Jump to content

தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவதற்கு சாத்தியமில்லை சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஆரம்பித்தார் : சி.வி


Recommended Posts

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணை வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்றிருந்ததோடு, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் அதற்கான அழைப்பினை விடுத்திருந்தார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான தீர்மானங்களால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும், வாக்குவங்கியை நோக்கிய அரசியலுக்காகவுமே அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சனம் வெளியிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் தற்போது தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் ஐக்கியப்படுவதற்கான எந்தவொரு சூழலும் இல்லாத நிலைமையே உருவாகியுள்ளது.

முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள பங்காளிகளான புளொட் மற்றும் ரெலோ ஆகியன இரகசிய சந்திப்புக்களை நடத்தியிருந்த நிலையில் அடுத்து வரும்காலத்தில் கூட்டமைப்பில் அவர்கள் நீடிப்பார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பொதுவெளியில் கூட்டமைப்பில் அவ்விரு கட்சிகளும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பில் கருத்துக்களை பகிராது விட்டாலும் அடுத்து பொதுத்தோர்தலில் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் கூட்டமைப்பினுள் அதிகமாகும் என்ற ஐயத்தினைக் கொண்டிருக்கின்றன. அதற்கேற்றால் போல் தமிழரசுக்கட்சியும் பொதுத்தேர்தலில் தமது கட்சி சார்ந்து வாக்குவங்கியுள்ள பலமான இளம்சந்ததியினரை களமிறக்குவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அவர்களை நோக்கி வலைவிரிக்க ஆரம்பித்துள்ளது.

மறுபக்கத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் மாற்று கூட்டணியொன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழம் உட்பட சிவில் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து பலமான அணியொன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கைள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சி.வி.விக்கினேஸ்வரன் இரகசியமாக சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதோடு கூட்டணிக்கான பொதுக்கொள்கையில் உள்ளீர்க்கப்படும் விடயங்கள் தொடர்பிலான ஆலோசனைகளையும் முன்னெடுத்துள்ளார்.

இதேவேளை,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தான் சார்ந்த சிவில், பொது அமைப்புக்களை ஒருங்கிணைத்து தனியாகவே பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குரிய தயார்ப்படுத்தல்களை கிராம மட்டங்களில் ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும் புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள் ஆகியோர் கொண்ட அணியில் உள்ள ஒருசில பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள

கட்சிகள் ஐக்கியப்படுவதற்கான சந்தர்ப்பம் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும் அந்த அரிய சந்தர்ப்பம் கைநழுவ விடப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளதோடு தமது ஆழ்ந்த கவலையையும் வெளியீட்டிடம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71065

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.