Jump to content

'பிரெக்சிட்' ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் - 'ஜனவரி'யில் வெளியேறுகிறது


ampanai

Recommended Posts

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஜனவரி 31ம் தேதிக்குள் பிரக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரதிநிதிகள்சபையில் பிரெக்ஸிட் மசோதாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு வேறு வழிமுறைகள் உள்ளதாகவும் எனவே, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 124 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 358 உறுப்பினர்களும், எதிராக 234 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம், வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இந்த மசோதா மீது மேலவையில் அடுத்த மாதம் விவாதம் நடைபெறவுள்ளது.

இதனிடையே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜனவரி 31-ஆம் தேதிக்குள் இங்கிலாந்து வெளியேறினாலும், முழுமையாக வெளியேறுவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகளாகும் என்பதால், அதற்கான திருத்தங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.

https://www.polimernews.com/dnews/93701/பிரெக்சிட்ஒப்பந்தத்திற்குஇங்கிலாந்து-நாடாளுமன்றம்ஒப்புதல்---ஜனவரியில்வெளியேறுகிறது

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.