Jump to content

இருகட்சி அரசியல் : தமிழ்த் தேசியத்தை காக்குமா? சிதைக்குமா?


Recommended Posts

fffff-2-620x330.jpg

கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று சொல்லுகின்ற மரபு ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பல்வேறு பின்னடைவுகளும் பலவீனங்களும் பூசி மெழுக முடியாதளவில் தென்படுகின்றன. இதற்கு மாற்றுக் கட்சிகளும் அவைகளால் முன்வைக்கப்படும் சரியான விமர்சனங்களும் இல்லாமையும் காரணமாகும். அத்துடன் இது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் பாதிக்கின்றது.

2009இற்குப் பின்னரான காலத்தில் ஒற்றுமைக்காகவும் போராளிகளினால் கைகாட்டப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றது. அதனால் எதை செய்தாலும் மக்கள் இப்படியே வாக்களிப்பார்கள் என்ற அக் கட்சியின் பொறுப்பின்மையால் கூட்டமைப்பின் அரசியல் பயணம் நைந்து தொய்ந்து வருகின்றது.

இதனால் தேர்தல்களை அண்டிய காலத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம், பின்னர் அதனை மறந்து கைவிடலாம் என்கின்ற நிலமைதான் உண்டு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தாயகம் பெற்றுத் தருவோம் என்று மக்களின் ஆனையை கூட்டமைப்பினர் பெற்றனர். அடுத்த பாராளுமன்ற தேர்தலும் இடம்பெறவுள்ள நிலையில், அந்த வாக்குறுதிக்காக எந்தளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

அதற்காக என்ன அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்ற கேள்விகளை எழுப்புவது அவசியமானது. அத்துடன் இவர்களை நோக்கி மக்களின் நிலை நின்று விமர்சனங்களை முன்வைப்பவர்களும் முன்வைக்கின்ற கட்சிகளும் இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை என்ற நிலைதான் காணப்படுகின்றது. அதுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி அரசியலுக்கு தொடர்ந்து சாதகமாகின்றது.

எனவே தமிழ் தேசிய அரசியலின் பின்னடைவுக்கு மாற்று அரசியல் கட்சிகள் இல்லாமையை ஒரு முக்கிய காரணமாக இந்தப் பத்தி குறிப்பிட விரும்புகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய கட்சிகளை உருவாக்கியவர்களும் அல்லது தமது பூர்வீக கட்சிகளை புனரமைத்தவர்களும் தமிழ் தேசிய சூழலில் மாற்றுக் கட்சியாகவில்லை. ஒன்றில் கூட்டமைப்பின் தொடர்ச்சியாகவும் அல்லது சுயநலன் குறித்த குறைகளை முன்வைப்பவர்களாகவுமே உள்ளனர்.

அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சனத் தராசில் நிறுத்தி தமது கூர்மையான விமர்சனங்களை முன்வைத்து, தமிழ் தேசிய அரசியல் பாதையை செழுமைப்படுத்தாமல், தமது சுய கட்சி அரசியல்களுக்காக அவதூறுகளை அள்ளிப் பரப்பும் கட்சிகளாக இருந்தமையும் நமது அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம் எனலாம். இது கூட்டமைப்பின் பின்னரான அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

தென்னிலங்கையில் பிரதான ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உள்ளன. ஒன்றை ஒன்று விமர்சனம் செய்கின்றன. மக்களும் ஆட்சி அதிகாரங்களை மாறி மாறி வழங்குகின்றனர். இதனால் மக்கள்மீது ஆட்சியாளர்களுக்கு கண்ணியமும் பயமும் பொறுப்பும் ஏற்படுகின்றது. இதே நிலமைதான் இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ளது. மக்களுக்கு எதிராக, அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக ஆட்சி புரிபவர்கள் அடுத்த பதவிக்காலத்தில் தூக்கி எறியப்படுகின்றனர்.

இத்தகைய ஆளும் எதிர் கட்சி அரசியல் அல்லது, மாற்றுக் கட்சிப் பண்பாடு ஈழத் தமிழ் தேசிய அரசியலும் ஏற்பட வேண்டும். அதுவே சரியான விமர்சனங்கள் எழுவதற்கு அடிப்படையானது. மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடப்பார்கள். இத்தகைய சூழல் இன்மையால்தான் தமிழ் தேசிய அரசியலில் ஏகபோக அரசியலும் மக்கள்மீதான பொறுப்பின்மையும் அதிகரித்துள்ளது.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக ஒரு தரப்பிற்கு வாக்களித்தபோதும் இதுவரையிலும் என்ன நன்மை நிகழ்ந்துள்ளது? அத்துடன் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரத்தை பகிரக்கூடிய மாற்றுக் கட்சி ஒன்று உருவாகியுள்ளதா? நிச்சயமாக அப்படி ஒரு கட்சி உருவாகினால் மக்கள் பாராளுமன்றப் பதவிகளையும் மாகாண சபைகளையும் அவர்களிடம் கையளிப்பார்கள். அதுவே ஈழத் தமிழ் அரசியல்வாதிகளை பொறுப்புள்ளவர்களாக மாற்றும்.

எனவே தமிழ் தேசிய அரசியல் சூழலில் மாற்று அரசியல் பண்பாட்டை உருவாக்கத் தவறினால், அரசியல் நாட்டமைத்தனங்களும் சண்டித்தனங்களும் மாத்திரமே தலைதூக்கும். அது அரசியலை மாத்திரம் பாழாக்குவதில்லை. மக்களின் வாழ்வையும் நாட்டின் மீள் எழுச்சியையும் முக்கியமாக விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிடும். எனவே இந்த விடயத்தில் ஆழமான சிந்தனையை இத் தலையங்கம் அவாவுகின்றது.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்

26.12.2019

http://thamilkural.net/?p=17335

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.