Jump to content

தொல்லை தரும் தொலைபேசி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

தொல்லை தரும் தொலைபேசி!


விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களில் அதிக மனிதர்களுக்கு பயன்தரும் ஒரு விடயம் தொலைபேசியாகும். அதுவும் செல்லிடப் பேசிகள் வந்தபின் மனிதர்களிடையேயான தொடர்பாடல் மிகவும் இலகுவாகி விட்டது. அதுவே மனிதருக்கு சில நேரங்களில் தொல்லைபேசியாகியும் விடுகிறது. 

சிலர் ஒருவருக்கு அழைப்பெடுத்தால் இணைப்பு கிடைக்கும்வரை இடைவெளியின்றி ஒன்றில் அவருடைய போனிலோ அல்லது தன்னுடைய  போனிலோ battery charge இறங்கும்வரை நிறுத்த மாட்டார்கள். தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஒரு ரகம்.

சிலரோ உங்களை மொபைலில் உங்களைப் பிடிக்க முடியவில்லை என்றால் உடனே வீட்டு போனுக்கு எடுப்பார்கள். அதிலும் வெற்றி இல்லையென்றால் உங்கள் துணையின் போனுக்கு (இலக்கம் தெரிந்து இருந்தால்) எடுப்பார்கள். உங்கள் பிள்ளைகளின் போனுக்கு எடுப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இன்னொரு ரகம்.

இன்னும் சிலர் நீங்கள் வேலையிடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டே உங்கள் தனிப்பட்ட மொபைல் போனுக்கு அழைப்பெடுப்பார்கள். நீங்கள் எடுக்காவிட்டாலும் உடன் குறுஞ்செய்தி அனுப்பிவிட வேண்டும். இல்லையென்றால் கோபிப்பவர்களும் இருக்கிறார்கள். எல்லா அலுவலகங்களிலும் தனிப்பட்ட செல்லிட பேசியை பயன்படுத்த அனுமதியில்லை என்பதை கவனத்தில் கொள்வதில்லை.இவர்கள் மூன்றாவது ரகம்.

இன்னும் சிலர் தொலைபேசி அழைப்பெடுக்க நேரகாலம் பார்ப்பதில்லை. இரவு பதினோரு மணிக்கும் அழைப்பெடுப்பவர்கள் இருக்கிறார்கள். அதிகாலை அழைப்பெடுப்பவர்களும் பிறந்தநாளன்று நள்ளிரவில் அழைப்பெடுத்து வாழ்த்துபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் இன்னொரு ரகம்.
அலுவலகங்களில் கூட 48 hours policy, 24 hours policy என்று வைத்திருக்கிறார்கள். அதாவது உங்கள் வேலையிடதொலைபேசி இணைப்புக்கு ஒரு அழைப்பு வந்து நீங்கள் பதிலளிக்கவில்லையென்றால் 24 மணிநேரத்துக்குள் அந்த எண்ணுக்கு திருப்பி அழைப்பெடுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் சில நட்புகளும் உறவுகளும் இரண்டு மணிநேர அவகாசம் கூடத் தருவதில்லை.

ஒருவர் தொலைபேசியைப் பயன்படுத்துவது அவரின் வசதிக்காவே அன்றி மற்றவர்களின் வசதிக்காக இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அலுவலக கூட்டத்தில் இருக்கும் ஒருவர் பெரும்பாலும் போனை மௌனித்து வைத்து இருப்பார் எனபதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் குறும்செய்தி அனுப்ப முடியாத சூழல் இருக்கும் என்பதயும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டியவை.


1. யாராவது உங்களுக்கு அழைப்பெடுத்தால், உடனடியாக பதிலளிக்க முடியாதவிடத்து, அந்த நாள் முடிவடைவதற்குள் திரும்ப அழைத்து பேசிவிடுங்கள். 
2. இரவில் தவறவிட்ட அழைப்பென்றால் மறுநாள் என்ன விடயம் என்று கேட்டு குறும்செய்தி அனுப்பலாம்.
3. காதைப் பிளக்கும், கர்ணகடூர Ringtone களைப் பயன்படுத்துவதை தவிருங்கள்.
4. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது (பொதுக் கூட்டம், மரணச் சடங்கு போன்றன) தொலைபேசியை Silent அல்லது Vibrate mode இல் வைத்துக் கொள்ளுங்கள்.
5. (உங்கள் பாதுகாப்புக்கு) இரவில் உங்கள் தொலைபேசியை Silent mode இல் வைத்துக் கொள்ளுங்கள்.
6. தொலைபேசியில் கத்திப் பேசுவதைக் தவிருங்கள்.
7. நீங்கள் இருக்கும் இடத்தில் வேறு யாரும் இருந்தால் Speaker Phone இல் போட்டு கதைத்து மற்றவரை தொந்தரவு செய்யாதீர்கள்.
8. மறுபக்கத்தில் உள்ளவருக்கு தெரியாமல் Speaker Phone இல் போட்டு உங்களுடன் இருக்கும் இன்னொருவர் நீங்கள் இருவரும் பேசுவதை கேட்கும்படி செய்யாதீர்கள்.  
9. Whatsapp notifications, Facebook notifications, SMS, MMS போன்றவை இரவில் ஒலியெழுப்பி உங்களை தொல்லை செய்யாது பார்த்துக் கொள்ளுங்கள். 
மொத்தத்தில் தொலைபேசி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லை பேசியாகாமல் பார்த்து கொள்வோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/19/2019 at 8:43 AM, கிருபன் said:

தொலைபேசியில் கத்திப் பேசுவதைக் தவிருங்கள்.

அதெப்படி முடியும்? கத்திப் பேசுவதுதானே எங்களது வழக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

அதெப்படி முடியும்? கத்திப் பேசுவதுதானே எங்களது வழக்கம்

எனது முதலாவது தொலைபேசி உரையாடலில் கொழும்பில் இருந்து சுவிஸில் இருக்கும் ஒன்றுவிட்ட அண்ணனுடன் நடந்தது. அவரின் செவிப்பறை வெடிக்குமளவிற்கு கத்தித்தான் பேசியிருந்தேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90 களில் மிக சிறிய அளவினறே மொபைல் பாவித்தார்கள்.  வசதியானவர்கள் மட்டுமே வாங்கி பாவிக்க கூடியதாக இருந்தது. என்னுடய மேலதிகாரி ஒரு மொபைல் வைத்திருந்தார். அது ஒரு செங்கல்லின் அளவு/பாரம் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மொபைல் என்றால் கதைப்பது கத்துவது  எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் மூன்று மாதத்துக்கு  போன் நம்பரை மாத்தும் அறிவாளிகளை எப்படி சமாளிப்பது என்று விளங்க முடியலை . என்னைப்பொறுத்தவரை போன் நம்பரை குறைந்தது பத்து வருடத்துக்கு மாத்தாமல் வைத்திருப்பவர்கள் ஓரளவுக்கு  நம்பிக்கையுள்ள புண்ணியவான்கள் போல இருக்கு ஆரம்பத்தில் ஒன்  டு வன்  எனும் பெயரில் வந்த போனை வாங்கியதில் இருந்து ஏழரை  தலையில் ஏறியது இந்த நிமிடம் வரை கழட்டி விட முடியலை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.