சுவிஸ் அறிக்கை சிறிலங்காவுக்கு அவமானம் – பாலித ரங்கே பண்டார

PALITHA-RANGE-BANDARA-300x200.jpg

தமது தூதரகப் பணியாளர் கடத்திச் செல்லப்பட்டதாக  கூறப்படும் சம்பவம் குறித்து, சிறிலங்கா நடத்திய விசாரணையில் திருப்தி அடையவில்லை என்ற சுவிஸ் அறிக்கை, சிறிலங்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் . பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியல் பழிவாங்கும் சம்பவங்கள்  மற்றும் இது போன்ற நிகழ்வுகளால், உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் இலங்கையர்கள் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/12/18/news/41590