Jump to content

தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்? - யதீந்திரா

கடந்த 17ஆம் திகதி, இலங்கை தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு, அந்தக் கட்சியினரால் நினைவு கூரப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சிக்கு ஒரு நீண்ட வரலாற்றுண்டு. 1949இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சி 1970கள் வரையில் தீர்மானகரமான ஒரு கட்சியாக இருந்தது உண்மைதான். இந்தக் காலத்தில் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்கவல்ல பிரதான கட்சியாக தமிழரசு கட்சியே இருந்தது. ஆனால் 70களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை தனித்து எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. இதன் காரணமாகவே கட்சியை நிறுவிய, செல்வநாகமே தமிழரசு கட்சிக்கு பதிலாக புதிய கட்சி ஒன்றை நோக்கிச் செல்ல முற்பட்டார்.
இதன் விளைவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தின் பின்னர், தமிழரசு கட்சி செயலிழந்துபோனது. இல்லாமலே போனது. அவ்வாறு செயலிழந்துபோன கட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே ஒட்சிசன் கொடுத்து மீளவும் உயிர்ப்பித்தனர். அந்த விடுதலைப் புலிகள் இயக்கம், அழிந்துபேகானது நல்ல விடயம் என்று இப்போது சம்பந்தன் கூறுகின்றார். 2004இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, கிட்டத்தட்ட 27 வருடங்களின் பின்னர், தமிழரசு கட்சியும் அதன் சின்னமான வீடும் மீளவும் தமிழ் மக்களுக்குள் தலைநீட்டியது. கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பு என்னும் பெயரில், தமிழரசு கட்சியே தமிழ் மக்கள் சார்பிலான அரசியலை தீர்மானித்துவருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள் நினைவுகொள்ளப்பட்டிருக்கின்றது. இதிலுள்ள சுவார்சியமான விடயம் என்னவென்றால், தமிழரசு கட்சி தமிழ் அரசியலிலிருந்து இல்லாமல் போன காலத்தையும் சேர்த்தே நினைவுகொள்ளப்பட்டிருக்கின்றது.

அரசியல் கட்சிகள்தான் ஒரு நாட்டின் – ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியல் முகங்களாக இருக்கின்றன. ஒரு நாட்டில் அரசியல் கட்சிகள் எந்தளவிற்கு சுதந்திரமாகவும் வினைத்திறனுடனும் செயற்படுகின்றனவோ அந்ளதவிற்கு, அந்த நட்டில் ஜனநாயக அரசியல் செழிப்பாகவும் பலமாகவும் இருக்கின்றன என்பது பொருளாகும். ஆனால் இந்த அளவீடு வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கும் ஒரு மாதிரியாக இருப்பதில்லை. ஜனநாயக அரசியலில் கட்சிகளின் பங்கு என்பது ஒரு நீண்ட விவாத்திற்குரியவை. ஆனால் இலங்கை நிலைமையில் கட்சிகளின் பங்கை ஆராய்கின்ற போது, இன ரீதியான வேறுபாடுகளை கருத்தில் கொண்டே நோக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் அரசியல் கட்சிகள் என்பவை ஒரு தெளிவான இலக்கை கொண்டிருக்கின்றன. இந்த அளவுகோல் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தாவிட்டாலும் கூட, தமிழ்த் தேசிய அரசியலை இலக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் கட்சிகள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

இன்று தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளுமே ஒரு இலக்கின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. அதாவது, தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கில், தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கான அரசியல் ஏற்பாடொன்றை பெறுவதற்காக போராடுவதுதான் இந்தக் கட்சிகள் அனைத்தினதும் நிலைப்பாடு. தமிழரசு கட்சியின் அங்கூரார்ப்பன கூட்டத்தின் போது, செல்வநாயகம் கூறியதை இப்போது எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது சந்தேகமே! நாங்கள் ஒரு இலட்சியத்திற்காக பயணிக்கின்றோம். அதில் நாங்கள் வெற்றிபெறுவதற்கு எல்லாம் வல்ல கடவுள் எங்களுக்கு உறுதுனையாக இருப்பார் என்று நம்புகின்றோம். ஒரு வேளை நாங்கள் இதில் தோல்வியுற்றால், எங்களின் இளைய தலைமுறை எங்கள் பதாகைகளை சுமந்துசெல்லும். செல்வநாயகம் மறைந்து 42 வருடங்களாகின்றன. செல்வாயகத்தின் நம்பிக்கைக்கும் இன்றைய தமிழசு கட்சிக்கும் அதிக வித்தியாசம் உண்டு.

70 வருடங்கள் அரசியலில் பயணித்ததை நினைவு கூர்கின்ற போது, முக்கியமாக கேட்க வேண்டிய கேள்வி இந்த 70 வருடங்களில் நாம் மக்களுக்காக எதை அடைந்தோம்? எங்களால், நாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரரீதியில் முன்னோக்கி பயணித்திருக்கின்றனரா? அவ்வாறு நிகழவில்லை என்றால் ஏன் நிகழவில்லை? எந்த இடத்திலெல்லாம் நாங்கள் தோற்றிருக்கின்றோம்? ஏன் நாங்கள் தோற்றோம்? ஏன் எங்களால் தொடர்ந்தும் எதனையும் அடைய முடியாமல் இருக்கின்றது? இது தமிழரசு கட்;சிக்கு மட்டுமல்ல தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஒரு அரசியல் கட்சியால் குறிப்பிட்ட சூழலை கையாள முடியாமல் போகும் போது, ஒன்றில் அந்தக் கட்சி, புதிய சவால்களுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்க வேண்டும் அல்லது அந்தக் கட்சியை கலைத்துவிட்டு புதிய ஒன்றை நோக்கிச் செல்ல வேண்டும். 70 ஆண்டுகள் தொடர்பில் பேசுகின்ற போது, தங்களின் தோல்வி தொடர்பிலும் ஒரு கட்சி சிந்திக்க வேண்டும். ஆனால் அதற்கு அந்தக் கட்சியின் இன்றைய தலைவர்கள் தயாராக இல்லை. பொதுவாகவே தமிழ்ச் சூழலில் சுயவிமர்சனம் என்றவுடன் எல்லோருக்குமே அச்சம் ஏற்பட்டுவிடுகின்றது. உண்மையில் சுயவிமர்சனம் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தேவையான ஒன்று. முக்கியமாக ஒவ்வொரு தோல்விகளின் போதும் அரசியல் கட்சிகள் தங்களை புதுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய சூழலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் தமிழ் அரசியல் சூழலில் இது அரிதாகக் கூட நிகழ்வதில்லை. இதனால் மீண்டும் மீண்டும் தோல்வி அனுபவமே கிடைக்கின்றது.

ITAK

தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகளை நினiவு கொள்கின்ற போது அந்தக் கட்சியினர் ஒரு விடயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த 70 வருடங்களில் தமிழரசு கட்சி அதிகம் சிதைவுற்றிருப்பதும், அதன் தனித்துவங்களை இழந்திருப்பதும் கடந்த பத்து வருடங்களில்தான் நடந்திருக்கின்றது. தமிழரசு கட்சி தவறான ஒரு கடசியல்ல. அதனை உருவாக்கியவர்கள் அரசியலில் மதிப்புமிக்கவர்கள்தான். அதில் ஜயமில்லை. ஆனால் எப்போது தமிழரசு கட்சி இரா.சம்பந்தனின் தலைமையின் கீழ் வந்ததோ, அப்போதே அதன் தனித்துவம் காணாமல் போய்விட்டது. இன்றைய நிலையில் தமிழரசு கட்சியின் முத்த தலைவர் என்றால் அது மாவை சேனாதிராஜா மட்டும்தான். ஆனால் மாவை கட்சிக்குள் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்காமையால் அந்த இடத்தை சம்பந்தன் எடுத்துக் கொண்டார். மாவையின் இயாலாமைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

கடந்த பத்துவருட கால தமிழ் அரசியலானது, சம்பந்தன் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அனைத்து முயற்சிகளுமே படுதோல்விடைந்திருக்கின்றன. மேற்கு நாடுகளில் ஒரு அரசியல் கலாசாரமுண்டு அதாவது, ஒரு தலைவர் என்பவர், தனது முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிவிடுவார். ஏனெனில் ஒரு விடயம் தோல்வியடைந்தால், அதற்கான முழுப் பொறுப்பும் அந்த கட்சியின் தலைவரையே சாரும். ஆனால் தமிழ் அரசியலை பொறுத்தவரையில் தோல்விக்கான காரணத்தை கொழும்பின் ஆட்சியாளர்களில் போட்டுவிட்டு, தொடர்ந்தும் கதிரையில் இருப்பது தொடர்பிலேயே தமிழ் தலைவர்கள் சிந்திக்கின்றனர். ஒரு கட்சி அல்லது ஒரு தலைவர் எத்தனை வருடங்கள் இருந்தன என்பதல்ல அவற்றின் பெருமை மாறாக, அந்தக் கட்சியின் ஊடாக, அந்தத் தலைவரின் ஊடாக மக்கள் அடைந்த நன்மைகள் என்ன என்பதுதான் முக்கியமானது. அந்த வகையில் நோக்கினால், 70 வருடங்களில் தமிழரசு கட்சி, தமிழ் மக்களுக்காக சாதித்தது என்ன? 70 வருடங்களில் சாதிக்க முடியாத ஒன்றை இனிவரப் போகும் காலத்தில் எவ்வாறு சாதிக்க முடியும்? கடந்த எழுபது வருடங்களில் தமிழ் கட்சிகளால் மாகாண சபையை (13வது திருத்தச் சட்டம்) தாண்டி பயணிக்க முடியவில்லை. அந்த மாகாண சபை கூட, தமிழரசு கட்சியினால் வரவில்லை. ஆயுதப் போரட்ட இயக்கங்களினால் வந்தது. அதிலும் முக்கியமாக பலரும் பொறுப்பெடுக்க அஞ்சிய காலத்தில், துனிந்து அதனை பொறுப்பெடுத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கே அதில் அதிக பங்குண்டு. 13வது போதுமானதல்ல என்பது வேறு விவாதம் ஆனால் அதன் போதைமைகளை தாண்டி ஏன் இன்றும் பயணிக்க முடியவில்லை. இத்ததனை கட்சிகள் இருந்தும், உலகெல்லாம் சத்தமிட்டும் ஏன் எதுவும் நிகழவில்லை? அவ்வாறாயின் எங்கு பிரச்சினையின் வேர் இருக்கின்றது? எனவே இந்தப் பின்புலத்தில், தமிழரசு கட்சி தன்னை மாற்றிக்கொள்ளாமல், தொடர்ந்தும் ஒரு கட்சியாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்? இந்தக் கேள்வி, ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுக்குமானதுதான்.

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழரசு-கட்சியின்-70-ஆண்டு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.