Jump to content

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் வீடு வழங்கியிருந்தார் - வவுனியா ஒருங்ணைப்பு குழு தலைவர்


Recommended Posts

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார்.

DSC_0307_1.JPG

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 17.12 ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்றபோதே அவர் தனது ஆரம்ப உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் அரசாங்கம் இருந்தா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்வாறான நிலையிலேயே பல செயற்பாடுகள் இடம்பெற்றது. 

ரிசாட் பதியுர்தீன் முஸ்லீம்கள் மட்டுமே இங்கு இருப்பதாக நினைத்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தார். எனினும் நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. 

இங்கு வாழும் மூவின மக்களுக்கும் சமமாக வளங்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும். 

தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் ஒரே மாத்திரியான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாயவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. சிவமோகன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களை வெருட்டி ரிசாட் பல வேலைகளை செய்திருந்தார். 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது தொடர்பில் கதைக்கமாட்டார்கள். 

ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடு கொடுத்துள்ளார். காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பேரூந்து நிலையத்திற்கு தீர்வை காணுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இந் நிலையில் பல வேலைத்திட்டங்களை மக்களை அலையவிடாமல் செய்ய வேண்டும். அவ்வாறு இணைந்து வேலைத்திடடத்தினை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் எனது தலைமையில் ஒருங்கிணைப்பு குழு இருக்கும் போது அங்கு இருக்க முடியாது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/71225

Link to comment
Share on other sites

மிக சரியாக கூறப்பட்டுள்ள கருத்து. இதட்கு முன்னரும் நான் இதை எழுதி இருந்தேன். வன்னி முழுவதும் இதே வண்ணமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மன்னாரில் இது அதிகம்.

இந்த அரசாங்கம் இது குறித்து விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணர்வதுடன் , எல்லா மேலதிக வீடுகளையும் கையகப்படுத்தி வீடில்லாத தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

அநேகமானோருக்கு புத்தளத்திலும் வீடுகள் உண்டு. இவர்கள் மன்னாரில் வீடுகளை வைத்திருந்தாலும் புத்தளத்து வீட்டில்தான் வசிக்கிறார்கள். அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு புத்தளத்தில் இருந்து 200 பஸ்களில் ரிசார்டின் ஆதரவாளர்களை மன்னருக்கு கொண்டுபோக நேர்ந்தது.

எனவே இந்த பணம், ஊழல் சம்பந்தமாக அரசு உடன் விசாரணை நடத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

On 12/17/2019 at 4:48 PM, ampanai said:

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார்.

அது ரிசாட் பதியுர்தீனின் பிள்ளையோ?

Link to comment
Share on other sites

17 hours ago, Gowin said:

அது ரிசாட் பதியுர்தீனின் பிள்ளையோ?

வயித்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இனிமேல் அவன்  உருவாக்கப்போகும் பிள்ளைகளுக்கும் வீடு கட்டி வைத்திருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Vankalayan said:

வயித்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இனிமேல் அவன்  உருவாக்கப்போகும் பிள்ளைகளுக்கும் வீடு கட்டி வைத்திருக்கிறான்.

நல்லதுதானே அவன்ட மக்கள் , இனம கரிசனை கொள்கிறான் நீங்க சம் , சும்முக்கும் கதைச்சால் கோபம் வருது இதே சுமந்திரன் பொருத்து வீடுக்கு பொங்கினார் ஆனால் இன்றுவரைக்கும் ஏதும் வீடு கிடைச்சுதோ அண்மையில் ராணுவம் வீடு கொடுத்தது யாழ்மக்களுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது இணைக்கவோ 

Link to comment
Share on other sites

35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லதுதானே அவன்ட மக்கள் , இனம கரிசனை கொள்கிறான் நீங்க சம் , சும்முக்கும் கதைச்சால் கோபம் வருது இதே சுமந்திரன் பொருத்து வீடுக்கு பொங்கினார் ஆனால் இன்றுவரைக்கும் ஏதும் வீடு கிடைச்சுதோ அண்மையில் ராணுவம் வீடு கொடுத்தது யாழ்மக்களுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது இணைக்கவோ 

சம் , சும்முக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் வருகிற , வீராப்பு பேசுற வக்கில்லாதவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எண்டுதான் கேட்க்கிறேன்.

ராணுவம் வீடு கட்டிக்கொடுக்கவில்லை எண்டு சொல்லவில்லை. ராணுவம் வெள்ளப்பெருக்கின்போது மக்களுக்கு உதவி செய்யவில்லை எண்டு சொல்லவில்லை.

அவன் தன்னுடைய மக்களுக்கு செய்வதை செய்யட்டும். ஆனால் மக்களின், அரசாங்கத்தின் பணத்தை ஒரு இனத்துக்கு மட்டும் அவன் பாவிக்க முடியாது. இனி இவரின் ஆடடம் இங்கு பலிக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

சம் , சும்முக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் வருகிற , வீராப்பு பேசுற வக்கில்லாதவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எண்டுதான் கேட்க்கிறேன்.

ராணுவம் வீடு கட்டிக்கொடுக்கவில்லை எண்டு சொல்லவில்லை. ராணுவம் வெள்ளப்பெருக்கின்போது மக்களுக்கு உதவி செய்யவில்லை எண்டு சொல்லவில்லை.

அவன் தன்னுடைய மக்களுக்கு செய்வதை செய்யட்டும். ஆனால் மக்களின், அரசாங்கத்தின் பணத்தை ஒரு இனத்துக்கு மட்டும் அவன் பாவிக்க முடியாது. இனி இவரின் ஆடடம் இங்கு பலிக்காது. 

அதற்குத்தானே சிங்கள மக்களாலும் சிங்கள அரசியல் வாதிகளாலும் காய் நகர்த்தப்படுகிறது  சஹரான் செய்ததற்கு இவர்கள் இப்ப அனுபவிக்க வெளிக்கிட்டார்கள் 30 வருச காலம் நம்ம சனம் பெற்றதில் கால்வாசியை அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள்

Link to comment
Share on other sites

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதற்குத்தானே சிங்கள மக்களாலும் சிங்கள அரசியல் வாதிகளாலும் காய் நகர்த்தப்படுகிறது  சஹரான் செய்ததற்கு இவர்கள் இப்ப அனுபவிக்க வெளிக்கிட்டார்கள் 30 வருச காலம் நம்ம சனம் பெற்றதில் கால்வாசியை அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள்

இவன்கள் கொலை செய்தது சிங்களவனை அல்ல. இதில் கொல்லப்படடவர்களில் முக்கால்வாசி பேர் தமிழர்கள்.

நீர்கொழும்பில் அநேகமானவர்கள் தமிழர்கள்தான். இப்போது இவர்கள் சிங்களத்தில் கதைத்தாலும் இவ்ர்கள் எல்லாம் தமிழ் பரம்பரை. நீர்கொழும்பில் போய் வயதானவர்களுடன் கதைத்தால் அநேகமானோருக்கு சிங்களம் அவ்வளவாக தெரியாது.

எது எப்படியோ அரசாங்கம் இதில் ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசார்ட், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

எது எப்படியோ அரசாங்கம் இதில் ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசார்ட், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உதாரணத்துக்கு  இவங்களோட அதாவுல்லாவையும் சேர்க்க வேணும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.