Jump to content

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2011-1-696x392.jpg
 

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் என்பது தனக்கு தெரியும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில், கோமாரி, ஊரணி பகுதியில் உள்ள பெண்கள் சமாசம், விளையாட்டு கழகங்கள், இளைஞர்கள் அமைப்பு, உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வெள்ளிக்கிழமை(13) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது கருத்தில்,

தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். கடந்த சனாதிபதித் தேர்தலில் நாங்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வேண்டும் என்பதற்காக முயற்சிகளைச் செய்தோம். மூழ்கப் போகும் கப்பலில் பயணிக்க வேண்டாம், ஓடும் கப்பலிலே பயணிக்க வேண்டும் என மேடைகளில் உரக்கக் கூறினோம். அது பற்றிய தெளிவு அப்போது தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை. சனாதிபதி கோட்டாபயவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு நல்ல விடயம். நாம் வெற்றியின் பங்காளராக இருக்கும் போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள அரசிடம் வாதிடும் சக்தியாக மாற முடியும்.

சஜித் பிரேமதாச அவருடன் இருந்தவர்கள் துவேஷம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் தமிழ் மக்களை காடேற்ற முற்பட்டனர். இனவாதம் பிடித்த முஸ்லிம் தலைவர்கள் இருந்த இடத்திலே தமிழ் தலைமைகளும் இருந்து கொண்டு ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரித்தார்கள் என்று இன்னும் எனக்குபுரியவில்லை. இது ஒரு வரலாற்றுப்பிழை. இந்த வரலாற்றுப் பிழைகளை இனிவரும் காலங்களிலும் நாம் விட்டு விடக்கூடாது.

கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துரோகச் செயல். வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், காளி கோயிலை இடித்து பள்ளிவாசல் கட்டினேன் என்று திமிராகப் பேசிய முஸ்லிம் தலைவர்கள் இப்போது அடங்கிப் போய் இருக்கிறார்கள். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையும்இல்லை.

கடந்த ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சிக்காலம் தமிழர்களுக்கு கிடைத்த சாபக்கேடு. அவரை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவந்தவர்கள் தமிழ் மக்கள். அவர் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. மாறாக துரோகத்தை மாத்திரமே செய்தார். அவரால் ஒரு அரசியல்கைதிகள் கூட வெளியில் விட முடியவில்லை .

இன்று கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தவுடன் அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறார். நான் ஏன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிஎன்ற கட்சியை உருவாக்கினேன் என்றால், எனக்கு தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் . ஏனெனில் அது ஒரு ஆணித்தரமான கட்சி அல்ல. அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியும் அல்ல. அவர்கள் பதிவு செய்யப் போவதுமில்லை. தமிழரசு கட்சியின் கீழ் தான் ஒன்றாக இருக்கின்றனர். அவர்களின் உடைவை நிமிர்த்த கூடிய கட்சி தேவை என்பதால்தான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை உருவாக்கி, தமிழர் எங்கெல்லாம் வசிக்கிறார்கள்களோ, அங்கெல்லாம் பயணம்செய்து கட்சியை பற்றியும் தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு குறித்தும் தெளிவுபடுத்தி வருகிறோம்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வேறு ஒரு வியூகத்தை வகுக்க வேண்டும். தேசியக் கட்சியுடன் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் நாம் களம் இறங்குவோமானால் ஒரு ஆசனத்தைகூட பெற முடியாது. ஏனெனில் தேசிய கட்சியில் முஸ்லிம்கள் இடம்பெற்றிருப்பார்கள். தமிழர்களின் வாக்கும் அவர்களுக்கே செல்லும்இதன்னால் அந்த ஆசனம் சென்றடையும் இது ஒரு சனநாயக மரபு. அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும். வெல்ல வைத்து தருவது உங்கள் கடமை. நீங்கள் வெல்ல வைப்பவரை நான் அமைச்சராக்குவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியின் தேவையை விட அம்பாறை மாவட்டத்திற்கு மிகமுக்கியமானது. இந்த பொத்துவில் மண்ணானது கஸ்ட்ரோ, டேவிட், தோமஸ், ரஞ்சன் போன்ற பல தளபதிகளை இந்த போராட்டத்திற்காக பல தந்தது. ரஞ்சன் என்ற மாவீரரும் நானும் ஒரே காலத்தில் பயிற்சியை பெற்றவர்கள். இந்த யுத்தத்தை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு இருக்கின்றது. அதை பலர் விமர்சிக்கின்றனர். அதைப்பற்றி நான் கவனத்தில் எடுப்பதில்லை. ஏனெனில் கருணா அம்மான் போராட்டத்தில் இன்றும் இருந்திருந்தால் இங்கு ஒரு இளைஞர்களும் வந்திருக்க மாட்டார்கள். அனைவரும் போராட்டத்தில் அழிந்திருப்பார்கள். இது எல்லோருக்கும் இழப்புதான் என தெரிவித்தார்.

http://www.pagetamil.com/93929/

ஓவர் தண்ணியடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு .

Link to comment
Share on other sites

போற்றி.! போற்றி.! அம்மான் கருணாவே போற்றி.! ஈழத் தமிழரைக் காக்கவந்த கருணைக் கடலே போற்றி.!!😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

போற்றி.! போற்றி.! அம்மான் கருணாவே போற்றி.! ஈழத் தமிழரைக் காக்கவந்த கருணைக் கடலே போற்றி.!!😌

இன்னும் கருணா அம்மான் என அழைப்பது சரிதானா ?? அவரின் உண்மையான பெயரை கொண்டு அழைத்தால் என்ன  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

போற்றி.! போற்றி.! அம்மான் கருணாவே போற்றி.! ஈழத் தமிழரைக் காக்கவந்த கருணைக் கடலே போற்றி.!!😌

சுவாமிக்கு என்ன படைக்கிறீங்கள் ? மான்கறியா ? வெள்ளாடா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு  மிகவும் கடினமான  காலமாக  இருக்கப்போகிறது

மூழ்கப்போகும் கப்பலில் பயணிக்கக்கூடாது

ஓடும் கப்பலில் பயணிக்கப்பழகணும்  என்பது

மிகவும்  சுயநலமான  சிந்தனை

வரலாற்றில்  தன்னை தன் மண்ணை இழக்க விரும்பாத இனத்துக்கு

இவ்வாறான கூற்றுக்கள் சலனங்களை உண்டு  பண்ணிவிடக்கூடியதே

மூழ்கப்போகும் கப்பல்  தமிழினமாகவும்

ஓடும்  கப்பல் சிங்களமாகவும் காண்பித்து

அதில்  ஏறிய தனது  இன்றைய  வாழ்வையும் செல்வத்தையும்

உதாரணமாக  காட்டினாராயின்....????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பெரும்பகிடி கஜன் கிலி  பிடித்தாராம் தமிழதேசியக்கடசி தடம்புரள முக்கிய காரணமே இந்த வக்கத்த  சைக்கிள் கூடடம் .

Link to comment
Share on other sites

"கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." 

"அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்." 

இவை பற்றி கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறியத்தராலம் !

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

சுவாமிக்கு என்ன படைக்கிறீங்கள் ? மான்கறியா ? வெள்ளாடா ?

சுவாமிக்கு இப்போதெல்லாம் இந்த மான், வெள்ளாட்டுக் கறிகள் பிடிப்பதில்லை. அவருக்கு மானுடனும், மயிலுடனும் கொஞ்சிக் குலாவுவதுதான் பிடிக்கும். இவைகளுக்கு நான் எங்கே போவேன்.... 😫

kkk-735x400.jpgQuellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு காமடிப் பீசு.

முதல்ல.. உனக்கொரு உருப்படியான கட்சியை வைச்சிருக்கப் பாரு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுக்காவது கிழக்கு மக்களின் பிரச்சினை கருணா அம்மானுக்கு தெரிய வந்திருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஓரளவுக்காவது கிழக்கு மக்களின் பிரச்சினை கருணா அம்மானுக்கு தெரிய வந்திருக்கிறது 

அதென்ன அம்மான்  ?? 

ஒட்டுமொத்த இனத்தையும் வித்த நா.......கெல்லாம் பெருமையுடனும் உரிமையுடனும் அழைக்கும், கூறும் உறவுமுறை ஒரு கேடா.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

அதென்ன அம்மான்  ?? 

ஒட்டுமொத்த இனத்தையும் வித்த நா.......கெல்லாம் பெருமையுடனும் உரிமையுடனும் அழைக்கும், கூறும் உறவுமுறை ஒரு கேடா.  ?

ஹாஹா  நான் இயக்கம் வச்ச பெயரைத்தான் சொன்னன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா  நான் இயக்கம் வச்ச பெயரைத்தான் சொன்னன் 😎

இனத்தை காட்டிக் கொடுக்காதவரை அந்தப் பெயர் சரிதான். நானும் அம்மான் என மரியாதையுடனும் உரிமையுடனும் அழைத்துவந்தேன். தலைவர் எள் என்றவுடன் எண்ணையாக நின்றவர். பின்னர் ஒரு பானை சோற்ட்றினுள் விழுந்த ஒரு துளி விடமானார்.

 

. . . . . .  எல்லாமே போய்விட்டது . . . . . .

. . . . . . . . . . . . 😭😭😭 . . . . .  . . .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட இடைவெளியின் பின்னர் வடக்கு பாசிசவாதிகளிடமிருந்து கிழக்கை காப்பாற்றும் உங்கள் பணியை  மீண்டும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி,

 

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கடைசிவரை விளங்கவேயில்லை,

இவ்வளவு தியாக மனப்பான்மையோடு கிழக்கை காப்பாற்றும் நீங்கள் சொல்வதை கேட்டு 

ஏன் எப்போ பார்த்தாலும்  எந்த தேர்தல் வந்தாலும்,

 கிழக்கு மக்கள்  நீங்கள்  சொல்லும் கட்சிக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள்?

நன்றி கெட்ட மக்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்.

வடக்கு பிரதேசவாதம் எதுவுமே வேலைக்காகவில்லை என்றதும் 

வடக்கு தமிழர் என்ற ஆயுதத்தை கைவிட்டு இப்போ கிழக்கு முஸ்லீம்களிடமிருந்து மட்டக்களப்பை காப்பாற்றுகிறேன்  என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் அதையும் மட்டக்களப்பு அம்பாறை தமிழர்கள் நம்புவார்கள்   என்றா நினைக்கிறீர்கள்?

நீங்கள் இன்று உயிர் வாழ்வதற்கு காரணமே

புலிகளின் தலைமை   மட்டக்களப்பை  மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தபோது 

நீங்கள் அங்கிருந்து கொழும்புக்கு  தப்பியோட உயிரை கொடுத்து உதவி புரிந்தது   முஸ்லீம்கள் என்பது எல்லோரையும்விட

இன்று முஸ்லீம்களால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும்   தென் தமிழீழ மக்களுக்கு எப்போதும் நினைவிலிருக்கும்.

சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்தும் இவரெல்லாம் எப்படிடா எங்கள்  இன விதலை போராட்டத்துக்கு ஓர்காலம் ஒரு தளபதியா இருந்தான் என்ற அவர்களின் கோபமே ......

உங்களையோ  அல்லது நீங்கள் சொல்லும் கட்சியையோ  தென் தமிழீழ மக்கள் ஆதரிப்பதேயில்லை.

வடக்கு தமிழர்களைவிட ஒருபடி மேலாக 

தென் தமிழீழ மக்கள்

எவ்வளவு இழப்புக்கள் வந்தாலும் மானம் ரோஷத்தை எதுக்காகவும் விட்டு கொடுக்காதவர்கள்.

தனி தமிழ் மாகாணமாக இருந்துகொண்டு  வட தமிழர்கள் சிங்கள தேச சலுகைகளுக்கு மயங்காமல் அவர்களை புறக்கணிப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை.

சிங்களமும்  முஸ்லீம்களும் சுற்றி வளைத்த ஒரு முற்றுகை  சூழலில் வாழ்ந்தாலும், வறுமையின்  பின்னணியிலும் மாவீரர் குடும்பங்களை அதிகமாக கொண்ட ஒரு சோகத்தில் வாழ்ந்தாலும் 

எந்த காலத்திலும்  தனது ஊரவன் சொல்கிறான்  என்பதற்காக  தமிழர் மானத்திற்காய் போரிட்டவர்களை அவர்கள் விட்டு கொடுப்பதேயில்லை.

அதனால்தான் கருணா சொல்பவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் வாக்களிப்பதேயில்லை.

ஆனால் வடக்கு தமிழர்களில் ஒரு பகுதி புலிகள் இருந்த காலத்திலேயும் அரச சலுகைகளுக்காக   டக்ளைசை தெரிவு செய்து கொண்டு இருந்தது.

உங்கள் தலைமையில் ஒரு காலம் இருந்தாலும்,

உங்களைபோல் மானம் ரோஷத்தை மஹிந்த காசுக்கு விற்காத

ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அந்த மண்ணுக்கென்று ஒரு ரோஷம் எப்போதுமே இருக்கும்.

அது நீங்கள் சொல்வதை எப்போதுமே கேட்காது.

 

Link to comment
Share on other sites

38 minutes ago, valavan said:

உங்களைபோல் மானம் ரோஷத்தை மஹிந்த காசுக்கு விற்காத

ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அந்த மண்ணுக்கென்று ஒரு ரோஷம் எப்போதுமே இருக்கும்.

அது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரனுக்கு  ஒரு கவுரவத்தை கொடுத்த தலைவனை ஏமாற்றி பிச்சைக்கார, நாறின பிழைப்பு நடத்தி பெருமைப்படுகுது. அது அந்த தலைவனை இலகுவாக ஏமாற்றி விட்டதென்றால், அதற்கு காரணம், அந்த அளவுக்கு தலைவர் இந்த ஈனப் பிறவிமேல் வைத்திருந்த அசையாத நம்பிக்கையே தவிர, இவரது திறமை என்று ஒன்றுமில்லை. ஆனால் இவரது வாழ்வில் எவனொருவனுமே எப்போதுமே இவரை நம்பப் போவதுமில்லை.  இவரே உயிரைக் கொடுத்தாலும். துரோகி என்கிற முதல் எழுத்து    இவரது சந்ததியின் பெயரோடு  ஒட்டியே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

இனத்தை காட்டிக் கொடுக்காதவரை அந்தப் பெயர் சரிதான். நானும் அம்மான் என மரியாதையுடனும் உரிமையுடனும் அழைத்துவந்தேன். தலைவர் எள் என்றவுடன் எண்ணையாக நின்றவர். பின்னர் ஒரு பானை சோற்ட்றினுள் விழுந்த ஒரு துளி விடமானார்.

. . . . . .  எல்லாமே போய்விட்டது . . . . . .

. . . . . . . . . . . . 😭😭😭 . . . . .  . . .  

அதற்கு அவர் மட்டும் தான் காரணமா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதற்கு அவர் மட்டும் தான் காரணமா ??

என்னய்யா உங்கள் பிரச்சனை  ?

முரளீதரன் நல்லவரா கெட்டவரா  ? நீரே கூறும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, valavan said:

நீண்ட இடைவெளியின் பின்னர் வடக்கு பாசிசவாதிகளிடமிருந்து கிழக்கை காப்பாற்றும் உங்கள் பணியை  மீண்டும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி,

 

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கடைசிவரை விளங்கவேயில்லை,

இவ்வளவு தியாக மனப்பான்மையோடு கிழக்கை காப்பாற்றும் நீங்கள் சொல்வதை கேட்டு 

ஏன் எப்போ பார்த்தாலும்  எந்த தேர்தல் வந்தாலும்,

 கிழக்கு மக்கள்  நீங்கள்  சொல்லும் கட்சிக்கு வாக்களிக்க மறுக்கிறார்கள்?

நன்றி கெட்ட மக்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்.

வடக்கு பிரதேசவாதம் எதுவுமே வேலைக்காகவில்லை என்றதும் 

வடக்கு தமிழர் என்ற ஆயுதத்தை கைவிட்டு இப்போ கிழக்கு முஸ்லீம்களிடமிருந்து மட்டக்களப்பை காப்பாற்றுகிறேன்  என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் அதையும் மட்டக்களப்பு அம்பாறை தமிழர்கள் நம்புவார்கள்   என்றா நினைக்கிறீர்கள்?

நீங்கள் இன்று உயிர் வாழ்வதற்கு காரணமே

புலிகளின் தலைமை   மட்டக்களப்பை  மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தபோது 

நீங்கள் அங்கிருந்து கொழும்புக்கு  தப்பியோட உயிரை கொடுத்து உதவி புரிந்தது   முஸ்லீம்கள் என்பது எல்லோரையும்விட

இன்று முஸ்லீம்களால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும்   தென் தமிழீழ மக்களுக்கு எப்போதும் நினைவிலிருக்கும்.

சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்தும் இவரெல்லாம் எப்படிடா எங்கள்  இன விதலை போராட்டத்துக்கு ஓர்காலம் ஒரு தளபதியா இருந்தான் என்ற அவர்களின் கோபமே ......

உங்களையோ  அல்லது நீங்கள் சொல்லும் கட்சியையோ  தென் தமிழீழ மக்கள் ஆதரிப்பதேயில்லை.

வடக்கு தமிழர்களைவிட ஒருபடி மேலாக 

தென் தமிழீழ மக்கள்

எவ்வளவு இழப்புக்கள் வந்தாலும் மானம் ரோஷத்தை எதுக்காகவும் விட்டு கொடுக்காதவர்கள்.

தனி தமிழ் மாகாணமாக இருந்துகொண்டு  வட தமிழர்கள் சிங்கள தேச சலுகைகளுக்கு மயங்காமல் அவர்களை புறக்கணிப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை.

சிங்களமும்  முஸ்லீம்களும் சுற்றி வளைத்த ஒரு முற்றுகை  சூழலில் வாழ்ந்தாலும், வறுமையின்  பின்னணியிலும் மாவீரர் குடும்பங்களை அதிகமாக கொண்ட ஒரு சோகத்தில் வாழ்ந்தாலும் 

எந்த காலத்திலும்  தனது ஊரவன் சொல்கிறான்  என்பதற்காக  தமிழர் மானத்திற்காய் போரிட்டவர்களை அவர்கள் விட்டு கொடுப்பதேயில்லை.

அதனால்தான் கருணா சொல்பவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் வாக்களிப்பதேயில்லை.

ஆனால் வடக்கு தமிழர்களில் ஒரு பகுதி புலிகள் இருந்த காலத்திலேயும் அரச சலுகைகளுக்காக   டக்ளைசை தெரிவு செய்து கொண்டு இருந்தது.

உங்கள் தலைமையில் ஒரு காலம் இருந்தாலும்,

உங்களைபோல் மானம் ரோஷத்தை மஹிந்த காசுக்கு விற்காத

ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அந்த மண்ணுக்கென்று ஒரு ரோஷம் எப்போதுமே இருக்கும்.

அது நீங்கள் சொல்வதை எப்போதுமே கேட்காது.

 

சத்தியமாய் இதை வாசிக்க எனக்கு ஆனந்த கண்ணீரே வந்திட்டுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சத்தியமாய் இதை வாசிக்க எனக்கு ஆனந்த கண்ணீரே வந்திட்டுது 

கண்ணீர் வரும்  அளவில் நீங்கள் இளகிய மனம் உடையவர் என்கிரீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

என்னய்யா உங்கள் பிரச்சனை  ?

முரளீதரன் நல்லவரா கெட்டவரா  ? நீரே கூறும் .

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

தாங்கள் சொல்லவருவதை தெளிவாகச் சொல்லாமே ....?

ஏன் இந்த இழுவை ????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

எமக்கு தேவை என்றால் நல்லவர் , இல்லா விட்டால் கெட்டவர்...இங்கு நல்லது ,கெட்டது  என்பவற்றை எமது தேவையே தீர்மானிக்கின்றது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எமக்கு தேவை என்றால் நல்லவர் , இல்லா விட்டால் கெட்டவர்...இங்கு நல்லது ,கெட்டது  என்பவற்றை எமது தேவையே தீர்மானிக்கின்றது 
 

அக்கோய்...

என்ன பிலோசபி எல்லாம் கதைக்கிறியள்.  என்ன விடயம்  ?

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

உங்களுக்கு முரளீதரனை குறை சொல்வது பிடிக்கவில்லை போலுள்ளது  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

உங்களுக்கு முரளீதரனை குறை சொல்வது பிடிக்கவில்லை போலுள்ளது  ?

முரளிதரனைமட்டும் குறை சொல்வது பிடிக்கல துரோகி என்றால் எல்லாம் துரோகிதான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.