Jump to content

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து! வெளிவரும் உண்மைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து! வெளிவரும் உண்மைகள்

குற்றப்புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த டீ சில்வா இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவுக்கும் தொடர்புள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவிதந்துள்ளார்.

இலங்கையை தமது இராணுவ தளமாக செயற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டும் ஒன்றிணைந்தே இந்த சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் நாடகத்தை முன்னெடுத்துள்ளன என சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம், இலங்கையில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறினார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்;

அதற்கான இராணுவ மத்திய தளமாக இலங்கையை பயன்படுத்துவதே இவர்களது நோக்கமாகும். பல நாடுகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த தாக்குதலை நடத்துவதற்கான அனைத்து வளங்களும் இலங்கையில் காணப்படுவதால் அமெரிக்கா இவ்வாறான வேலைகளை செய்கிறது.

அதனை சாதிக்கவே அமெரிக்கா முயல்கிறது. எனவே இவ்வாறான அழுத்தங்களை அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கொடுத்து வருகிறது. இந்த அரசாங்கத்தோடு விளையாட முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தோடு இவர்களுக்கு வேண்டிய மாதிரி விளையாடினார்கள்.

யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இருந்து நாம் மனித படுகொலைகளை செய்தோம் என இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதனை நிரூபிக்க தேவையான ஆவணங்களை இவர்கள் சேமிக்கிறார்கள்.

நிஷாந்த டீ சில்வாதான் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தார்.

அவரிடம் அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இருக்கிறன. அதேபோல 1500க்கு மேற்பட்ட குற்றப்புலனாய்வு துறையினரின் கைரேகைள் தொடர்பான தடயங்களும் அவரிடமுள்ளது.

அவை அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவற்றைக்கூட இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றசாட்டுக்கு எதிராக ஆதாரங்களாக உபயோகிக்க முடியும்.

நிஷாந்த டீ சில்வா நாட்டைவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரை நாம் தேடுவதை நிறுத்தி எமது கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்த வெள்ளை வான் சம்பவம் அரங்கேற்றப்பட்த்துள்ளது.

இதுவரை ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளையும் நாம் சமாளித்தோம்.

ஆனால் எமக்கு வரும் பாரிய சிக்கலானது இனிவரும் காலங்களில் நிஷாந்த டீ சில்வாவின் மூலமே வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.tamilwin.com/uk/

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இருந்து நாம் மனித படுகொலைகளை செய்தோம் என இவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

 

2 hours ago, பெருமாள் said:

நிஷாந்த டீ சில்வாதான் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தார்.

அவரிடம் அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இருக்கிறன. அதேபோல 1500க்கு மேற்பட்ட குற்றப்புலனாய்வு துறையினரின் கைரேகைள் தொடர்பான தடயங்களும் அவரிடமுள்ளது.

அவை அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவற்றைக்கூட இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றசாட்டுக்கு எதிராக ஆதாரங்களாக உபயோகிக்க முடியும்.

தமராவில் கலந்திருக்கும் சிங்கள இரத்தம்,  சிங்களத்தைக் காப்பாற்றத் துடிக்கிறது.

தமராவில் கலந்திருக்கும் குணநாயகம் என்ற தமிழ் இரத்தம் அவரை உண்மை சொல்லவும் வைக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

நிஷாந்த டீ சில்வாதான் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தார்.

அவரிடம் அனைத்து தகவல்களும், ஆவணங்களும் இருக்கிறன. அதேபோல 1500க்கு மேற்பட்ட குற்றப்புலனாய்வு துறையினரின் கைரேகைள் தொடர்பான தடயங்களும் அவரிடமுள்ளது.

நுணலும் தன் வாயால் கெடும் 

Link to comment
Share on other sites

சுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு!

பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத்துறையின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றமை தொடர்பான அவதானத்தினை திசைதிருப்பும் நோக்கத்திலேயே தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருக்க கூடும் என்று குறிப்பிட்ட ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம் அவ்வாறு திசைதிருப்பும் செயற்பாட்டில் அமெரிக்கா பின்னணியில் இருக்கலாம் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.

இந் நிலையில் தமரா குணநாயகத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரி டேவிட் ஜேமெக்குவயாரிடத்தில் வினவியது. அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கைச் சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எம்மைப்பொறுத்தவரையில் இந்தவிடயத்துடன் அமெரிக்கா எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. 

சதி ஊகக் கருத்துக்களை உருவாக்குவதானது இந்த விடயத்தினை சட்டத்தின் ஆட்சிக்கும், சர்வதேச நியமங்களுக்கும் உட்பட்ட வகையில் தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை என்றார்.

இதேவேளை ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது, சுவிஸ் தூரதர பெண் ஊழியர் கடத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக குறித்த உழியரிடத்தில் நமது நாட்டு விசாரணையாளர்களே கலந்துரையாடி விசாரணைகளை பெறவேண்டும்.

ஆனால் அவ்வாறில்லாது சுவிஸ் தூதரே கடத்தப்பட்ட பெண் ஊழியருடன் உரையாடுகின்றார். அது தவறான முன்னுதராணமாகும். அத்துடன் முறைப்பாடு இன்றி அவருடைய பெயர் வெளிப்படாது விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோருகின்றனர். 

மேலும் கடத்தப்பட்டவர் எங்கிருக்கின்றார் என்றோ, பெயர் குறிப்பிடாதோ எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது. இது அவர்களின் நாடல்லவே. இந்த நாட்டில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். 

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் சுவிஸ்தூதரக ஊழியரின் கடத்தல் சம்பந்தமாக சுவிஸ் தூதரகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன. 

இலங்கை அரசாங்கத்தின் வெளியீடுகள் எவையும் அங்கு உள்வாங்கப்படவில்லை. வெள்ளைவான் கலாசரத்தின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஷவே உள்ளார் என்றே சித்தரிக்கப்படுகின்றது. 

ஆகவே அவ்வாறான கதையொன்றை மீண்டும் உருவாக்குவதற்கே முயற்சிக்கப்படுகின்றது. ஓரவரை கடத்தும் குற்றச்செயலை புரிவதென்றால் வெள்ளைவானைத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்றில்லையே கறுப்பு, சிவப்பு நிறத்திலான வாகனங்களையும் கொண்டு செல்ல முடியுமல்லவா? சுவிஸ் தூதரகத்தின் அறிக்கையிலும் வெள்ளை வேன் என்று கூறப்பட்டிருக்கவில்லை. அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டள்ள நிலையில் ராஜித சேனாரத்ன மட்டுமே வெள்ளை வான் என்று கூறுகின்றார். அவருக்கு எவ்வாறு அந்த விடயம் தெரிந்துள்ளது. அப்படியென்றால் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது என்றார்.

அத்துடன், நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சுவிஸ் தூதரகம் உரிய விசா நடைமுறையை பின்பற்றியுள்ளதா என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமரா, சனிக்கிழமையே விசா அனுமதி பெற்று மறுதினமான ஞாயிற்றுக்கிழமையே அவர் வெளியேறிவிட்டார். 

சதாரணமாக சுற்றுலா விசா பெறுவது என்றால் கூட எமக்கு ஆகக்குறைந்தது இருவாரங்கள் தேவைப்படும். வுங்கிக்கணக்கில் நிலுவை காண்பித்தல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. அவ்வாறிருக்க ஒரேநாளில் நிஷாந்தவுக்கு விசா கிடைத்தமையானது ஆச்சரியமான விடயமாகும். அவ்வாறு அவசரமாக விசா வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தினை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

பலத்த சவாலுக்கு மத்தியில் நிஷாந்த சில்வாவை இந்த நாட்டிலிருந்து அனுப்புவதற்கு சுவிஸ் தூதரத்திற்குள்ள தேவைப்பாடு தொடர்பில் குறிப்பட்ட அவர், இந்த விடயத்தில் அமெரிக்காவும் பின்னணியில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமது

இராணுவத்தேவைகளுக்காக இலங்கையை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது. ஏமது நாட்டிலிருந்து இந்தியா, சீனா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். ஏன் தாக்குதல்களை கூட நடத்தலாம்.

ரஷ்யாவையும் கட்டுப்படுத்தலாம். ஆதனைவிடவும் அமெரிக்காவிடத்தில் விண்வெளியில் முகாம் அமைத்து தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் உள்ளது.

அதற்குரிய கனிமங்கள் எமது நாட்டின் பூமிக்கடியிலும், கரையோரத்திலும் காணப்படுகின்றது. அதனைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவனது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடிகளை அளிப்பதற்கு முனைகின்றது. ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான நெருக்கடிகளை இலங்கை அரசாங்கத்தினால் அளிக்க முடியாது என்ற மனநிலை காணப்படுகின்றது.

ஆகவே தான் சுவிஸ் போன்ற நடுநிலை நாடுகளை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா செயற்பட விளைகின்றது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிஷாந்த சில்வாவின் வெளியேற்றம், சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் ஆகியவை தொடர்பில் இராதந்திரி என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்ட தமரா, போர் நிறைவுக்கு வந்த காலம் முதல் நாம் மனித கொலைகளை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன. 

ஆதற்கான சாட்சி ஆவணங்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் சேகரித்து வருகின்றார்கள். நிஷாந்த சில்வாவிடத்தில் முக்கிய விசாரணைகளை மேற்கொண்டமையால் மூலோபய ஆவணங்கள் அனைத்தும் அவரிடத்தில் உள்ளன. ஆதனைவிடவும் அவர் 1500இற்கும் மேற்பட்ட கைரேகை அடையாளங்களையும் விசாரணைகளின்போது பெற்றுக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

ஆவர் எடுத்துச் சென்ற ஆவணங்களை எதிர்வரும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பயன்படுத்த முடியும். ஆகவே இந்த விடயங்களிலிருந்து எம்மை திசை திருப்பும் முகமாகவே ஊழியர் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர் கடத்தல் விவகாரம் இடம்பெற்றதும் பாரதூரமான விடமான நிஷாந்த சில்வாவில் வெளியேற்ற நிகழ்விலிருந்து நாம் திசைதிருப்ப பட்டுள்ளோம். 

ஆகவே ஊழியர் விடயத்தினை விடவும் நிஷாந்த சில்வாவினால் தான் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71064

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.