Jump to content

பிடியாணை பெற்று ராஜிதவை கைது செய்ய ஆலோசணை


Recommended Posts

பிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித சேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக  சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர்  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/71728

 

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைதுசெய்யுமாறு பிடியாணை

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் கடத்தல் பற்றிய,  ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர்  ஜெனரல்  திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.பி. நெலும்தெனிய இந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மனனள-அமசசர-ரஜதவ-கதசயயமற-படயண/175-242948

Link to comment
Share on other sites

ராஜிதவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு வைத்தியசாலையில் அனுமதி?

Rajitha-Senarathna-1.jpg

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைவான் கடத்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ராஜிதவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் 6ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொலை, வெள்ளை வான் கடத்தல், சித்திரவதை, கொள்ளை உள்ளிட்ட தகவல்களை வெளிப்படுத்திய விவகாரத்தில் இருவரை சி.ஐ.டி. கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.

அந்த விவகாரத்தில் கைதான இருவரும் அவர்கள் ஊடக சந்திப்பில் கூறிய விடயங்களை திருத்தி மீளக் கூற முற்பட்டால் உண்மையிலேயே வெள்ளை வானில் செல்ல நேரிடும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன அச்சுறுத்தியதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக சி.ஐ.டி. நீதிமன்றிற்கு அறிவித்தது.

இது குறித்த விசாரணைகளை சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் அசங்கவின் கீழ் விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே ராஜித சேனாரட்ன தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மூன்று முன் பிணை மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் அவை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜிதவை கைத செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கைது-உத்தரவு-ராஜிதவிற்க/

Link to comment
Share on other sites

" முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன".

அண்மையில் பி. சிதம்பரம் உட்பட, தென்கிழக்கு ஆசிய தலைவர்களின் அரசியல் சாசனத்தில் இது எழுதப்படாத விதி. 

Link to comment
Share on other sites

தலைமறைவாகினாரா ராஜித? ; தீவிர தேடுதலில் சி.ஐ.டி.யினர்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவும் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. 

rajitha.jpg

எழுத்து மூலம் சபாநாயகருக்கு இது தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலேயே இன்று ராஜித்த சேனாரத்னவை தேடி பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித்தவின் வீடு, அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் சில இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது அவர் அவ் விடங்களில் இருக்கவில்லை எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான  சி.ஐ.டி.யின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/71787

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜித எங்கே? வலை வீசி தேடும் சீ.ஐ.டி

ராஜித எங்கே? வலை வீசி தேடும் சீ.ஐ.டி

வெள்ளை வான் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக கைது செய்வதற்காக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தங்கியிருக்கலாம் என நம்பப்படும் வீடுகளுக்கு சென்று பொலிஸார் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.
கொழும்பிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லம் , களுத்துறை மற்றும் வாதுவை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சென்று அவரை தேடியுள்ளனர்.
எவ்வாறாயினும் எந்த வீட்டிக்கும் அவர் வரவில்லையென வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் மேலும் பல இடங்களில் அவரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனபோதும் அவர் எங்கு தங்கியுள்ளார் என யாருக்கும் தெரியாதிருப்பதாகவும் அவரின் குடும்பத்தவர்களும் தெரியாது என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

 

http://www.samakalam.com/சிறப்பு-செய்திகள்/ராஜித-எங்கே-வலை-வீசி-தேடு/

Link to comment
Share on other sites

நீதிவானின் உத்தரவுக்கு எதிராக ராஜித மனுத் தாக்கல்!

தன்னை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன நீதிதமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

 

வெள்ளை வேன் விவகார ஊடகவியலாளர் சந்திப்பை மையப்படுத்தி குற்றப் புலனயவுத் திணைக்களம் தன்னைக் கைதுசெய்ய முன்னர்,  முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு  கோரி முன்னாள் அமைச்சரும்  ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன ஏற்கனவே முன் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந் நிலையில் அவரது முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டு, சட்ட மா அதிபரின் விஷேட ஆலோசனைக்கு அமைய 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்டத்தில் 25 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான்  ஆர்.பி. நெலும்தெனிய நேற்று முன்தினம் உத்தரவிட்டார். 

இதன் பின்னர் ராஜிதவை கைதுசெய்வதற்காக குற்றப்ப புலனாய்வுப் பிரிவினர் அவரது வீடு, அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் சில இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது அவர் அவ் விடங்களில் இருக்கவில்லை.

இந் நிலையிலேயே இன்றைய தினம் ராஜித சேனாரத்ன தன்னை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு கோரி சட்டத்தரணியூடாக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

https://www.virakesari.lk/article/71810

பிடியாணையை இரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்தல் பத்திரம் சில மணி நேரங்களில் வாபஸ்!

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று நகர்த்தல் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.  

தன்னை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீள  விசாரணைக்கு எடுக்குமாறு கோரி இந்த நகர்த்தல் பத்திரம் ராஜித்தவின் சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு  சில மணி நேரங்களில் மீளப் பெறப்பட்டது. 

இந்த நகர்த்தல் பத்திரம் தொடர்பில் ராஜித்தவின் சட்டத்தரணிகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதன் விளைவாகவும், ராஜித்தவை நீதிமன்றில் ஆஜர்செய்வது தொடர்பான உறுதியற்ற தன்மையும்  இந்த நகர்த்தல் பத்திரத்தை வாபஸ் பெறுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் ராஜிதவின் சட்டத்தரணிகள் குழாமின்  சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்வதற்கு சி.ஐ.டி  எனப்படும் குற்றப்புலனாய்வு  பிரிவினருடன்,எஸ்.டீ.எப் எனப்படும் விசேட அதிரடிப்படை களமிறங்கியுள்ளன.

அதன்படி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மறைந்துள்ளதாக நம்பப்படும் இடங்களில் இன்று விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு முன்னெடுக்கப்பட்டது.

சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள்  அதிரடிபடை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம். ஆர்.லத்தீப்பின் நேரடி கண்காணிப்பில்  இடம்பெற்றதுடன் அதற்கான புலனாய்வு விசாரணை உதவிகளை சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  நுவன் அசங்கவின்  வழிநடத்தலில் பிரதான பொலிஸ் பரிசோதகர்  ரவீந்ர விமலசிறி தலைமையிலான குழு  வழங்கியிருந்தது.

இந் நிலையில் ராஜித்த சேனாரத்னவின் கொழும்பில் உள்ள வீடு இன்று பிற்பகல் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சுமார் இரண்டரை மணிநேர  சோதனை நடவடிக்கைகள்  அப்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது ராஜித சேனாரத்னவை கைது செய்யவோ, அல்லது  அவர் இருக்கும் இடம்தொடர்பில்  தகவல் ஒன்றினை பெற்றுக் கொள்ளவோ சி. ஐ.டியினார் முடியாமல் போயுள்ளது. 

இதனை விட  ராஜித சேனாரத்னவிற்கு சொந்தமான பேருவளை ஹெட்டிமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றும், புலனாய்வு திணைக்களத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. 

அங்கும் ராஜித சேனாரத்ன இருக்கவில்லை என  சி.ஐ.டி.யினர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71871

Link to comment
Share on other sites

ராஜித வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

rajitha.jpg

குற்றத்தடுப்பு பிரிவினரால் தேடப்பட்டு வந்த அவர் சற்றுமுன்னர் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/71881

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜித்தவை கைது செய்யவில்லை; நீதிமன்றுக்கு அறிவிப்பு

image_66f2f86e4d.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (27) இதனை அறிவித்துள்ளது.

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (27) ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது மூன்றாவது சந்தேக நபர் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (26) மாலை நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு  வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனையடுத்து, ராஜித்த சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 24 ஆம் திகதி மாலை பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நவம்பர் 10ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வௌ்ளை வேன் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்ததாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, நேற்று முன்தினம் (25) பிற்பகல் 1.15 மணியளவில் கொழும்பிலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் அங்கிருந்து வௌியேறிச் சென்றதுடன், அந்த சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்ன வீட்டில் இருக்கவில்லை என தகவல் வெளியானது.

அத்துடன், ராஜித சேனாரத்னவுக்கு சொந்தமான பேருவளை – ஹெட்டிமுல்ல பிரதேசத்திலுள்ள வீட்டையும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் (25) மாலை சோதனையிட்டுள்ளனர்.

இந்த சோதனையின்போது வீட்டிலிருந்த காவலாளியிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீள அழைக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில், மனுவொன்று நேற்று (26) தாக்கல் செய்யப்பட்டு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரஜததவ-கத-சயயவலல-நதமனறகக-அறவபப/150-243077

Link to comment
Share on other sites

ராஜித்த சேனாரத்ன சி.ஐ.டி.யினரால் கைது!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்க்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியாசலையில் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் நேற்றிரவு அனுதிக்கப்பட்ட அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் வாக்குமூலம் ஒன்றினையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71918

ராஜித்த சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்னவை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாத்னவை கண்காணிப்பதற்காக கொழும்பு மேலதிக நீதிவான் ஷலானி பெரேரா சற்று முன்னர் அங்கு சென்றுள்ளார்.

ராஜித்த சேனரத்னவுக்கு பிணை வழங்கப்படும் பட்சத்தில் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதன்போது மேலதிக நீதிவானுக்கு சுட்டிக்காட்டினர்.

இதன்போதே மேற்கண்ட விடயங்களை கருத்திற் கொண்டு ராஜித்த சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றிரவு நரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71932

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் வாயை திறக்கவே கூடாது 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.