Jump to content

சர்வதேசம் அரசாங்கத்திடம் ஒரு நியாயத்தை கேட்கின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றோம் - செல்வம் எம்.பி


Recommended Posts

சர்வதேச அரசாங்கத்திடம் ஒரு நியாயத்தை கேட்கின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றோம்.சர்வதேசம் எம்மை ஏமாற்ற முடியாது சர்வதேசத்துடன் சேர்ந்து போகின்ற நிலைக்கு வந்துள்ளோம் எமது ஒற்றுமையை பலப்படுத்தி எமது இலக்கை அடைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்  

selvam.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாருகையிலே அவர் அதனைத் தெரிவித்தார்.

 அவர் அங்கு மேலும் உரையாற்ருகையில்,

 இனிவரும் காலங்களில் ஏற்படும் சவாலை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

யுத்தத்தின் பிற்பாடு கடந்த பத்து வருட காலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக அவர்களுடைய அபிலாசைகளை தமது அபிலாசைகளாக ஏற்று அரசியல் நீரோட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாகச் செயற்படுகின்றது.கடந்த ஐந்தாண்டுகளில் அரசிற்கு ஆதரவளித்து வெளியே நின்று எமது மக்களின் உரிமைக்காக அரசிற்கு பலத்த அழுத்தங்களை பிரயோகித்தோம்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலர் விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் சிங்கள கட்சிகள் என்றாலும் பரவாயில்லை.

அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் தமிழ் கட்சிகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இனிவரும் அரசாங்கத்தை எம்மால் தான் தீர்மானிக்க முடியும்.அரசிடம் தமிழர்களின் உரிமையைத் தட்டிக்கேட்கின்ற திறன் கூட்டமைப்பிற்கே உண்டு. எதிர்காலங்களில் வாக்குகள் உடைக்கப்படும் போது எமது உரிமை எமது பூர்வீக வாழிடங்கள் பறிபோகின்ற நிலை உருவாகும்.எமது உரிமை பூர்வீகம் பற்றி சிந்திக்காவிட்டால் சிங்களம் வடக்கு கிழக்கில் காலூன்றும் நிலைதோன்றும். அதன் பிற்பாடு எதைப் பேசியும் பலனில்லை.

காய்க்கின்ற மரங்களுக்கே கல்லெறி விழும் நன்மை செய்கின்ற எமக்கு பலரும் பல்வேறுபட்ட விமர்சனங்களையும் செய்வார்கள்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை செயலிழக்க செய்யும் செயற்பாடுகள் தற்போது மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. எழுபது ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி சிறப்பாக  பயணம் செய்கின்றது

தமிழரசுக் கட்சியினுடைய வரலாறு என்பது அர்பணிப்பு மிக்க தலைவர்கள் உறுப்பினர்கள் மக்களின் அயராத உழைப்பினால் தொடர்ந்து சிறந்து விளங்குகின்றது.எதிர்வரும் பாளுமன்றத் தேர்தலில் நாம் ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தால் 20 ஆசனங்களை பெற முடியும்.

எங்களுடைய மக்களுக்கு காணி பிரச்சினைகள், காணாமல் போனோருடைய பிரச்சினைகள், அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள் என பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. விட்டுக் கொடுப்புகளை செய்து வந்துள்ளோம்

எமது மக்களுடைய விடுதலையை  உரிமைகளைப் பிரதிபலிக்கின்ற வகையில் நாங்கள் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை எமது நியாயப்பாட்டை சொல்லியிருக்கின்றோம்.சிலர் நாம் அரசாங்கதிற்கு சோடை போய்விட்டதாகச் சொல்கின்றார்கள். 

அவ்வாறான விமர்சனங்களை செய்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.நாம் அரசாங்கத்திற்கு அடிபணியவில்லை மாறாக சர்வதேசம் அரசாங்கத்திடம் ஒரு நியாயத்தை கேட்கின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றோம். சர்வதேசம் எம்மை ஏமாற்ற முடியாது. அரசாங்கத்துடன் சேர்வது நோக்கமல்ல அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு எதிர்வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு தீவிரமாக உழைக்க வேண்டும் என்றார்,

https://www.virakesari.lk/article/71340

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

சர்வதேச அரசாங்கத்திடம் ஒரு நியாயத்தை கேட்கின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றோம்.சர்வதேசம் எம்மை ஏமாற்ற முடியாது சர்வதேசத்துடன் சேர்ந்து போகின்ற நிலைக்கு வந்துள்ளோம் எமது ஒற்றுமையை பலப்படுத்தி எமது இலக்கை அடைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் 

சஜித் அவர்களுக்கு வாக்களிக்க கேட்டீர்களே?

அவர் சனாதிபதியாக வந்திருந்ததால் சர்வதேசம், நீங்கள் அமைதியாக இருந்தே இருப்பீர்கள், இனவழிப்பும் நிலவழிப்பும் மொழியழிப்பும் மதவழிப்பும் தொடர்ந்தே இருக்கும் ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.