Jump to content

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

சிங்கக் கொடியோன் சம்பந்தன்இசுமத்திரன் குழு கலந்துகொள்ளுமா?இல்லையா?

நிச்சயமாக கலந்துகொள்வர். கொத்தாபயவிற்கு நல்லெண்ண சமிஞ்சை [Signal ] கொடுக்கவேண்டுமல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

சிங்கக் கொடியோன் சம்பந்தன்இசுமத்திரன் குழு கலந்துகொள்ளுமா?இல்லையா?

See the source image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

நானறிய  தேசிய கீதம் என்பது  பாடியதாக நினைவில் இல்லை. உங்களுக்கு நினைவில் உள்ளதா?

தமிழில் பாடப்படும் போது முணுமுணுப்பேன் வேலை செய்யும் இடம் அப்படி

இனி சிங்களத்தில் என்றால் மெளனமாக கடந்திடும் வாய் 

Link to comment
Share on other sites

The most widely held view is that Sri Lankan composer Ananda Samarakoon wrote the music and lyrics to the song inspired/influenced by Bengali poet Rabindranath Tagore. A minority suggest that Tagore wrote the anthem in ful

https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Matha

ஆக, சிங்கள நாட்டின் தேசிய கீதம் ஒரு இந்தியரால் உருவாக்கப்பட்டது. சிங்கள மொழியில் மொழிபெயர்த்து பாடுகிறார்கள். அவர்களுக்கே இது தெரியுமோ தெரியாது. ஆனால், தமிழில் பாடக்கூடாது என்பது அறியாமையும் அகங்காரமுமே. 

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழில் பாடப்படும் போது முணுமுணுப்பேன் வேலை செய்யும் இடம் அப்படி

இனி சிங்களத்தில் என்றால் மெளனமாக கடந்திடும் வாய் 

தமிழனுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இதை பாட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு பாடசாலை நாட்களில் பாடிய ஞாபகம் இருக்குது. இப்போவென்றால் தமிழிலும் பாட தெரியாது சிங்களத்திலும் பாட தெரியாது.

இரண்டு மாதத்துக்கு முன்பு ஒரு பாடசாலைக்கு ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அவர்கள் தமிழில் பாடும்போது கேட்டுக்கொண்டிருக்க பழைய ஞாபகம் வந்தது. இருந்தாலும் பாட முடியவில்லை. அதட்காக முயட்சிக்கவும் இல்லை.

இந்த புதிய சடடப்படி இனி தமிழர்கள் சிங்களத்தில் பாட வேண்டுமா? இல்லாவிட்டால் சடட நடவடிக்கை எடுப்பார்களா?  மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mano-Ganesan-1.jpg

தேசிய கீதத்தை தமிழில் மாத்திரம் கேட்கவில்லை – மனோ ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டில் வாழும் இரு மொழிகளைப் பேசும் இனத்தவர்களையும் இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என கூறவில்லை என்றும் தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய கீதம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மனோ கணேசன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தாய்நாட்டை தமது தாய் மொழியில் போற்றும் தேசிய கீதத்தை அகற்ற வேண்டாம் என ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் செயற்படுவேன்’ என நாட்டுக்கு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை இரத்து செய்ய துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு அவர் ஜனாபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.

3 மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதிக்கு  தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு மூன்று மொழிகள்’ என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்றுசேர்த்து, தமிழ், சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளைத் தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மொழியுரிமை என்பது 13ஆம் திருத்தம் மூலம் எமது அரசியலமைப்பில் உட்புகுத்தப்படவில்லை என தெரிவித்த மனோ, 16ம் திருத்தம் மூலமாக மொழியுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பின் 4ம் அத்தியாயத்தில், இலங்கையின் இணை ஆட்சி மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அதேவேளை ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசில் இருக்கின்ற சிலர், உலகில் எங்கேயும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் கிடையாது என்று கூறுகின்றனர். இது பிழையான தகவல். உலகில் பல நாடுகளில் தேசிய கீதம், அவ்வந்த நாடுகளில் பேசப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பாடப்படுகின்றன. சில நாடுகளில் ஒரே கீதத்தில் இரண்டு மொழி வரிகள் இடம்பெறுகின்றன என்றும் மனோ வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை பதினைந்து தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தி மொழியில் இருக்கின்றதென சிலர் கூறுகின்றனர். இதுவும் பிழை. இந்தியாவின் தேசிய கீதம், இலங்கை தேசிய கீதத்தை எழுதிய அமரகோனின் குருவான ரபீந்திரநாத் தாகூரால் தாய்மொழி வங்காளியில் எழுதப்பட்டது.

வங்காள மொழி இந்தியாவின் சிறுபான்மையினரின் மொழியாகும். அதற்காக இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என தாம் கூறவில்லை என்றும் தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மனோ மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தேசிய-கீதத்தை-தமிழில்-மா/

Link to comment
Share on other sites

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என்பது போலி செய்தி : டலஸ் அழகப்பெரும

(இராஜதுரை ஹஷான்)

73வது சுதந்திர நிகழ்வில்  சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம் பெற்றவுள்ள சுதந்திர தின நிகழ்வில்   தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தியும், அதனை  தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்களும் கவனத்திற்குரியது. 

இவ்விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தலை ஏற்படுத்துவது அவசியமாகும்.

 சுதந்திர தின நிகழ்வில்  தமிழ் மொழியை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும். குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்திற்கு மொழிகளின் முக்கியத்துவம் இன்றியமையாததாகும்.

 யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து  வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் முறையான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டுள்ளன.

 இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில்  ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அரசியல் ரீதியில் ஒருமித்த தீர்மானத்தை  எடுத்தார்கள் என்றும் குறிப்பிடவும் முடியாது. ஜனநாயக ரீதியிலே தேர்தல் இடம் பெற்றது.

தமக்கான  தலைவ்ர யார் என்பதை  தீர்மானிக்கும் உரிமை  அனைவருக்கும் காணப்படுகின்றன. அதனையே தமிழ் மக்கள் செயற்படுத்தினார்கள்.  நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் அனைத்து இன மக்களையும்  எவ்வித வெறுப்புக்களும் இன்றி பொதுவாக செயற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இல்லாத ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களின் மத்தியில் வன்மத்தை தூண்டும் செயற்பாடுகளே இடம் பெறுகின்றன.

நாட்டில் இரண்டு மொழி வழக்கில் உள்ளது. இரண்டு இனத்தவர்களும் இருமொழியிலும் தேர்ச்சிப்பெற்றிருத்தல் அவசியமாகும்.

மொழி ஆளுமையினை மேம்படுத்தவதற்கு பாடசாலை மட்டத்தில் இருந்து  புதிய திட்டங்களம், கடந்த அரசாங்கம் முன்னெடுத்த  செயற்பாடுகளும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படும். அரசியல்  நோக்கங்கள் , மற்றும்  பழிவாங்கல்கள் என்பவற்றை கல்வித்துறையில் காண்பிப்பது எதிர்கால தலைமுறையினரின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அரசாங்கம் எந்நிலையிலும் இனங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்காது.  தகுதி மற்றும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து செயற்பாடுகளிலும் தமிழ் மக்களை இணைத்துக் கொண்டே பயணிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/71910

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன் காலம் காலமாக சிறீலங்காவின் சுதந்திர தினத்தி அதாவது கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வருடமாக தமிழர்தரப்பில் யாரும் சிங்களத்தின் சுதந்திர தின தேனீர் விருந்தில் கலந்துகொள்வதில்லை எனும் மரபை உடைத்தெறிந்து சுமந்திரனே அதில் கலந்துகொண்டார் இவ்விடையம் யாழ் களத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது நினைவிருக்கிறது. ஆகவே கூட்டமைப்பு எனும் தமிழர் விரோத தேசமாமிந்தியாவின் எடுபிடிகள் என்ன செய்தாலும் வியப்பதற்கு எதுவுமில்லை.

நமோ நமோ மதா அப்பே சிறீலங்கா நமோ நமோ மாதா 

நான் எழுதியது சரியா எனத்தெரியவில்லை சின்ன வயதிலிருந்து நான் சிறீலங்காவின் தேசிய கீதமாக சிங்களத்தில் இந்த இரண்டுவரிகளுக்கு மேல் கேள்விப்பட்டதாக நினைவில்லை என் வாழ்நாளில் அதை முழுமையாகக் கேட்டறியேன் அதாவது என் வயதொத்தவர்களும் எனக்கு வயதுக்கு மூத்தவர்களும் எனக்குப் பின்பு கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்குப் பின்புன் அதன்பின்பும் பிறந்தவர்களும் காதில் வாங்கிக்கொள்ளாத இந்தப் பாடலை என்ன் இவ்வளவு அக்கறையுடன் யாழ் களம் விவாதப்பொருள் ஆக்குகிறது.

எனது தந்தையாருடன் கூடப்பிறந்த எனது சித்தப்பா அவ்வேளையில் கொழும்பு தபால்துறையில் இலிகிதம் பார்த்தவர் சிங்களம் கற்றால்தான் பதவி உயர்வு இங்கிரிமென்ற் கனகாலத்துக்கு இப்படி இருக்க முடியாது சிலவேளை வேலையும் பற்போகும் எனகூற அந்தாள் வேலையை உதறிப்போடு வந்திட்டுது முண்டு பிள்ளைகள் தண்ணியில்லாக்காடு கரம்பன்  கடும் பஞ்சம் இதனால் குடும்பத்துக்க பிரச்சனை சின்னம்மா தனியாகப் பிறிந்து போயிட்டா இப்போதுபோல் சவூதி டோகாவெல்லாம் அப்போது போகமுடியாது  தோட்டக்காணியையும் வீட்டையும் அடமானம்வைத்தோ வித்துப்போட்டொ வெளிநாடுவந்து அசைலம் அடிக்க முடியாது சரி அப்படி இருந்தாலும் குடிதண்ணிக்கே இரண்டு கிலோ மீற்றர் நடந்துபோய் குடத்தில தண்ணீர் கொண்டுவந்து சமையலுக்கும் எடுத்து குடிக்கவும் பாவிக்கும் அந்த உவர்த்தண்ணீர் தறையையும் கொட்டில் வீட்டையும் எவன் வாங்குவான். சித்தப்புக்கு பென்சனும் இல்லை அந்த வயது வந்தால்தான் அதையும் கொடுப்பான்.

இவ்வளவுக்கும் மத்தியில் அவர்களும் வாழ்ந்தார்கள் ஆனால் சுமந்திரனுக்கு சுதந்திரத் தேநீர் தேவைப்படுகுது. என்னத்தைச் சொல்ல.

இப்போது யாழ்ப்பாணத்தில் ரியூட்டரிக் கொட்டில்களில் விசேடமாக சிங்களமும் கற்றுக்கொடுக்கினம் காரணம் இங்கிரிமென்ரும் பதவி உயர்வும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2019 at 9:10 AM, Vankalayan said:

தமிழனுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இதை பாட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு பாடசாலை நாட்களில் பாடிய ஞாபகம் இருக்குது. இப்போவென்றால் தமிழிலும் பாட தெரியாது சிங்களத்திலும் பாட தெரியாது.

இரண்டு மாதத்துக்கு முன்பு ஒரு பாடசாலைக்கு ஒரு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அவர்கள் தமிழில் பாடும்போது கேட்டுக்கொண்டிருக்க பழைய ஞாபகம் வந்தது. இருந்தாலும் பாட முடியவில்லை. அதட்காக முயட்சிக்கவும் இல்லை.

இந்த புதிய சடடப்படி இனி தமிழர்கள் சிங்களத்தில் பாட வேண்டுமா? இல்லாவிட்டால் சடட நடவடிக்கை எடுப்பார்களா?  மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்?

 

அரச ஸ்தாபனம் அனைத்துக்கும் அறிவுறுத்தல் வந்தால் சிங்களத்தில் பாடப்பட வேண்டும் அப்படி வரவில்லையென்றால் அது தேவையில்லை தமிழிலும் பாடலாம்  நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வெளிநாட்டில் ஒருகதை உள்நாட்டில் வேறொரு கதை. அண்ணன் ஜனாதிபதி ஆக இருந்தபோதும் இதேதான்.  அவர்களின் அரசியலில் உள்ள கோமாளிகளும் ஆளுக்கொரு கதை பிற்பாடு வேறொரு விளக்கம். என்னைப் பொறுத்தவரை இதற்காக நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. இவனோடு சேர்ந்து வாழ முடியாது என்கின்ற முடிவுக்கு எப்பவோ வந்துவிட்டோம். இவன் தன்ர தேசிய கீதத்தை பாடினாலென்ன பாடாவிட்டாலென்ன? அலட்டிக்கொள்ளாமல் நாம் ஏன் இவர்களை விட்டு பிரிய நினைக்கிறோம் என்பதை ஆதாரமாக காட்ட இந்தச் செயற்பாடுகளை சேகரித்து எமது செயற்பாட்டுக்கு வலுவே சேர்க்க வேண்டும். இது எல்லாம் எமது பிரிவினை நிஞாயமானது என்பதை நிரூபிக்க உதவும். தமிழில்  பாடவேண்டும் என்று அடம் பிடிப்பதால் நாம் சுதந்திரமாக இவர்களுடன் வாழமுடியும் என்பதுமில்லை, அவர்கள் எம்மை சுதந்திர குடிமக்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்றுமில்லை.  சிங்களவனின் அடிமையாக தமிழனை ஏற்படுத்திய அந்த நாள், தமிழருக்கு கரி நாளே. இதில தேசிய கீதம் ஒரு கேடு.  சிங்களவரிடம் கைத்தட்டு வாங்கி வாக்குச் சேர்க்க ஒவ்வொரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுவான். நாங்கள் அதை  கடந்து எமது நோக்கத்திற்காய்  முழுமையாய் உத்வேகத்துடன் உழைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தாய் மொழியில் மட்டும் தேசிய கீதம் கோரிக்கை  நியாயமானது - பந்துல குணவர்த்தன

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திர தின  நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட வேண்டும் என்பது  69 இலட்ச பெரும்பான்மை பௌத்த மக்களின்  கோரிக்கையாக காணப்படுகின்றது.   நாட்டின்  தாய் மொழியில்   மாத்திரம்   தேசிய கீதம்  பாடப்பட வேண்டும் என்ற  கோரிக்கை  நியாயமானது  என   அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க   தகவல் திணைக்களத்தில் நேற்று   வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

எதிர்வரும் மாதம் இடம் பெறவுள்ள  83 வது சுதந்திர தின நிகழ்வில்   தேசிய  கீதம்  சிங்கள மொழியில் மாத்திரம்  பாடுவதற்கு தீரமானிக்கப்பட்டதாகவும், தமிழ்மொழி  புறக்கணிக்கப்பட்டதாகவும் மாறுபட்ட கருத்துக்கள்  சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித நிலைப்பாட்டினையும்   எடுக்கவில்லை.

ஒரு நாட்டில்  எந்த சமூகம் அதிகமாக அதாவது பெரும்பான்மையினராக காணப்படுகின்றார்களே அவர்களது  மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது  சாதாரண விடயமாகும். எமது அயல்நாடான இந்தியாவிலும் இந்நிலைமையே  காணப்படுகின்றது.   இந்தியாவில் 18ற்கும் அதிகமான  மொழிகளை பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் ஆனால்   தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் ஒருமொழியில் மாத்திரமே பாடப்படுகின்றது.  இவ்விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வித பிரச்சினைகளும் அங்கு தோற்றம் பெறவில்லை.

இலங்கையில்  பெரும்பான்மை  சமூகமாக   சிங்கள பௌத்தர்கள்  வாழ்கின்றமையினால்  தேசிய  கீதம் சிங்கள மொழியில் ஆரம்பத்தில் இயற்றப்பட்டு தேசிய , அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம்   பாடப்பட்டது , ஆனால் 2015ஆம் ஆண்டு   தொடர்ந்து பின்பற்றி வந்த விடயம் மாற்றியமைக்கப்பட்டன. இதுவே  இன்று   பலதரப்பு   சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தின நிகழ்வில்   தேசிய   கீதம் சிங்கள  மொழியில் மாத்திரம் பாடப்பட வேண்டும் என்பது    69   இலட்ச பெரும்பான்மை மக்களின்  பிரதான கோரிக்கையாக காணப்படுகின்றது.  இவர்களின்  சாதாரண கோரிக்கைக்கு  கவனம் செலுத்துவது  புதிய அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகவும் காணப்படுகின்றது.   ஆகவே   எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்  அரசாங்கம் உரிய   கவனம் செலுத்தும்   என்றார்.

https://www.virakesari.lk/article/72483

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.