறையவே கட்சிகள்,தலைமைகள் உருவாகி வருகின்றன. இவர்கள் சமஷடி, ஈழம் நிச்சயம் நமக்கு பெற்று தருவார்கள். ஏன் என்றால் இவர்கள் எல்லாம் மிகவும் நேர்மையான , திறமையான அரசியல்வாதிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2019 at 7:29 PM, goshan_che said:

நான் இங்கே ஆரம்பத்தில் சொன்னது - ஒரே செயலை செய்த யாழ்பாணத்தவர்கள் மீதான உக்கிரத்தை விட கருணாவின் மீதான உக்கிரம் ஏன் என்பதுதான்.

கருணா தொடர்ந்தும் அரசியல் செய்கிறார் என்றார் விசுகு. டக்லசும், சுரேசும், சித்தரும் என்ன செய்கிறார்கள்?

கோசான் மற்றவர்களின் துரோகத்திலிருந்து தமிழர்கள் மீண்டு வந்தார்கள், ஆனால் முரளிதரனின் துரோகத்திலிருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2019 at 3:35 PM, goshan_che said:

கப்பித்தான்,

1. போராட்டம் பல தளைகளை பலவீனமாக்கியது என்பது மறுப்பதற்கில்லை. அதனால் 70களிற்கு பின்னானவர்களின் மனநிலை முந்தியோர் போல இல்லை என்பதும் உண்மையே. ஆனால் இங்கே, குறிப்பாக கருணா பற்றிய திரிகளில் எழுதுபவர்களில் மிகமிகச் சிலரே 70 க்கு பின் பிறந்தவர்கள் என நினைக்கிறேன்.

2. நான், என் குடும்பம் இத்யாதி தற்பெருமைகள் அறவே வீண்வேலை.  ஆனால் தவிர்க இயலாதன. ஆனால் குறைந்த பட்சம் இதை குடும்பத்தோடு நிப்பாட்டுவதே உசிதம். அடுத்த கட்டத்துக்கு நகர்தி நான் இந்த ஊர்காரன்- நாம் எல்லோரும் இப்படித்தான் - இது எம் பெருமை என்பதெல்லாம் என்னளவில் சுத்த பைத்தியகாரத்தனம். 

87 ற்கு முன் பல பன்றிகள் புலிகளாகவே கருதப்பட்டன. 

தமிழர் தரப்பை பலவீனப்படுத்திய தமிழர்கள் வரிசையில் வேணும் எண்டால் முதல் 5 பேருக்குள் கருணா வரக்கூடும். ஆனால் அவர் மட்டுமே ஒரு மாபெரும் காரணி என்பது உண்மைக்குப் புறம்பானது.

ஏன் இது மீள மீள நிறுவப்படுகிறது என பார்க்கும் போது, இச்சையின்றிய பிரதேசவாதமே காரணியாக முன்னெழுகிறது.

 

ஈழ போராட்ட்துக்கு 
ஓடிப்போனவர்கள் என்ற வரிசையில் நானும் நீங்களும் கூட துரோகம் செய்தவர்கள்தான்.
பெண் பிள்ளைகள் பாம்பு புத்துக்குள்ளாலும் முள்வேலி கண்ணிவெடிகளை கடந்து 
பாலி இனஅழிப்பு இராணுவத்தை நோக்கி நகர நாம்  கொழும்பு விமான நிலையம் நோக்கி நகர்ந்தவர்கள். 

அதுக்காக நாமும் கருணாவும் ஒன்றா?
டக்ளஸு அமீர் போன்றவர்கள் உடனிருந்து கொன்றவர்கள் இல்லை 

கருணா புலிகளுக்கு செய்த துரோகம் கூட மன்னிக்கலாம் உ
இவ்வளவு காலமும் இத்தனை இழப்புகளுக்கும் முகம் கொடுத்து 
போராட்டத்தை வளர்த்த மட்டு அம்பாறை மக்களுக்கும் போராளிகளுக்கும் 
செய்தது துரோகம் இல்லை ...... ஒரு இழிவான மனித மனம் ஒன்று செய்ய ஒருபோதும் செய்ய துணியாதது.

இந்த குரங்குளை பற்றி பேசுவதே வீண் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Vankalayan said:

எல்லா அரசியல்வாதிகளும் பல்டி அடிக்கிறார்கள் எண்டு சொல்ல முடியாது. நேர்மையான அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள் , இப்பவும் இருக்கிறார்கள்.

கோத்தபாய சமஷடி மட்டுமல்ல 13 மே முழுமையாக தர முடியாது எண்டுதான் கூறி இருக்கிறார்.

இப்போது வருகிற தேர்தலில் சம், சும் எல்லோரும் வெளியே. இவர்களால்தான் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

எனவே புதிதாக நிறையவே கட்சிகள்,தலைமைகள் உருவாகி வருகின்றன. இவர்கள் சமஷடி, ஈழம் நிச்சயம் நமக்கு பெற்று தருவார்கள். ஏன் என்றால் இவர்கள் எல்லாம் மிகவும் நேர்மையான , திறமையான அரசியல்வாதிகள்.

நேர்மையான ஒரு அரசியல்வாதியை உங்களால் சுட்ட முடியுமா ? 

கூறுங்கள் பார்க்கலாம்  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/21/2019 at 11:27 AM, Vankalayan said:

எல்லா அரசியல்வாதிகளும் பல்டி அடிக்கிறார்கள் எண்டு சொல்ல முடியாது. நேர்மையான அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள் , இப்பவும் இருக்கிறார்கள்.

கோத்தபாய சமஷடி மட்டுமல்ல 13 மே முழுமையாக தர முடியாது எண்டுதான் கூறி இருக்கிறார்.

இப்போது வருகிற தேர்தலில் சம், சும் எல்லோரும் வெளியே. இவர்களால்தான் நமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

எனவே புதிதாக நிறையவே கட்சிகள்,தலைமைகள் உருவாகி வருகின்றன. இவர்கள் சமஷடி, ஈழம் நிச்சயம் நமக்கு பெற்று தருவார்கள். ஏன் என்றால் இவர்கள் எல்லாம் மிகவும் நேர்மையான , திறமையான அரசியல்வாதிகள்.

அப்படி யார் இருக்கிறார்கள் என கூறமுடியுமா

 

7 hours ago, Kapithan said:

நேர்மையான ஒரு அரசியல்வாதியை உங்களால் சுட்ட முடியுமா ? 

கூறுங்கள் பார்க்கலாம்  ?

எனது கேள்வியும் அதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

கோசான் மற்றவர்களின் துரோகத்திலிருந்து தமிழர்கள் மீண்டு வந்தார்கள், ஆனால் முரளிதரனின் துரோகத்திலிருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

ஏன் என்றால் அதோடு யுத்தம் முடிவடைந்து விட்டது ... கருணா , புலிகளோடு நின்றிருந்தாலும் யுத்தம் முடிவடைந்து தான் இருக்கும் என்பதை உங்களைப் போன்ற பலர் உணர மாட்டார்கள் ...இப்படியெல்லாம் சேர்ந்து அடிக்கப் போகிறோம் என்று பேச்சு வார்த்தைகளில் சொல்லி இருப்பார்கள்... யுத்தம் இனிப் பலன் தராது என்று கருணா உணர்ந்திருக்கலாம்...கருணாவின் சுயநலம் அதில் இருந்தாலும் அதில் பிழை இல்லை என்பது என் நிலைப்பாடு...தலைவர் அப்பவே உணர்ந்திருந்தால் 2009 யுத்தமே நடந்திருக்காது [சமாதான காலத்தில் அங்கிருந்த போராளிகள் எல்லோரும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் ஈடுப்பட்டார்கள்,ஒழுங்கான பயிற்சி இல்லை,போதிய ஆயுதங்கள் இல்லை .இவை எல்லாம் தெரிந்து கொண்டே எப்படி தலைவர் போரை எதிர் கொண்டார்?]...தலைவரது நிலைப்பாட்டில் தலைவர் சரி என்றால் ,கருணாவின் நிலைப்பாட்டில் கருணாவும் சரி தான் ...எவ்வளவு காலத்திற்கு தான் ஆயுதத்தால் போராடிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் ?...சர்வதேசமும் ,இலங்கையரசும் போரை திணித்தது தான் . ஆனால் புலிகளும் அதை எதிர்பார்த்து அல்லவா இருக்க வேண்டும்? ...யுத்தத்திற்கு தயார் இல்லை என்றால் ஏதாவது சமாதான உடன்படிக்கையில் கை சாத்திட்டு விட்டு பிறகு எம்மை கொஞ்சம், கொஞ்சமாய் பலப் படுத்தி இருக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

ஈழ போராட்ட்துக்கு 
ஓடிப்போனவர்கள் என்ற வரிசையில் நானும் நீங்களும் கூட துரோகம் செய்தவர்கள்தான்.
பெண் பிள்ளைகள் பாம்பு புத்துக்குள்ளாலும் முள்வேலி கண்ணிவெடிகளை கடந்து 
பாலி இனஅழிப்பு இராணுவத்தை நோக்கி நகர நாம்  கொழும்பு விமான நிலையம் நோக்கி நகர்ந்தவர்கள். 

அதுக்காக நாமும் கருணாவும் ஒன்றா?
டக்ளஸு அமீர் போன்றவர்கள் உடனிருந்து கொன்றவர்கள் இல்லை 

கருணா புலிகளுக்கு செய்த துரோகம் கூட மன்னிக்கலாம் உ
இவ்வளவு காலமும் இத்தனை இழப்புகளுக்கும் முகம் கொடுத்து 
போராட்டத்தை வளர்த்த மட்டு அம்பாறை மக்களுக்கும் போராளிகளுக்கும்
 
செய்தது துரோகம் இல்லை ...... ஒரு இழிவான மனித மனம் ஒன்று செய்ய ஒருபோதும் செய்ய துணியாதது.

இந்த குரங்குளை பற்றி பேசுவதே வீண் 

எனக்கு நீங்கள் இதில் எழுதியது விளக்கம் இல்லாமல் இருக்கிறது மருதர் ... மட்டு, அம்பாறை மக்களுக்கு கருணா நல்லது தானே செய்திருக்கிறார்... உயிர் தப்பிய 5000ம் போராளிகளைகளைத் தவிர, பலவந்தமாய்  பெடியங்களை பிடிப்பதும் நின்று போயிட்டுது அவரது பிரிவுக்கு பிறகு.
எனக்கு அந்த நேரம் ஒரே வருத்தம் என்றால் அவர் போய் மகிந்தவுடன் கூட்டு சேர்ந்தது [இது பற்றி முன்னரும் யாழில் எழுதி இருக்கன்.]....அதனால் தான் கிழக்கு மக்கள் இன்னும் அவரை முழுமையாய் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன் .

 

 

Link to comment
Share on other sites

9 minutes ago, ரதி said:

ஏன் என்றால் அதோடு யுத்தம் முடிவடைந்து விட்டது ... கருணா , புலிகளோடு நின்றிருந்தாலும் யுத்தம் முடிவடைந்து தான் இருக்கும் என்பதை உங்களைப் போன்ற பலர் உணர மாட்டார்கள் ...இப்படியெல்லாம் சேர்ந்து அடிக்கப் போகிறோம் என்று பேச்சு வார்த்தைகளில் சொல்லி இருப்பார்கள்... யுத்தம் இனிப் பலன் தராது என்று கருணா உணர்ந்திருக்கலாம்...கருணாவின் சுயநலம் அதில் இருந்தாலும் அதில் பிழை இல்லை என்பது என் நிலைப்பாடு...தலைவர் அப்பவே உணர்ந்திருந்தால் 2009 யுத்தமே நடந்திருக்காது [சமாதான காலத்தில் அங்கிருந்த போராளிகள் எல்லோரும் குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் ஈடுப்பட்டார்கள்,ஒழுங்கான பயிற்சி இல்லை,போதிய ஆயுதங்கள் இல்லை .இவை எல்லாம் தெரிந்து கொண்டே எப்படி தலைவர் போரை எதிர் கொண்டார்?]...தலைவரது நிலைப்பாட்டில் தலைவர் சரி என்றால் ,கருணாவின் நிலைப்பாட்டில் கருணாவும் சரி தான் ...எவ்வளவு காலத்திற்கு தான் ஆயுதத்தால் போராடிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் ?...சர்வதேசமும் ,இலங்கையரசும் போரை திணித்தது தான் . ஆனால் புலிகளும் அதை எதிர்பார்த்து அல்லவா இருக்க வேண்டும்? ...யுத்தத்திற்கு தயார் இல்லை என்றால் ஏதாவது சமாதான உடன்படிக்கையில் கை சாத்திட்டு விட்டு பிறகு எம்மை கொஞ்சம், கொஞ்சமாய் பலப் படுத்தி இருக்க வேண்டும் 

போல்ட் செய்யப்பட்ட கருத்து 100 வீதம்  சரியானது. அது நடந்துருந்தால் இன்று உள்ள நிலையை விட பல மடங்கு சிறந்த நிலையில் இருந்திருப்போம் என்பது தன் நிதர்சனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

கோசான் மற்றவர்களின் துரோகத்திலிருந்து தமிழர்கள் மீண்டு வந்தார்கள், ஆனால் முரளிதரனின் துரோகத்திலிருந்து தமிழர்களால் மீள முடியவில்லை.

கருணா பிரிவு புலிகளுக்கு ஏற்பட்ட மிகபெரிய பின்னடைவு என்பது மறுப்பதற்கில்லை. உண்மையை சொல்லப்போனால் - ஜெயசிக்குறு சமயமே, ஜெயந்தன், அன்பரசி படையணிகள் வந்து கைகொடுத்திராவிடின் புலிகள் மரபுவழி போர் முறையை கைவிட்டு, கரந்தடி முறைமைக்கு மாறும்படி அல்லது   மரபுவழியில் போராடி அழியும்படி (2006-09 இல நடந்தது போல) ஆகியிருக்கும். ஆகவே கருணா பிரிவால் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. 

ஆனாலும் இந்த பிரிவின் பின்னும் புலிகளுக்கு அதன் தாக்கங்களை மட்டுப்படுத்த, உத்திகளை மாற்றி அமைக்க, வேணுமெண்டால் பிளான் A ஆகிய மரபுவழிப்போர் சரிவராத போது, பிளான் B ஆகிய கரந்தடி முறைக்கு மாற, 2005 தேர்தலில் நிதானித்து முடிவெடுக்க என பலவாய்புகள் இருந்தன. கருணா பிரிவின் பின்னரான இந்த முடிவுகளை புலிகள் சரியாக எடுத்திருந்தால் - கருணா பிரிவும், மாத்தையா சம்பவம் போல, ஒரு கணிசமான தாக்கத்தை செலுத்திய ஆனா பாரிய தாக்கத்தை கொடுக்காத சம்பவமாக போயிருக்கும்.

ஆனால் - இதை விட மோசமான “கையிறு கொடுப்புகள்” 2009 மே வரை புலிகளுக்கு கொடுக்கப்பட்டது. ஒபாமா தலையிடுவார், நோர்வே தலையிடும், இந்தியாவில் ஆட்சி மாறும், இப்படி ஒரு பகுதியாலும்.

மேலே ரஞ்சித் கூறியதை போல ஆயுத கப்பல்கள் வரவை தடுத்ததிலும்.

அண்ணை -இறங்குங்கோ இதுதான் இறுதி யுத்தம் என்றவகையிலும்,

விடுதலை புலிகளை மிக மோசமாக வழிநடத்தி (வேணுமென்றே), அவர்களை பிளான் B யை பற்றி சிந்திக்கவும் விடாமல், வழிச்சு துடைக்கும் படி ஆக்கியதில் இந்த மறைகரங்களின் பங்கு அபரிமிதமானது.

இவர்களுடன் ஒப்பிடும் போது கருணா பிரிவால் ஏற்பட்டது அதிகமில்லை.

யார் இந்த மறைகரங்கள் - கேபி வெளியால் தெரிபவர். ஏனையவர்கள் ? நீங்கள் சந்தேகிப்பவர்கள் சிலரை யோசித்துப் பாருங்கள் - நான் யோசித்துப்பார்த்ததில்- எல்லாரும் யாழ்ப்பாணத்தவர்கள்.

இப்போ சொல்லுங்கள் - போராட்டத்தின் தோல்வியில் யாரின் பங்களிப்பு மிகையானது?

On 12/20/2019 at 10:40 PM, Kapithan said:

உங்களுடய சில கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை. எல்லாவற்றையும் மையவாதத்தினுள் பொமைப்படுத்துகிறீர்கள் என்கிறேன்.

பிரதேசவாதம் கதைப்போர், அவர்களின் பின்ணனி, அவர்கள் யார், அவர்கள் கல்வியின் பின்புலம், மிக முக்கியமாக எத்தகைய சந்தர்ப்பங்களில் பிரதேசவாதம் கையிலெடுக்கப்படுகிறது என்பதை நாம் ஆராயத்தவற விடுகிறோம் என நினைக்கிறேன்.

எனது பார்வையில்   சாதி, சமயம், பிரதேசவாதம், பால் வேறுபாடு, உடற் குறைபாடு போன்றவற்றினை ஆயுதமாக பாவிப்போர் உண்மையில் தங்கள் பவீனத்தை மறைப்பதற்காகவே இதனை கையிலெடுப்பதாக நம்புகிறேன்.

நான் உன்னைவிட மேலானவன் ஆதலால் நான்தான் தகுதியானவன் என்பதாகவோ அல்லது நான் தகுதியானவன் ஆனால் இதனால்தான் தோற்றேன் என்பதாகவோ அவர்களின் வாதம் இருக்கிறது. 

தோல்வியின் இறுதிக்கணத்தில் அவ்ர்கள் எல்லோரினதும் இறுதி ஆயுதம் இதுதான்.

பிரதேச, சாதி, இனவாதத்தால் பாதிக்கப்படுகிறேன் என்று பொய்யாக பாசாங்கு செய்பவர்கள் உளர். உண்மையே.

இதை இங்கே playing the race card என்பர். ஒரு வெள்ளையினமல்லாதவர், தன்னில் உள்ள பிழையை மறைக்க- குற்றம் சாட்டுபவர் தன்னை இனரீதியாக ஒதுக்கிறார் என்று பொய்க்கூச்சல் போடுவது.

அதற்க்காக பிரதேச, சாதி, இனவாதமே இல்லை என்றாகி விடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

ஈழ போராட்ட்துக்கு 
ஓடிப்போனவர்கள் என்ற வரிசையில் நானும் நீங்களும் கூட துரோகம் செய்தவர்கள்தான்.
பெண் பிள்ளைகள் பாம்பு புத்துக்குள்ளாலும் முள்வேலி கண்ணிவெடிகளை கடந்து 
பாலி இனஅழிப்பு இராணுவத்தை நோக்கி நகர நாம்  கொழும்பு விமான நிலையம் நோக்கி நகர்ந்தவர்கள். 

அதுக்காக நாமும் கருணாவும் ஒன்றா?
டக்ளஸு அமீர் போன்றவர்கள் உடனிருந்து கொன்றவர்கள் இல்லை 

கருணா புலிகளுக்கு செய்த துரோகம் கூட மன்னிக்கலாம் உ
இவ்வளவு காலமும் இத்தனை இழப்புகளுக்கும் முகம் கொடுத்து 
போராட்டத்தை வளர்த்த மட்டு அம்பாறை மக்களுக்கும் போராளிகளுக்கும் 
செய்தது துரோகம் இல்லை ...... ஒரு இழிவான மனித மனம் ஒன்று செய்ய ஒருபோதும் செய்ய துணியாதது.

இந்த குரங்குளை பற்றி பேசுவதே வீண் 

உண்மைதான் வீண்வேலைதான். 

அதனால்தான் நான் பொதுவாக இவர் பற்றிய திரிகளில் கலந்து கொள்வதில்லை.

ஆனால் இங்கே இவரை வைத்து - தெரிந்தோ, தெரியாமலோ பிரதேசவாதம் முன்வைக்கப்படும் போது - அதை சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது.

10 hours ago, Kapithan said:

நேர்மையான ஒரு அரசியல்வாதியை உங்களால் சுட்ட முடியுமா ? 

கூறுங்கள் பார்க்கலாம்  ?

வங்காலையான் அங்கதமாக (sarcastic) எழுதியுள்ளார் என நினக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கு நீங்கள் இதில் எழுதியது விளக்கம் இல்லாமல் இருக்கிறது மருதர் ... மட்டு, அம்பாறை மக்களுக்கு கருணா நல்லது தானே செய்திருக்கிறார்... உயிர் தப்பிய 5000ம் போராளிகளைகளைத் தவிர, பலவந்தமாய்  பெடியங்களை பிடிப்பதும் நின்று போயிட்டுது அவரது பிரிவுக்கு பிறகு.
எனக்கு அந்த நேரம் ஒரே வருத்தம் என்றால் அவர் போய் மகிந்தவுடன் கூட்டு சேர்ந்தது [இது பற்றி முன்னரும் யாழில் எழுதி இருக்கன்.]....அதனால் தான் கிழக்கு மக்கள் இன்னும் அவரை முழுமையாய் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன் .

 

 

அக்காச்சி,

1. இலங்கையில் ஏன் தமிழர்கள் போராட தொடங்கினர்? தம் நிலத்தை தாமே ஆள வேண்டும். குறிப்பாக தமிழர் நிலங்களில் குடியேற்றங்கள் மூலம் தமிழர் சிறுபான்மையாக்கப் படுவதை தடுக்க வேண்டும். 

2. ஆயுதப் போரின் முன் குடியேற்றம் அசுர கதியில் நடந்த்தா? ஆம்

3. போரின் போது மந்தமடைந்ததா? ஆம்

4. போரின் பின் அதி தீவிரம் அடைந்துளதா? ஆம்

5. 2009 க்கு முன் தமிழர் தம் பேரம் பேசு வலுவை தக்க முறையில் அரசியலில் பாவிக்காமல் விட்டதும், ஈற்றில் பேரம் பேசும் நிலையை முற்றாக இழந்ததுமே, இன்று போரின் பின் தமிழர் நிலங்கள் கேட்பாரன்றி பறி போக காரணமா? ஆம்.

6. தமிழ்கள் பேரம் பேசும் நிலையை இழந்தமைக்கு, இன்று நிலங்கள் பறிபோவற்கு கருணா பிரிவும் காரணங்களில் ஒன்றா? ஆம்

7. திருமலை ஏற்கனவே பறிபோன மாவட்டம். அடுத்து பறிபோகப்போகும் மாவட்டங்களை, பறிபோகும் வாய்ப்பு அடிப்படையில் வரிசைப்படுத்துக? மட்டு-அப்மாறை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்.

8. கேள்விகள்6, 7க்கான பதில்களை உற்று நோக்கின், கருணா பிரிவால் மொத்த தமிழ இனமும் பாதிப்படைந்தாலும், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டு-அம்பாறை தமிழ் மக்களின் நீண்டகால இருப்பு அல்லவா? ஆம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

கருணா பிரிவால் மொத்த தமிழ இனமும் பாதிப்படைந்தாலும், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டு-அம்பாறை தமிழ் மக்களின் நீண்டகால இருப்பு அல்லவா? ஆம்.

கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இதற்கான பதிலை “இல்லை” என்று ஆக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.