Jump to content

ஈழத் தமிழர்களை முன்வைத்து இந்திய குடியுரிமைச் சட்ட விவாதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை முன்வைத்து இந்திய குடியுரிமைச் சட்ட விவாதங்கள்

எம். காசிநாதன்   / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 01:39

இந்திய அரசியல் நிர்ணய சபையில், பேசிய டொக்டர் அம்பேத்கர், “வரைவு அரசமைப்புப் பிரிவுகளில், குடியுரிமை வழங்கும் இந்தப் பிரிவு போல், அரசமைப்பு வரைவுக் குழுவுக்குத் (Drafting Committee) தலைவலி கொடுத்த வேறு எந்த பிரிவும் இல்லை” என்று, குடியுரிமை பற்றிய அரசமைப்புப் பிரிவு ஐந்தின் மீதான விவாதத்தில் 10.8.1949 அன்று கூறினார்.   

அவருடையை வார்த்தை, இன்றைக்கு 70 ஆண்டுகள் கழித்து, உண்மையாகும் என்பது, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உருவாகியுள்ள தலைவலியில் பிரதிபலிக்கிறது.   

மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க போன்ற முக்கிய கட்சிகள் ஆதரித்தன் விளைவாக, சட்டமூலம் வெற்றி பெற்றது. 12.12.2019 அன்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அரசிதழிலும் இந்தச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.  

இப்போது, புதிய குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 அமுலுக்கு வந்து விட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில், மதத் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியா திரும்பிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின், பார்சி, கிறிஸ்துவர்கள் இதுவரை, சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்பட்டு, குடியுரிமை இன்றி, வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.   

அந்த இன்னலுக்கு, இந்தக் குடியுரிமை சட்டத் திருத்தம் முடிவுரை எழுதியிருக்கிறது. 31.12.2014 வரை, இது மாதிரி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளவர்கள் இனிச் சட்டபூர்வ குடியுரிமை பெற்றவர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள், இந்தச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும். அவர்கள் மீது, இது தொடர்பாக இருந்த வழக்குகளும் தானாகவே இரத்தானதாகக் கருதப்படும். 12 வருடங்கள் இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும் என்ற விதி, ஐந்து வருடங்களாகத்  தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் உட்பட, சுமார் 19 இலட்சம் பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தச் சட்டத் திருத்தம், சில மாநிலங்களுக்குப் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்தாது என்றும், ஐ.பி.எல் (Inner Line Permit) பகுதிகளுக்குப் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது, இந்தச் சட்டம் பற்றி அஞ்சியவர்களுக்கு ஆறுதல் என்றாலும், எந்த நேரத்திலும் இந்தச் சட்டம் தங்களுக்கும் அமுல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாகவே, இந்தப் போராட்டங்கள் தலை தூக்கியுள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் “உங்களுக்குப் பாதகம் இல்லை” என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள். ஆனாலும், அஸ்ஸாமில் போராட்டம், கலவர சூழ்நிலையாக மாறிவிட்டதற்குக் காரணம், அங்கு ஏற்கெனவே ‘வெளிநாட்டவரை கண்டறிய’ செய‌ற்படுத்தப்படும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை (National Register of Citizens) ஆகும்.

அதற்கு முன்பு, 1980களில் ஏற்பட்ட கலவரத்தால் ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ 1985இல் உருவானது. அதன் கீழ், வெளிநாட்டவரைக் கண்டறிய, 25.3.1971 என்று ‘கட் ஓப் திகதி’ நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான், தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் நடந்தன. இதில் இந்துக்களும் மலை வாழ் மக்களும் விடுபட்டுள்ளார்கள். 

ஆகவே, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள், அஸ்ஸாமிலேயே தங்கியிருக்க, இந்தக் குடியுரிமைச் சட்டம் வழி வகுத்து விடுமோ என்ற அச்சமே, அஸ்ஸாமில் நடைபெறும் தற்போதையை போராட்டத்துக்குக் காரணம் ஆகும்.   

இது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்டிலும் இந்தச் சட்டத்துக்கு ‘எதிரும் ஆதரவும்’ உருவாகியுள்ளன. மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்குள் வந்து குடியேறிய இஸ்லாமியர்கள், இந்தியாவில் வந்து குடியேறியிருக்கும் ஈழத்தமிழர்கள், இந்தக் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்துள்ளது.

அ.தி.மு.க தரப்பில் இரு அவைகளிலும் ஆதரித்து வாக்களித்துள்ளது. ஆனால், “இலங்கைத் தமிழர்கள்,  இஸ்லாமியர்கள் ஆகியோர்களுக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் பொருந்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா இருந்த போது, எழுப்பிய ‘இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையைப் புதுப்பித்திருக்கிறது. 

ஆனால், அ.தி.மு.க எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதில், வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம், பா.ஜ.கவுக்கு உருவாகியிருக்கும். 

மத்திய அரசாங்கத்தின் தயவில், மாநிலத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க அப்படியெல்லாம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே, முன்பு தி.மு.க ‘ஈழத் தமிழர்’ பிரச்சினையில் சிக்கியது போல், தற்போது அ.தி.மு.க குடியுரிமைச் சட்டத்தில் சிக்கியுள்ளது.  

தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஈழத்தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினைகளை முன் வைத்து, இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர். தி.மு.க சார்பில், தமிழகம் முழுவதும் டிசம்பர் 17 ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

“ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் நடைபெற்ற போது, தி.மு.கவும் காங்கிரஸும் அதை தடுக்கத் தவறி விட்டன” என்று தமிழ்நாட்டில், அ.தி.மு.க குற்றம் சாட்டி வந்தது. “ஈழத்தமிழர்களைக் கொல்லத் துணை போன காங்கிரஸுடன், ஏன் கூட்டணி” என்று தி.மு.கவைப் பார்த்து, அ.தி.மு.க தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. 

இந்த எதிர்மறைப் பிரசாரத்தை முறியடிக்க, குடியுரிமை திருத்தச் சட்டப் பிரச்சினையை கையிலெடுத்துள்ளது தி.மு.க. எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி,  இந்தச் சட்டத்தை வைத்து, தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் எதிர்ப்பான நிலைப்பாட்டை, மேலும் உறுதியாக்க தி.மு.க வியூகம் வகுத்துள்ளது. 

தி.மு.கவின் நிலைப்பாட்டுக்கு ஏற்றாற்போல், காங்கிரஸ் கட்சியும் ‘இலங்கைத் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இலங்கைப் போரின் போது, விமர்சனத்துக்கு உள்ளான அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்போது மாநிலங்களவையில், “இலங்கை இந்துக்களை ,ஏன் இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் சேர்க்கவில்லை” என்று கேட்டுள்ளார். 

ஆகவே, தமிழகத்தைப் பொறுத்தவரை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவில் வந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினையை, மய்யமாக வைத்து, ‘தமிழக அரசியல்’ என்ற கண்ணாடி மூலம் பார்க்கப்படுகிறது.  

பொருளாதாரத் தேக்க நிலைமை,  வேலை வாய்ப்பு இல்லை என்றெல்லாம் காங்கிரஸும், மற்ற எதிர்க்கட்சிகளும் குடைச்சல் கொடுத்தாலும் பா.ஜ.கவைப் பொறுத்தவரை, தனது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. 

இந்தமுறை கிடைத்துள்ள மக்கள் ஆதரவை வைத்து, தன் அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், எப்போதும் நிறைவேற்ற முடியாது என்ற சிந்தனையில் பா.ஜ.க செயல்படுகிறது. வாஜ்பாய், அத்வானி போன்றோர் செய்ய மறந்ததைத் தான் செய்து விட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி எண்ணுகிறார். 

அதனால்தான், பொருளாதாரத்தில் பின்தங்கிய, முற்பட்ட வகுப்பினருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு, காஷ்மீர் சிறப்பு அதிகாரம் இரத்து, தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற வரிசையில், தற்போது குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்கிறது. விரைவில் ‘அயோத்தியில் ராமர் கோயில்’ என்பதும் நிறைவேறி விடும். எஞ்சியிருப்பது பொது சிவில் சட்டம் மட்டுமே. அதற்கும், நேரம், திகதியை பா.ஜ.க குறித்து வைத்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 

ஆட்சி, நிர்வாகம் என்பது ஒருபுறமிருக்க,கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனது கட்சிக் கொள்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைமை உறுதியாக இருக்கிறது. எதிர்காலத்தில், எந்த மாநிலக் கட்சி தங்களுடன் கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும் பா.ஜ.க தனித்தே வலுவான தேசியக் கட்சியாக வெற்றி பெறும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் மூலமந்திரம்.   

‘மத அடிப்படையில் குடியுரிமையா?’ ‘சம உரிமை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம் மீது தாக்குதலா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் தற்போது முட்டுச்சந்தில் நிற்கிறது. அந்தக் கட்சிக்கு முழு நேரத் தலைவரும் இல்லை. பா.ஜ.கவின் பல கொள்கைகளை காங்கிரஸால் எதிர்க்கவும் இயலவில்லை. பொருளாதார இட ஒதுக்கீடு வழங்கும் போது எதிர்த்து; பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சிறுபான்மையின மக்களை ஓரணியில் திரட்டும் வாய்ப்பையும் கோட்டை விட்டு விட்டது. அதனால் மற்ற மாநிலக் கட்சிகளும் காங்கிரஸுடன் சேர்ந்து கை கொடுக்க முன்வரவில்லை. அதனால் மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும் பா.ஜ.கவால் பல்வேறு சிக்கலான சட்டங்களை எளிதில் நிறைவேற்ற முடிகிறது. கொள்கை உறுதிப்பாட்டில் பா.ஜ.க நேர் கொண்ட பார்வையுடன் பயணிக்கிறது. 

ஆகவே, இந்திய அரசியல் களம் இப்போதைக்கு  பா.ஜ.கவுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஈழத்-தமிழர்களை-முன்வைத்து-இந்திய-குடியுரிமைச்-சட்ட-விவாதங்கள்/91-242499

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.