Jump to content

மக்கட்பேறு


Recommended Posts

மக்கட்பேறு - என் அனுபவம்


‪#மக்கட்பேறு ‬

‪திருமணமாகி மக்கட்பேறு இல்லாததை பற்றிய ட்விட்கள் பார்க்க நேரிட்டது..‬ ஒவ்வொருவரின் genetics, உடல்வாகு பொறுத்து அடைத்தும் மாறுபடும்..‬ நான் மருத்துவர் இல்லை மற்றும் இது மருத்துவ ஆலோசனை த்ரெட் இல்லை. எங்களுடைய அனுபவங்களை பகிர்கிறேன் அவ்வளவே..

‪என்னுடைய pinned tweet-ல் இருக்கும் thread-ற்கு நேரெதிராக உணர்வு கொண்ட பதிவு இது..‬

‪பெண் பார்த்தது.. திருமணம் நடந்தது.. எல்லாம் வழக்கம்போல சந்தோசமாக நடந்து முடிந்தது.. இல்லற வாழ்க்கை தொடங்கியது..‬
‪திருமணம் முடிந்து மூன்றாவது மாதம்.. நாள் தள்ளிப்போவதாக மனைவி சொல்ல.. ஆனந்தத்தில் திளைத்தேன்..

‪உடனடியாக pregnancy test kit வாங்கி வந்து மறுநாள் விடியற்காலை சோதனை செய்தோம்..‬

‪இரண்டு கோடுகள்..‬

‪தலைகால் புரியல.. சந்தோசத்தில் மனைவியை தழுவி உச்சிமுகர்ந்தேன்..‬ விடிந்ததும் வீட்டில் அனைவருக்கும் சொன்னோம்.. புது வரவை எண்ணி எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்..‬ மருத்துவமனை சென்றோம்.. blood test எடுத்து pregnancy உறுதி செய்யப்பட்டது..‬

‪அடுத்து ultrasound..‬

‪முதலில் மனைவி மட்டும் அறையில் இருக்க ultrasound செய்து மருத்துவர் பாத்தாங்க.. பின்னர் என்னை உள்ள அழைத்தாங்க..‬ திரையில் ஒரு ஆப்பிள் விதை அளவிற்கு இருக்கும் 5 வார குழந்தையை பார்த்த தருணம்..‬ எல்லாம் திருப்திகரமாக இருப்பதாக மருத்துவர் கூற மனது நிம்மதி பெற்றது..‬

‪கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டிய அறிவுரைகளை மருத்துவர் கொடுக்க, கவனமாக கேட்டுக்கொண்டு வெளியே வந்தோம்.. வழக்கத்தை விட நான் கார் மெதுவாக ஓட்டுவது, மனைவியை அதிக பலு தூக்காமல் பார்த்துக்கொள்வது போன்ற அனைத்து அறிவுரைகளையும் அப்படியே செய்தோம்..‬ சத்தான உணவாக சாப்பிட்டு ஓய்வு எடுப்பதே மனைவியின் முக்கிய வேலையானது..‬

‪இரண்டு வாரம் கழித்து HCG level பார்க்க blood test மற்றும் குழந்தை வளர்ச்சியை பார்க்க ultrasound-க்கு வர சொல்லிருந்தாங்க..‬ மருத்துவமனை போனோம்..‬ Lab technician உணவு இடைவேளைக்கு சென்றதால் ultrasound பார்த்திடலாம்னு சொல்ல.. வழக்கம்போல நான் அறைக்கு வெளியே இருக்க மருத்துவர் ultrasound பார்த்தாங்க..‬

‪சிறிது நேரத்தில் என்னை அழைக்க, உள்ள போனேன்..‬ கலங்கிய கண்களுடன் என் மனைவி அமர்ந்திருக்க.. சட்டென்று எனக்கு ஏதும் புரியல‬..

‪மருத்துவர் - Sorry, we don’t see any heart beat in the baby (குழந்தைக்கு இதயத் துடிப்பில்லை) என்றார்..‬ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. நெஞ்சு அடைக்குது.. கலங்கிய கண்களுடன் அருகில் மனைவி..‬ நான் அழுதால் இன்னும் நிலைமை மோசமாகிடும்னு, அழுகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிட்டு மருத்துவரை பார்த்து.. அடுத்து என்ன செய்யனும் என்றேன்..‬

‪D&C procedure மூலமாக கருவை வெளியே எடுக்கனும் என்றார்..‬ வேற வழியில்லையா என்ற என் கேள்விக்கு இல்லையென்று தலையாட்டினார்..‬ அன்று மாலை அட்மிட் செய்ய சொன்னார்கள்.. மறுநாள் காலை operation theatre-ல் D&C procedure..‬

‪வீட்டிற்கு ஃபோன் செய்து சொல்ல.. பதறியடித்து அனைவரும் வந்தார்கள்.. அம்மா, அப்பா, அண்ணன், மாமனார் என்ற அனைவரும் ஆறுதல் சொல்ல.. ஏதும் பேச தோன்றாமல் சரி அல்லது சரி என்பது போல தலையாட்டி வைத்தேன்..‬

‪மாலை அட்மிட் ஆகி நான் கூட இருக்கிறேன், நீங்கல்லாம் நாளை procedure முடிஞ்ச பிறகு வாங்க என்று அனுப்பி வைத்தேன்..‬ anesthesia கொடுக்கனும்ன்றதால இரவு உணவிற்கு அப்புறம் தண்ணீர் உட்கொள்ளக் கூடாது என்பதால் மனைவி சோர்ந்துட்டாங்க..‬

அதுதான் வாழ்நாளில் நான் கண்ட மிக நீண்ட இரவு.. நொடிகள் அவ்வளவு மெதுவாக நகர்ந்து நான் பார்த்ததில்லை..

‪nurse வந்து operation theatre-க்கு மனைவிய கொண்டுபோனாங்க‬.. சிகிச்சை முடிந்து பின்பு அறையில் மெல்ல மெல்ல மனைவிக்கு கண்விழிப்பு வந்தது.. மயக்க மருந்து மற்றும் செய்த procedure-னால வந்த உடல்வலி முகத்தில் தெரிந்தது..‬

‪அருகில் அமர்ந்த என்னிடம்..‬ எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது, நான் யாருக்கும் எந்த கெட்டதும் நினச்சது கூட இல்லை என்று மார்பு மீது தலை வைத்து அழும் மனைவி..‬ அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டத்தை வெறித்தேன்.. என் கண்ணில் வர எத்தனித்த கண்ணீரை மனதிற்குள் விழுங்க..‬

‪கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்த என்னிடம் பேரக்குழந்தை பிறந்திருக்கு ஸ்வீட் எடுத்துக்கங்க என்றார் அந்த அறையின் சூழ்நிலை அறியாத அந்த புதுப் பாட்டி..‬ சிரித்தபடி வாழ்த்துக்கள் சொல்லி வழியனுப்பி மேசை மீது ஸ்வீட் வைத்துவிட்டு மனைவி மடி மீது நான் தலைவைக்க.. என் தலைமுடி கோதி ஆறுதல் தந்தார்..

‪discharge ஆகும்போது அடுத்த 6 மாசத்தற்கு குழந்தைக்கான முயச்சி செய்யவேண்டாமென மருத்துவர் சொல்லி அனுப்பினார்..‬ நாங்க ஒரு வருடம் பொறுத்தோம்..‬

‪அதன் பிறகு மனைவி கர்ப்பமானாங்க.. எல்லோருக்கும் சந்தோசம்.. மருத்துமனை சென்று blood test மற்றும் ultrasound செய்து எல்லாம் நல்லாருக்குன்னாங்க‬.. மூன்று வாரம் கழித்து, இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று மனைவி எழுப்பினாங்க..‬ படுக்கை நிறமற்ற ஒரு திரவத்தால் நனைந்திருக்க.. என்னவென்று புரியவில்லை..‬

‪அவசரமாக மருத்துவமனை செல்ல.. அங்கு ultrasound செய்து பார்க்க.. பனிக்குடம் உடைஞ்சிருச்சு.. No heart beat.. என்று மருத்துவர் சொல்ல..‬ நொறுங்கிவிட்டேன்.. என்ன சொல்லவென்று தெரியல..‬

‪மறுபடி அதே D&C procedure.. ஆறு மாதம் இடைவெளி வட சொன்னாங்க..‬

‪இந்த முறையும் ஒரு வருடத்திற்கு பிறகு முயன்றோம்..‬ மூன்றாவது முறை நல்ல செய்தி.. ஆனால் இந்த முறை 5வது வாரத்திலேயே அதுவாக கலைந்துவிட்டது..‬

‪அதன் பின் இரண்டு வருடம் ஆகியும் நல்ல செய்தியில்லை.. அதனால் IUI (Intra Uterine Injection) மூலம் முய்சிக்கலாம் என்று மருத்துவர் சொல்ல.. ‬

‪IUI - ஆண் விந்தினை கருவி மூலம் செயற்கை முறையில் பெண் உறுப்பு வழியாக உள்ளே செலுத்துவது‬.. அதற்கு ஆண் தன் விந்தினை சேகரித்து கொடுக்கவேண்டும்..‬ மருத்துவமனையில் அதற்கென்று அறை இருக்கும்.. அந்த மருத்துவமனையில் ஒதுக்குப்புறமாக இல்லாமல் நட்டநடுவில் இருக்கும்.. அந்த அறைக்கு எதற்கு போவார்கள் என்பது அந்த தளத்திற்கு வரும் அனைவருக்கும் தெரியும்..

அந்த அறைக்குள் சுய இன்பம் அனுபவித்துத்தான் விந்தினை சேகரிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.. வெளியே 40-50 அமர்ந்திருக்க அவர்கள் பார்க்கும்போதே விந்து சேகரிக்கும் டப்பாவை எடுத்துக்கொண்டு பல கண்கள் மொய்க்க அந்த அறைக்குள் செல்வது மிக கொடுமையான தருணம்.. உள்ளே நாம் சுய இன்பம் செய்வோம் என்பது வெளியே அத்தனை பேருக்கும் தெரியும் என்ற சிந்தனையுடன் சுய இன்பம் செய்து விந்து எடுப்பது அதை விட கொடுமை..

ஒரு வழியாக விந்து சேகரித்து கொடுத்து IUI procedure முடிந்தது.. ஆனால் success ஆகல.. முதல் முறையே success ஆவது சாதாரணமாக நடக்கும் விசயமல்ல.. அடுத்த முறை IUI முயற்சி success ஆனது.. ஒவ்வொரு வாரமும் blood test and ultrasound செய்து குழந்தை சரியாக வளர்கிறதா என்று மருத்துவர் கண்காணிக்க வாரங்கள் நகர்ந்தது..

10-வது வாரம் spotting ஆக ஆரம்பித்தது.. மருத்துவர் பரிசோதித்துவிட்டு progesterone மாத்திரைகள் கொடுத்தார்.. இருந்தும் spotting முழுவதும் நின்றபாடில்லை.. ஒரு வாரம் மருத்துவமணையில் அட்மிட் செய்து ஓய்வு எடுக்க செய்து ட்ரிப்ஸ் ஏற்றினார்கள்.. சில supportive medicine-களுடன்.. பின்னர் discharge ஆகி வீட்டிற்கு வந்தோம்.. வந்த இரண்டாவது நாள் மனைவிக்கு chicken pox வந்துவிட்டது..

மருத்துவமனை சென்றோம்.. அட்மிட் செய்ய சொன்னார்கள்.. solid food சாப்பிட முடியாத்தால் 24 மணி நேரமும் ட்ரிப்ஸ்.. மனைவிக்கு அம்மை நோய்க்கு மருந்து மற்றும் spotting நிற்காத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஆகாமல் இருக்க என்று மருந்து ட்ரிப்ஸ் வழியே கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.. 3-4 நாட்களில் ட்ரிப்ஸ் இறங்காது.. எடுத்து இன்னொரு vein பார்த்து ஏத்தனும்.. ட்ரிப்ஸ் ஏறும் கையை அசைக்கமுடியாது 24 மணி நேரமும் அப்படியே வைத்திருக்கனும்.. ரொம்ப அசைக்கக்கூடாது..

அட்மிட்டான இரண்டாவது வாரம் scan report பார்த்தால் இன்ப அதிர்ச்சி.. இரட்டை குழந்தைகள் என்று இருந்தது.. முன்பு செய்த ஸ்கேன்களில் சரியாக தெரியவில்லை என்றனர்.. ஆனால் அந்த இன்பம் நிலைக்கவில்லை.. பின்னர் செய்த ஸ்கேனில் ஒரு கருவில் heart beat இப்போது இல்லை.. அந்த கரு தானாக கரைந்துவிடும் மற்றொரு கருவிக்கு பாதிப்பில்ஐ என்றனர்..

அந்த இரவுகள் முழுவதும் நான் உறங்கியதில்லை.. தூக்கத்தில் மனைவி கை வேகமாக அசைத்து ட்ரிப்ஸ் ஏதாவதாகிவிடுமோ என்று அதை கண்காணிக்க.. அந்த இரவுகளை எனக்கு நகர்த்தியது இசைஞானி இளையாராஜாவின் பாடல்கள்.. மறுநாள் காலை அம்மா வந்தவுடன் வீட்டிற்கு சென்று 2 மணி நேரம் தூங்கி பின்பு refresh ஆகிவிட்டு மருத்துவமனை வந்துவிடுவேன்.. அங்கிருந்தே பகல் முழுவதும் மனைவியை கவனித்துக்கொண்டே remote work செய்தேன்.. இப்படியே 5-6 வாரங்கள் சென்றது.

வாழ்க்கையின் மிகக்கொடுமையான நாட்கள் அவை.. எதிரிக்கும் அந்த நிலை வரக்கூடாது..

பின்னர் discharge ஆகி வீட்டுற்கு வந்தோம்.. அடுத்த வாரம் எனக்கு chicken pox வந்தது.. 10 நாட்களுக்குப் பின் சரியானது.. அந்த சமயத்தில் மனைவிக்கு எந்த தொந்தரவுமல்லாததால் மருத்துவமனை செல்லவில்லை.. அடுத்து பார்க்க வேண்டியது 20th week anomaly scan.. பயந்து கொண்டே சென்றோம்.. முன்பு chicken pox வந்ததால்.. scan முடிந்தது.. மறுநாள் சென்று report வாங்கினேன்.. நல்லவிதமாகவே இருந்தது.. அனைவரும் சந்தோசபட்டோம்.. அது 2 நாட்கள் கூட நிலைக்கவில்லை..

அதிகாலையில் பனிக்குடம் உடைந்தது.. நிறைய தண்ணீர் வெளியேறிவிட்டது.. மருத்துவமனை சென்றோம்.. அட்மிட் செய்து பரிசோதித்தார்கள்.. நிறைய தண்ணீர் வெளியேறிவிட்டதால் குழந்தை இறந்துவிட்டது என்றார்கள்.. மனம் சுக்கு நூறாக உடைந்தது.. துக்கம் தாளாமல் மனைவி கட்டிப்பிடித்து கதறினாங்க.. எனக்கும் ஓவென்று கதறி அழவேண்டும் போல இருந்தது.. நானும் அழுது கொண்டிருந்தால் தேற்றுவது யார்.. மனதை இரும்பாக்கி கண்ணீரை அதனுள் அடக்கினேன்..

C section செய்யாமல் ஊசி போட்டு வலி வரவைத்து குழந்தையை வெளிய எடுக்க முயற்சித்தனர்.. பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளியேறிவிட்டதால் அவ்வளவு எளிதில் குழந்தை வெளியே வரவில்லை.. இன்னும் சில ஊசிகள் போட்டு ஒரு வழியாக அடுத்த நாள் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.. முழுவதும் வெளியே வராத்தால் D&C procedure செய்து remnants செத்தம் செய்தார்கள்..

Operation theatre-க்கு வெளியில் பிறந்த குழந்தையை பார்க்க அமர்ந்திருந்தவர்களுக்கு மத்தியில் என் இறந்த குழந்தையின் வரவிற்காக காத்திருந்தேன்.. கண்ணாடி குடுவையில் இறந்த குழந்தையை போட்டு கொண்டு வந்து காட்டினார்கள்.. ஆண் குழந்தை.. 

கையில் ஏந்தி மகிழ வேண்டிய குழந்தையை ஒரு specimen போல கண்ணாடி குடுவையில் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை..

இரண்டு நாட்களுக்குப்பின் discharge ஆகி வீட்டிற்கு வந்தோம்.. அன்றிறவு என் மனைவி என்னிடம் “தயவு செஞ்சு அழுதிடுங்க.. இந்த 5 மாசம் நான் எவ்வளவோ முறை அழுதிட்டேன்.. இந்த வாரம் நிறைய அழுதிட்டேன்.. ஆனா நீங்க அழுது ஏன் கண் கலங்கி கூட நான் பாக்கல.. மனசுக்குள்ளயே அழாதீங்க.. வாய்விட்டு அழுதிடுங்க ப்ளீஸ்” என்றார்.. மெல்லிய புன்சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு உச்சிமுகர்ந்து ஆறுதல் சொன்னேன்.. என் மனைவிக்கு நானும், எனக்கு என் மனைவியும் குழந்தையானோம்.. 

ஒரு வருடம் ஓடியது.. நல்ல செய்தி ஏதுமில்லை.. வீட்டில் மற்றவர் வற்புறுத்தலால் மருத்தவனை சென்று இருவரும் full checkup செய்துகொண்டோம்.. report எல்லாம் பார்த்துவிட்டு உங்க ரெண்டு பேருக்கும் உடல் அளவில் எந்த பிரச்சனையுமில்ல.. ஆனா ஏன் குழந்தை உண்டாவதில் தாமதம்/தங்கவில்லை என்று தெரியல.. நீங்க வழக்கம்போல இருங்க தானாக நடக்கும் என்றார்கள்.. நாங்களும் இதற்கென்று தனியே ஏதும் மெனக்கெடாமல் முடிந்தவரை சந்தோசமாக வழக்கம்போல இருந்தோம்..

இரண்டு மாதம் கழித்து நல்ல செய்தி.. இந்த முறையும் spotting இருந்தது.. ஆனால் குறைவாக.. gestational diabetes இருப்பது blood test-ல் தெரியவர insulin injection pen மூலம் regular-ஆக கொடுத்தோம்.. ஒவ்வொரு வாரமும் blood test மற்றும் ultrasound செய்தோம்.. 20th week anomaly scan result நன்றாகவே வந்தது..

ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல கடந்தது.. ஒரு வழியாக 37 வாரம் வந்தாயிற்று.. Past history-யை வைத்து normal delivery வேண்டாம் C section செய்துவிடலாம் என்றார்கள்.. அதுவும் சரியென்று பட.. அடுத்த வாரம் நாள் குறித்தோம்.. முந்தைய நாள் இரவு அட்மிட் ஆனோம்.. மறுநாள் காலை முதல் operation எங்களுடையது.. மறுநாள் காலை anesthesia கொடுக்கும் முன்பு வேறு ஒரு emergency வந்ததால் இரண்டாவதாக எங்களை மாற்றினார்கள்..

பின்னர் மனைவிக்கு anesthesia கொடுக்கப்பட்டு operation theatre கொண்டுசெல்லப்பட்டர்.. 15 நிமிடங்களில் மருத்துவர் வந்து நல்லவிதமாக முடிந்தது உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் என்றி சொல்லிட்டு மறுபடி உள்ளே சென்றார்.. அம்மா என்னை கட்டி அழுதபடி உச்சிமுகர்ந்தார்.. கொஞ்ச நேரத்தில் குழந்தையை கொண்டு வந்து கையில் கொடுத்தார்.. இத்தனை வருடம் கிடைக்காத அப்பா என்ற பதவி கிடைத்த நாள் அது..

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனால் என் மனைவிக்கு நம்பிக்கை உண்டு.. இத்தனை வருடம் இவ்வளவு சோதனைகளை கடந்தபோதும் கடவுள் நம்பிக்கை குறைந்ததில்லை.. நானும் இதுதான் சாக்கு என்று மனைவியிடம் அவர் கும்பிடும் கடவுளை திட்டியதில்லை.. அது அவர் நம்பிக்கை..

இதில் முக்கியமான விசயம் நம்பிக்கை.. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை.. ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்லாமல் இருப்பது.. நல்ல சத்தான உணவு சாப்பிட்டு ஆரோக்யமாக இருந்து முயற்சி செய்வது.. கூடவே மருத்துவர் சொல்லும் support medicines (prenatal) எடுத்துக்கொள்வது.. இவையெல்லாம் குழந்தை உருவாகும் சாத்தியத்தை அதிகப்படுத்தும்..

நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும்.. 

நன்றி,
பச்சக்கிளி(twitter)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவு.......!    ஒரு பிள்ளையாவது வீட்டில் விளையாடவில்லை என்றால் அந்த சோகம் சொல்லி முடியாது.......பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைச் செல்வம் இல்லாமல் வேதனைப்படும் பல தம்பதியினர் உள்ளனர். ஆனால் மருத்துவம் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் நம்பிக்கையோடு இருப்பது அவசியம்.

பச்சக்கிளியும் அவர் மனைவியும் பட்ட வேதனைகளை எழுத்தில் கொண்டுவருவது இலகுவானதல்ல.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 12/15/2019 at 4:52 PM, suvy said:

மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவு.......!    ஒரு பிள்ளையாவது வீட்டில் விளையாடவில்லை என்றால் அந்த சோகம் சொல்லி முடியாது.......பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.....!   👍

 

On 12/15/2019 at 8:17 PM, கிருபன் said:

பிள்ளைச் செல்வம் இல்லாமல் வேதனைப்படும் பல தம்பதியினர் உள்ளனர். ஆனால் மருத்துவம் முன்னேறியுள்ள இந்தக் காலத்தில் நம்பிக்கையோடு இருப்பது அவசியம்.

பச்சக்கிளியும் அவர் மனைவியும் பட்ட வேதனைகளை எழுத்தில் கொண்டுவருவது இலகுவானதல்ல.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப் பேறு இல்லாத வாழ்க்கையின் கொடூரத்தை, வெறுமையை வார்த்தையில் சொல்ல முடியாது.

அதே போல், பேரப்பிள்ளைகளை காணாத முதுமையும் வெறுமையே.

சுற்றி நாலைந்து குஞ்சு, குருமான்களுடன் லூட்டியடிக்கும் தாத்தா, பாட்டிகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

சுற்றி நாலைந்து குஞ்சு, குருமான்களுடன் லூட்டியடிக்கும் தாத்தா, பாட்டிகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை..!

அனுபவித்திருக்கிறீர்களா ராசவன்னியன்?

எனக்கு அந்த மகிழ்சசி கிடைத்திருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavi arunasalam said:

அனுபவித்திருக்கிறீர்களா ராசவன்னியன்?

எனக்கு அந்த மகிழ்சசி கிடைத்திருக்கிறது

tenor.gif?itemid=4438249

ஆமாம்.. ஒரு பேரன் இருக்கிறார். 

வீட்டிற்கு சென்றால், வெளியில் சென்றால் அவரோடுதான் எப்பொழுதும். பள்ளிக்கு, பார்க்கிற்கு விளையாட கூட்டி சென்று திரும்பி வருவது எல்லாம்.

பேரன் ஆசைப்படுவதை வாங்கிக் கொடுத்துவிட்டு, மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்குவது பழகிப் போச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ராசவன்னியன் said:

பேரன் ஆசைப்படுவதை வாங்கிக் கொடுத்துவிட்டு, மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்குவது பழகிப் போச்சுது.

உங்களுக்குப் பரவாயில்லை. எனக்கு சும்மாவே திட்டு விழும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  ஒரு குழந்தை கையில் கிடைக்க கடந்து வந்த வலிகள் ...கொடுமையானவை .பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.