Jump to content

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முரளிதரனைமட்டும் குறை சொல்வது பிடிக்கல துரோகி என்றால் எல்லாம் துரோகிதான் 

எல்லாம் என்று கூறுகிரீர்கள் . யாரந்த எல்லாம் எனக் கூறலாமில்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

எல்லாம் என்று கூறுகிரீர்கள் . யாரந்த எல்லாம் எனக் கூறலாமில்லையா ?

நீங்கள் தான் கண்டு பிடிக்கணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எமக்கு தேவை என்றால் நல்லவர் , இல்லா விட்டால் கெட்டவர்...இங்கு நல்லது ,கெட்டது  என்பவற்றை எமது தேவையே தீர்மானிக்கின்றது 
 

இது உங்கள் கொண்ணருக்கும் பொருந்தும். காட்டிக்கொடுத்துவிட்டு கொள்ளையிட்டவற்றோடு கொழும்புக்கு ஓடிப் பதுங்க.. கோத்தாவின் கள்ளப் பாஸ்போட்டில் லண்டனுக்குப் பாய.. எல்லாம்... முஸ்லீம்களின் அரசியல் தயவு தேவை..

இப்போ.. திடீர் என்று சீ சீ அந்தப் பழம்.. புளிக்கிறது.. எனும் இந்தக் குள்ள நரி.. நல்லது ஆகிவிட்டது. 

எல்லாம் காலக் கொடுமை. 

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

 இனத்தின் மேல் உள்ள தீராத பற்று, மண் பறிபோகிறதே என்கிற கவலை  பாருங்கோ. இவரின் நடிப்பை நம்பி வோட்டுப் போடுவார்கள் என்று நம்புகிறீர்களா? அவ்வாறு நம்பி இருந்தால் கோத்தாவுக்கு கணிசமான தமிழ் வாக்குகள் கிழக்கில் விழுந்திருக்க வேணுமே... 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் தான் கண்டு பிடிக்கணும் 

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

Link to comment
Share on other sites

இன்று இருக்கும் தமிழ்க்கட்சிகளை  இணைத்து பயணிக்க எமக்கு ஒரு சாதுரியமான மக்களால் ஏற்க கூடிய சாரதி தேவை.

இல்லை, இருக்கும் சாரதிகளை இணைத்து பயணிக்க கூடிய ஒரு குதிரை தேவை.  

Link to comment
Share on other sites

On 12/14/2019 at 7:13 PM, ampanai said:

"கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." 

"அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்." 

இவை பற்றி கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறியத்தராலம் !

கிழக்கை தமிழன் ஆள வேண்டுமாக இருந்தால் எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். கிழக்கில் சிற்றூழியர்கள் மட்டுமல்ல உயர் பதவிகளிலும் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே இம்முறை எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழர்களின் ஆதிக்கத்தை காடடவேண்டும்.

இந்த அரசுடன் அம்மானும் இருப்பதால் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கலாம். இல்லாவிட்ட்தால் சோனிகள் திருகோணமலை , அம்பாறையை பிடித்ததுபோல மட்டுவையும் அபகரித்துவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

பிரதேச வாதம் இன்று நேற்றல்ல இது வெகு காலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எமக்கு பிரதேச வாதம் தேவை இல்லை. குறைந்தது தமிழனுக்கு ஒரு தீர்வு (?) கிடைக்கும் வரையாவது ஒற்றுமை தேவை.

கருணா இங்கு செய்தது துரோகம்தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஒரு கால நேரம் உண்டு. யுத்தம் செய்வதென்பது மரணம் வரைக்கும் யுத்தம் செய்வதல்ல. ஒரு குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து விடுவார்கள். தலைவர்களுக்கும் வயதாகிவிடும்.

சரித்திரத்தை பார்த்தால் இது விளங்கும். 25 வருடங்களுக்கு மேலாக போராடும்போது இப்படியான நிலைமை உருவாகும். ஒருவருக்கு  யுத்த தந்திரத்துடன் அரசியல் ஞானமும் இருக்க வேண்டும். அல்லது அரசியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தந்திரத்தினால்தான் கருணாவை அரசாங்கம் திருப்பிவிட்ட்து.

இனிமேல் தமிழன் தனது தலைவிதியை இருக்கும் அரசுடன் பேசித்தான் ஏதும் செய்யவேண்டும். உலக நாடுகள் எவ்வளுவுதான் கூறினாலும் தங்களுக்கு அதனால் ஏதும் பலன் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். மற்றும் இந்தியாவை மீறி ஏதும் செய்யவும் மாடடார்கள்.

எனவே இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எதாவது ஒரு முடிவுக்கு வரும் வரையும் சோனவனுக்கும், சிங்களவனுக்கு கொண்டாட்டம்தான்.

மேலும் வன்னி , கிழக்கு தமிழர்களின் நிலைமையானது யாழ்ப்பாண தமிழர்களின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இப்போது பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்களிலும் , காணி பிரசினையிகளிலும் சோனிகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரதேச வாதத்தை  இங்கு ஆதாரங்களுடன் எழுத முடியும். இருந்தாலும் தவிர்த்திருக்கிறேன்.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

இது உங்கள் கொண்ணருக்கும் பொருந்தும். காட்டிக்கொடுத்துவிட்டு கொள்ளையிட்டவற்றோடு கொழும்புக்கு ஓடிப் பதுங்க.. கோத்தாவின் கள்ளப் பாஸ்போட்டில் லண்டனுக்குப் பாய.. எல்லாம்... முஸ்லீம்களின் அரசியல் தயவு தேவை..

இப்போ.. திடீர் என்று சீ சீ அந்தப் பழம்.. புளிக்கிறது.. எனும் இந்தக் குள்ள நரி.. நல்லது ஆகிவிட்டது. 

எல்லாம் காலக் கொடுமை. 

இப்போ முரளிதரனுக்கு தொடர்ந்து மகிந்த கும்பலிடம் இருந்து பணம் வரவேண்டும் என்றால்.. தமிழ் மக்களிடம் இருந்து கணிசமான வாக்குகளை மகிந்த கும்பலுக்கு பெற்றுக் கொடுத்தாக வேண்டும். தனது அரசியல் சித்துவிளையாட்டை தொடர அது அவசியம். ஆகவே தான் இந்தக் கொலைவெறிக் குள்ள நரி.. இப்போ.. இப்படி உளையிடுகிறது.. அந்தப் பழம்.. சீசீ என்று சொல்கிறது. அவ்வளவே. 

ஓம் அப்படித்தான்😂 இப்ப உங்களால் என்ன செய்ய முடியும் 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

***

இதையே தேசிய தலைவர் தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்திருந்தால்.. துரோகி என்றிருப்பார்கள். பக்கம் பக்கமா எழுதிக் கிழித்திருப்பார்கள். அதை இந்த குள்ளநரி செய்திருப்பதால்.. புத்திசாலி என்பார்கள்.

ஆனால்.. பிரபாகரன்.. இவர் அளவுக்கு சுயநலப் புத்திசாதுரியமாக இருக்கவில்லை.. இனம்.. மண் எப்படிப் போனால் என்ன நானும் என் குடும்பமும் சிறக்கனும் என்ற அந்த சுயநலப் புத்தி இந்தக் குள்ள நரியிடம் தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

3 hours ago, ரதி said:

ஓம் அப்படித்தான்😂 இப்ப உங்களால் என்ன செய்ய முடியும் 🤣🤣

காலம் பதில் சொல்லும்.

கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கொண்ணர் இப்போ அரசியல் அனாதையாகிட்டார்.

முதலில் தனிக்கட்சி.. பிறகு சிங்களத் தேசியக் கட்சியில் ஐக்கியம்.. பின்னர் பிரதி அமைச்சர்.. இப்ப.. மீண்டும்.. தனிக்கட்சி.

இன்னும் இவர் மக்களையும் சந்திக்கவில்லை.. மக்களின் வாக்குகளையும் பெறவில்லை. 

ஆனால்... தனக்குப் பின்னால்.. ஒரு மக்கள் படை இருக்கென்ற.. மாயை காட்டிக்கொண்டு.. பணம் பார்த்துவிட்டார். அது எனி அதிகாலம் எடுபடாது. அதனால்.. இன்று பலவிதமாக ஊளையிட ஆரம்பித்துவிட்டார். செய்வினை.. தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

பிரதேச வாதம் இன்று நேற்றல்ல இது வெகு காலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எமக்கு பிரதேச வாதம் தேவை இல்லை. குறைந்தது தமிழனுக்கு ஒரு தீர்வு (?) கிடைக்கும் வரையாவது ஒற்றுமை தேவை.

கருணா இங்கு செய்தது துரோகம்தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஒரு கால நேரம் உண்டு. யுத்தம் செய்வதென்பது மரணம் வரைக்கும் யுத்தம் செய்வதல்ல. ஒரு குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து விடுவார்கள். தலைவர்களுக்கும் வயதாகிவிடும்.

சரித்திரத்தை பார்த்தால் இது விளங்கும். 25 வருடங்களுக்கு மேலாக போராடும்போது இப்படியான நிலைமை உருவாகும். ஒருவருக்கு  யுத்த தந்திரத்துடன் அரசியல் ஞானமும் இருக்க வேண்டும். அல்லது அரசியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தந்திரத்தினால்தான் கருணாவை அரசாங்கம் திருப்பிவிட்ட்து.

இனிமேல் தமிழன் தனது தலைவிதியை இருக்கும் அரசுடன் பேசித்தான் ஏதும் செய்யவேண்டும். உலக நாடுகள் எவ்வளுவுதான் கூறினாலும் தங்களுக்கு அதனால் ஏதும் பலன் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். மற்றும் இந்தியாவை மீறி ஏதும் செய்யவும் மாடடார்கள்.

எனவே இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எதாவது ஒரு முடிவுக்கு வரும் வரையும் சோனவனுக்கும், சிங்களவனுக்கு கொண்டாட்டம்தான்.

மேலும் வன்னி , கிழக்கு தமிழர்களின் நிலைமையானது யாழ்ப்பாண தமிழர்களின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இப்போது பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்களிலும் , காணி பிரசினையிகளிலும் சோனிகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரதேச வாதத்தை  இங்கு ஆதாரங்களுடன் எழுத முடியும். இருந்தாலும் தவிர்த்திருக்கிறேன்.  
 

நாங்கள் முழுவதுமாக அழிந்துபோனோம் . இல்லையா ?  யாழ்பாணியால்தான் இனப்பிரச்சனையே ஆரம்பமானது என்று மட்டும்தான் கூறப்படவில்லை . 

மட்டக்களப்பானை கேட்டால் யாழ் மேலாதிக்கவாதம் என்கிறான். யாழ்ப்பாணத்தானை கேட்டால் தீவாராலதான் எல்லாமே என்கிரான். தீவானைக் கேட்டால் வடமராட்சியாராலதான் எல்லாமே என்கிரான் .

ஆனால் ஒருவனின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள கடின உழைப்பையோ கல்வித் தகமையை கவனத்தில் எடுப்பதில்லை.

என்னுடய வெற்றி தோல்விக்கு பிறர்தான் காரணம் எனும் தவறான அணுகுமுறையே பிரதேசவாதத்திலும் காணக்கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

சரி. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரிகிறது.  இதிலும் பிரதேசவாதம் மென்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்களுக்கு அப்படித்தான் புரிகிறது போல அதற்கு நான் என்ன செய்ய முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு அப்படித்தான் புரிகிறது போல அதற்கு நான் என்ன செய்ய முடியும் 

ஒரு காட்டில் வாழ்ந்துவந்த ஒரு கழுதையும் குதிரையும் ஒர் நாள் சந்திதுக்கொண்டபோது கழுதை குதிரையிடம் கேட்டதாம் இரண்டுமிரண்டும் எத்தனை என்று. குதிரை சொன்னது நான்கு என்று. அதற்கு கழுதை சொன்னது இல்லை இரண்டும் இரண்டும் ஐந்து என்று. இரண்டுமே ஒரு முடிவுக்கு வர முடியாமல் இறுதியாக சிங்கத்திடம் சென்றன. 

சிங்கம் இருவரின் வாதத்தையும் கேட்டபின் தீர்ப்பை பிவருமாறு கூறியது.

கழுதை கூறியதுதான் சரி , எனவே கழுதையார் போகலாம், ஆனால் குதிரைக்கு 25 சவுக்கடி கொடுக்கும்படி தீர்ப்பிட்டது.

ஐயோ சிங்கமே ஏன் இப்படி தீர்ப்பிட்டீர்கள், இரண்டும் இரண்டும் நான்குதானே. அதெப்படி இரண்டும் இரண்டும் ஐந்தாகும் என குதிரை கதறியது.

சிங்கம்  பின்வருமாறு கூறியது..

இரண்டும் இரண்டும்  ஐந்துதான். ஆனால்  யார் உன்னை கழுதையிடம் விவாதம் செய்யச்சொன்னது ?   யாரிடம் நீ விவாதம் செய்கிறாய்  என்பதை உணராதபடியால் தான் இவ்வளவு சங்கடமும். ஆதலினால் உனக்கு இதுதான் தண்டனை. 

(சத்தியமா  நான் குதிர ல்லீங்கோ)

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

ஒரு காட்டில் வாழ்ந்துவந்த ஒரு கழுதையும் குதிரையும் ஒர் நாள் சந்திதுக்கொண்டபோது கழுதை குதிரையிடம் கேட்டதாம் இரண்டுமிரண்டும் எத்தனை என்று. குதிரை சொன்னது நான்கு என்று. அதற்கு கழுதை சொன்னது இல்லை இரண்டும் இரண்டும் ஐந்து என்று. இரண்டுமே ஒரு முடிவுக்கு வர முடியாமல் இறுதியாக சிங்கத்திடம் சென்றன. 

சிங்கம் இருவரின் வாதத்தையும் கேட்டபின் தீர்ப்பை பிவருமாறு கூறியது.

கழுதை கூறியதுதான் சரி , எனவே கழுதையார் போகலாம், ஆனால் குதிரைக்கு 25 சவுக்கடி கொடுக்கும்படி தீர்ப்பிட்டது.

ஐயோ சிங்கமே ஏன் இப்படி தீர்ப்பிட்டீர்கள், இரண்டும் இரண்டும் நான்குதானே. அதெப்படி இரண்டும் இரண்டும் ஐந்தாகும் என குதிரை கதறியது.

சிங்கம்  பின்வருமாறு கூறியது..

இரண்டும் இரண்டும்  ஐந்துதான். ஆனால்  யார் உன்னை கழுதையிடம் விவாதம் செய்யச்சொன்னது ?   யாரிடம் நீ விவாதம் செய்கிறாய்  என்பதை உணராதபடியால் தான் இவ்வளவு சங்கடமும். ஆதலினால் உனக்கு இதுதான் தண்டனை. 

(சத்தியமா  நான் குதிர ல்லீங்கோ)

இப்படியே சொல்லி திரிந்த கழுதையார் ஓர் நாள் புலியிடம் சொல்ல புலி  சிங்கத்தை போல  பதில் சொல்லாமல் ஓங்கி அறைஞ்சதாம் ஓவறா தண்ணியடிச்சிட்டு ஒளறப்படாது என😎😁😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

இதையே தேசிய தலைவர் தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பாதுகாத்திருந்தால்.. துரோகி என்றிருப்பார்கள். பக்கம் பக்கமா எழுதிக் கிழித்திருப்பார்கள். அதை இந்த குள்ளநரி செய்திருப்பதால்.. புத்திசாலி என்பார்கள்.

ஆனால்.. பிரபாகரன்.. இவர் அளவுக்கு சுயநலப் புத்திசாதுரியமாக இருக்கவில்லை.. இனம்.. மண் எப்படிப் போனால் என்ன நானும் என் குடும்பமும் சிறக்கனும் என்ற அந்த சுயநலப் புத்தி இந்தக் குள்ள நரியிடம் தான் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

காலம் பதில் சொல்லும்.

கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் கொண்ணர் இப்போ அரசியல் அனாதையாகிட்டார்.

முதலில் தனிக்கட்சி.. பிறகு சிங்களத் தேசியக் கட்சியில் ஐக்கியம்.. பின்னர் பிரதி அமைச்சர்.. இப்ப.. மீண்டும்.. தனிக்கட்சி.

இன்னும் இவர் மக்களையும் சந்திக்கவில்லை.. மக்களின் வாக்குகளையும் பெறவில்லை. 

ஆனால்... தனக்குப் பின்னால்.. ஒரு மக்கள் படை இருக்கென்ற.. மாயை காட்டிக்கொண்டு.. பணம் பார்த்துவிட்டார். அது எனி அதிகாலம் எடுபடாது. அதனால்.. இன்று பலவிதமாக ஊளையிட ஆரம்பித்துவிட்டார். செய்வினை.. தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும். 

நெடுக்கர்,அவர் தனக்கு பின்னால் அணி திரளுங்கள் என்று சொன்னவரா?...அந்தாள் தனக்கு ஏத்த மாதிரி ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்...அவருக்கு பின்னால் போக விரும்புபவர்கள் போகட்டும்...உங்களுக்கு அவரில் நம்பிக்கை இல்லையா/ பிடிக்கவில்லையா பேசாமல் இருங்கள் அல்லது உதறி தள்ளுங்கள் ...ஏன் கருணாவை பற்றி ஏதாவது திரி திறந்தாலே குத்தி முறிகிறீர்கள்?...பயப்பிடுகிறீர்கள்?

அவரும் மெளானாவும் பாடசாலையில் படிக்கும் காலத்தில் நண்பர்கள்...அந்த  மெளலானா சிங்களவராய் இருந்திருந்தாலும் அல்லது கிறிஸ்தவராய் இருந்திருந்தாலும் இந்த உதவியை கருணாவுக்கு செய்திருப்பார்...அங்கு எல்லோரும் மதம் ,இனம் கடந்து தனிப்படட ரீதியில் நண்பர்களாய்த் தான் பழகுவார்கள்...அதற்காக இனங்கள் ,மதங்களுக்களுக்கிடையே பிரச்சனையே இல்லை என்று சொல்லலாமா?... அந்த நட்பின் அடிப்படையில் தான் அவரை நம்பி கருணா போனவரே தவிர முஸ்லிம்களது முதுகில் ஏறி அவர் சவாரி செய்யவில்லை ...தனிப்பட்ட நற்புக்காய்  தன் பகுதி மக்கள் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவை அவருக்கில்லை.


நீங்கள் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

நெடுக்கர்,அவர் தனக்கு பின்னால் அணி திரளுங்கள் என்று சொன்னவரா?...அந்தாள் தனக்கு ஏத்த மாதிரி ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்...அவருக்கு பின்னால் போக விரும்புபவர்கள் போகட்டும்...உங்களுக்கு அவரில் நம்பிக்கை இல்லையா/ பிடிக்கவில்லையா பேசாமல் இருங்கள் அல்லது உதறி தள்ளுங்கள் ...ஏன் கருணாவை பற்றி ஏதாவது திரி திறந்தாலே குத்தி முறிகிறீர்கள்?...பயப்பிடுகிறீர்கள்?

அவரும் மெளானாவும் பாடசாலையில் படிக்கும் காலத்தில் நண்பர்கள்...அந்த  மெளலானா சிங்களவராய் இருந்திருந்தாலும் அல்லது கிறிஸ்தவராய் இருந்திருந்தாலும் இந்த உதவியை கருணாவுக்கு செய்திருப்பார்...அங்கு எல்லோரும் மதம் ,இனம் கடந்து தனிப்படட ரீதியில் நண்பர்களாய்த் தான் பழகுவார்கள்...அதற்காக இனங்கள் ,மதங்களுக்களுக்கிடையே பிரச்சனையே இல்லை என்று சொல்லலாமா?... அந்த நட்பின் அடிப்படையில் தான் அவரை நம்பி கருணா போனவரே தவிர முஸ்லிம்களது முதுகில் ஏறி அவர் சவாரி செய்யவில்லை ...தனிப்பட்ட நற்புக்காய்  தன் பகுதி மக்கள் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவை அவருக்கில்லை.


நீங்கள் சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் 

நுணலையும் தன் வாயால் கெடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/15/2019 at 11:07 AM, தனிக்காட்டு ராஜா said:

அப்படிப்பார்த்தால் 2002 ற்கு முன்னர் நல்லவர் 2004 ற்கு பிறகு கெட்டவர் அப்படித்தானே 

இதே முரளிதரன் விலகாமல் வீரமரணம் அடைந்திருந்தால் உங்கள் பதில் ??

நீங்கள் இன்று ஒரு கொலையை செய்தால் ..?
இவ்வளவு நாளும் நீங்கள் கொலை செய்யவில்லை என்ற வாதம் நீதிமன்றில் வேகுமா?

நேற்று நீங்கள் எப்படி என்பது நீதிக்கும் நியாயத்துக்கு தேவை இல்லை 
இன்று நீங்கள் செய்த  கொலைதான் .. உங்களை கொலைகாரன் என்று கொள்ளும். 

உங்களின் கேள்வியை பார்த்தால் துரோகி என்று ஒரு வார்த்தையே மொழிகளில் தேவை இல்லை 
துரோகி என்பவனே உடன் இருந்துவிட்டு  குழிபறித்தவன்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

நீங்கள் இன்று ஒரு கொலையை செய்தால் ..?
இவ்வளவு நாளும் நீங்கள் கொலை செய்யவில்லை என்ற வாதம் நீதிமன்றில் வேகுமா?

நேற்று நீங்கள் எப்படி என்பது நீதிக்கும் நியாயத்துக்கு தேவை இல்லை 
இன்று நீங்கள் செய்த  கொலைதான் .. உங்களை கொலைகாரன் என்று கொள்ளும். 

உங்களின் கேள்வியை பார்த்தால் துரோகி என்று ஒரு வார்த்தையே மொழிகளில் தேவை இல்லை 
துரோகி என்பவனே உடன் இருந்துவிட்டு  குழிபறித்தவன்தான். 

கருணா துரோகி என்ற பதத்துக்குள்ள ஏன் மற்ற துரோகிகளை உள்ளடக்க மற்றவர்களால் முடியவில்லை என்பதுதான் எனது கேள்வி அப்போ துரோகி என்ற பதத்துக்குள்ள மற்றவர்கள் இல்லையா மருதர்

ஆக துரோகி என்ற பதத்துக்குள்ள எல்லோரையும் சேருங்க அப்பதான் நம்ம லிஸ்டு பெரிசாகும் அதைவிட்டுட்டு கருணா மட்டும் மட்டும் மட்டும் தான் துரோகி என்பதில் என்ன லாபம் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருணா துரோகி என்ற பதத்துக்குள்ள ஏன் மற்ற துரோகிகளை உள்ளடக்க மற்றவர்களால் முடியவில்லை என்பதுதான் எனது கேள்வி அப்போ துரோகி என்ற பதத்துக்குள்ள மற்றவர்கள் இல்லையா மருதர்

ஆக துரோகி என்ற பதத்துக்குள்ள எல்லோரையும் சேருங்க அப்பதான் நம்ம லிஸ்டு பெரிசாகும் அதைவிட்டுட்டு கருணா மட்டும் மட்டும் மட்டும் தான் துரோகி என்பதில் என்ன லாபம் ???

கருணாவின் திரிக்குள் ஏன் மற்றவர்களை உள்ளடக்க வேண்டும்.
நான் உங்களது கேள்விக்குத்தான் பதில் அழித்தேன் ....

துரோகம் செய்தவர்கள் 
கொலை செய்பவர்கள் 
கொள்ளை செய்பவர்கள் 

முன்பு என்ன செய்தார்கள் என்பது தேவையில்லாதது.
அதை செய்த பின்பு அவர்கள் துரோகி கொலையாளி கொள்ளையராகத்தான் இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

கருணாவின் திரிக்குள் ஏன் மற்றவர்களை உள்ளடக்க வேண்டும்.
நான் உங்களது கேள்விக்குத்தான் பதில் அழித்தேன் ....

துரோகம் செய்தவர்கள் 
கொலை செய்பவர்கள் 
கொள்ளை செய்பவர்கள் 

முன்பு என்ன செய்தார்கள் என்பது தேவையில்லாதது.
அதை செய்த பின்பு அவர்கள் துரோகி கொலையாளி கொள்ளையராகத்தான் இருக்க முடியும்.

உங்க கதையை பார்த்தால் நல்ல கொலை கூடாத கொலை மற்ற து நல்ல துரோகம் கெட்ட துரோகம் என்பது போல் இருக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.