Jump to content

’இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

’இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது’

image_9a540752dd.jpg“இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது. அவர்கள் இலங்கைக்கு திரும்பி தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் அவர் இன்று (24) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

“நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக வெற்றிப்பெற்றால் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். 
ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி காலத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் நள்ளிரவில் அவசர சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அது தான் ஜனநாயகப் படுகொலை.

 அதை செய்யாமல் வெளிப்படையாக தெரிவித்து நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அந்த விவாதத்தில் அனைத்துக்கட்சிகளை பேச அனுமதித்து சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது சரியல்ல. 

குடியுரிமை சட்டம் குறித்து பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை போராட்டத்துக்கு எதிர்கட்சிகள் தூண்டுகின்றன.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக சட்டத்தில் எதும் சொல்லப்படவில்லை என்கின்றனர். 

இலங்கை தமிழர்களை பொருத்தவரை குடியுரிமை கேட்டால் வழங்கலாம். ஆனால் அவர்கள் குடியுரிமை கேட்கக்கூடாது. இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு திரும்பி தங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

இலங்கை தமிழர்கள் தலைவர்கள் பலர் என்னை சந்தித்துள்ளனர். அவர்கள் யாரும் தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. 

இலங்கைக்கு திரும்பி செல்ல தயாராக உள்ளோம். இலங்கை செல்வதற்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தால் போதும் என்றே அவர்கள் கேட்கின்றனர். இது தொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளேன்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் பேரணி நடத்தியுள்ளது. இதனால் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்காளத்துக்கு மம்தா அழைத்துள்ளார். இந்த அளவுக்கு தான் மு.க.ஸ்டாலின் புகழ் பெற முடியும்.

அடுத்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி வைதிருப்பதால் இப்போது இருக்கும் எம்எல்ஏக்களை விட குறைந்த எம்எல்ஏக்களேயே திமுக பெறும்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை கட்சியினர் ஆதரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காக உண்மையில் பாடுபடுவோரை தேர்வு செய்ய வேண்டும்.

ஜார்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறவில்லை. இருப்பினும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-தமழரகள-இநதய-கடயரம-கடகககடத/175-242915

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர் இலங்கைக் குடியுரிமை கேட்கக் கூலாது . அவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

"இலங்கை தமிழர்கள் தலைவர்கள் பலர் என்னை சந்தித்துள்ளனர். அவர்கள் யாரும் தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. "

இந்த இல கணேசன் காது வைத்தியரை முதலில் காணவேண்டும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர் இலங்கைக் குடியுரிமை கேட்கக் கூலாது . அவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும்.

அந்த பிஜேபி  படிப்பறிவில்லா கூட்டம் தான் அப்படி சொல்லுது எண்டால் நாங்களும் அவர்களை போல் கூவனுமாய்யா ?

முதலில் மலையகத்தமிழர் என்ற பதமே ஒழிக்கப்படணும்  அவர்களும் தமிழர்களே புலம்பெயர்தலில் இங்கு வந்து இருபது  வருடம் இருந்தவர்களே திரும்பி ஊர் போய்  வாழமுடியாது என்று ஒப்பாரி வைக்கையில் அவர்களை இப்படி நோகடிப்பது  எந்த வகையிலும் நியாயமில்லை.சொந்த மொழியில் இலங்கை தேசிய கீதம் கூட பாடமுடியாத கூட்டம் ஆகி போனதன்  காரணம் ஒவ்வொரு பிரதேச மைய  வாதங்களினால் என்பதை நேரே கண்டு அனுபவித்தும் திருந்த  முடியா உலகில் இருக்கிறம் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர் இலங்கைக் குடியுரிமை கேட்கக் கூலாது . அவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும்.

அப்படிப்போடுங்க அரிவாளை கப்பித்தான்!

முதலில் நாயக்கர், முதலியார், கோனார் இத்யாதி சாதிகள் தமிழர் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது.

பிறகு, மட்டக்களப்பு தமிழர்கள் தமெக்கென ஒரு தலைமைமையை தேடினால் அது பிரதேசவாதம், ஆனால் யாழ் தலைமகள் மட்டகளப்பு தலைவர்களுக்கு செய்ததை சொன்னால் - அது எல்லாவற்றையும் யாழ்மைவாதம் எனும் பொதுமைப்படுத்தல்.

இப்போ, மலையக தமிழர் எல்லாம் இலங்கையில் இருந்து அகன்று இந்தியாவில் குடியுரிமை கோர வேண்டும்.

நாளைக்கு - தீவுபகுதி மக்கள் எல்லாம், யாழ் நகரில் குடியேறி ஒரே ஆட்சி அதிகாரம் பண்ணுகினம். அவர்களை தீவகத்துக்கு அனுப்ப வேண்டும் 😂.

நாளை மறுநாள் - டெம்பில் ரோட்டில் இருப்பவர்கள், பிரவுண் ரோட்டில் இருப்பவர்களை அடக்கி ஆளுகிறார்கள்😂😂😂.

நீங்கள் இந்த வழியால்தான் போகிறீர்கள் என இரெண்டு நாட்களுக்கு முன்பே அனுமானித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இதை நிறுவுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

பிகு: நல்லவேளையாக, ரணசிங்க பிரேமதாச என்ற ஒரு சிங்களவன் 1988 இல் இலங்கையில் வாழ்ந்த எல்லா மலையக தமிழருக்கும் இலங்கை பிரஜா உரிமையை வழங்கி விட்டதால், வெளிநாட்டில் வந்து அந்த நாட்டு பிரஜா உரிமையை யாசித்து பெற்ற எந்த யாழ்பாணத் தமிழனிடமும், தமது பிரஜா உரிமையை யாசிக்கும் நிலையில் இப்போ மலையக மக்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பட்டும்  இன்னும் இப்படியான கருத்துக்களை காவிக்கொண்டு திரிகிற கூட்டம் இருக்கிறதை பார்க்கும்போது எமக்கு எதிரி வெளியில் இல்லை உள்ளுக்குள்தான் என்பது நிரூபணமாகின்றது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அந்த பிஜேபி  படிப்பறிவில்லா கூட்டம் தான் அப்படி சொல்லுது எண்டால் நாங்களும் அவர்களை போல் கூவனுமாய்யா ?

முதலில் மலையகத்தமிழர் என்ற பதமே ஒழிக்கப்படணும்  அவர்களும் தமிழர்களே புலம்பெயர்தலில் இங்கு வந்து இருபது  வருடம் இருந்தவர்களே திரும்பி ஊர் போய்  வாழமுடியாது என்று ஒப்பாரி வைக்கையில் அவர்களை இப்படி நோகடிப்பது  எந்த வகையிலும் நியாயமில்லை.சொந்த மொழியில் இலங்கை தேசிய கீதம் கூட பாடமுடியாத கூட்டம் ஆகி போனதன்  காரணம் ஒவ்வொரு பிரதேச மைய  வாதங்களினால் என்பதை நேரே கண்டு அனுபவித்தும் திருந்த  முடியா உலகில் இருக்கிறம் .  

எங்கேயையா இருந்து கிளம்பி வாறீங்க இவ்வளவு வேகமா.

நானும் ஏதோ தாளத்திற்கு வசதியா இருக்குமேயென்று ஒரு புளோவில போட்டதற்கு இந்தக் குத்தா ?

சத்தியமா தாங்கேலாது அழுதுதுடுவேன்.

30 minutes ago, goshan_che said:

அப்படிப்போடுங்க அரிவாளை கப்பித்தான்!

முதலில் நாயக்கர், முதலியார், கோனார் இத்யாதி சாதிகள் தமிழர் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது.

பிறகு, மட்டக்களப்பு தமிழர்கள் தமெக்கென ஒரு தலைமைமையை தேடினால் அது பிரதேசவாதம், ஆனால் யாழ் தலைமகள் மட்டகளப்பு தலைவர்களுக்கு செய்ததை சொன்னால் - அது எல்லாவற்றையும் யாழ்மைவாதம் எனும் பொதுமைப்படுத்தல்.

இப்போ, மலையக தமிழர் எல்லாம் இலங்கையில் இருந்து அகன்று இந்தியாவில் குடியுரிமை கோர வேண்டும்.

நாளைக்கு - தீவுபகுதி மக்கள் எல்லாம், யாழ் நகரில் குடியேறி ஒரே ஆட்சி அதிகாரம் பண்ணுகினம். அவர்களை தீவகத்துக்கு அனுப்ப வேண்டும் 😂.

நாளை மறுநாள் - டெம்பில் ரோட்டில் இருப்பவர்கள், பிரவுண் ரோட்டில் இருப்பவர்களை அடக்கி ஆளுகிறார்கள்😂😂😂.

நீங்கள் இந்த வழியால்தான் போகிறீர்கள் என இரெண்டு நாட்களுக்கு முன்பே அனுமானித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இதை நிறுவுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

பிகு: நல்லவேளையாக, ரணசிங்க பிரேமதாச என்ற ஒரு சிங்களவன் 1988 இல் இலங்கையில் வாழ்ந்த எல்லா மலையக தமிழருக்கும் இலங்கை பிரஜா உரிமையை வழங்கி விட்டதால், வெளிநாட்டில் வந்து அந்த நாட்டு பிரஜா உரிமையை யாசித்து பெற்ற எந்த யாழ்பாணத் தமிழனிடமும், தமது பிரஜா உரிமையை யாசிக்கும் நிலையில் இப்போ மலையக மக்கள் இல்லை.

ஐயா உங்களுக்கும் சேர்த்துதான் கீழே எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எங்கேயையா இருந்து கிளம்பி வாறீங்க இவ்வளவு வேகமா.

நானும் ஏதோ தாளத்திற்கு வசதியா இருக்குமேயென்று ஒரு புளோவில போட்டதற்கு இந்தக் குத்தா ?

சத்தியமா தாங்கேலாது அழுதுதுடுவேன்.

ஐயா உங்களுக்கும் சேர்த்துதான் கீழே எழுதியுள்ளேன்.

சரி விடுங்கோ.

இது யாழ்களம் - புளோவில சொன்னாலும் பிழையா சொல்லப்படாது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

சரி விடுங்கோ.

இது யாழ்களம் - புளோவில சொன்னாலும் பிழையா சொல்லப்படாது 😂

உண்மைதான் சே,

கொஞ்சமேனும் முன் யோசனையோ பொறுப்போ இல்லாமல் எழுதிவிட்டேன்.

தவறு என்னுடையது. வருந்துகிறேன்.

நிற்க.

தமிழகத்திலுள்ள அகதிகளின் எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் அவ்ர்கள் தாயகம் திரும்புவதுதான் சாலச்சிறந்ததாக நான் எண்ணுகிறேன்.  அவர்களை ஏற்க இலங்கை விரும்பாது என்பதுடண் இந்திய அரசும் அவர்களை ஒரு துருப்புச்சீட்டாக பாவிக்க விரும்பும்.

மலையகத் தமிழரை வடக்கு கிழக்கில் குடியேற்றம் செய்தலும் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் முகாமில் வாழும் அல்லது முகாமுக்கு வெளியில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை மிக மோசமானது அதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள் அங்கு அவர்களை அழைக்கும் சொல் சிலோன் காரங்கள் கொஞ்சம் கோபமாக அழைத்தால் சிலோன் அகதி, இன்னும் கோபமாக அழைத்தால் எடே சிலோஙாரத் தேவடியாப்பயலே இப்படித்தான் அதைவிட தம்ழ்நாட்டின் காவல்துறையும் கியூபிரிவும் அவர்களை நடத்தும் விதம் அருவருக்கத்தக்கது அதுவும் அவர்கள் வதியும் பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் வந்தால் ஒரு வாரத்துக்கு நிம்மதியாக வீட்டில் இருக்கமுடியாது எப்போது காவல்துறையின் வரத்து இருந்துகொண்டே இருக்கும்பதிவேடுகள் எல்லாம் பலதடவை சரிபார்க்கப்படும் அப்பிரதேசத்தில் ஏதவ்வது குற்றச்செயல்கள் நடந்தால் முதலில் சந்தேகப்படுவது எம்மில்தான் அதுவும் போலீஸ் ஸ்டேசன் வா என்பார்கள் ஏன் எதுக்கு எங்கூடக் கூறமாட்டார்கள்.

அகதிமுகாமில் சரியான கழிவறை வசதி இருக்காது அதிகாலையில் பெண்பிள்ளைகள் வெளியிடங்களில் பற்றைக்காடுகளையோ திறந்தவெளிமைதானங்களையோ அதற்காகப் பயன்படுத்த வேண்டும்  இரண்டுவருடத்துக்கு முன்பு அப்படி அதிகாலையில் வெளியில் சென்ற ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலைசெய்த சம்பவமும் நடந்தது. அது ஒரு உள்ளுர் ரவுடியால் செய்யாப்பட்டது.

எங்கு போனாலும் அவர்களைச் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது அதிகாரம் மட்டுமல்ல அனைவருமே. சிறீமா சாஸ்திரி உடன்படிக்கையில் மலையகப்பகுதியிலிருந்து இந்தியாவுக்கு உள்வாங்கப்பட்டவர்களை குடியேற்றிய பகுதி கலட்டித்தறைகள் அப்பகுதியில் அவ்வேளையில் எதுவித பயிர்ச்செய்கையும் செய்ய முடியாத மண்ணாக இருந்த பகுதி அவர்களது குடியேற்றத்துக்குப் பின் அவ்விடம் பொதுவாக சிலோன் குடியிருப்பு எனத்தான் அழக்கப்படுகிறது காலப்போக்கில் அவ்விடங்களை அவர்கள் தமது முயற்சியால் விளைநிலங்களாகவும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் நிலங்களாகவும் மாற்றிய பின்பு அவ்விடத்தின் உள்ளூர் அரசியவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு பிடுங்கப்பட்டது பல குடிமனைகள்.

நாம் ஐரோப்பிய நாடுகளில் எப்படி இரண்டாந்தரப்பிரசைகளாக நிறத்திலும் வேறுபாடுகளை உடையவர்களாக வெள்ளையினத்தவர் எம்மை வரா விருந்தாளிகளாகப் பார்த்தாலும் சரி இருந்துவிட்டுப்போகட்டும் இவர்களும் இல்லாதுவிட்டால் அடிமட்ட வேலைகளை யார் கவனிப்பது என்பதற்காக எம்மைச் சகித்துக்கொண்டு போகின்றமையால் நாம் இங்கு கெளரவமான பிரசைகளாகவும் யோக்கியவாஙளாகவும் இனம்காட்டிக்கொண்டு வாழ்வதால் இவ்வாழ்வு இங்கு எமக்குச் சிறப்பானது என எண்ணுவதுபோன்ற ஒரு மாயையத்தானும் அவர்கள் உணரமுடியாது 

படிக்கலாம் படித்தாலும் படித்தபடிப்புக்கு வேலை கிடைக்காது. அங்கு படித்தவர்கள் இலங்கைக்குப்போய் வேலைவாய்ப்பைப் பெறலாம் காரணம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் படித்த எம்மவர்கள் மொழிப்புலமையிலும் கல்வித்தகுதியிலும் ஓரளவுக்கேனும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் இதேபோல் சென்னையில் படித்த எனது தூரத்து உறவுமுறயான இருபெண்கள் மாத ஒரு இலடத்தை அண்மித்ததான சம்பளத்தில் வேலைசெய்கிறார்கள் அதுவும் கிட்டடியில்தான் நாடு திரும்பியிருந்தார்கள். ஆனால் அகதிமுகாமில் வசிக்கும் எம்மவர்களுக்கு மேற்கூறியவர்கள் பெற்ற கல்விக்கிணையான கல்வியைப் பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை இருந்தாலும் அவர்களுக்கான கல்வி அறிவுக்கு எமது தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்தால் வேலைபெற்றுத்தராலாம்.

மேலைத்தேச நாடுகளது சொகுசு வாழ்க்கையை நாம் அனுபவித்துக்கொண்டு அவர்களுக்குக் குடியுரிமை கொடு கொடுக்காதே அல்லது கொடுக்கக்கூடாது என வாதாட நான் வரவில்லை ஆனால் உண்மையான அகதிக்கான முகத்துடன் அவலவாழ்வு வாழும் அம்மக்கலுக்கான ஏதேனும் ஒரு நல்லது நடந்தாலும் அது எனக்கு மகிழ்சியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

உண்மைதான் சே,

கொஞ்சமேனும் முன் யோசனையோ பொறுப்போ இல்லாமல் எழுதிவிட்டேன்.

தவறு என்னுடையது. வருந்துகிறேன்.

நிற்க.

தமிழகத்திலுள்ள அகதிகளின் எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் அவ்ர்கள் தாயகம் திரும்புவதுதான் சாலச்சிறந்ததாக நான் எண்ணுகிறேன்.  அவர்களை ஏற்க இலங்கை விரும்பாது என்பதுடண் இந்திய அரசும் அவர்களை ஒரு துருப்புச்சீட்டாக பாவிக்க விரும்பும்.

மலையகத் தமிழரை வடக்கு கிழக்கில் குடியேற்றம் செய்தலும் நன்று.

கப்பிதன்... உங்கள் மேலுள்ள மதிப்பு, அதிகரித்துள்ளது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

உண்மைதான் சே,

கொஞ்சமேனும் முன் யோசனையோ பொறுப்போ இல்லாமல் எழுதிவிட்டேன்.

தவறு என்னுடையது. வருந்துகிறேன்.

நிற்க.

தமிழகத்திலுள்ள அகதிகளின் எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் அவ்ர்கள் தாயகம் திரும்புவதுதான் சாலச்சிறந்ததாக நான் எண்ணுகிறேன்.  அவர்களை ஏற்க இலங்கை விரும்பாது என்பதுடண் இந்திய அரசும் அவர்களை ஒரு துருப்புச்சீட்டாக பாவிக்க விரும்பும்.

மலையகத் தமிழரை வடக்கு கிழக்கில் குடியேற்றம் செய்தலும் நன்று.

என்னைக்கேட்டால் இலங்கையில் இருந்த அடிதட்ட மக்களே, உயிர் ஒன்று மட்டுமே அவர்களிடம் இருந்த பெறுமதியான பொருள், இந்தியாவுக்கு படகு மூலம் சென்று, தொடர்ந்தும் அங்கே அகதி முகாமில் தங்கியவர்கள்.

கொஞ்சம் வசதியானவர்கள் விமானம் மூலம் வேறு நாடுகளுக்கு போனார்கள், இந்தியா போனவர்களும், அங்கே தங்கவில்லை. குறிப்பாக அகதிகள் முகாமில்.

இந்த மக்கள் இலங்கை திரும்ப தயங்குவது நியாயமானதே. ஏனென்றால் 30-20 வருடமாக இந்தியாவில் அரைக்கஞ்சிக்காவது உத்தரவாதம் இருக்கும் ஒரு வாழ்கையை கட்டி எழுப்பி விட்டார்கள். பிள்ளைகள் பலதும் பிறந்ததே அங்கேதான் - அதை அப்படியே போட்டுவிட்டு இலங்கை திரும்பினால் பிச்சைதான் எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் 20 வருடங்கள் சட்டபூர்வமற்று வாழ்பவருக்கு கூட, 20 வருடத்தின் பின் நிரந்தர வாழிட உரிமை தருவார்கள். காரணம் 20 வருடங்கள் ஒரு நாட்டில் வாழ்ந்தால் - பின்னர் இடம் மாறுவது கடினம். குறிப்பாக குடும்பஸ்தர்களுக்கு.

மேற்குலகுக்கு புலம்பெயர்ந்து - அந்தத் நாட்டு குடிகளாயும் ஆகிவிட்ட பலர் - இந்தியாவில் வாழும் இலங்கை தமிழரை திருப்பி அனுப்பியே தீர வேண்டும் என்று எந்த மனநிலையில் எழுதுகிறார்கள் என்பதே விளங்கவில்லை.

அதாவது, இவர்களோ பிள்ளைகளோ நாடு திரும்ப மாட்டார்கள், ஆனால் தமிழகம் போனவர்கள் நாடு திரும்பி இலங்கையில் தமிழர் எண்ணிகையை உயர்த்த வேண்டுமாம்.

தமது பிள்ளைகளை வெளிநாட்டில் யூனிக்கு அனுப்பி விட்டு, ஊரான் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிய அதே சுயநலத்தின் இன்னொரு வடிவமே இதுவும்.

 

58 minutes ago, Elugnajiru said:

தமிழகத்தில் முகாமில் வாழும் அல்லது முகாமுக்கு வெளியில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை மிக மோசமானது அதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள் அங்கு அவர்களை அழைக்கும் சொல் சிலோன் காரங்கள் கொஞ்சம் கோபமாக அழைத்தால் சிலோன் அகதி, இன்னும் கோபமாக அழைத்தால் எடே சிலோஙாரத் தேவடியாப்பயலே இப்படித்தான் அதைவிட தம்ழ்நாட்டின் காவல்துறையும் கியூபிரிவும் அவர்களை நடத்தும் விதம் அருவருக்கத்தக்கது அதுவும் அவர்கள் வதியும் பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் வந்தால் ஒரு வாரத்துக்கு நிம்மதியாக வீட்டில் இருக்கமுடியாது எப்போது காவல்துறையின் வரத்து இருந்துகொண்டே இருக்கும்பதிவேடுகள் எல்லாம் பலதடவை சரிபார்க்கப்படும் அப்பிரதேசத்தில் ஏதவ்வது குற்றச்செயல்கள் நடந்தால் முதலில் சந்தேகப்படுவது எம்மில்தான் அதுவும் போலீஸ் ஸ்டேசன் வா என்பார்கள் ஏன் எதுக்கு எங்கூடக் கூறமாட்டார்கள்.

அகதிமுகாமில் சரியான கழிவறை வசதி இருக்காது அதிகாலையில் பெண்பிள்ளைகள் வெளியிடங்களில் பற்றைக்காடுகளையோ திறந்தவெளிமைதானங்களையோ அதற்காகப் பயன்படுத்த வேண்டும்  இரண்டுவருடத்துக்கு முன்பு அப்படி அதிகாலையில் வெளியில் சென்ற ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலைசெய்த சம்பவமும் நடந்தது. அது ஒரு உள்ளுர் ரவுடியால் செய்யாப்பட்டது.

எங்கு போனாலும் அவர்களைச் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது அதிகாரம் மட்டுமல்ல அனைவருமே. சிறீமா சாஸ்திரி உடன்படிக்கையில் மலையகப்பகுதியிலிருந்து இந்தியாவுக்கு உள்வாங்கப்பட்டவர்களை குடியேற்றிய பகுதி கலட்டித்தறைகள் அப்பகுதியில் அவ்வேளையில் எதுவித பயிர்ச்செய்கையும் செய்ய முடியாத மண்ணாக இருந்த பகுதி அவர்களது குடியேற்றத்துக்குப் பின் அவ்விடம் பொதுவாக சிலோன் குடியிருப்பு எனத்தான் அழக்கப்படுகிறது காலப்போக்கில் அவ்விடங்களை அவர்கள் தமது முயற்சியால் விளைநிலங்களாகவும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் நிலங்களாகவும் மாற்றிய பின்பு அவ்விடத்தின் உள்ளூர் அரசியவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு பிடுங்கப்பட்டது பல குடிமனைகள்.

நாம் ஐரோப்பிய நாடுகளில் எப்படி இரண்டாந்தரப்பிரசைகளாக நிறத்திலும் வேறுபாடுகளை உடையவர்களாக வெள்ளையினத்தவர் எம்மை வரா விருந்தாளிகளாகப் பார்த்தாலும் சரி இருந்துவிட்டுப்போகட்டும் இவர்களும் இல்லாதுவிட்டால் அடிமட்ட வேலைகளை யார் கவனிப்பது என்பதற்காக எம்மைச் சகித்துக்கொண்டு போகின்றமையால் நாம் இங்கு கெளரவமான பிரசைகளாகவும் யோக்கியவாஙளாகவும் இனம்காட்டிக்கொண்டு வாழ்வதால் இவ்வாழ்வு இங்கு எமக்குச் சிறப்பானது என எண்ணுவதுபோன்ற ஒரு மாயையத்தானும் அவர்கள் உணரமுடியாது 

படிக்கலாம் படித்தாலும் படித்தபடிப்புக்கு வேலை கிடைக்காது. அங்கு படித்தவர்கள் இலங்கைக்குப்போய் வேலைவாய்ப்பைப் பெறலாம் காரணம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் படித்த எம்மவர்கள் மொழிப்புலமையிலும் கல்வித்தகுதியிலும் ஓரளவுக்கேனும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் இதேபோல் சென்னையில் படித்த எனது தூரத்து உறவுமுறயான இருபெண்கள் மாத ஒரு இலடத்தை அண்மித்ததான சம்பளத்தில் வேலைசெய்கிறார்கள் அதுவும் கிட்டடியில்தான் நாடு திரும்பியிருந்தார்கள். ஆனால் அகதிமுகாமில் வசிக்கும் எம்மவர்களுக்கு மேற்கூறியவர்கள் பெற்ற கல்விக்கிணையான கல்வியைப் பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை இருந்தாலும் அவர்களுக்கான கல்வி அறிவுக்கு எமது தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்தால் வேலைபெற்றுத்தராலாம்.

மேலைத்தேச நாடுகளது சொகுசு வாழ்க்கையை நாம் அனுபவித்துக்கொண்டு அவர்களுக்குக் குடியுரிமை கொடு கொடுக்காதே அல்லது கொடுக்கக்கூடாது என வாதாட நான் வரவில்லை ஆனால் உண்மையான அகதிக்கான முகத்துடன் அவலவாழ்வு வாழும் அம்மக்கலுக்கான ஏதேனும் ஒரு நல்லது நடந்தாலும் அது எனக்கு மகிழ்சியே.

இந்திய குடியுரிமை கிடைத்தால் - இந்த அவலங்கள் கொஞ்சம் குறையலாம். மேற்படிப்பு தொடர வசதிகள் கிட்டலாம்.

நாடு திரும்புவதா, இல்லையா என்ற முடிவை அந்த மக்களிடமே விட்டு விடுவதே நல்லது.

தமது தனிபட்ட நலன்களை முன்னிறுத்தி, இலங்கையராக இலங்கை திரும்புவதா அல்லது, இந்தியராகி அங்கேயா தங்குவதா என அவர்கள் ஒவ்வொருவரும் தீர்மானிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கப்பிதன்... உங்கள் மேலுள்ள மதிப்பு, அதிகரித்துள்ளது.  :)

நன்றி சிறியர். எனது இயங்கு தளத்தில் சுட்டிகள் இயங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, மேற்குநாடுகள் என்று புலம்பெயர்ந்தவர்கள் அந்நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ வசதிகள் செய்யப்படவேண்டும். மீண்டும் தாயகம் திரும்புவது என்பது ஒவ்வொருவரினதும் சுயமான முடிவாக இருக்கவேண்டும்.

தமிழகத்தில் அகதி என்ற பெயருடன் மிகவும் கடினமான வாழ்க்கை நடாத்துபவர்கள் குடியுரிமை பெற்றால் நல்ல நிலைக்கு வரமுடியும். அதனை மோடி அரசு வேண்டுமென்றே தடுத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

நன்றி சிறியர். எனது இயங்கு தளத்தில் சுட்டிகள் இயங்கவில்லை.

கபிதன்...  எனது முதல் பதிவில், உங்கள் பெயரை தவறாக உச் சரித்து விட்டேன், மன்னிக்கவும்.  😮

உங்களது சுட்டிகள்... இயங்கவில்லை என்றால்...
விடுமுறை நாளில்.. மோகன் அண்ணா,  வீட்டில்..  சும்மாதான் இருப்பார். :grin:
அவருக்கு, கீழ் உள்ள இணைப்பில் தெரியப்  படுத்துங்கள்.
அவர், அதனை... உடனே... சரி செய்து விடுவார். :)

டிஸ்கி: சுட்டிகள் இல்லாத பதிவுகள்... வேஸ்ட் ஐயா.... 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இந்திய குடியுரிமை கிடைத்தால் - இந்த அவலங்கள் கொஞ்சம் குறையலாம். மேற்படிப்பு தொடர வசதிகள் கிட்டலாம்.

நாடு திரும்புவதா, இல்லையா என்ற முடிவை அந்த மக்களிடமே விட்டு விடுவதே நல்லது.

தமது தனிபட்ட நலன்களை முன்னிறுத்தி, இலங்கையராக இலங்கை திரும்புவதா அல்லது, இந்தியராகி அங்கேயா தங்குவதா என அவர்கள் ஒவ்வொருவரும் தீர்மானிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

முகாம்களுக்கு வெளியில் இருந்தவர்கள் 90 வீதத்துக்கு மேல் நாடு திரும்பி விட்டார்கள் முகாம்களில்  வாழும் மக்களின் வாழ்க்கை நாய்படாபாடு உலகத்திலே அகதி  எனும் பெயரில் பெரும் கொடுமையை அனுபவிப்பவர்களாக உள்ளனர் முக்கியமாய் இந்த Q  போலீஸ் படையின் கொடுமை இலங்கை இராணுவம் மேல் என்று சொல்ல தோன்றும் அதனால்த்தான் வெளியில் இருப்பவர்கள் அவர்கள் மீண்டும் இலங்கை செல்வது நல்லது என்று சொல்கிறார்கள் போல் உள்ளது அவர்களின் வாழ்ககையை குறும்படமாக எடுத்தால் கனடா போன்ற நாடுகள் விசா கொடுக்குமளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன ஒருவாறு அவர்கள் திரும்புவது  முடிவெடித்தாலும் ரெட் சீல்  அது இது என்று பலருக்கும் லஞ்சம் கொடுக்கணும் .

அன்றாடம் கூலி வேலை செய்து காசை கண்ணால் பார்ப்பவர்களிடம் லஞ்சம் கொடுப்பதுக்கு  பணமும் இல்லை திரும்பி தாயகம் வந்தால் எப்படி வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது போன்ற சந்தேகங்கள் .

மொத்தத்தில் அவர்கள் வாழ்வது அறிவிக்கப்படாத சிறைக்கூடங்களில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

முகாம்களுக்கு வெளியில் இருந்தவர்கள் 90 வீதத்துக்கு மேல் நாடு திரும்பி விட்டார்கள் முகாம்களில்  வாழும் மக்களின் வாழ்க்கை நாய்படாபாடு உலகத்திலே அகதி  எனும் பெயரில் பெரும் கொடுமையை அனுபவிப்பவர்களாக உள்ளனர் முக்கியமாய் இந்த Q  போலீஸ் படையின் கொடுமை இலங்கை இராணுவம் மேல் என்று சொல்ல தோன்றும் அதனால்த்தான் வெளியில் இருப்பவர்கள் அவர்கள் மீண்டும் இலங்கை செல்வது நல்லது என்று சொல்கிறார்கள் போல் உள்ளது அவர்களின் வாழ்ககையை குறும்படமாக எடுத்தால் கனடா போன்ற நாடுகள் விசா கொடுக்குமளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன ஒருவாறு அவர்கள் திரும்புவது  முடிவெடித்தாலும் ரெட் சீல்  அது இது என்று பலருக்கும் லஞ்சம் கொடுக்கணும் .

Q Branch பொலிசார் அகதி முகாம்களை ஒரு திறந்த வெளி விபசார விடுதியாகவே அங்குள்ள சூழலை மாற்றி வைத்துள்ளதாக எனது நண்பர் கூறி கோபப்படுவார்  . அவர் அங்குள்ளோருடன் தொடர்ச்சியான தொடர்பிலுள்ளவர்.

38 minutes ago, கிருபன் said:

இந்தியா, மேற்குநாடுகள் என்று புலம்பெயர்ந்தவர்கள் அந்நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ வசதிகள் செய்யப்படவேண்டும். மீண்டும் தாயகம் திரும்புவது என்பது ஒவ்வொருவரினதும் சுயமான முடிவாக இருக்கவேண்டும்.

தமிழகத்தில் அகதி என்ற பெயருடன் மிகவும் கடினமான வாழ்க்கை நடாத்துபவர்கள் குடியுரிமை பெற்றால் நல்ல நிலைக்கு வரமுடியும். அதனை மோடி அரசு வேண்டுமென்றே தடுத்துள்ளது.

இந்திய அரசின் கொள்கை முடிவு. 

இலங்கைத் தமிழர்களை வட இந்தியர்கள் இராவணனின் வம்சமாகவே பார்க்கப் படுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

Q Branch பொலிசார் அகதி முகாம்களை ஒரு திறந்த வெளி விபசார விடுதியாகவே அங்குள்ள சூழலை மாற்றி வைத்துள்ளதாக எனது நண்பர் கூறி கோபப்படுவார்  . அவர் அங்குள்ளோருடன் தொடர்ச்சியான தொடர்பிலுள்ளவர்.

தெரியும் முழுக்க எழுதினால் இங்கு கொள்ளுபாடு தொடங்கிடும் அங்குள்ள பெரியவர்களுடன் இதைப்பற்றி கதைத்த போது  மேலதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அவ்வாறு நடப்பதாக கூறப்பட்டுள்ளது .

முக்கியமாய் தமிழ்நாட்டு யாழ் ஊடகங்கள் தான் அவர்களின் கொடுமைகளை வெளிகொண்டுவரனும் தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும்பாலானவை வடவர்களின் கைகைகளுக்கு  போய்  நீண்டகாலமாகி விட்டுது அவர்களுக்கு பிக்பொஸ்  போன்ற நிகழ்ச்சிகள்தான் முக்கியம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பித்தான்,

1. நீங்கள், கப்பித்தான்? கற்பித்தான் ? கற்பிதன் - இதில் ஏதையா?😂

2. நீங்களும் பெருமாளும் சொன்ன விடயங்களை நானும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் லண்டனில் கூட தமிழர் சிலர் இப்படி தொழில் முனைவோர் உளர். அதே போல தமிழ்நாட்டு அகதி முகாமிலும் அத்தனை துன்பங்களையும் சகித்து வாழ்வோரும் உளர். ஆனால் இத்தனை துன்பங்களின் பின்னும் பலர் நாடு திரும்ப விரும்பவில்லை என்பதும் உண்மையே. இது எதை காட்டுகிறது?

3. இதற்கான தீர்வு - அகதி முகாம்களை மூடி, இந்தியாவில் தங்க விரும்புவோர்க்கு இந்திய குடியுரிமையும், எனையோர்க்கு இலங்கை திரும்புவதை இலகுவாக்குவதுமேயாகும்.

4. இரண்டையும் பிஜேபி செய்யாது- ஏனென்றால் நாம் தான் இந்து, சைவர், சிவபூமி, திருமூலர், ஆறுமுகநாவலர், மண்ணாங்கட்டி என்று குத்தி முறிவது, வட இந்தியரை பொறுத்தவரை பிராமணன் அல்லாத தமிழன் எல்லாரும் சூத்திரந்தான். உங்களுக்கும் முஸ்லீமுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தெரியும் முழுக்க எழுதினால் இங்கு கொள்ளுபாடு தொடங்கிடும் அங்குள்ள பெரியவர்களுடன் இதைப்பற்றி கதைத்த போது  மேலதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அவ்வாறு நடப்பதாக கூறப்பட்டுள்ளது .

முக்கியமாய் தமிழ்நாட்டு யாழ் ஊடகங்கள் தான் அவர்களின் கொடுமைகளை வெளிகொண்டுவரனும் தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும்பாலானவை வடவர்களின் கைகைகளுக்கு  போய்  நீண்டகாலமாகி விட்டுது அவர்களுக்கு பிக்பொஸ்  போன்ற நிகழ்ச்சிகள்தான் முக்கியம் .

பண ஆசை அல்ல, பணத்தேவை.

தெளிவாகவே திட்டமிட்டு அப்படியொரு சூழலை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

உஒரு  Q Branch அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு அகதிகளின் துன்பம் அளவிட முடியாமல் உள்ளது.

உண்மையில்  இவர்களுடன் ஒப்பிடும்போது இலங்கைப் படைகள் ஒன்றுமேயில்லை.

இதன் பின்ணணியில்தான் படகுகளில் சட்ட விரோதமாக இலங்கை திரும்புபவர்களை நோக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கியூ பிரிவு போலீஸ் என்பது தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் நக்சல்பாரி தீவிரவாதிகளைக் கண்காணிக்க, ஒடுக்க என அமைக்கப்பட்டது, அவர்களுக்கான பயிற்சிகள் துப்பறியும் முறைமைகள் வழக்கத்தைவிட வித்தியாசமானவை நக்சல்களுக்க ஆரம்பிக்கபட்ட துறை இலங்கைத்தமிழர்களுக்ககச் செயற்படுகின்றது என்பதே ஆபத்தான விடையம், 

தவிர
இந்திய விரும்பினால் இலங்கை அகதிகளை ஐ நா சபையின் அகதிகள் பிரச்சனைகளைக் கையாளும் துறையிடம் கையளிக்கமுடியும் இப்படித்தான் தாய்லாந்தில் ஐ நா ஒரு அகதிகள் முகாமைப் பராமரிக்கிறது அதன் செயற்பாடு எதுவெனில் அகதிகளை உள்வாங்க விரும்பும் ஏனைய மேற்குலக நாடுகளிடம் தாங்கள் வைத்துப் பராமரிக்கும் நபர்களது விபரங்களைச் சமர்ப்பிக்கும் அதில் அந்தந்த நாடுகள் யாரை விரும்புகிறார்களோ அவர்களைத் தங்கள் செலவிலேயே தங்கள் நாடுகளுக்குள் உள்வாங்கும், அதன்பின்பு குறிப்பிட்ட காலத்துக்கு அவர்களுக்கான சமூகக்கொடுப்பனவுகளில் சிறப்பு ஆந்தஸ்துக் கொடுக்கப்பட்டு அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கான கல்வித்தகமைகளை ஏற்படுத்திகொடுத்து சமூகத்துடன் இணைத்துக்கொள்ளும்.

நான் வாழும் பின்லாந்து நாடு வருடம்தோறும் பத்துக்கு மேற்பட்ட தமிழ் உறவுகளை தாய்லாந்திலிருந்து கூட்டிவருகிறார்கள்.

இதேபோல் இந்தியாவும் எம்மால் தனியாக இலங்கைத்தமிழர்களை ஐ நாவிடம் ஒப்படைத்தால் அனேகர் கொஞ்சமாவது கெளரவமாக வாழத்தலைப்படலாம்.

ஆனால் தமிழர் விரோத இந்தியா எம்மை எப்போதுமே அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது.

இந்தியா இந்த விடையத்தில் மட்டுமல்ல அனைத்து விடையங்களிலும் இதேபோலவே நடந்துகொள்கிறது.

ஆதலால் 

தமிழர் விரோததேசமாம் இந்தியாவை அனைத்து விடையங்களிலிருந்தும் புறந்தள்ளுவோம்

இந்திய அமைதிப்படையை அனுப்பு தமிழர் பிரதேசத்தில் கொலைத்தாண்டவன் நடாத்திய தமிழர் விரோத தேசம் இந்தியா, இப்போது யாழ்குடாநாடை தமது துணைத்தூதரகத்தை நிறுவி இன்னுமொரு ஆக்கிரமிப்பை எதுவித தடமும் இல்லாது செய்துவருகிறது. அதன் ஒரு சின்ன உதாரணமாக இவ்வாரம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் புத்தாண்டுப் பரிசு வழங்கியது கவனிக்கத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

தமிழகத்தில் முகாமில் வாழும் அல்லது முகாமுக்கு வெளியில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை மிக மோசமானது அதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள் அங்கு அவர்களை அழைக்கும் சொல் சிலோன் காரங்கள் கொஞ்சம் கோபமாக அழைத்தால் சிலோன் அகதி, இன்னும் கோபமாக அழைத்தால் எடே சிலோஙாரத் தேவடியாப்பயலே இப்படித்தான் அதைவிட தம்ழ்நாட்டின் காவல்துறையும் கியூபிரிவும் அவர்களை நடத்தும் விதம் அருவருக்கத்தக்கது அதுவும் அவர்கள் வதியும் பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் வந்தால் ஒரு வாரத்துக்கு நிம்மதியாக வீட்டில் இருக்கமுடியாது எப்போது காவல்துறையின் வரத்து இருந்துகொண்டே இருக்கும்பதிவேடுகள் எல்லாம் பலதடவை சரிபார்க்கப்படும் அப்பிரதேசத்தில் ஏதவ்வது குற்றச்செயல்கள் நடந்தால் முதலில் சந்தேகப்படுவது எம்மில்தான் அதுவும் போலீஸ் ஸ்டேசன் வா என்பார்கள் ஏன் எதுக்கு எங்கூடக் கூறமாட்டார்கள்.

அகதிமுகாமில் சரியான கழிவறை வசதி இருக்காது அதிகாலையில் பெண்பிள்ளைகள் வெளியிடங்களில் பற்றைக்காடுகளையோ திறந்தவெளிமைதானங்களையோ அதற்காகப் பயன்படுத்த வேண்டும்  இரண்டுவருடத்துக்கு முன்பு அப்படி அதிகாலையில் வெளியில் சென்ற ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலைசெய்த சம்பவமும் நடந்தது. அது ஒரு உள்ளுர் ரவுடியால் செய்யாப்பட்டது.

எங்கு போனாலும் அவர்களைச் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது அதிகாரம் மட்டுமல்ல அனைவருமே. சிறீமா சாஸ்திரி உடன்படிக்கையில் மலையகப்பகுதியிலிருந்து இந்தியாவுக்கு உள்வாங்கப்பட்டவர்களை குடியேற்றிய பகுதி கலட்டித்தறைகள் அப்பகுதியில் அவ்வேளையில் எதுவித பயிர்ச்செய்கையும் செய்ய முடியாத மண்ணாக இருந்த பகுதி அவர்களது குடியேற்றத்துக்குப் பின் அவ்விடம் பொதுவாக சிலோன் குடியிருப்பு எனத்தான் அழக்கப்படுகிறது காலப்போக்கில் அவ்விடங்களை அவர்கள் தமது முயற்சியால் விளைநிலங்களாகவும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் நிலங்களாகவும் மாற்றிய பின்பு அவ்விடத்தின் உள்ளூர் அரசியவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு பிடுங்கப்பட்டது பல குடிமனைகள்.

நாம் ஐரோப்பிய நாடுகளில் எப்படி இரண்டாந்தரப்பிரசைகளாக நிறத்திலும் வேறுபாடுகளை உடையவர்களாக வெள்ளையினத்தவர் எம்மை வரா விருந்தாளிகளாகப் பார்த்தாலும் சரி இருந்துவிட்டுப்போகட்டும் இவர்களும் இல்லாதுவிட்டால் அடிமட்ட வேலைகளை யார் கவனிப்பது என்பதற்காக எம்மைச் சகித்துக்கொண்டு போகின்றமையால் நாம் இங்கு கெளரவமான பிரசைகளாகவும் யோக்கியவாஙளாகவும் இனம்காட்டிக்கொண்டு வாழ்வதால் இவ்வாழ்வு இங்கு எமக்குச் சிறப்பானது என எண்ணுவதுபோன்ற ஒரு மாயையத்தானும் அவர்கள் உணரமுடியாது 

படிக்கலாம் படித்தாலும் படித்தபடிப்புக்கு வேலை கிடைக்காது. அங்கு படித்தவர்கள் இலங்கைக்குப்போய் வேலைவாய்ப்பைப் பெறலாம் காரணம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் படித்த எம்மவர்கள் மொழிப்புலமையிலும் கல்வித்தகுதியிலும் ஓரளவுக்கேனும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் இதேபோல் சென்னையில் படித்த எனது தூரத்து உறவுமுறயான இருபெண்கள் மாத ஒரு இலடத்தை அண்மித்ததான சம்பளத்தில் வேலைசெய்கிறார்கள் அதுவும் கிட்டடியில்தான் நாடு திரும்பியிருந்தார்கள். ஆனால் அகதிமுகாமில் வசிக்கும் எம்மவர்களுக்கு மேற்கூறியவர்கள் பெற்ற கல்விக்கிணையான கல்வியைப் பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை இருந்தாலும் அவர்களுக்கான கல்வி அறிவுக்கு எமது தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்தால் வேலைபெற்றுத்தராலாம்.

 

இத்தனை கொடுமைகள் அனுபவித்தபின்பும்,

போர் ஓய்ந்த பின்னும் .........பெரும்பாலான 

ஈழ அகதிகள் இலங்கை திரும்ப விரும்பாதது ஏன் ஐயா?

 

ஒருவேளை ..

சிங்களவன் தமிழன்...

யாழ்ப்பாணத்தான்...மட்டக்கிளப்பான்,,,

தோட்டக்காட்டான்...

 

போன்ற தமிழக கியூ பிரிவு போலீஸ் இலங்கையின் வடகிழக்கிலும் இருப்பதினாலா?

நீங்கள் சொன்னதுபோலவே ஐரோப்பாவில் உள்ளதுபோல் தமிழகத்தில் ஈழ அகதிகளுக்கு வசதிகளும் மனித உரிமைகளும் இல்லை

இத்தனை கொடுமை நடந்த பின்னும் எம் தாயகம் திரும்ப  அவர்கள் வெறுக்கும் காரணம்  அவர்கள் மேலயா ..

அதியுச்ச உரிமைகளை ஏற்கனவே வாழ்ந்து முடித்துவிட்ட எம் நாட்டின் மீதா ஐயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பருத்தித்துறையில் இரண்டு கிராமங்களுக்கு இடையில் சண்டை நடந்தது என அறிந்திருப்பீர்கள். இதவிட மாவிட்டபுரம் தேர் எரிப்பு தென்மராட்சியில் பாடசாலை சென்ற சிறுவர்களது புத்தகங்களைப் பறித்து தெருவில் போட்டு எரித்தது, பாரிய இடமெயர்வின்போது மட்டுவிலில் வயல் காணியில் தண்ணீர் அள்ளியதற்காக அக்கிணற்றுக்குள் பொலிடோல் ஊற்றியது ஆகியவை அனைத்தும் இவை தொடர்புபட்டதே கொழும்பில் அடுக்கு மாடிக்குடியிருப்புகளி தற்போது குடியேறியுள்ள யா குடாநாட்டு மக்கள் போர் முடிந்து  இவ்வளவு காலமும் திரும்பவும் குடாநாடு செல்லாதற்கு அடிப்படைக்கரணமும் ஒன்றுதான். 

காலம் காலமாக நடக்கும் சாதிச்சுரண்டல்கள்தான் அவர்களை இப்போதும் தள்ளி வைத்திருக்கு நூற்றுக்கு நூறு விக்தம் அதி கரணமில்லை என்றாலும் அதுவும்தான். தவிர மேலை நாடுகளில் நாம் விரும்பினாலும் எமது பிள்ளைகளுக்காக நாட்டுக்குத் திரும்பிப்போக முடியாது சிரமப்படுகிறோமே  அதுபோல் அவர்களுக்கும் காரணம் இருக்கும் நாடு திரும்பி புதுவாழ்கைய ஆரம்பீகும்போது ஏற்படும் இன்னல்களைப்பற்றிய பயம் ஒரு காரணம். என்ன்றோ ஒரு நாள் நல்லகாலம் வரும் கடனை பட்டாவது ஒரு பிள்ளையாவது வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு நாடு திரும்புவம் என இருப்பது காரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2019 at 5:25 PM, Kapithan said:

இலங்கையிலுள்ள மலையகத்தமிழர் இலங்கைக் குடியுரிமை கேட்கக் கூலாது . அவர்கள் தமிழகம் திரும்ப வேண்டும்.

 

On 12/25/2019 at 12:16 AM, goshan_che said:

அப்படிப்போடுங்க அரிவாளை கப்பித்தான்!

முதலில் நாயக்கர், முதலியார், கோனார் இத்யாதி சாதிகள் தமிழர் இல்லை, அவர்கள் தமிழ்நாட்டை ஆள முடியாது.

பிறகு, மட்டக்களப்பு தமிழர்கள் தமெக்கென ஒரு தலைமைமையை தேடினால் அது பிரதேசவாதம், ஆனால் யாழ் தலைமகள் மட்டகளப்பு தலைவர்களுக்கு செய்ததை சொன்னால் - அது எல்லாவற்றையும் யாழ்மைவாதம் எனும் பொதுமைப்படுத்தல்.

இப்போ, மலையக தமிழர் எல்லாம் இலங்கையில் இருந்து அகன்று இந்தியாவில் குடியுரிமை கோர வேண்டும்.

நாளைக்கு - தீவுபகுதி மக்கள் எல்லாம், யாழ் நகரில் குடியேறி ஒரே ஆட்சி அதிகாரம் பண்ணுகினம். அவர்களை தீவகத்துக்கு அனுப்ப வேண்டும் 😂.

நாளை மறுநாள் - டெம்பில் ரோட்டில் இருப்பவர்கள், பிரவுண் ரோட்டில் இருப்பவர்களை அடக்கி ஆளுகிறார்கள்😂😂😂.

நீங்கள் இந்த வழியால்தான் போகிறீர்கள் என இரெண்டு நாட்களுக்கு முன்பே அனுமானித்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இதை நிறுவுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

பிகு: நல்லவேளையாக, ரணசிங்க பிரேமதாச என்ற ஒரு சிங்களவன் 1988 இல் இலங்கையில் வாழ்ந்த எல்லா மலையக தமிழருக்கும் இலங்கை பிரஜா உரிமையை வழங்கி விட்டதால், வெளிநாட்டில் வந்து அந்த நாட்டு பிரஜா உரிமையை யாசித்து பெற்ற எந்த யாழ்பாணத் தமிழனிடமும், தமது பிரஜா உரிமையை யாசிக்கும் நிலையில் இப்போ மலையக மக்கள் இல்லை.

கபிதன் கூறிய கருத்துக்கு நானே போட்டு குத்துவம் என்று இருந்தன்

நீங்கள்  முந்திட்டீங்க மீண்டும் சிக்கினால் அந்த மூத்திர சந்துக்கு இழுத்து வரவும் 🤣🙂🤣

போர் முடிந்து இத்தனை வருடங்கள் வராமல் இருப்பவர்கள் பிள்ளைகள் அங்குள்ள பாடசாலைகளில் படித்து முடித்தவர்கள் அவர்களின் தகமைக்கு இங்கு வேலையென்பது கிடைப்பது சந்தேகம் கொஞ்ச பேர் வீடுகள் வாங்கியுள்ளார்கள் அதையெல்லம் விட்டு வருவதென்பது சந்தேகம் 

குறிப்பு : அவர்களின் வீடியோ பதிவேற்றங்கள் பஆர்க்கையில் முற்றுமுழுதாக இந்திய தமிழர்களின் பேச்சுகளில் இணைந்து விட்டார்கள் விரும்பினால் வரலாம் இல்லாவிட்டால் அங்கே வாழ்வதே சிறந்தது 

உயிர் போன ,உயிர் போகப்போகிறதே என உணர்ந்த தருணத்தை நினைத்தவர்கள் மீள் திரும்ப வாய்ப்பில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

கபிதன் கூறிய கருத்துக்கு நானே போட்டு குத்துவம் என்று இருந்தன்

நீங்கள்  முந்திட்டீங்க மீண்டும் சிக்கினால் அந்த மூத்திர சந்துக்கு இழுத்து வரவும் 🤣🙂🤣

போர் முடிந்து இத்தனை வருடங்கள் வராமல் இருப்பவர்கள் பிள்ளைகள் அங்குள்ள பாடசாலைகளில் படித்து முடித்தவர்கள் அவர்களின் தகமைக்கு இங்கு வேலையென்பது கிடைப்பது சந்தேகம் கொஞ்ச பேர் வீடுகள் வாங்கியுள்ளார்கள் அதையெல்லம் விட்டு வருவதென்பது சந்தேகம் 

குறிப்பு : அவர்களின் வீடியோ பதிவேற்றங்கள் பஆர்க்கையில் முற்றுமுழுதாக இந்திய தமிழர்களின் பேச்சுகளில் இணைந்து விட்டார்கள் விரும்பினால் வரலாம் இல்லாவிட்டால் அங்கே வாழ்வதே சிறந்தது 

உயிர் போன ,உயிர் போகப்போகிறதே என உணர்ந்த தருணத்தை நினைத்தவர்கள் மீள் திரும்ப வாய்ப்பில்லை 

 

 

என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள நான்  என்றுமே விரும்பியதில்லை. விரும்பப்போவதுமில்லை.

ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும்.

வணக்கம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.