Jump to content

எங்களுக்கு கடலில்தான் விவசாயம்” - பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கும் மீனவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக
 
  •  
கரைவலை மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் நாட்டுப்படகு, விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், தூண்டில் மூலம் மீன்பிடித்தல், கரைவலை மூலம் மீன்பிடித்தல் உள்ளிட்ட முறைகளில் மீன் பிடிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் உள்ள பாரம்பரிய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையான கரைவலையை பயன்படுத்தி நூறு ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடித்து வருகின்றனர்.

பழமை மாறாமல் மீன்பிடித்து வரும் தனுஷ்கோடி மீனவர்கள்

மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கி வருவது மீன் பிடி தொழில். அதிலும் குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் வசித்து வரும் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகு,விசைப் படகுகள் இன்றி இன்றும் பழமை மாறாமல் கரை வலை மீன் பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்ந்து குடும்பத்தோடு மீன்பிடிக்கின்றனர்.

கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ந் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ஆழிபேரலை காரணமாக தனுஷ்கோடி நகரம் அழிந்து போனது. ஆனால், இன்றும் தனுஷ்கோடியை சுற்றியுள்ள மீனவக் கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் ஓலைக் குடிசைகளில் வசித்து வருகின்றன. இந்த மீனவக் குடும்பங்களின் பிரதான தொழில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய முறையான கரைவலை மீன்பிடிப்பில் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

கரைவலை மீன்பிடிப்பு என்றால் என்ன?

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் கரை வலை மீன் பிடிப்பும் ஒன்று. இந்தக் கரைவலை மீன்பிடி முறை இலங்கையிலும், தமிழகத்தின் சில கடலோர பகுதிகளிலும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

கப்பலை இழுக்கும் மீனவர்கள்

முதலில் கடற்கரையிலிருந்து கடலில் குறிப்பிட்ட தொலைவுக்கு சிறிய படகில் (எஞ்சின் பொருத்தப்படாத) சென்று ஆங்கில 'யு' வடிவில் கரை வலையை அமைப்பார்கள்.பின்னர் வலையின் இரு புறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாக கரையில் நின்று ஆண்கள், பெண்கள் என இருவரும் இணைந்து இழுப்பார்கள். பின்னர் பிடிக்கின்ற மீன்களை மீனவர்கள் மூன்று பங்காக பிரித்து கொள்வார்கள்.

அதாவது, வலைக்கும், படகுக்கும் ஒரு பங்கு. மற்ற இரண்டு பங்குகளை எத்தனை பேர் கரை வலையை இழுக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சம பங்குகளாக பிரித்து கொள்வார்கள்.வருடத்தில் 6 மாதங்கள் தனுஷ்கோடிக்கு வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிப்பார்கள்,அதே போல் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தெற்கு கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் கரைவலை முறையை பயன்படுத்தி மீன் பிடிப்பார்கள். இவ்வாறு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

மீனவர்கள் பிடித்த மீன்கள்

கரைவலை மீன்பிடி முறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மீனவ பெண் செல்வி பேசும் போது:

'விவசாயிகளுக்கு எப்படி வெள்ளாமை (சாகுபடி) விளைச்சல் போலவோ, எங்களுக்கு கடலில் தான் விவசாயம்.ஒரு சில நாட்கள் 100 முதல் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் ஒரு நாள் வருமானம் இல்லாமல் வீட்டுக்கு செல்ல வேண்டி வரும் ஆனாலும் சூறைக்காற்று, கன மழை என எது வந்தாலும் நாங்கள் கடற்கரையை விட்டு செல்லாமல் இங்கு தான் இருப்போம்.'

அரசு அதிகாரிகள் எங்களை இங்கு இருந்து போக சொன்னாலும் இந்த கடலை விட்டு எங்கும் செல்ல மாட்டோம் என்றார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய 63 வயதான இலங்கைமுத்து, 'எனக்கு நினைவு தெரிந்து, சுமார் 5 வயதில் இருந்து இங்கு தான் வாழ்ந்து வருகிறேன். இந்த கடலில் பாரம்பரிய கரைவலை முறையில் மீன் பிடித்து மார்கெட்டில் விற்று தான் வாழ்க்கை நடத்தி வருகிறேன்.

'எங்களுக்கு கடல் தொழிலை விட்டால் வேறு எந்த தொழிலும் தெரியாது.என் பிள்ளைகளும் கடலில் மீன் பிடி தொழில் செய்து தான் வாழ்ந்து வருகின்றனர்.புயலே வந்தாலும் நாங்கள் கடற்கரையை விட்டு செல்லமாட்டோம்' என உறுதியுடன் கூறினார்.

கடல் வாழ் உயிரினங்களில் எதை மீனவர்கள் கடலில் பிடிக்க கூடாது என்பது குறித்து மீனவ பெண் முத்துக்காளி கூறுகையில் 'எங்கள் பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக மீன் பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகிறோம்.வருடம் முழுவதும் இந்த கடலை நம்பி தான் உள்ளோம்'.

'நாங்கள் பிடிக்கும் மீன்கள் 5 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகும்.நாங்கள் கடலில் கஷ்டப்பட்டால் தான் எங்களுக்கு சோறு. எங்களது வலைகளில் அரிய வகையான கடல் ஆமை,கடல்அட்டை,கடல் பல்லி, கடல் குதிரை ஆகியவைகள் வந்தால் கடலில் விட்டு விடுவோம் எங்களுக்கு தேவைப்படும் மீன்களை மட்டும்மே நாங்கள் கடலில் இருந்து எடுத்து கொள்வோம்' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மீனவர் பாலு: " எங்கள் குடும்பத்தில் இரண்டு தலை முறையாக மீன் பிடி தொழில் செய்கிறோம். நான் 60 ஆண்டுகளாக கரைவலை முறையில் மீன் பிடித்து வருகிறேன்.

என் தாத்தா காலத்தில் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் நாறுகளை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.என் அப்பா காலத்தில் பருத்தி,பட்டு நூல் ஆகியவைகளை கொண்டு தயாரித்த வலைகளால் மீன் பிடித்தனர்.

"தற்போது என் காலத்தில் நைலான் (NYLON) வலைகளை பயன்படுத்தி கரைவலை முறையில் மீன் பிடித்து வருகிறேன்.என் தாத்தா அப்பா காலத்தில் வலைகளில் அதிகளவு மீன்கள் கிடைக்கும் ஆனால் அப்போது மீன்களுக்கு விலையில்லை இப்போது மீன்களுக்கு விலை உண்டு ஆனால் கடலில் மீன்கள் இல்லை" என்றார்.

https://www.bbc.com/tamil/india-50780491

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.