Jump to content

பர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனை: நீதித்துறையுடன் மோதும் பாகிஸ்தான் ராணுவம்


Recommended Posts

முஷாரஃப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு கடந்த வாரம் தேச துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அந்த நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறை இடையே மோதலை உருவாக்கியுள்ளது.

அரசின் நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு அதிகம் இருப்பதாக ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த அந்த நாட்டில் நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

2007ல் அரசமைப்பை மீறி அவசர நிலையை பிரகடனப்படுத்தி தேச துரோகம் செய்ததாக அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் அரசியலமைப்பின் பிரிவு 6ன்படி நாட்டின் அரசியலமைப்பு அமலாவதை தடுக்கும் வகையில் செயல்படவோ, தற்காலிகமாக நீக்கவோ அல்லது நிறுத்திவைக்கவோ முற்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கலாம். இந்த சட்டத்தின்படிதான் முஷாரஃப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

17 டிசம்பர் அன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு அந்த நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

முஷாரஃபை போல பல ராணுவத் தளபதிகள் நாட்டின் ஆட்சி கவிழ்ந்தபிறகு பொறுப்பேற்று, மக்களாட்சி இருந்தபோது முக்கிய முடிவுகளில் தங்களது அதிகாரத்தைக் காட்டியும் உள்ளனர்.

ஆனால் ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் இவ்வாறு தேசதுரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதும் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதும் இதுவே முதல்முறை.

 

தீர்ப்பின்விளைவுகள்

முஷாரஃப் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்களும் அவரை விமர்சிப்பவர்களும் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @sakhtarmengal
 

The man who called us a traitor once is declared a traitor in the court of law. Landmark verdict for the people of Balochistan and a beacon of hope for thousands of people who were a victim of his barbarity. #MusharrafVerdict

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @sakhtarmengal

பலூசிஸ்தானின் அரசியல் தலைவர் அக்தர் மேங்கல், எங்களை துரோகிகள் என்று கூறியவரை இன்று நீதிமன்றம் துரோகி என தீர்ப்பளித்துள்ளது. இந்த முக்கிய தீர்ப்பு அவரது கொடுமையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை தந்துள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"முஷாரஃப் ஒருவர்தான் அரசமைப்புடன் விளையாடியவரா? அவர் முடிவெடுக்கும்போது அதை கவனித்துக்கொண்டிருந்த மற்ற நீதிபதி எங்கே? அவர்களின் பெயரைக் கூறமுடியுமா," என பதிவிட்டுள்ளார் பத்திரிக்கையாளர் ஃபெரீஹா.

இந்த தீர்ப்புக்கு பின்னர் இதற்கான தங்கள் தரப்பு எதிர்வினையை முடிவு செய்ய ராவல்பிண்டி ராணுவ தலைமை அலுவலகத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் கூடினர்.

இந்த சந்திப்பு நடந்து சில நேரங்களில், ஜெனரல் முஷாரஃப் குறித்து, சிறப்பு நீதிமன்றம் எடுத்த இந்த முடிவு மிகுந்த வேதனையளிக்கிறது என ஒர் அறிக்கை வெளியிட்டது பாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகம்.

முஷாரஃப்படத்தின் காப்புரிமைAFP

நாட்டின் பாதுகாப்பிற்காக பல போர்களில் சண்டையிட்ட ஒரு ராணுவ அதிகாரி, ஒரு துரோகியாக இருக்க முடியாது என அதில் இருந்தது.

இந்த தீர்ப்பைக் கண்டித்த அந்த அறிக்கையில் சட்ட செயல்முறை புறக்கணிக்கப்பட்டதுடன் முஷாரஃப்புக்கு தன்னுடைய தரப்பை சொல்ல வாய்ப்பும் அளிக்கப்படவில்லை என இருந்தது. அந்த அறிக்கையின் முடிவில் பாகிஸ்தான் ராணுவம் நியாயமான தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பாக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்புகூட பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அலுவலகம் நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பல முக்கிய பிரச்சனைகளில் ராணுவத்தின் வரம்பு மீறி பலமுறை கருத்து கூறியிருக்கிறது. ஆனால் அவற்றில் எதிலும் இவ்வளவு கண்டிப்புத்தன்மை இல்லை.

ஆனால் இந்த விஷயத்தில் பாகிஸ்தான் ராணுவம் முஷாரஃப்புக்கு ஆதரவாக தங்கள் தரப்பை பகிரங்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறது.

 

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

 

தீர்ப்பின் மீதான விமர்சனம்

தீர்ப்பளிக்கப்பட்ட இரு நாட்களுக்கு பிறகு, விரிவான தீர்ப்பு வெளியிடப்பட்டது. இது மக்களின் மத்தியில் புது சர்ச்சையை கிளப்பியது.

இந்த தீர்ப்பின் 66வது பத்தியில், மூன்று சிறப்பு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தலைவர் வாகர் செத், ஒருவேளை முஷாரஃப் கைதாவதற்கு முன் இறந்தால் அவருடைய சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, நாட்டின் நாடாளுமன்றத்திற்கு முன்பிருக்கும் டி-சௌக் எனப்படும் ரவுண்டானாவுக்கு இழுத்து வரப்பட்டு, மூன்று நாட்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என எழுதியிருந்தார்.

ராணுவத் தரப்பிலிருந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, இது மனிதாபிமானத்திற்கும் மதத்திற்கும் எதிரானது என பாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் கூறினார்.

இது தொடர்பாக வாகர் செத் மீது விசாரணை நடத்தப்படும் எனவும் பர்வேஸ் முஷாரஃப்புக்கு எதிரான தீர்ப்பு சட்டவிரோதமானது எனவும் அரசு அறிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் ஃபவாத் சௌத்ரி, முஷாரஃப்பின் வழக்கு இல்லையென்றால், லபாயிக் அமர்வு போராட்டம், ராணுவத்தின் ஆள்சேர்ப்பு நீட்டிப்பு என ஏதாவது ஒரு விஷயத்தில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ அமைப்பு குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது ஒரு முன்னாள் ராணுவத் தளபதி அவமதிக்கப்பட்டுள்ளார் என தன்னுடைய ட்விட்டர் பதிவு ஒன்றில் பதிவிட்டிருந்தார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @fawadchaudhry
 

معاملہ پرویز مشرف کی ذات کا ہے ہی نہیں ایک خاص حکمت عملی کے ساتھ پاکستان فوج کو ٹارگٹ کیا گیا، پہلے لبیک دھرنا کیس میں فوج اور ISI کو ملوث کیا گیا، پھر آرمی چیف کے عہدے میں توسیع کو متنازع بنایا گیا اور اب ایک فوج کےمقبول سابق سربراہ کو بے عزت کیا گیا

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @fawadchaudhry

ராணுவத்தை சீண்டினால் நாட்டில் தேவையில்லாத வன்முறைகள் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

பழிக்கு பழி

ராணுவத்தின் பதிலுக்கும் அரசின் அறிவிப்புக்கும் பாகிஸ்தான் பார் கவுன்சில் பதில் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது முஷாரஃப்பின் தீர்ப்பு குறித்து கூறியது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும்.

"ராணுவத்தின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பைப்பற்றி கூறப்பட்ட விதம், பாகிஸ்தான் ராணுவம் பிற அமைப்புகளுக்கு எந்த மரியாதையும் அளிக்காது என்பதை காட்டுகிறது," என பாகிஸ்தான் பார் கவுன்சில் துணைத் தலைவர் சையத் அம்ஜத் ஷா மற்றும் செயற்குழு தலைவர் ஷேர் முகமது கான் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்படத்தின் காப்புரிமைAAMIR QURESHI VIA GETTY IMAGES

இப்போது ஆட்சியிலிருக்கும் அரசு, அதன் அமைச்சர்கள், சட்ட அதிகாரிகள், பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் ஆகியோரின் அணுகுமுறையிலிருந்து இந்த அரசு ராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்துவதாக பார் கவுன்சில் கூறியுள்ளது.

இது பாகிஸ்தானின் எதிர் கட்சியினர் கூறும் குற்றசாட்டு ஆகும்.

 

'முன்னெப்போதுமில்லாத ஒன்று'

இந்த தீர்ப்பு முன்னெப்போதுமில்லாத ஒன்று எனவும் இதன் தாக்கம் வெகுதூரம் இருக்கும் எனவும் வழக்கறிஞர் ஹைதர் இம்தியாஸ் கூறியுள்ளார்.

"அரசமைப்பை ரத்து செய்து அல்லது இடைநீக்கம் செய்து, தங்களது அதிகாரம் மூலம் நாட்டை கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தால், இந்த தீர்ப்பு அவர்கள் செய்யும் குற்றங்களை தடுத்த நிறுத்தும் என்பதை நிரூபணம் செய்கிறது."

"தனி நபர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த நாட்டை ஆள முடியாது. அரசமைப்பு என்பது புனிதமானது" என்று அவர் மேலும் கூறினார்.

அரசமைப்புக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் என்று ராணுவம் உறுதிமொழி ஏற்றிருக்கிறது. ஆனால், அரசமைப்பை மீறி பலமுறை ராணுவம் நடந்து கொண்ட வரலாறு இருப்பதாக ஆய்வாளர் யாசிர் லத்தீப் ஹம்தானி நம்புகிறார்.

நீதித்துறைக்கு எதிரான பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கான தகவல் தொடர்பு இயக்குநர் கூறிய கருத்து "நியாயமற்றது என்றும் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும்" என்றும் யாசிர் கூறுகிறார்.

இயக்குநர்படத்தின் காப்புரிமைISPR Image captionபாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர்.

ஆனால், பாதுகாப்பு படைகள் செய்தித்தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் எதிர்கொள்ள மாட்டார் என்றும் யாசிர் நினைக்கிறார். ஏனெனில் தற்போதைய அரசாங்கம் வலுவிழந்து இருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன் லாகூர் மருத்துவமனை தாக்குதலை தொடர்ந்து பார் கவுன்சில்களும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

லாகூரின் மிகப்பெரிய இதய நோய் மருத்துவமனையில், இளம் வழக்கறிஞர்கள் பலர் உள்ளே நுழைந்து, கட்டடத்தை சேதப்படுத்தி, மருத்துவர்களை தாக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதில் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக அரசு தெரிவித்தது.

எனினும், தற்போதைக்கு எந்த அரசமைப்பு சிக்கலும் வராது என்கிறார் யாசிர்.

"இந்த சர்ச்சைக்கு காரணமானவர் என்று கருதப்படும், தலைமை நீதிபதி ஓய்வு பெற்று விட்டார்."

முஷாரஃபிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த ஒரு சில நாட்களிலேயே அதாவது டிசம்பர் 20, 2019ல் பாகிஸ்தான் தலைமை நீதிபதி அசீஃப் சயீத் கோசாவில் பதவிக்காலம் முடிவடைந்தது. அவரையடுத்து புதிய தலைமை நீதிபதி குல்சர் அஹமத் பதவி ஏற்றுக்கொண்டார்.

மரண தண்டனை விதிப்பதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில் முஷாரஃபின் தீர்ப்பில் சர்ச்சைக்குரிய பகுதியை எழுதிய நீதிபதிக்கு எதிராக எந்த குறிப்பும் அரசாங்கம் தாக்கல் செய்ய அனுமதிக்காது என்று யாசிர் கருதுகிறார். இதனால், பாகிஸ்தானில் உள்ள அரசு அமைப்புகளுக்கு இடையே எந்த பிரச்சனையும் தற்போதைக்கு வராது என்பது யாசிரின் கருத்து.

 

முஷாரஃப் எங்கே?

முஷாரஃப் தனது மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2016ஆம் முதல் துபாயில் இருந்து வருகிறார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், தீர்ப்பு அறிவிக்கப்படும்போது அவர் அங்கு இல்லை.

இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய முன்னாள் அதிபர் முஷாரஃபிற்கு 30 நாட்கள் அவகாசம் உண்டு. இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட வீடியோ பதிவில், இத்தீர்ப்பு தனிப்பட்ட விரோதம் காரணமாக அளிக்கப்பட்டது என்றார்.

முஷாரஃபின் கட்சியான அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்ட அறிக்கையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-50908968

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.