Jump to content

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இதற்கான பதிலை “இல்லை” என்று ஆக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!

நீங்கள் உண்மையாகத்தான் கூறுகிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • Replies 162
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அக்காச்சி,

1. இலங்கையில் ஏன் தமிழர்கள் போராட தொடங்கினர்? தம் நிலத்தை தாமே ஆள வேண்டும். குறிப்பாக தமிழர் நிலங்களில் குடியேற்றங்கள் மூலம் தமிழர் சிறுபான்மையாக்கப் படுவதை தடுக்க வேண்டும். 

2. ஆயுதப் போரின் முன் குடியேற்றம் அசுர கதியில் நடந்த்தா? ஆம்

3. போரின் போது மந்தமடைந்ததா? ஆம்

4. போரின் பின் அதி தீவிரம் அடைந்துளதா? ஆம்

5. 2009 க்கு முன் தமிழர் தம் பேரம் பேசு வலுவை தக்க முறையில் அரசியலில் பாவிக்காமல் விட்டதும், ஈற்றில் பேரம் பேசும் நிலையை முற்றாக இழந்ததுமே, இன்று போரின் பின் தமிழர் நிலங்கள் கேட்பாரன்றி பறி போக காரணமா? ஆம்.

6. தமிழ்கள் பேரம் பேசும் நிலையை இழந்தமைக்கு, இன்று நிலங்கள் பறிபோவற்கு கருணா பிரிவும் காரணங்களில் ஒன்றா? ஆம்

7. திருமலை ஏற்கனவே பறிபோன மாவட்டம். அடுத்து பறிபோகப்போகும் மாவட்டங்களை, பறிபோகும் வாய்ப்பு அடிப்படையில் வரிசைப்படுத்துக? மட்டு-அப்மாறை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்.

8. கேள்விகள்6, 7க்கான பதில்களை உற்று நோக்கின், கருணா பிரிவால் மொத்த தமிழ இனமும் பாதிப்படைந்தாலும், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டு-அம்பாறை தமிழ் மக்களின் நீண்டகால இருப்பு அல்லவா? ஆம்.

 

நான் உங்களிடம் இவ்வாவு கேள்விகள் எல்லாம் கேட்கப் போறேல்ல...ஒரே ஒரு கேள்வி தான் ;
கருணா ,புலிகளில் இருந்து பிரியாமல் இருந்திருந்தால், புலிகளின்  ஆயுதப் போராட்டம் இன்னும் தொடர்ந்திருக்குமா?


பலவந்தப்படுத்தி,எதையும் கொஞ்ச காலம் தான் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்...நான் சொன்னது ஆயுதப் போராட்டத்தை  பற்றி மட்டும் தான் 

பி;கு ; உங்களுக்கு இந்த திரியில் இனி மேல் பதில் எழுதுவதில்லை என்று இருந்தேன்...திரும்ப ,திரும்ப என்னை இழுப்பதால் தொடர்ந்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கருணா பிரிவு புலிகளுக்கு ஏற்பட்ட மிகபெரிய பின்னடைவு என்பது மறுப்பதற்கில்லை. உண்மையை சொல்லப்போனால் - ஜெயசிக்குறு சமயமே, ஜெயந்தன், அன்பரசி படையணிகள் வந்து கைகொடுத்திராவிடின் புலிகள் மரபுவழி போர் முறையை கைவிட்டு, கரந்தடி முறைமைக்கு மாறும்படி அல்லது   மரபுவழியில் போராடி அழியும்படி (2006-09 இல நடந்தது போல) ஆகியிருக்கும். ஆகவே கருணா பிரிவால் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. 

ஆனாலும் இந்த பிரிவின் பின்னும் புலிகளுக்கு அதன் தாக்கங்களை மட்டுப்படுத்த, உத்திகளை மாற்றி அமைக்க, வேணுமெண்டால் பிளான் A ஆகிய மரபுவழிப்போர் சரிவராத போது, பிளான் B ஆகிய கரந்தடி முறைக்கு மாற, 2005 தேர்தலில் நிதானித்து முடிவெடுக்க என பலவாய்புகள் இருந்தன. கருணா பிரிவின் பின்னரான இந்த முடிவுகளை புலிகள் சரியாக எடுத்திருந்தால் - கருணா பிரிவும், மாத்தையா சம்பவம் போல, ஒரு கணிசமான தாக்கத்தை செலுத்திய ஆனா பாரிய தாக்கத்தை கொடுக்காத சம்பவமாக போயிருக்கும்.

ஆனால் - இதை விட மோசமான “கையிறு கொடுப்புகள்” 2009 மே வரை புலிகளுக்கு கொடுக்கப்பட்டது. ஒபாமா தலையிடுவார், நோர்வே தலையிடும், இந்தியாவில் ஆட்சி மாறும், இப்படி ஒரு பகுதியாலும்.

மேலே ரஞ்சித் கூறியதை போல ஆயுத கப்பல்கள் வரவை தடுத்ததிலும்.

அண்ணை -இறங்குங்கோ இதுதான் இறுதி யுத்தம் என்றவகையிலும்,

விடுதலை புலிகளை மிக மோசமாக வழிநடத்தி (வேணுமென்றே), அவர்களை பிளான் B யை பற்றி சிந்திக்கவும் விடாமல், வழிச்சு துடைக்கும் படி ஆக்கியதில் இந்த மறைகரங்களின் பங்கு அபரிமிதமானது.

இவர்களுடன் ஒப்பிடும் போது கருணா பிரிவால் ஏற்பட்டது அதிகமில்லை.

யார் இந்த மறைகரங்கள் - கேபி வெளியால் தெரிபவர். ஏனையவர்கள் ? நீங்கள் சந்தேகிப்பவர்கள் சிலரை யோசித்துப் பாருங்கள் - நான் யோசித்துப்பார்த்ததில்- எல்லாரும் யாழ்ப்பாணத்தவர்கள்.

இப்போ சொல்லுங்கள் - போராட்டத்தின் தோல்வியில் யாரின் பங்களிப்பு மிகையானது?

பிரதேச, சாதி, இனவாதத்தால் பாதிக்கப்படுகிறேன் என்று பொய்யாக பாசாங்கு செய்பவர்கள் உளர். உண்மையே.

இதை இங்கே playing the race card என்பர். ஒரு வெள்ளையினமல்லாதவர், தன்னில் உள்ள பிழையை மறைக்க- குற்றம் சாட்டுபவர் தன்னை இனரீதியாக ஒதுக்கிறார் என்று பொய்க்கூச்சல் போடுவது.

அதற்க்காக பிரதேச, சாதி, இனவாதமே இல்லை என்றாகி விடாது

நான் கூறியது அதுவல்ல சே .

இதனை எத்தகைய சூழலில் தூக்கிப்பிடித்து பிரச்சனை ஆக்குகிறார்கள் என்பதும் அதன் காரணமாக சமூகத்திற்கு ஏற்படும் மீளமுடியாத, அழிவு / தாக்கம் / சேதம் என்ன என்பதுதான் நான் கூறவந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் உண்மையாகத்தான் கூறுகிறீர்களா ?

கருணா அம்மானின் அண்மைய சூறாவளிப் பிரச்சாரங்களும், ஜெயானந்த மூர்த்தி, அமல் (வியாழேந்திரன்) போன்ற முன்னைய தேசியவாதிகள் அவருக்கு அணுக்கமாக இருப்பதும், அம்மான் வெளிப்படையாகவே முஸ்லிம்களின் காணிபிடிப்புக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதும், இப்போதும் புலிகளின் தளபதியாக இருந்த பெருமைகளைப் பறைசாற்றுவதும், மகிந்தவுடன் இருக்கும் நெருக்கத்தை பிரச்சாரம் செய்வதும் அம்மான் களமுனையில் முன்னே நின்று கட்டளைத்தளபதிக்குரிய உற்சாகத்துடன் செயற்படுவதுபோல இருக்கின்றது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

நான் உங்களிடம் இவ்வாவு கேள்விகள் எல்லாம் கேட்கப் போறேல்ல...ஒரே ஒரு கேள்வி தான் ;
கருணா ,புலிகளில் இருந்து பிரியாமல் இருந்திருந்தால், புலிகளின்  ஆயுதப் போராட்டம் இன்னும் தொடர்ந்திருக்குமா?


பலவந்தப்படுத்தி,எதையும் கொஞ்ச காலம் தான் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்...நான் சொன்னது ஆயுதப் போராட்டத்தை  பற்றி மட்டும் தான் 

பி;கு ; உங்களுக்கு இந்த திரியில் இனி மேல் பதில் எழுதுவதில்லை என்று இருந்தேன்...திரும்ப ,திரும்ப என்னை இழுப்பதால் தொடர்ந்தேன் 

1. இருக்கும், இருக்காது என்று சொல்ல நான் என்ன காண்டம் பாக்கிற ஆளா😂. ஆனால் மேலே ஏலவே எழுதியுள்ளேன் - கருணா பிரிந்தாலும், இல்லாவிட்டாலும் புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டே இருக்கும். அதற்கு அவர்களுக்கு கருணாவை விட பெரிய, பெரிய ஆப்புகள் எல்லாம் ஏனையோரால் சொருகபட்டன என்பதும், சில பெரிய ஆப்புகளில் அவர்கள் தாமாகவே போய் உட்கார்ந்தார்கள் என்பதும் காரணமாகிறது.

2. புலிகள் உலக நாடுகளின், இந்தியாவின் நிலைப்பாட்டை சரிவரப் புரிந்து, ஆயுதப்போராட்டம் அது பயணிக்கும் தூரம் முழு அளவுக்கும் வந்து விட்டது என்ற உண்மையை தரிசித்து, IRA 1998இல் எடுத்த முடிவு போல ஒரு முடிவை எடுத்து, 2005 தேர்தலில் சரியான முடிவை எடுத்திருந்தால், போராட்டம் தொடராவிடினும், போராடும் ராணுவச் சமநிலையை பேணி இருக்க முடியும்.

3. இல்லை போராடுவது என்று முடிவெடுத்தாலும் - மரபுவழி போராட்டம் சரிவராது என புரிந்து, கரந்தடிக்கு மாறி இருந்தாலும் இன்று வரை ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்திருக்க கூடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானின் அண்மைய சூறாவளிப் பிரச்சாரங்களும், ஜெயானந்த மூர்த்தி, அமல் (வியாழேந்திரன்) போன்ற முன்னைய தேசியவாதிகள் அவருக்கு அணுக்கமாக இருப்பதும், அம்மான் வெளிப்படையாகவே முஸ்லிம்களின் காணிபிடிப்புக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதும், இப்போதும் புலிகளின் தளபதியாக இருந்த பெருமைகளைப் பறைசாற்றுவதும், மகிந்தவுடன் இருக்கும் நெருக்கத்தை பிரச்சாரம் செய்வதும் அம்மான் களமுனையில் முன்னே நின்று கட்டளைத்தளபதிக்குரிய உற்சாகத்துடன் செயற்படுவதுபோல இருக்கின்றது. 😀

கருணா திறமையான களநிலை செயற்பாட்டாளர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

அவருக்கென ஒரு தனி வசீகரமும், ஆளுமையும், தலைமைதுவப் பண்பும் உள்ளது என்பதும் மறுக்கவியலாதது.

அதை விட கருணாவின் இன்னொரு சிறப்பம்சம் அவரின் தலைமை மீதான விசுவாசம்.

என்னடா இப்படி சொல்கிறேனே என எண்ண வேண்டாம். பிரியும் வரை பிரபாவின் விசுவாசமான தளபதிகளில் முதன்மையானவர். பிரிந்து மகிந்தவிடம் சேர்ந்த பின் மகிந்த ஆட்சியில் இல்லாதபோது, மேர்வின் சில்வா, வெல்கம, விஜிதமுனி சொய்சா, சஜின் வாஸ் என்று பல மகிந்த விசுவாசிகள் குத்துக்கரணம் அடித்த போதும் கருணா அசையவில்லை.

இவை அனைத்தும் கருணாவை இன்று கிழக்கில் ஒரு சக்தியாக வைத்திருக்கிறன. ஆனால் மக்கள் ஆதரவு இல்லாவிடில் இவை எதுவும் நிலைக்காது என்பது அவருக்கும் தெரியும், அதனால்தான் முஸ்லீம்களை எதிரியாக கட்டமைத்து முழு வீச்சாக களத்தில் இறங்கியுள்ளார். 

ஆனாலும் - நீங்கள் கூறியது போல 7ம் கேள்விக்கான பதிலை, டக்ளஸ், கருணா, ஏன் கோட்டாவால் கூட இல்லை என ஆக்க முடியாது.

பெளத்த-சிங்கள மனோநிலைக்கு கோரப்பசி. அவை இல்லாது போகும்வரை தமிழர் நிலங்களை விழுங்கியே ஆகவேண்டும். எந்த தமிழ் சிங்கள தலைவர் இந்த பசிக்கு குறுக்கே வந்தாலும் அவர்களையும் மென்று துப்பி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானின் அண்மைய சூறாவளிப் பிரச்சாரங்களும், ஜெயானந்த மூர்த்தி, அமல் (வியாழேந்திரன்) போன்ற முன்னைய தேசியவாதிகள் அவருக்கு அணுக்கமாக இருப்பதும், அம்மான் வெளிப்படையாகவே முஸ்லிம்களின் காணிபிடிப்புக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதும், இப்போதும் புலிகளின் தளபதியாக இருந்த பெருமைகளைப் பறைசாற்றுவதும், மகிந்தவுடன் இருக்கும் நெருக்கத்தை பிரச்சாரம் செய்வதும் அம்மான் களமுனையில் முன்னே நின்று கட்டளைத்தளபதிக்குரிய உற்சாகத்துடன் செயற்படுவதுபோல இருக்கின்றது. 😀

நான் கிழக்கு மாகாணத்தின் இறுதி நிலைமை எப்படி இருக்கும் என்பதிலிருந்து பேசுகிறேன். இன்னொரு பத்து அல்லது பதினைந்து வருடங்களில் கிழக்குமாகாணத்திற்கான போட்டி என்பது முசுலிம்களுக்கும் சிங்களத்திற்குமானதாகவே இருக்கும்.

தற்போதைய நிலைமையில் முரளீதரன், சந்திரகாந்தன் போன்றோர் ஈசல்கள் போல காணாமல் போய்விடுவார்கள்.  

இறுதியில் எங்களுக்கு மிஞ்சப்போவது ஒன்றுமேயில்லை. 

கிழக்கு மாகாணத் தமிழர் இப்போதே சிங்களத்துடன் ஐக்கியமாவதற்குரிய வழிகளை தேடுவதே சாலச்சிறந்தது.

வட மாகாணத் தமிழருக்கு கொஞ்சம் அதிக காலம் எடுக்கும் வேறொன்றும் இல்லை.

புலம் பெயர்ந் தமிழர் தங்கள் அடயாளத்தை தங்களை அறியாமலே ஒரு பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் தொலைத்து நிற்பர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நான் கிழக்கு மாகாணத்தின் இறுதி நிலைமை எப்படி இருக்கும் என்பதிலிருந்து பேசுகிறேன். இன்னொரு பத்து அல்லது பதினைந்து வருடங்களில் கிழக்குமாகாணத்திற்கான போட்டி என்பது முசுலிம்களுக்கும் சிங்களத்திற்குமானதாகவே இருக்கும்.

தற்போதைய நிலைமையில் முரளீதரன், சந்திரகாந்தன் போன்றோர் ஈசல்கள் போல காணாமல் போய்விடுவார்கள்.  

இறுதியில் எங்களுக்கு மிஞ்சப்போவது ஒன்றுமேயில்லை. 

கிழக்கு மாகாணத் தமிழர் இப்போதே சிங்களத்துடன் ஐக்கியமாவதற்குரிய வழிகளை தேடுவதே சாலச்சிறந்தது.

வட மாகாணத் தமிழருக்கு கொஞ்சம் அதிக காலம் எடுக்கும் வேறொன்றும் இல்லை.

புலம் பெயர்ந் தமிழர் தங்கள் அடயாளத்தை தங்களை அறியாமலே ஒரு பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் தொலைத்து நிற்பர். 

கசப்பான உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

கசப்பான உண்மை!

150 வருடம் முன்பு ரியூனியன் தீவுகளில் குடியேறிய தமிழர்கள் 
இப்போதும் தமிழர்களாக இருக்கிறார்கள்

இந்த தொழில்நுட்ப காலத்தில் இத்ததனை தகவல் பரிமாற்ற 
வசதி இருக்கும்போது அவ்வளவு எளிதாக அது இருக்கும் என்று நான் எண்ணவில்லை.  

கொஞ்சபேர்கள் தடம் புரளுவார்கள் ... அதனால் அது மாறிவிடாது.

மட்டுதமிழர்களை நாம் பொருளாதார ரிதியாக முன்னேற்றினால் 
மட்டு நிலைமையும் மாறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

150 வருடம் முன்பு ரியூனியன் தீவுகளில் குடியேறிய தமிழர்கள் 
இப்போதும் தமிழர்களாக இருக்கிறார்கள்

இந்த தொழில்நுட்ப காலத்தில் இத்ததனை தகவல் பரிமாற்ற 
வசதி இருக்கும்போது அவ்வளவு எளிதாக அது இருக்கும் என்று நான் எண்ணவில்லை.  

கொஞ்சபேர்கள் தடம் புரளுவார்கள் ... அதனால் அது மாறிவிடாது.

மட்டுதமிழர்களை நாம் பொருளாதார ரிதியாக முன்னேற்றினால் 
மட்டு நிலைமையும் மாறும். 

அவர்களின் பெயர்களில் மட்டுமே தமிழ் தங்கியுள்ளது பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

அவர்களின் பெயர்களில் மட்டுமே தமிழ் தங்கியுள்ளது பாஸ் .

நான் அறிந்த மட்டிலும் கூட இப்படித்தான். பெயரில் தமிழ், சடங்குகளில் இந்து சமயம் மட்டுமே எஞ்சியுள்ளது.

கரீபியன் தீவுகள், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகர தமிழர்கள், தென்னாபிரிகாவின் டர்பன் நகரில் உள்ளோர் பலரின் நிலையும் இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நான் அறிந்த மட்டிலும் கூட இப்படித்தான். பெயரில் தமிழ், சடங்குகளில் இந்து சமயம் மட்டுமே எஞ்சியுள்ளது.

கரீபியன் தீவுகள், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகர தமிழர்கள், தென்னாபிரிகாவின் டர்பன் நகரில் உள்ளோர் பலரின் நிலையும் இதுதான்.

அவர்களுக்கெல்லாம் அவை சொந்த நிலங்கள் அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அவர்களுக்கெல்லாம் அவை சொந்த நிலங்கள் அல்ல

எங்களுக்கெல்லாம் உங்கள் விருப்பத்துடன் சேர்ந்து பயணிக்கத்தான் ஆசை விசுகு. ஆனால் யதார்த்தம் என்கின்ற ஒன்று இருப்பதை மறுக்க முடியாதல்லவா ?

 

தமிழகத்தால் மட்டும்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

ஆனால் எங்களைவிட அவர்கள் வேகமாக அடையாளத்தை இழப்பதாக தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

எங்களுக்கெல்லாம் உங்கள் விருப்பத்துடன் சேர்ந்து பயணிக்கத்தான் ஆசை விசுகு. ஆனால் யதார்த்தம் என்கின்ற ஒன்று இருப்பதை மறுக்க முடியாதல்லவா ?

 

தமிழகத்தால் மட்டும்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

ஆனால் எங்களைவிட அவர்கள் வேகமாக அடையாளத்தை இழப்பதாக தோன்றுகிறது.

இது பற்றி கனக்க எழுதலாம் சகோ. அவரவரால் முடிந்ததை அவரவர் செய்தால் போதும். எனக்கு எவர் மீதும் கோபமோ  மரியாதைக்குறைவோ கிடையாது.  காலம் எனக்குத் தந்த கடமையை நான் செய்வேன் செய்து விட்டே போவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

1. இருக்கும், இருக்காது என்று சொல்ல நான் என்ன காண்டம் பாக்கிற ஆளா😂. ஆனால் மேலே ஏலவே எழுதியுள்ளேன் - கருணா பிரிந்தாலும், இல்லாவிட்டாலும் புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டே இருக்கும். அதற்கு அவர்களுக்கு கருணாவை விட பெரிய, பெரிய ஆப்புகள் எல்லாம் ஏனையோரால் சொருகபட்டன என்பதும், சில பெரிய ஆப்புகளில் அவர்கள் தாமாகவே போய் உட்கார்ந்தார்கள் என்பதும் காரணமாகிறது.

2. புலிகள் உலக நாடுகளின், இந்தியாவின் நிலைப்பாட்டை சரிவரப் புரிந்து, ஆயுதப்போராட்டம் அது பயணிக்கும் தூரம் முழு அளவுக்கும் வந்து விட்டது என்ற உண்மையை தரிசித்து, IRA 1998இல் எடுத்த முடிவு போல ஒரு முடிவை எடுத்து, 2005 தேர்தலில் சரியான முடிவை எடுத்திருந்தால், போராட்டம் தொடராவிடினும், போராடும் ராணுவச் சமநிலையை பேணி இருக்க முடியும்.

3. இல்லை போராடுவது என்று முடிவெடுத்தாலும் - மரபுவழி போராட்டம் சரிவராது என புரிந்து, கரந்தடிக்கு மாறி இருந்தாலும் இன்று வரை ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்திருக்க கூடும்.

 

பிறகு எதற்கு இன்னமும் கருணாவை நொந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று புரியவில்லை ..இப்பத்தைய நிலையில் கிழக்கு மக்களை ஓரளவுக்கேனும் காப்பாற்ற கூடிய தகுதி கருணாவுக்கு இருக்குதென்று நான் நம்புகிறேன் 

3 hours ago, Maruthankerny said:

சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

பிறகு எதற்கு இன்னமும் கருணாவை நொந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று புரியவில்லை ..இப்பத்தைய நிலையில் கிழக்கு மக்களை ஓரளவுக்கேனும் காப்பாற்ற கூடிய தகுதி கருணாவுக்கு இருக்குதென்று நான் நம்புகிறேன் 

அக்கா,

எங்கள் கவலைகளை, இயலாமைகளை அதனால் ஏற்படும் கோபமும் பதட்டமும் இன்னமும் உங்களுக்கு விளங்கவில்லையா ? 

ஆச்சரியமாக இருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

..இப்பத்தைய நிலையில் கிழக்கு மக்களை ஓரளவுக்கேனும் காப்பாற்ற கூடிய தகுதி கருணாவுக்கு இருக்குதென்று நான் நம்புகிறேன் 

நன்றி

மிகவும் தவறான நம்பிக்கை சகோதரி. பிரச்சினைக்கு இன்னொரு பிரச்சினை தீர்வாகாது. இவை இவர்களது தம்மை மட்டும் முன்னிறுத்தும் சுயநல அரசியலே தவிர ஒருகாலத்தில் தமிழர்கள் இசுலாமியர்கள் சிங்களவர்கள் என்று எவரது ஆதரவும் அற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலை மட்டுமே எஞ்சும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

அக்கா,

எங்கள் கவலைகளை, இயலாமைகளை அதனால் ஏற்படும் கோபமும் பதட்டமும் இன்னமும் உங்களுக்கு விளங்கவில்லையா ? 

ஆச்சரியமாக இருக்கிறது .

என்னைப் பொறுத்த வரை கிழக்கு மாகாண மக்கள் தைரியசாலிகள் ,எதையும் ஒரு அளவிற்கு தான் பொறுப்பார்கள் ...தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றே நான் நினைக்கிறேன் 

18 minutes ago, விசுகு said:

மிகவும் தவறான நம்பிக்கை சகோதரி. பிரச்சினைக்கு இன்னொரு பிரச்சினை தீர்வாகாது. இவை இவர்களது தம்மை மட்டும் முன்னிறுத்தும் சுயநல அரசியலே தவிர ஒருகாலத்தில் தமிழர்கள் இசுலாமியர்கள் சிங்களவர்கள் என்று எவரது ஆதரவும் அற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலை மட்டுமே எஞ்சும்

 

அண்ணா , எப்பவாவது முஸ்லீம் மக்கள் எங்கட  பக்கம் இருந்தார்களா?...நீங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் அவர்கள் உங்களோடு ஓட்டப் போவதில்லை...அப்படி உறவாடினால் அது எம்மை அழிப்பதற்கு மட்டும் தான் ...எமது இருப்பை காப்பாற்றிக் கொள்ள சிங்களவனோடு உறவாடுவதில் ஒரு தப்பு ம் இல்லை ...ஒரு அளவுக்கு மேல் சிங்களவன் எதுவுமே தர போறதில்லை ..கொஞ்ச காலத்திற்கு கோத்தா போன்றவர்கள் பதவியில் இருப்பது தமிழர்களுக்கு நல்லது ...கருணா கிழக்கில் தமிழரை இல்லாமற் செய்யும் அளவிற்கு சுயநலவாதியோ,துரோகியோ இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

பிறகு எதற்கு இன்னமும் கருணாவை நொந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று புரியவில்லை ..இப்பத்தைய நிலையில் கிழக்கு மக்களை ஓரளவுக்கேனும் காப்பாற்ற கூடிய தகுதி கருணாவுக்கு இருக்குதென்று நான் நம்புகிறேன் 

நன்றி

நான் அவரை இட்டு நோவதில்லை அக்காச்சி.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். நிரந்தர துரோகியும் இல்லை என்பவன் நான்.

சித்தர், சுரேஸ் போல இன்னொமொருவராகவே இவரை நான் பார்கிறேன். அமிருக்கு துரோகி என மரணதண்டனை வழங்கப்பட்டது. அதில் அரும்பொட்டில் தப்பியவர் சிவசிதம்பரம்.

பின்னர் அவர் காலமாகியபோது, கிளிநொச்சியில் வைத்து புலிக் கொடி போர்த்தி பூரண ராணுவ மரியாதை கொடுக்கப்பட்டது.

இப்போ சிவா உயிரோடிருந்தாலும் சம்பந்தன் செய்யும் அரசியலைத்தான் செய்திருப்பார்.

ஆக 1989-2000-2019 இல் மாறி இருப்பது காலமும், பார்வையுமே தவிர வேறேதும் இல்லை.

வடக்கு-கிழக்கு இணைப்பு இனி ஒருபோதும் சாத்தியப்படாது என்பது என் திட்டவட்டமான நம்பிக்கை. கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கூட இது பின்னொரு நாளில் சாத்கியமாகலாம் என நம்பியவன் நான்.

ஆனால் இந்த இரு வருடத்தில் யதார்த்தம் உறைத்துள்ளது.

ஆகவே மட்டகளப்பை மையமாக கொண்டு, கிழக்கிலங்கை தமிழர்க்கென என பிரெத்தியேக அரசியல் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். 

முன்னைய நாட்களை போலன்றி இப்போ வடக்கில் இருக்கும் தலைமையும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியில்லை எனும் போது கிழக்கில் ஒரு தலைமை உருவாவதில் தப்பேதும் இல்லை.

கிழக்கின் மக்கள் அந்த தலைமை கருணாதான் என முடிவெடுத்தால். அதுதான் முடிவாக இருக்க முடியும். இல்லை பிள்ளையாந்தான், தம்பிமுத்துதான், அமல்தான் என்றாலும் அப்படியே.

கூட்டமைப்பில் இருப்பவர்களை ஏற்றாலும் சரிதான். ஆனால் அவர்கள் உள்ளவர்களிலேயே செயல்திறனற்று தெரிகிறார்கள்.

இவர்களளை விட, தூய உள்ளம் கொண்ட, தேசியத்தின் பாற்பட்ட, முன்னாள் போராளிகள்/அரசியல்வாதிகள் இல்லாத புதிய இளஞர்கள் தலைமையில் ஒரு அரசியல் மட்டகளப்பில் மலரவேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பு. ஆனா அது நடைமுறைச் சாத்தியமா தெரியவில்லை.

ஆனால் யார் வந்தாலும் - அன்றாடம்காய்சி அரசியல்தான் செய்யமுடியும் என்பதும் உண்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நான் அவரை இட்டு நோவதில்லை அக்காச்சி.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். நிரந்தர துரோகியும் இல்லை என்பவன் நான்.

சித்தர், சுரேஸ் போல இன்னொமொருவராகவே இவரை நான் பார்கிறேன். அமிருக்கு துரோகி என மரணதண்டனை வழங்கப்பட்டது. அதில் அரும்பொட்டில் தப்பியவர் சிவசிதம்பரம்.

பின்னர் அவர் காலமாகியபோது, கிளிநொச்சியில் வைத்து புலிக் கொடி போர்த்தி பூரண ராணுவ மரியாதை கொடுக்கப்பட்டது.

இப்போ சிவா உயிரோடிருந்தாலும் சம்பந்தன் செய்யும் அரசியலைத்தான் செய்திருப்பார்.

ஆக 1989-2000-2019 இல் மாறி இருப்பது காலமும், பார்வையுமே தவிர வேறேதும் இல்லை.

வடக்கு-கிழக்கு இணைப்பு இனி ஒருபோதும் சாத்தியப்படாது என்பது என் திட்டவட்டமான நம்பிக்கை. கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கூட இது பின்னொரு நாளில் சாத்கியமாகலாம் என நம்பியவன் நான்.

ஆனால் இந்த இரு வருடத்தில் யதார்த்தம் உறைத்துள்ளது.

ஆகவே மட்டகளப்பை மையமாக கொண்டு, கிழக்கிலங்கை தமிழர்க்கென என பிரெத்தியேக அரசியல் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். 

முன்னைய நாட்களை போலன்றி இப்போ வடக்கில் இருக்கும் தலைமையும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியில்லை எனும் போது கிழக்கில் ஒரு தலைமை உருவாவதில் தப்பேதும் இல்லை.

கிழக்கின் மக்கள் அந்த தலைமை கருணாதான் என முடிவெடுத்தால். அதுதான் முடிவாக இருக்க முடியும். இல்லை பிள்ளையாந்தான், தம்பிமுத்துதான், அமல்தான் என்றாலும் அப்படியே.

கூட்டமைப்பில் இருப்பவர்களை ஏற்றாலும் சரிதான். ஆனால் அவர்கள் உள்ளவர்களிலேயே செயல்திறனற்று தெரிகிறார்கள்.

இவர்களளை விட, தூய உள்ளம் கொண்ட, தேசியத்தின் பாற்பட்ட, முன்னாள் போராளிகள்/அரசியல்வாதிகள் இல்லாத புதிய இளஞர்கள் தலைமையில் ஒரு அரசியல் மட்டகளப்பில் மலரவேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பு. ஆனா அது நடைமுறைச் சாத்தியமா தெரியவில்லை.

ஆனால் யார் வந்தாலும் - அன்றாடம்காய்சி அரசியல்தான் செய்யமுடியும் என்பதும் உண்மையே.

படித்த கொஞ்ச பேர் சேவை என்று இப்போது மட்டுவில் இருந்து இறங்கியுள்ளார்கள்...ஆனால் அவர்களும் அரசியல்வாதிகளாய் போனால் என்ன செய்வார்கள் என்பது தற்போதைக்கு சொல்ல முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை கிழக்கு மாகாண மக்கள் தைரியசாலிகள் ,எதையும் ஒரு அளவிற்கு தான் பொறுப்பார்கள் ...தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றே நான் நினைக்கிறேன் 

அண்ணா , எப்பவாவது முஸ்லீம் மக்கள் எங்கட  பக்கம் இருந்தார்களா?...நீங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் அவர்கள் உங்களோடு ஓட்டப் போவதில்லை...அப்படி உறவாடினால் அது எம்மை அழிப்பதற்கு மட்டும் தான் ...எமது இருப்பை காப்பாற்றிக் கொள்ள சிங்களவனோடு உறவாடுவதில் ஒரு தப்பு ம் இல்லை ...ஒரு அளவுக்கு மேல் சிங்களவன் எதுவுமே தர போறதில்லை ..கொஞ்ச காலத்திற்கு கோத்தா போன்றவர்கள் பதவியில் இருப்பது தமிழர்களுக்கு நல்லது ...கருணா கிழக்கில் தமிழரை இல்லாமற் செய்யும் அளவிற்கு சுயநலவாதியோ,துரோகியோ இல்லை 

அதாவது,

வட மாகாணத்தார் கிழக்கு மாகாணத்தாரைப் பற்றி கவலைப் படாதீர்கள் என்கிறீர்கள். அப்படித்தானே. ?

1 minute ago, Kapithan said:

அதாவது,

வட மாகாணத்தார் கிழக்கு மாகாணத்தாரைப் பற்றி கவலைப் படாதீர்கள் என்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்கள் வாக்கில் நேர்மையை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அதாவது,

வட மாகாணத்தார் கிழக்கு மாகாணத்தாரைப் பற்றி கவலைப் படாதீர்கள் என்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்கள் வாக்கில் நேர்மையை எதிர்பார்க்கிறேன்.

வடக்கு மக்களால் கிழக்கு மக்களது நிலையை புரிந்து கொள்ள முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

வடக்கு மக்களால் கிழக்கு மக்களது நிலையை புரிந்து கொள்ள முடியாது 

ஆதலால் ஒதுங்கியிருங்கள் என்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் அறிந்த மட்டிலும் கூட இப்படித்தான். பெயரில் தமிழ், சடங்குகளில் இந்து சமயம் மட்டுமே எஞ்சியுள்ளது.

கரீபியன் தீவுகள், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகர தமிழர்கள், தென்னாபிரிகாவின் டர்பன் நகரில் உள்ளோர் பலரின் நிலையும் இதுதான்.

இந்த வார்த்தைதான் 
நாம் ஆய்ந்து பார்க்க வேண்டியது.

நீங்கள் தமிழ் தெரியாது ..... இலங்கை தெரியாது ....... சேலை தெரியாது 
என்று மினி ஸ்கேர்ட் போர்த்துக்கொண்டு சிகரடடையும் ஊதிக்கொண்டு சொல்லலாம் 

எத்தனை பிரிட்டிஸ்காரர்கள் உங்களை நீங்கள் பிரிடிஷ் காரன்/ காரி என்று ஏற்றுக்கொள்வார்கள்? 

அங்குதான் அகமும்/புறமும் மோதும் அப்போதான் நீரை சத்தாக்கி 
எமை உயரமான மரமாக்கிய வேரை அறிவு தேடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.