Jump to content

வீடியோ பதிவேற்றும் விதிமுறைகளை மாற்றிய யூ-டியூப்... க்ரியேட்டர்கள் அறிய வேண்டியது என்ன?


Recommended Posts

கடந்த மாதம் யூடியூப் நிறுவனம் தனது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவேற்ற புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான மாற்றமாக "இனி தங்களது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவிடுவோர் அது குழந்தைகளுக்கு ஏற்றதா இல்லையா என்பதைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

அதாவது, இனி வரும் நாள்களில் அனைத்துப் படைப்பாளர்களும் தங்களின் வீடியோ குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான வீடியோக்களில் இனி, கமென்ட் பகுதி முடக்கப்பட்டிருக்கும் மற்றும் இதர பிற அம்சங்களும் செயல்படாது. ஆனால், இதர வீடியோக்கள் எப்போதும் போலவே எல்லா அம்சங்களுடனும் இருக்கும். இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம் Federal trade Commission (FTC) யூடியூபை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனத்துக்கு 175 மில்லியன் டாலர் அபராதமாக விதித்ததுதான்.

குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் யூடியூப் பெற்ற வழக்கில் இந்த அபராதமானது விதிக்கப்பட்டது. தற்போதுள்ள புதிய நடைமுறையை யூடியூப் படைப்பாளர்கள் பின்பற்றவில்லையெனில் வீடியோக்கள் மீது யூடியூப் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதை மீறிச்செயல்படும் படைப்பாளர்களுக்கு $42,530 அபராதமாக விதிக்கப்படும் என்பது வெறும் வதந்தி. இந்த அபராதம் ஆன்லைனில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு சட்டத்தை (Children's Online Privacy Protection Act, COPPA) மீறும் வலைதள நிறுவனங்களுக்கு மட்டுமே விதிக்கப்படும்.

இதனால், இனி படைப்பாளர்கள் தங்களது வீடியோக்களின் வகைகளை யூடியூப் நிறுவனம் சரிபார்ப்பதற்கு முன்னரே குறிப்பிட வேண்டும். இதற்கேற்ப யூடியூபில் செயற்கை நுண்ணறிவானது வீடியோக்கள் குழந்தைகளின் தரத்திற்கு ஏற்றதா இல்லையா என்பதைத் தரம் பிரித்துவிடும். இதன்மூலம் குழந்தைகளின் வயதுக்கு மீறிய வீடியோக்களைக் கண்டறிய முடியும். மேலும், குழந்தைகளுக்கான வீடியோக்களில் தனிப்பட்ட விளம்பரங்களும் இனி தோன்றாது. இதனுடன் வீடியோவின் கடைசி நொடிகளில் தோன்றும் எண்ட் கார்டஸ் மற்றும் இன்ஃபோ கார்ட்ஸ் ஆகியவையும் இனி இடம்பெறாது.

யூடியூப் வெளியிட்ட வீடியோவில் "எல்லாத் தானியங்கி சாதனங்கள் போல எங்களுடைய மென்பொருளும் எப்போதும் துல்லியமாக இருக்காது. அதனால், உங்கள் வீடியோவுக்கான வயது வரம்பைத் தீர்மானிப்பதில் எங்களைச் சார்ந்து இருக்காதீர்கள். நீங்கள் உங்களுக்கு ஏற்ற பார்வையாளர்களின் வயதினை நிர்ணயிக்கவில்லை என்றால் அல்லது ஏதேனும் தவறு இருந்தால் மட்டுமே வயது வரம்பை நாங்கள் நிர்ணயம் செய்வோம். பெரும்பாலான வீடியோக்களுக்கு நீங்கள் அளிப்பவற்றையே ஏற்றுக்கொள்வோம்" என்றது. "இதே போல் நீங்கள் பதிவேற்றும் ஒவ்வொரு வீடியோவுக்கும் உங்களுக்கு ஏற்ற பார்வையாளரைத் தீர்மானிக்க வேண்டும். இதற்கு முன், உங்கள் சேனலுக்கு நீங்கள் பார்வையாளர்கள் வரம்பை நிர்ணயத்திலிருந்தாலும் இதை ஒவ்வொரு வீடியோவுக்கும் செய்ய வேண்டியது அவசியம். இதைச் செய்ய YouTube Studio>Settings>Advance Setting சென்று Audience பிரிவின்கீழ் உங்கள் சேனலுக்கு ஏற்ற பார்வையாளர்கள் யார் என நிர்ணயம் செய்யுங்கள்.

மற்றொரு முக்கிய மாற்றமாக ஒரு யூடியூப் சேனலின் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது யூடியூபிற்கு பலன் அளிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்படவில்லை (Not commercially viable) என்றாலோ அந்த சேனல் நீக்கப்படலாம் எனத் தெரிவித்திருக்கிறது யூடியூப். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து குறைவான பார்வையாளர்கள் கொண்ட யூடியூப் படைப்பாளர்களிடையே தங்களது யூடியூப் சேனல் நீக்கப்படுமோ என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் தங்களது சொந்தப் பயன்பாட்டிற்காக வீடியோக்களைப் பதிவேற்றி யூடியூப்பில் சேகரித்தவர்களின் கணக்குகளும் இதைக் காரணம் காட்டி நீக்கப்படலாம் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால், இந்தப் புதிய மாற்றத்தைக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள யூடியூப் "உங்களது சேனல் மற்றும் வீடியோக்கள் எங்களின் வியாபார யுக்திக்கேற்ப இல்லையெனில் எங்கள் சேவையிலிருக்கும் சில வசதிகள் மற்றும் சில அம்சங்களை மட்டுமே நீக்குவோம். இது எந்தவித புதிய பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை" என்று கூறியுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் டிசம்பர் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

இன்றைய டிஜிட்டல் உலகில் யூடியூப் போன்ற தளங்கள் வயது வரம்பின்றி அனைவராலும் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் வீடியோ பதிவேற்றத்தில் குழந்தைகளின் நலன் கருதிச் சிறப்பு நடைமுறைகளை யூடியூப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது நிச்சயம் ஆரோக்கியமானதுதான்.

https://www.vikatan.com/technology/tech-news/youtubes-new-content-policy-regarding-kids-what-do-the-creators-need-to-know

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு... நன்றி, அம்பனை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.