Jump to content

பெருகிவரும் பேரினவாதப் பேராபத்து! தடுக்கத் தயாராகிறதா தமிழ் சமூகம்?


Recommended Posts

Chinema-620x330.jpg

1949
முழுமையாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த திருகோணமலை மாவட்டத்துக்கு வருகிறார் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க. அரச மரம் ஒன்றை நாட்டி வைத்த பின்பு திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் பேசுகிறார் அவர், “இந்த மரம் வளர்ந்து பெருவிருட்சம் ஆகும்போது நீங்கள் (சிங்களவர்) மட்டும்தான் இந்தப் பகுதியில் இருக்க வேண்டும்”, என்கிறார்.

தமிழர் தாயகத்துக்குள் அத்துமீறி நுழைந்த முதல் குடியேற்றத்திட்டம் இதுதான். சிறுபான்மை இனத்தவராக கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்களவர்கள்தான் இன்று பெரும்பான்மையினர். பெரும்பான்மையினராக இருந்த தமிழினம் வீழ்ச்சியை சந்தித்து மூன்றாவது சிறபான்மை இனமாக மாறிவிட்டது.

சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் கைகளில் ஆட்சிப் பீடம் சென்றதுமே சிறுபான்மையினருக்கு எதிராக – குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு எதிராக அழிப்புக்கள் – அடக்குமுறைகள் – ஆக்கிரமிப்புக்கள் கட்டவிழ்க்கப்பட்டு விட்டன. இந்த சம்பிரதாயத்தை – பாரம்பரியத்தை தொடக்கி வைத்தது அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி.

1956
ஆனால், “இந்த நாடு சிங்களவர்களுடையது. நாடு முழுவதும் சிங்களவர்களே இருக்க வேண்டும்” , என்ற மனநிலையை விதைத்தது ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவரும் அன்றைய பிரதமருமான டி.எஸ்.சேனநாயக்க. அவருக்குப் பின்னர், அவரின் மகன் டட்லி சேனநாயக்கவும் அவருக்குப் பின்ன கொத்தலாவலையும் ஆட்சிப் பீடம் ஏறினர். இப்படியே தொடர்ந்தால், முக்கிய அமைச்சர்கள் பட்டியலிலேயே தான் இருந்து விடவேண்டியதுதானா என அச்சமடைந்தார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா.

கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறிய பண்டாரநாயக்கவுடன், கிளம்பினார் டி.எம். ராஜபக்ச (இன்றைய ராஜபக்ச சகோதரர்களின் தந்தை). ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார் பண்டாரநாயக்கா. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால், ஏதாவது செய்தே ஆக வேண்டுமே என்ன செய்வது. சற்றும் தயங்கவில்லை – தடுமாறவும் இல்லை. சமஷ்டி குறித்து எழுதிய அவரது கைகள் பேரினவாதப் பெருநெருப்பைப் பற்றிப் பிடித்தன. சிங்கள மக்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும், ஆட்சி எம் வசம்தான் என்ற பேரினவாதப் பெருநெருப்பு அவரைப் பற்றிக் கொண்டது.

“நாம் ஆட்சிப் பீடமேறினால் 24 மணி நேரத்தில் தனிச்சிங்கள சட்டத்தை நிறைவேற்றுவோம்” என்று அறிவித்தார். சிங்கள மக்கள் சற்றும் தாமதிக்கவில்லை. பண்டாரநாயக்காவை பிரதமராக்கி அழகு பார்த்தனர். சிங்கள மட்டும் சட்டம் நிறைவேறியது. நிறைவேறியது சட்டம் மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும்தான். சுதந்திர இலங்கையில் முதன்முதலாக வலிந்து ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் அதுதான். வடக்கு – கிழக்குக்கு அனுப்பப்பட்டார்கள்.

1965
ஆட்சியை இழந்த ஐக்கிய தேசியக் கட்சி, 1960 களில் ஆட்சிப் பீடமேறினாலும், அவர்களால் நிலைக்க முடியவில்லை. 1965 இலும் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. தமிழர்களின் உதவியை நாடினார்கள். ஆதரவு வழங்கப்பட்டது. டட்லி – செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. தமிழர்கள் முன்னெடுத்த அறவழிப் போராட்டங்களும் வன்முறையாளர்களை ஏவி அடக்கப்பட்டது.

1972
ஆட்சியைக் கைப்பற்றியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. கல்வியில் தொடர்ந்த தமிழர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக தரப்படுத்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. அப்பட்டமாக பேரினவாத மனநிலை தெறித்தது இந்தத் தரப்படுத்தலில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆயுத வழியை நாடினார்கள்.

1978
நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 6 இல் 5 பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுகிறது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக தமிழர்கள் ஆயுதவழியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1981, 1983 வன்முறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக வன்முறையாளர்கள் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்டனர். மூவாயிரத்துக்கும் குறையாத தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன – எரியூட்டப்பட்டன. தமிழர்கள் ஆயுத வழித் தீர்வே ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்கள்.

1994
தமிழர்களின் போரால் கதி கலங்கிய தென்னிலங்கை சமாதான முகத்தை நாடியது. ஆனால், தங்கள் முன்னோர்களைப் போன்றே போலி முகத்துடன் வந்தார் சந்திரிகா குமாரதுங்கா, ஒப்பந்தம் – சமாதானப் பேச்சு நடந்தது. ஆனால், தன் காரியம் முடிந்ததும் வழமை போன்று யுத்த – பேரிவாத சன்னதம் கொண்டு ஆடியது தென்னிலங்கை. மீண்டும் போர் தமிழ் மக்கள் மீது இலங்கையின் முப்படைகளும் போரைக் கட்டவிழ்த்து அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

2005
மீண்டும் சமாதானம் என்ற ஆயுதத்தைக் கையில எடுத்தது. 2000 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி. தொடர்ந்த பேச்சுக்களும் ஒப்பந்தங்களும் பலனளிக்கவில்லை. 2005 தேர்தலில் முன்னோர்களின் ஆயுதமான பேரினவாதத்தைக் கையில் எடுத்தார் அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச. வெற்றி பெற்று ஜனாதிபதியானார். வழக்கமான தங்கள் தலைவர்களின் பாணியில் ஒப்பந்தத்தைக் கிழித்தார் – பேச்சுக்களை முறித்தார். மீண்டும் போர் – தமிழ் மக்கள் மீது பேரழிவு – திட்டமிட்ட பேரழிவு கட்டவிழ்த்து விடப்பட்டது. சிறுபான்மை இனமொன்றின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பேரழிவை தமிழ்பேசும் ஏனைய சிறுபான்மை இனங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தன. சில தரப்புகள் அதற்கும் மேலேபோய் ஆதரவு வழங்கின. மிகப்பெரும் இனவழிப்புடன் 2009 மே இல் போர் நிறைவுக்கு வந்தது.

2010
சிறுபான்மை இனமொன்றின் மீது – தங்களின் சகோதரர்கள் மீது – கட்டவிழ்த்து விடப்பட்ட போரை – இனவழிப்பை – பேரழிவை கொண்டாடியது சிங்கள – பௌத்த பேரினவாதம். மீண்டும் ராஜபக்ச தலைவரானார். எவருக்குமே கிட்டாத 3 இல் 2 பெரும்பான்மை பலத்தை வழங்கியது பேரினவாதம். சட்டத்தை தன் இஷ்டத்துக்கு மாற்றினார். “இதுவே என் கட்டளை – என் கட்டளையே சாசனம்”, என்ற பாகுபலி வசனத்தை அன்று – அதுவும் இன்றைய ஜனநாயக யுகத்தில் நடைமுறைப்படுத்தினார்.

2019

2015 இல் மீண்டும் குழப்பங்களுக்கு மத்தியில் ஆட்சி மாறியது. ஆனால், நடந்தவை எல்லாம் தலைகீழ். எனினும், 2015 ஆட்சிக் காலம் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை என்றாலும், அது தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு – எதையும் செய்துவிடவில்லை. இந்நிலையில்தான் 2019 ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இந்தத் தேர்தலில் சிங்கள – பேரிவாதக் கருத்துக்கள் – சிந்தனை மேலெழுந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து உருவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சித் தலைமையைக் கைப்பற்ற இலகுவழியாக தங்கள் முன்னோர்கள் காட்டிய வழியிலேயே அட்சரம் பிசகாமல் நடந்தார்கள். 70 ஆண்டுகள் கடந்தும்கூட சிங்கள – பௌத்த பேரினவாதம் தனது கொள்கையை – போக்கை – மாற்றாமலே வழக்கம் போல பேரினவாத சிந்தனைக்கு – ஆக்கிரமிப்பு மனநிலைக்கு – சிறுபான்மைகளை அடக்குவதற்கு தனது பேராதரவை வழங்கியது.

இந்நிலையில், அனேகமாக 2020 ஏப்ரலில் நாடு மற்றொரு தேர்தலை சந்தித்து நிற்கிறது. சிங்கள – பௌத்த பேரினவாதத்தை முதன் முதலில் முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சி தன் முகத்தை மாற்றப் போய் தோல்வியை – இறக்கத்தை சந்தித்து – பேரினவாத சக்திகளிடம் மதிப்பிழந்து நிற்கிறது. இந்நிலையில் தனது பேரினவாத கோர முகத்திற்கு மீண்டும் மாறுவதே ஆட்சிக் கதிரையைப் பிடிப்பதற்கான ஒரே வழி என கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்ற சஜித் பிரேமதாஸ – அடிபட்ட வேங்கையாக சீறுகிறார்.

தேவைக்கு தகுந்தாற் போல், உண்மை முகத்தை மறைத்து சமாதான முகம் காட்ட முனைந்த – குள்ளநரிகளின் கூடாரம் எனத் தமிழர்களால் விளிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இப்போது தனது உண்மை முகத்தை வெளிப்படையாகவே காட்டப்போகிறது. பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி விரைவில் – வெகுவிரைவில் சஜித் வசம் சென்றுவிடலாம் – ஆயிரம் விகாரைகள தரிசிப்பு என்ற பௌத்த தீவிர சிந்தனையுடன் தனது பேரினவாதக் கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து அறுவடைக்கு தயாராகுபவருக்கு எதிராக – தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மிகப்பெரும் பேரினவாத சக்திகளாகக் கருதப்படும் ராஜபக்ச சகோதரர்கள் காட்டுவார்கள். ஆக, இலங்கை 60 ஆண்டுகளுக்கு முற்பட்டுச் சென்று இனவாத அரசியலை – பேரினவாத சிந்தனைக்கு தயாராகி வருகிறது.

இப்படி ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள – பௌத்த பேரினவாதம் சூழ்நிலையில் தமிழ் பேசும் சிறுபான்மை இனங்கள் தங்கள் பேதங்களை – அரசியல் நலன்களை – இன – மத முரண்பாடுகளை உயரப் பிடித்தபடி நடைபோடுகின்றன. ஆனால், இப்போது எழுந்துள்ள இந்தப் பேராபத்தைத் தவிர்க்க சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைய – ஒன்றுபட்ட சக்தியை வெளிப்படுத்த வேண்டிய தேவை உண்டு.

அரசியல் – சுயநல இலாபங்களுக்கு இம்முறை தேர்தலில் சிறுபான்மை இனங்கள் இடம் கொடுத்தால், அவற்றுக்காக அவர்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும். கடந்த ஒரு மாத கால ஆட்சியே இதற்கு சான்று.

-செவ்வேள்-

http://thamilkural.net/?p=17187

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் உள்ள.. தமிழ்  அரசியல் தலைமை சரியில்லாமல் இருக்கும் போது....
பேரினவாதத்தை... அப்பாவி தமிழ்மக்கள் எதிர் கொண்டே ஆக வேண்டும்.
அதை... தடுப்பது,  இயலாத காரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்குமேல் போனபின் சாண் என்ன முழம் என்ன  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.