Jump to content

சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்


Recommended Posts

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

01.jpeg

ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர்.

இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/71104

Link to comment
Share on other sites

ரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே ;செல்வம் 

ரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது என ரெலோ கடசியின் தலைவரும் பாராளுமனற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமனற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து எமது கட்சியில் இருந்து ஒருவர் பாராளுமன்றம் செல்ல தொண்டர்கள் அயராது உழைக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ரெலோ கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

ரெலோ கட்சியில் இருந்து சிலர் விலகி சென்றுள்ளனர்.அவ்வாறு சென்றவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்தும் உள்ளனர்.

இது எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே.எனினும் எமது கட்சி மிக பலமாகவே உள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட முன்னின்று செயற்பட்ட கட்சி எமது கட்சி மட்டுமே.

எமது கட்சியிலிருந்து எங்களை உருவாக்கிய எம்மை வழிநடத்திய முன்னாள் பொது செயலாளர் சிறிகாந்தா சிறிய விடயத்திற்காக பிரிந்துள்ளமை கவலையளிக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மீது கோபத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது என தனி கட்சியை ஆரம்பித்துள்ளார்.இது எமக்கு வருத்தத்தை தருகின்றது.

எங்களின் நிலைப்பாடு 5 தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னரை போல இணைந்து மிக பலமாக செயற்பட வேண்டும் என்பதே.நாம் ஒற்றுமையையே விரும்புகின்றோம்.அப்படியானால் தான் நாம் எதிர்வரும் பொது தேர்தலில் 22 ஆசனங்களை பெற முடியும்.

இதனை விடுத்து தமிழர்களிடையே புதுப் புது கட்சிகள் வரும் போது வாக்குகள் சிதறும்.இதனால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள கட்சிகள் ஆளுமை காலூன்றும் நிலைமை உருவாகும்.அவ்வாறு நடக்குமேயானால் தமிழர்களின் பூர்விகமாக வடக்கு கிழக்கு பிரதேசம் கேள்விக் குறியாகும்.நாம் வாழ்ந்த வரலாறுகள் மழுங்கடிக்கப்படலாம்.

இது ஏன் முன்னாள் பொதுச் செயலாளர் சிறிகாந்தாவுக்கு தெரியவில்லை.அனால் ரெலோவில் இருந்து அவர் போய் விட்டார் என்பதற்காக ரெலோ பலவீனம் அடையவில்லை.எமது கட்சி பலமாகவே உள்ளது.அவர் கட்சி தொடங்குவது அவரின் ஜனநாயக உரிமை.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இதுவரை காலமும் ரெலோவில் இருந்து ஒரு பாராளுமனற உறுப்பினர் கூட தெரிவாக்கவில்லை என்ற கருத்தை முறியடித்து எமது கட்சியில் இருந்து ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும்.அதற்காக கட்சியின் உறுப்பினர்கள்,தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.மாறாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்ப்பாளர் சஜித்திற்கே வாக்களித்தனர். இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஓர் செய்தியை கூறி சென்றிருக்கின்றது 

மைத்திரியை ஜனாதிபதியாக்கும் அதிகாரம் தமிழ் மக்களாகிய எம்மிடம் இருந்தது.இதனை அறிந்த சிங்கள மக்கள் இம்முறை எமக்கு அதனை தார கூடாது என எண்ணியே கோத்தாபயாவுக்கு வாக்களித்துள்ளனர்.எனவே நாம் ஒற்றுமனையுடன் பலமாக செயற்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/71105

Link to comment
Share on other sites

விக்கியின் கூட்டோடு இணைய தயார் - சிறிகாந்தா

முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

011.jpeg

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து பிரிந்த உறுப்பினர்கள் இன்றையதினம் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி எனும் புதிய கட்சியினை ஆரம்பித்துள்ளனர்.

கட்சியின் ஆரம்ப நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

01.jpg

கட்சியின் தலைவராக என்.சிறிகாந்தா, செயலாளர் நாயகமாக எம்.கே.சிவாஜிலிங்கம், உப தலைவராக சட்டத்தரணி சிவகுருநாதன் மற்றும் தேசிய அமைப்பாளராக சில்வஸ்டர் விமல்ராஜ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/71108

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசன் தான் அந்த புள்ளய பிடிச்ச பூசாரிக்கு ஆதரவாக கோட்ஸ்சில இறங்கின்வரு நல்ல மனுசன் 

இனியென்னா ஆளையாள் குற்றம் சொல்லி காலத்தை கழிங்க 

Link to comment
Share on other sites

விக்கியார் தான் டெலோவை உடைத்தார் என்ற நோக்கில் நாளைய அரசியல் ஆய்வு தயார் :rolleyes:

Link to comment
Share on other sites

இனி கள்ளன், கொலைகாரன், பாலியல் பலாத்காரம் பண்ணுபவன், மண் கொள்ளையடிப்பவன் எல்லோருக்கும் நல்ல கொணடடடம்தான். இனி காந்தா ஐயா பணம் இல்லாமலே இவர்களுக்கு முன்னிலையாவார். இவர்கள் கிராமசபை தேர்தல்களில் போட்டியிடுவது நல்லது. ஆளுக்கொரு கட்சி , ஆளுக்கொரு தலைவன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.