Jump to content

14 வருடங்களின் பின்னர் சந்திரபோஸ் செல்வச்சந்திரன் விடுதலை


Recommended Posts

பயங்கரவாத தடைச்சட்டத்தில் 14 வருடங்களுக்கு முன்னர் அந்த கோத்தபாய இராசபக்சேவை கொலைசெய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் சந்திரபோஸ் செல்வச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இவர் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் இல்லாததாலும் அவரின் குற்ற ஒப்புமூலத்தை நிராகராதித்த நீதவான் சந்திரபோஸ் செல்வச்சந்திரனை விடுதலை செய்துள்ளார்.

இவர் கோத்தபாய இராசபக்சேவை கொலை செய்ய முயற்சித்தவர்களில் நாலாவது சந்தேக நபராவார்.

இவர் ஒரு புற்றுநோய் சிகிச்சை பெறுபவரும் ஆவார்.

A Tamil prisoner who was in prison for 14 years on an alleged offence of an attempt on the life of former Defence Secretary Gotabaya Rajapaksa, was acquitted by the Colombo High Court today.

Five Tamil accused were indicted in the high court under the PTA on December 4, 2013 for the alleged offences purportedly committed on December 1, 2006 at the Kollupitiya Piththala junction.

The trial on the 4th accused Chandrabose Selvachandran was conducted before High Court Judge Pradeep Hettiarachchi.

After having heard the submissions of both parties and evidences, the Judge observed that the confession had been rejected in the voir dire inquiry and there was no other credible evidences forwarded by the prosecution.

After the conclusion of the trial, the high court judge acquitted the 4th accused who is a cancer patient.

K.V. Thavarasha P.C instructed by Ms. Tharmarajah Tharmaja appeared for the accused. Deputy Solicitor General Rohantha Abeysuriya appeared for the state. (S.S Selvanayagam)

http://www.dailymirror.lk/breaking_news/After-14-years-in-jail-Tamil-prisoner-acquitted/108-179898

Link to comment
Share on other sites

குறைந்தது வருடத்துக்கு 1 மில்லியன் ரூபா படி 14 மில்லியன் ரூபா நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

குறைந்தது வருடத்துக்கு 1 மில்லியன் ரூபா படி 14 மில்லியன் ரூபா நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும்.

நடக்கும் ஆனால் நடக்காது. 

மேற்குலக நாடுகளில் என்றால் இவ்வாறான  ஒரு நிதி ஆறுதலாக வழங்கப்படும். ஆனால், சிங்கள நாட்டிலே எதுவும் நடக்காது, குறிப்பாக இங்கே பாதிக்கப்பட்டவர் தமிழர். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

குறைந்தது வருடத்துக்கு 1 மில்லியன் ரூபா படி 14 மில்லியன் ரூபா நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும்.

 

3 hours ago, ampanai said:

நடக்கும் ஆனால் நடக்காது. 

மேற்குலக நாடுகளில் என்றால் இவ்வாறான  ஒரு நிதி ஆறுதலாக வழங்கப்படும். ஆனால், சிங்கள நாட்டிலே எதுவும் நடக்காது, குறிப்பாக இங்கே பாதிக்கப்பட்டவர் தமிழர். 
 

விடுதலை செய்யப்பட்டதே பெரிய விசயம் நடப்பதையாவது கதையுங்கள் வெளிநாட்டுக்கும் இலங்கைக்கும் ஏணி வச்சால் கூட எட்டாது 

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விடுதலை செய்யப்பட்டதே பெரிய விசயம் நடப்பதையாவது கதையுங்கள் வெளிநாட்டுக்கும் இலங்கைக்கும் ஏணி வச்சால் கூட எட்டாது 

இருந்தாலும், பயங்கரவாத தடை சட்டம்,  அதன் கொடூரம், இலங்கையின் நீதித்துறையில் உள்ள கோரமுகம் இவற்றை கதைக்கவும், அது அகற்றப்பட வேண்டிய தேவையையும் கூற வேண்டிய கடமையும் எமக்கு உண்டு. 


சட்டத்தில் நட்ட ஈடு கோரும் வாய்ப்பும் இருக்கலாம் (  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே முடியாமல் இருக்கலாம்), அதையும் ஆராய்ந்து செய்யும் சட்டவல்லுநர்கள் எம் மத்தியில் இல்லாமல் இருக்கலாம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இருந்தாலும், பயங்கரவாத தடை சட்டம்,  அதன் கொடூரம், இலங்கையின் நீதித்துறையில் உள்ள கோரமுகம் இவற்றை கதைக்கவும், அது அகற்றப்பட வேண்டிய தேவையையும் கூற வேண்டிய கடமையும் எமக்கு உண்டு. 


சட்டத்தில் நட்ட ஈடு கோரும் வாய்ப்பும் இருக்கலாம் (  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே முடியாமல் இருக்கலாம்), அதையும் ஆராய்ந்து செய்யும் சட்டவல்லுநர்கள் எம் மத்தியில் இல்லாமல் இருக்கலாம். 
 

சட்ட வல்லுனர்கள் இருதாலும் ஒன்றையும் செய்ய முடியாது அரசு எடுக்கும் முடிவுக்கு 

Link to comment
Share on other sites

(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 20 முற்பகல் 10.50) கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் 'அரச புலனாய்வு சேவை' (SIS) பிரிவை பயன்படுத்தி நாட்டிலுள்ள நீதி அரசர்களின் சகல இரகசியங்கள் உள்ளடங்கிய 'பாதுகாப்பு அறிக்கை' ஒன்றை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பட்டியலில் அனைத்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளடங்குவதுடன் தெரிவு செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த பாதுகாப்பு அறிக்கையானது நீதியரசர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் ஒன்று அல்ல என்பதை கீழ்காணும் விடயங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். குறித்த நீதி அரசர்களின் குடும்பம் மற்றும் அவர்களது குடும்ப வரலாறு, தற்போதைய குடும்ப சூழ்நிலை, கடந்தகால மற்றும் தற்கால அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விபரம், அவர்களது உயர் கல்வி காலத்தில் இருந்த சகல தொடர்புகள் விபரங்கள், அரச சேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் காணப்படும் உறவுகள் தொடர்புகள், குறிப்பிட்ட காலங்களில் இவர்களுடன் நெருங்கி பழகிய நபர்களது தொடர்புகள் விபரங்கள், நீதி அரசர்களின் குடும்பம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள வியாபார நடவடிக்கைகள் மற்றும் விபரங்கள், அவர்களது அரசியல் தொடர்பு சம்பந்தமான விபரங்கள், நீதி அரசர்களின் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகள் தொடர்பு வைத்துள்ள நபர்கள் தொடர்பான விபரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த பாதுகாப்பு அறிக்கையில் கூடிய கவனம் செலுத்தப்படும் பகுதிகளாக உள்ளன. அத்துடன் விசேடமாக நீதியரசர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்கள் அடங்கிய தகவல்களும் இதில் சேர்க்கப்பட உள்ளன.

தேவையான நேரங்களில் குறித்த நீதி அரசர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க  வாய்ப்பு உள்ளது. 

அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பிரிகேடியர் சுரேஷ் சாலி நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்த புதுமையான 'நீதியரசர்கள் பாதுகாப்பு அறிக்கை' தயாரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (பிரிகேடியர் சுரேஷ் சாலி தேசிய புலனாய்வு பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார் என லங்கா ஈ நியூஸ் இதற்கு முன்னர் வெளியிட்ட செய்தி அரச புலனாய்வு சேவை பிரதானி என திருத்தப்பட வேண்டும்)

https://lankaenews.com/news/233/ta

Link to comment
Share on other sites

கோத்தா கொலை முயற்சி என்ற போர்வையில் பழிவாங்க்கப்பட்ட தமிழர்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

கோத்தபாயாவை கொலை செய்ய முயற்சித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 14 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல்க்கைதி சந்திரபோஸ் செல்வச்சந்திரன் ஈற்றில் வியாழன் அன்று நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இக்காலப்பகுதியில் வேறு அவர் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். ஒரு தமிழ் இளையவனின் வாழ்வியலை அநியாயமாக அழித்து அவனை செய்யாத குற்றத்திற்காக இவ்வாறு தண்டித்தமைக்கு சிங்களத்தில் யார் முதலில் பொறுப்பேற்க்கப் போகிறார்கள்? நான் இங்கு முதலில் என்றே குறிப்பிட்டேன். அதை செய்ய வேண்டிய பட்டியலில் பலர் உள்ளனர். இருக்க விடுதலை என மட்டும் அறிவிக்கும் நீதிமன்றங்கள் நட்டஈடு உட்பட இதற்கான பரிகாரங்கள் எதுவும் குறித்து வாழா இருப்பது ஏன்? தமிழர் என்ற அசமந்தப் போக்கா?

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு 2018 யூலையில் சைவ மதக்குரு சிறீஸ்கந்தராசா 13 வருடங்களின் பின்னர் குறிற்றவாளியல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இதே குற்றத்திற்காக விடுதலை செய்யப்பட்டார் என்பது இங்கு வலியுறுத்த வேண்டிய விடயம். இருவர் விடயத்திலும் அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர்கள் குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்பட்ட்னர். தாங்கள் வழங்கிய வாக்குமூலம் தாம் சுயாதீனமாக வழங்கியதல்ல என இருவரும் தெரிவித்ததை அடுத்து மேற்கொண்டு எவ்வித தடயங்களையோ சாட்சியங்களையோ வழங்கத்தவறிய நிலையிலேயே இவ்விடுதலைகள் நிகழ்ந்துள்ளன. அவ்வாறாயின் அதற்கு ஏன் முறையே 13 மற்றும் 14 வருடங்கள் சிறீலங்கா நீதித்துறைக்கு தேவைப்பட்டது? இருக்க ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யப்பட்ட இருவரையும் ஒன்றாக விடாது ஏன் ஒரு வருடம் 5 மாதங்கள் இடைவெளியில் விடுதலை செய்ய வேண்டும்? உலகமே ஏற்றுக் கொண்ட இலங்கைத்தீவில் தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதி தான் மீண்டும் காரணமா?

இருக்க இங்கு இன்னுமொரு விடயத்தையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருதல் அவசியமாகிறது. கோத்தா மீது 2006 டிசம்பர் 1ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்பட்ட விடயம் குறித்து கோத்தாவின் நெருங்கிய சகாவும் அப்போதைய இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா 2016 மே இல் பாராளுமன்றத்தில் பேசும் போது இவ்விடயம் குறித்து பெரும் குண்டொன்றைத் தூக்கிப் போட்டார். அவர் சொன்னார் கோத்தபாயா மீதான தாக்குதல் உள்ளக வேலை. ராஜபக்ச குடும்பம் மீதான மக்கள் ஆதரவை அதிகரிக்கும் வகையிலேயே கோத்தபாயவினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதே அத் தாக்குதல் என்றார். 25 மீற்றருக்கு தள்ளி வைத்து யாராவது குண்டை வெடிப்பார்களா? என வேறு போட்டுடைத்தார். அவ் குண்டு வெடிப்பில் கோத்தா எவ்வித பெரும் காயங்களுக்கும் ஆளாகவில்லை.

இச்சம்பத்தைக் காரணமாகக் காட்டி புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்குமாறு நோர்வேயைப் பணித்த ராஜபக்ச தரப்பு, பின்னர் போர் நிறுத்தத்தில் இருந்து வெளியேறி இராணுவ நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர் என்பது வரலாறு. ஆகமொத்தத்தில் தம் சிங்கள மக்களை அணிதிரட்டவும், சர்வதேச சமூகத்தை ஏய்க்கவும் ஆடிய நாடகத்தில் அவர்கள் அனைவரும் பலியானது மட்டுமன்றி, அதை நிஜமெனக்காட்ட பலியாக்கப்பட்ட தமிழர்கள் தற்போது என்னவாகியிருக்கிறார்கள் என்பது மேலும் ஒரு துன்பியல் நிகழ்வு.

(முகநூல்) 

Link to comment
Share on other sites

17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விடுதலை செய்யப்பட்டதே பெரிய விசயம் நடப்பதையாவது கதையுங்கள் வெளிநாட்டுக்கும் இலங்கைக்கும் ஏணி வச்சால் கூட எட்டாது 

நடப்பதை கதைக்கிறது பொழுபோக்கிற கோஸிப் எனப்படும்!

எது நடக்கனுமோ அதைக் கதைக்கிறது முயற்சி எனப்படும்!

Link to comment
Share on other sites

12 hours ago, Rajesh said:

நடப்பதை கதைக்கிறது பொழுபோக்கிற கோஸிப் எனப்படும்!

எது நடக்கனுமோ அதைக் கதைக்கிறது முயற்சி எனப்படும்!

அழகான கருத்து.  அலட்டல் (கோசிப்) இருந்தாலும் குறிக்கோளில் தீயாய் இருக்க வேண்டும்.   

வீடியோ இணைப்பிற்கு நன்றி. 

Link to comment
Share on other sites

திரு தவராசா அவர்களின் முயற்சிக்கும் வெற்றிக்கும் நன்றிகள். 

சந்திரபோஸ் செல்வச்சந்திரன் முதலாவது அரசியல் கைதியை, 14 ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சைக்கு வந்தவரை சிறையில் அடைத்தது சிங்கள புத்த நாடு. அவர் அநாதை என்பது துயர் தரும் செய்தி என்றாலும் அவர் தாய் மண்னில் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும். 

இறுதியாக, இவ்வாறான மற்றைய அரசியல் கைதிகளையும் விடுவிக்க முடியும். (தமிழ் அரசியல்வாதிகள் ஒதுங்கி இருந்தாலே புண்ணியம்.  ) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.