Jump to content

சில ஞாபகங்கள் - 4


pri

Recommended Posts

வெளியில் பனி கொட்டுகிறது.

பதினைந்து cm  வரை வந்து சேரலாமென்று செய்தி சொல்கிறது.
 
நாங்கள் பனி பார்காத தேசத்தில் இளமையை கடந்தவர்கள்.
கண்டியில் படிக்கிற காலத்தில் நூவரெலியாவை எட்டி பார்த்திருக்கிறேன்.
மிஞ்சி மிஞ்சி போனால்  10 பாகை குளிரை கண்டிருப்பேன்.
இங்கெல்லாம் அதை  குளிரென்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
 
பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன்.
சொர்க்கத்திலும் பனி கொட்டுமென்பது என் சின்ன வயது பிரமை. கனடாவில்
கால் பதிக்கிறவரை அந்த பிம்பம் கலையாமல் இருந்தது.
 
 
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம்.
கொழும்பில் குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த காலம்.
படிப்பு முடிந்து வேலை தேடும் படலம் ஆரம்பித்தது.
 
அக்பர் விடுதி வாழ்கையும் முன்நூற்றம்பது ரூபாய் மகாபொல காசும் முடிந்து போனது.
இரண்டு ரூபாய் கன்டீன் சாப்பாடும் இல்லைஎன்றானது.
 
காசு கேட்டு வீட்டுக்கு கடிதம் அனுப்ப வெட்கப்பட்டவர்கள் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டார்கள்.
பாக்கியவான்களுக்கு கொழும்பிலும் கண்டியிலும் வேலை வாய்த்தது.
மற்றவர்களை வேலை எங்காவது ஒரு சிங்கள ஊருக்கு கொண்டுபோய் சேர்த்தது.
 
எக்கய்,தெக்கய் ,கொந்தய், நரக்கய் மட்டும் சிங்களத்தில்  தெரிந்தவர்கள் முழி பிதுங்கினார்கள்.
எங்காவது வெடிக்கிற குண்டுக்கும் கூடவேலை செய்தவர்கள் முறைத்து பார்த்தார்கள்.
 
பெடியளின் வெற்றி செய்திகள் வருகிற போது மனதுக்குள் மத்தாப்பு வெடிக்கும். வெளியில் காட்டி கொள்ள முடியாது.
அரசியல் பேச அருகில் யாரும் இருக்க மாட்டார்கள்.
போலி சிரிப்போடு வாழ்கை நகர்ந்தது.
கொஞ்சம் வேலை அனுபவம் வந்து சேர்ந்தது.
 
எங்களை போன்றவர்களுக்கும் கனடாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் குடிபெயர்கிற கதவுகள் திறந்தது.
கொஞ்சப்பேர் அவுஸ்ரேலியாவுக்கு போனார்கள். மற்றையோர கனடாவை பார்த்தார்கள்.
 
 
கனடாவுக்கு குடிபெயர்கிற நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள். கொழும்பில் இருந்த கனடா தூதரகத்துக்கு போயிருந்தேன். வெள்ளைக்கார அதிகாரிக்கு முன்னால் போய் குந்தினேன்.
 
"ஏன் கனடாவில் போய் குடியேற ஆசைபடுகிறாய்"
 என்றார்.
 
"பேசுகிற மொழிக்கா தண்டிக்க படாத நாட்டில் எல்லா இனத்தவரோடும் கூடியிருக்க விருப்பம்" என்றேன்.
 
"நல்லது. அது மட்டுமா ?"என்றார்
 
"கனடாவின்  குளிர் காலம் பிடிக்கும் "என்றேன்.
 
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது எனக்கு சரியாக  புரியவில்லை.
 
பனி கொட்டும் குளிர் காலமொன்றில் மொன்றியலில் வந்து இறங்கினேன்.
 
கொழும்பில் அலைந்துதிரிந்து , house of fashion இல் வாங்கிய jacket கை கொடுத்தது.  
 
அந்த jacket  க்குள் என்னை விட இன்னுருவரும் புக முடியும். குளிர் பூந்து விளையாடியது.
சொண்டுகள் வெடித்தது. தோல் கரடு முரடாகி வெள்ளை படர்ந்தது. வெளியில் வந்து சருக்கி விழுந்தேன்.
 
புருவத்தை உயர்த்தி Really?  என்று கொழும்பில்   கேட்ட  அந்த அதிகாரியின் முகம் கண்ணுக்குள்  வந்து போனது.
 
சொர்க்கத்திலும் பனி கொட்டும் என்ற கனவும் கலைந்து.
 
இப்போது எல்லாம் பழகிப்போனது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பனியை மிகவும் பிடித்திருக்குமே உங்களுக்கு  ......!  நான் பிரான்சில் இருக்கிறன் என்று பேர்தான். நானிருக்கும் இடத்தில் பனி கொட்டுவது மிகவும் குறைவு....இந்த இடம் 5 கி.மீ ஒரு குழி கரண்டி மாதிரி.சுற்றிலும் மலைகள்.சுற்றிவர பனி கொட்டோ  கொட்டென்று  கொட்டும் . இங்கு கொட்டாது. இந்த மாதிரி நேரங்களில் எனக்கு பனி பிடிக்கும். நல்ல அனுபவப் பகிர்வு பிரி.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முதல் பனிப்பொழிவு அனுபவம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷமானதாகத்தான் உள்ளது😁 ஆனால் கையும் காலும் விறைத்துப்போனதென்னவோ உண்மைதான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நகரமெங்கும் கொட்டிக்கிடக்கும் பனிமேல் நடக்க வாய்ப்பு கிட்டுமென காத்திருக்கிறேன்.. இன்னமும் அமையவில்லை..!

ski-dubai-mall-of-the-emirates4.jpg  Snow-Kingdom8.jpg

'ஸ்கி துபை' மற்றும் சென்னையிலுள்ள 'வி.ஜி.பி ஸ்னோ கிங்டம்' போன்ற உள்ளரங்க செயற்கை பனியில் சறுக்கியதோடு சரி.

அடுத்த மாதம் ஸ்விஸ் நாட்டில் பார்க்க வாய்பிருக்குமென எண்ணுகிறேன். 2 பாகை குளிரே தாங்க முடியவில்லை, பனியில் தினமும் வாழ்வது கடினம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயல்பான உங்கள் எழுத்து அருமை. முதன்முதலில் பார்க்கும் எல்லோருக்கும் பனிப்பொழிவு மட்டற்ற மகிழ்சி தான்.

Link to comment
Share on other sites

நன்றி suvy ,கிருபன் ,ராசவன்னியன் ,மெசொபோத்தேமியா  சுமேரியர் .

வெளியில் வேலை இல்லாத நாளில் வீட்டுக்குள் இருந்தபடி 
யன்னல் வழியாக பனி கொட்டுவதை பார்க்க இப்பவும் விருப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/21/2019 at 4:50 PM, pri said:

பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன்.

வெளிநாடில் பனி மழைக்குள் எடுத்த முதல் திரைப்படம் சிவந்தமண். அந்தப் படத்தில் இருந்து இன்றுவரை நடிகைகள் எல்லாம் பனி மழைக்குள் ஜக்கெற் இல்லாமல் ஆடிப்பாடுவார்கள். நடிகர்கள் மட்டும் குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிந்திருப்பார்கள். கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் pri 

பனியைப்பற்றிய உங்கள் எழுத்தை வாசிக்கும் போதே  எனக்கு குளிர் எடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா செல்வதற்கான நேர்முகத் தேர்வும். முதல் பனிப்பொழிவும் மிக அழகாக எழுதப் பட்டுள்ளது.
அனைவரும்  முதல் பனிப்பொழிவை... என்றுமே மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.  

Link to comment
Share on other sites

19 hours ago, Kavi arunasalam said:

வெளிநாடில் பனி மழைக்குள் எடுத்த முதல் திரைப்படம் சிவந்தமண். அந்தப் படத்தில் இருந்து இன்றுவரை நடிகைகள் எல்லாம் பனி மழைக்குள் ஜக்கெற் இல்லாமல் ஆடிப்பாடுவார்கள். நடிகர்கள் மட்டும் குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிந்திருப்பார்கள். கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் pri 

பனியைப்பற்றிய உங்கள் எழுத்தை வாசிக்கும் போதே  எனக்கு குளிர் எடுக்கிறது.

பெரும்பாலான தமிழ் படங்களில் நீங்கள் குறிப்பிடுவது போலவே
பாடல் காட்சி அமைந்திருக்கும் . நன்றி .

10 hours ago, தமிழ் சிறி said:

கனடா செல்வதற்கான நேர்முகத் தேர்வும். முதல் பனிப்பொழிவும் மிக அழகாக எழுதப் பட்டுள்ளது.
அனைவரும்  முதல் பனிப்பொழிவை... என்றுமே மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.  

நன்றி தமிழ் சிறி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது
 
எனக்கு சரியாக  புரியவில்லை.
 
எனக்கும் தான் இப்போதுஅதுவே வாழ்க்கையாகி விட்ட்து 
Link to comment
Share on other sites

12 hours ago, நிலாமதி said:
புருவத்தை உயர்த்தி என்னை மேலும் கீழும் பார்தபடி "உண்மையாகவா? " என்றார்.
 
நான் சொன்னதில் ஏதோ தப்பு இருப்பதாக அவர் முகம் சொன்னது. அப்போது
 
எனக்கு சரியாக  புரியவில்லை.
 
எனக்கும் தான் இப்போதுஅதுவே வாழ்க்கையாகி விட்ட்து 

நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் நன்றாக இருக்கிறது பிரி 

Link to comment
Share on other sites

On 1/14/2020 at 1:25 PM, தனிக்காட்டு ராஜா said:

ஞாபகம் நன்றாக இருக்கிறது பிரி 

நன்றி தனிக்காட்டு ராஜா .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.