Jump to content

புதிதாகப் பரவி வரும் QR code மோசடி


Recommended Posts

சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.

கடந்த சில வாரங்களாக இதேபோல் பணத்தை இழந்த பல பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத்திலும், பெங்களுரிலும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டியவர்கள் செகண்ட் சேல்ஸ் தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான். QR கோடு மோசடிக்காரர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பது போலத் தொடங்கித்தான் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

QR கோடு என்பதும் ஒரு மெயில் ஐ.டி போன்றதுதான். ஸ்பேம் மெயிலைத் திறக்க வேண்டாம் என்பதைப் போலத்தான் இதுவும். தெரியாதவர்களிடமிருந்து வரும் QR கோடை ஸ்கேன் செய்யாதீர்கள்.

https://www.vikatan.com/technology/tech-news/qr-code-scams-are-in-the-raise-recent-days

Link to comment
Share on other sites

QR கோடும், அது செயல்படும் முறையும்..!

QR கோடும், அது செயல்படும் முறையும்..! #HowQRcodeWorks

QR கோட் எனப்படும் குயிக் ரெஸ்பான்ஸ் கோட்-ஐ நம்மில் பலரும் பயன்படுத்தியிருப்போம். விளம்பரங்கள், செய்திகள், வங்கி ஆப்ஸ்கள், இ-வாலட்கள் என இதன் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகமான பின்பு, இவற்றின் மவுசு மீண்டும் அதிகரித்துவிட்டது எனலாம். நாம் சில நொடிகளில் ஸ்கேன் செய்து, தகவல்களைப் பெற உதவும் இந்த QR கோட் எப்படி வேலை செய்கிறது எனப் பார்ப்போமா?

நாம் ஷாப்பிங் மால்களில் வாங்கும் பொருட்களின் மீது இருக்கும் பார்கோடின், 2D வெர்ஷன்தான் இந்த QR கோட். ஸ்மார்ட்போன்களால் பிரபலம் அடைந்த டெக்னாலஜியில் இதுவும் ஒன்று. எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை QR கோட்களாக மாற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு உதாரணங்கள்தான், இணைய முகவரிகளின் QR கோட்கள்.
 

QR கோடின் வடிவமைப்பு:

இந்த கோட்களைப் பார்த்தால், ஏராளமான புள்ளிகள் கறுப்பு மற்றும் வெள்ளையாக கலந்திருக்கிறது என மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த கோட்களுக்கு துல்லியமான வடிவமைப்பு இருக்கிறது. நீங்கள் சில QR கோட்களை கவனித்தாலே இது தெரியும்.

1. QR கோடில் இருக்கும் இந்த மூன்று புள்ளிகள், கோட் அச்சிடப்பட்டிருக்கும் திசையினைக் குறிக்கும். இதன் மூலம்தான் ஸ்கேன் செய்யும் போது, டேட்டா படிக்கப்படும்.

2. QR கோடை சுற்றியிருக்கும் இந்த வெற்றிடம், ஸ்கேனர் எளிதாக ஸ்கேன் செய்ய உதவுகிறது. சுற்றியிருக்கும் பரப்பில் இருந்து, QR கோட் அச்சிடப்பட்டிருக்கும் பரப்பை தனித்துக் காட்டவே இந்த வெற்றிடம்.

3. அதேபோல இந்த கோடை உற்றுப்பார்த்தால், சில புள்ளிகள் மட்டும் தனியாக, பெரிதாக மற்றவைகளிடம் இருந்து வித்தியாசமாகத் தெரியும். குறைவான டேட்டா உள்ள கோடில் ஒரு புள்ளியும், மிக அதிக டேட்டா உள்ள கோடில் அதிகமாகவும் இருக்கும். இதன் பயனும், ஸ்கேனர்  சரியான வரிசையில் தகவல்களைப் படிக்க செய்வதுதான். 

3. நீங்கள் QR கோடில் கொடுக்கும் தகவல்கள் கீழிருந்து மேலாக அடுத்தடுத்த வரிசைகளில் பதிந்து வைக்கப்படும். நீங்கள் அந்த கோடை ஸ்கேன் செய்யும் போது, அதே வரிசையில் ஸ்கேனர் உங்கள் கோடினைப் படிக்கும். நீங்கள் ஸ்கேன் செய்யும் டிவைசை எந்தக் கோணத்திலும் நீங்கள் வைத்திருக்கலாம். ஆனாலும் டேட்டா சரியான வரிசையில் படிக்கப்பட வேண்டும்; அதற்கு உதவி செய்பவைதான் இந்த சிறப்பு புள்ளிகள். இவை அந்த தகவல்களின் சரியான வடிவத்தை ஸ்கேனர்களுக்கு உணர்த்தும்.

4. இதுதவிர QR கோடில் இருக்கும் தகவலின் தன்மை, வெர்ஷன் மற்றும் மொத்த தகவல்கள் அனைத்தும் ஒரு QR கோடில் அடங்கியிருக்கும். இப்படி அனைத்து தகவல்களையும் கொண்டுதான், QR கோட் ஸ்கேனர்கள், கோட்-ஐ ஸ்கேன் ஸ்கேன் செய்யும். பிறகு அதில் இருக்கும் தகவல்களை உங்களுக்குக் காட்டும்.

5. ஒரு QR கோடில் சிறிய அளவில் சேதம் ஏற்பாட்டால் கூட, உங்கள் ஸ்கேனர்களால் தகவல்களை முழுமையாகப் பெற முடியும். அதேபோல கோடிற்குள் பதியப்படும் தகவல்களின் அளவைப் பொறுத்தே, அவற்றின் வடிவமைப்பும் இருக்கும். உதாரணமாக நான்கு எழுத்துக்கள் மட்டுமே உள்ள QR கோட் பார்க்க எளிமையாக இருக்கும். ஆனால் 20 எழுத்துக்கள் கொண்ட QR கோட் பார்க்க சிக்கல் நிறைந்ததாக இருக்கும். 

 

எப்படி QR கிரியேட் செய்வது?

இதுக்கு உரிய தகவல்கள் ஏராளமான இணையதளங்களில் கிடைக்கின்றன. அவற்றில் நீங்கள் இலவசமாகவே QR கோட்களை கிரியேட் செய்துகொள்ளவும், டவுன்லோட் செய்துகொள்ளவும்  முடியும். சில தளங்களில் நீங்கள் பணம் செலுத்துவதன் மூலமாக, உங்கள் நிறுவனங்களின் லோகோக்களை கூட QR கோடில் சேர்க்க முடியும். நம்மாழ்வாரின் நல்மொழிகள் அடங்கிய சில QR கோட்கள் கீழே, கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஸ்கேன் செய்து பாருங்களேன்!
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.