Jump to content

இலங்கையில் வெங்காய விலை 1 கிலோ ரூ.750: அதிர்ச்சி தரும் விலை உயர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

கொழும்பு மொத்த சந்தை நிலவரத்தின்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 125 இலங்கை ரூபாய் முதல் 150 இலங்கை ரூபாய் வரை விற்கப்படுகின்ற அதேவேளை, சின்ன வெங்காயம் ஒரு கிலோ மொத்த விலை 550 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 215 ரூபாய்) முதல் 650 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 255 ரூபாய்) வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 200 இலங்கை ரூபாய் முதல் 300 இலங்கை ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 700 இலங்கை ரூபாய் முதல் 750 இலங்கை ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் போன்ற பகுதிகளிலேயே வெங்காய உற்பத்தி இடம்பெற்று வருகின்ற பின்னணியில், அது உள்நாட்டு தேவைக்கு போதுமானதாக அமையாது.

இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தே மேலதிக தேவைக்கான வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவது வழக்கமானது.

எனினும், இந்தியாவில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இந்தியாவிலிருந்து இதுவரை காலம் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காய இறக்குமதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வெங்காய தேவையின் பெருமளவு பகுதியை, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயமே நிவர்த்தி செய்கின்ற நிலையிலேயே இந்தியாவின் இறக்குமதி தடையாகியுள்ளமையினால் இலங்கையில் வெங்காயத்திற்கான தட்டுப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

வெங்காயம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்தியாவில் நிலவும் வெங்காயத் தட்டுபாடு காரணமாக இன்று இலங்கை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது இலங்கை.

கொழும்பிலுள்ள அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் சந்தைக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

பெரிய வெங்காயத்தின் விலை ஓரளவு அதிகரித்துள்ள போதிலும், சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாதளவிற்கு விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சின்ன வெங்காயத்தின் மொத்த விலை ஓரளவு குறைவடைந்துள்ள போதிலும், சில்லறை விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெங்காய வியாபாரியான சாந்த தெரிவிக்கின்றார்.

'சின்ன வெங்காயத்தின் இன்றைய மொத்த விலை 570 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இன்று விலை சற்று குறைவடைந்துள்ளது. எனினும் கடந்த வாரம் வெங்காயம் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 600 ரூபாய் வரை காணப்பட்டது. எனினும், சில்லறை விலையே அதிகளவாக காணப்படுகின்றது. சில்லறை வர்த்தக நிலையங்களில் 750 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்" என சாந்த பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

மற்றுமொரு வெங்காயத்தை விற்பனை செய்யும் பெண் வியாபாரியான இந்திகா விஜேகுமாரியிடம் பிபிசி தமிழ் பேசியது.

''கெட்டுப்போன வெங்காயத்தை சுத்திகரித்து விற்பனை செய்யப்படும் போது, ஒரு லாபத்தை வைக்க வேண்டியுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தை 700 ரூபாய் அல்லது 750 ரூபாய் வரை விற்பனை செய்ய வேண்டும். மக்களினால் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. எனினும், பண்டிகை காலம் என்பதனால் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது," என இந்திகா விஜேகுமாரி குறிப்பிட்டார்.

வெங்காய விலைபடத்தின் காப்புரிமை Huw Evans picture agency

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு தொடர்பில் இலங்கை அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் இளமநாதனிடம் பிபிசி தமிழ்பேசியது.

இலங்கையில் சின்ன வெங்காயம் பொதுவாக யாழ்ப்பாணத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நிலவிய அதிக மழையுடனான வானிலையினால் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்திய மத்திய அரசாங்கத்தினால் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதாக கூறிய அவர், அதனால் தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருவதாகவும் கூறினார்.

குறித்த நாடுகளில் இயல்பானவே வெங்காயத்தின் விலை அதிகம் என்பதனால், இலங்கைக்கு கொண்டு வரும்போது ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கு சுமார் 550 இலங்கை ரூபாய் வரை செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், நாட்டின் தேவையை கருத்திற் கொண்டு அதிக கேள்வி நிலவுகின்ற சின்ன வெங்காயம், கடந்த வாரம் முதல் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெங்காயத்துக்குப் பற்றாக்குறைபடத்தின் காப்புரிமை Getty Images

சின்ன வெங்காயம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்தே தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, பெரிய வெங்காயம் பாகிஸ்தான், ஈரான், ஈராக், துருக்கி, சீனா போன்ற பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக இளமநாதன் கூறினார்.

இலங்கைக்கு இதுவரை காலமும் பெருமளவிலான வெங்காயம் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டதுடன், மேலதிக தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் பாகிஸ்தானிடமிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

எனினும், இந்தியாவில் நிலவும் வெங்காயத் தட்டுப்பாடு காரணமாக இன்று இலங்கை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-50838592

Link to comment
Share on other sites

இந்தியாவில் ஒருவர் வெங்காயம் செய்து கோடீஸ்வரார் ஆகி விட்டார்.

நமது லியனாடோ டாவின்சிகளும் வெங்காய செய்கையில் இறங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும் சனவரி கடைசி வாரம் வரை இப்படித்தான் இருக்குமாம்..😊

memes6-1573238928.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.