Jump to content

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து கூடிய விரைவில் தீர்மானம் - அரசாங்கம்


Recommended Posts

(ஆர்.யசி)

யுத்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இலங்கையர்களில் 3,815 பேர்  மீண்டும் இலங்கைக்கு வர இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கூடிய விரைவில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்கும் என்கிறது இலங்கை அரசாங்கம். ஏனையவர்கள் குறித்தும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு இடமுள்ளதாக கூறுகின்றனர். 

இலங்கையின் யுத்த சூழல் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.

1990 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் அகதிகள் இந்தியாவிற்கு வந்தாலும்  பிற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் மீண்டும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். எனினும் இப்போது இந்தியாவில் 60 ஆயிரத்து 52 பேர் தமிழ் நாட்டிலும் ஆந்திர எல்லை பகுதிகளிலும் 107 முகாம்களில் உள்ளனர். 

மேலும் 35 ஆயிரம் பேர் இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் பரந்து வாழ்கின்றனர். எனினும் இவர்களுக்கு இன்னமும் இந்திய குடியுரிமை வழங்கப்படாத நிலையில் அகதிகளாக வந்தர்களின் இரண்டாம் பரம்பரையினர் இன்னமும் குடியுரிமை இல்லாத மக்களாக இந்தியாவில் வாழ்கின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இது குறித்து முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் என்னவென வினவியமைக்கு அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சரும்மான ரமேஷ் பதிரன கூறியதானது, 

இப்போது இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரஜாவுரிமை சட்டமானது இலங்கை அகதிகள் குறித்து எதுவித தீர்மானங்களையும் எடுத்துள்ளதாக தெரியவில்லை. அவர்கள் நாட்டில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கும் சட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் எவ்விதத்திலும் கருத்துக்களை முன்வைக்கவும் முடியாது. 

எவ்வாறு இருப்பினும் இலங்கை பிரஜைகளுக்கு இலங்கையில் வாழ சகல அதிகாரமும் உள்ளது. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வர முடியும். அது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தும்.

அதேபோல் அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகள் குறித்தெல்லாம் அரசாங்கம் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கும், இவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசி தீர்மானம் எடுக்க வாய்ப்புள்ளது  என்றார். 

https://www.virakesari.lk/article/71179

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

1990 ஆம் ஆண்டுகளில் அதிகளவில் அகதிகள் இந்தியாவிற்கு வந்தாலும்  பிற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் மீண்டும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். எனினும் இப்போது இந்தியாவில் 60 ஆயிரத்து 52 பேர் தமிழ் நாட்டிலும் ஆந்திர எல்லை பகுதிகளிலும் 107 முகாம்களில் உள்ளனர். 

மேலும் 35 ஆயிரம் பேர் இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் பரந்து வாழ்கின்றனர். எனினும் இவர்களுக்கு இன்னமும் இந்திய குடியுரிமை வழங்கப்படாத நிலையில் அகதிகளாக வந்தர்களின் இரண்டாம் பரம்பரையினர் இன்னமும் குடியுரிமை இல்லாத மக்களாக இந்தியாவில் வாழ்கின்றனர்.

அவர்கள் விரும்பினால், மீண்டும் தமிழீழத்திற்கு அழைத்து வருவதே சரியான, தார்மீக முடிவாக இருக்கும்.  

Link to comment
Share on other sites

முகாம்களிலும், வெளியிலும் இருக்கும் எல்லாரையும் இலங்கைக்கு தாமதிக்காம அனுப்பினா நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Gowin said:

முகாம்களிலும், வெளியிலும் இருக்கும் எல்லாரையும் இலங்கைக்கு தாமதிக்காம அனுப்பினா நல்லது.

ஏன்?

Link to comment
Share on other sites

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்குத் தப்ப முயன்ற 6 பேர் கைது

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கியூ பிரிவு பொலிஸார் சுற்றவளைப்பில் ஈடுபட்டிருந்த போது  தனுஷ்கோடி அருகே எம்.ஆர். சத்திரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்றுகொண்டிருந்த 6 பேரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம்  பகுதியைச் சேர்ந்த இலங்கை அகதிகளான சதீசன், டிலக்சனா, சுதாகரன், சந்திரமதி, ஹரீஸ்கரன்,உதயகுமார் என இரு பெண்கள்,  மூன்று ஆண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகிய ஆறு பேரும் சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள முகாம்களில் வசித்து வந்ததாகவும், தனுஷ்கோடி கடல் வழியாகச் சட்ட விரோதமான முறையில் தோணியில் இலங்கைக்குத் தப்பிச் செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த  ஆறு பேரையும் கைது செய்த கீயூ பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்தில் வைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 விசாரணைக்குப் பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

59682616_2359056400820686_45143166230410

 

  மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் விசாரணையின் போது தாங்கள் இலங்கையில் நடைபெற்ற  உள்நாட்டுப் போரின் போது தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள 2012 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக சென்றதாகவும் தற்போது இலங்கையில்  பிரச்சினை இல்லாமல் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதையடுத்து  இலங்கை திரும்பிச் செல்ல தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் நின்றதாகவும் தெரிவித்தனர்.

 தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்ல இலங்கையைச் சேர்ந்த படகோட்டியிடம் தலா 10 ஆயிரம் என 60 ஆயிரம்  ரூபா கொடுத்ததாகவும் ஆனால்  கியூ பிரிவு பொலிஸாரை கண்டதும் படகோட்டி படகுடன் தப்பிச் சென்றார் எனத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இலங்கை பணம் 8ஆயிரத்து ஐந்நூறு இந்தியப் பணம் ஆயிரம் ரூபா மற்றும் கடவுச்சீட்டு இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கிக் கணக்கு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/71221

Link to comment
Share on other sites

6 minutes ago, ampanai said:

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இலங்கை பணம் 8ஆயிரத்து ஐந்நூறு இந்தியப் பணம் ஆயிரம் ரூபா மற்றும் கடவுச்சீட்டு இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கிக் கணக்கு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து அவுசிற்கு போக விடமாட்டீர்கள் சரி. சொந்த மண்ணிற்குமாக தடை ? பாவங்கள் இந்த உடன் பிறப்புக்கள்.  

Link to comment
Share on other sites

இவர்கள் நாட்டுக்கு திரும்பி வருவது அல்லது திருப்பி அனுப்பப்படுவது விரைவில் நடந்தால் நல்லது.

இதன் மூலம் அவர்கள் சொந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சஞ்சலமற்ற எதிர்காலத்தை உருவாக்கும் சந்தர்ப்பம் அதிகரிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.