Jump to content

யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் சிறிகாந்தலட்சுமி காலம் ஆனார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் சிறிகாந்தலட்சுமி காலம் ஆனார்…

December 25, 2019

 

Srikanthalaxmi1.jpg?resize=552%2C414

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பிரதம நூலகர் (chief Librarian), இலங்கை நூலகசங்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது தமிழ்தலைவர் (SLLA-Srilanka Library Association) திருமதி சிறிகாந்தலட்சுமி அருளானந்தம்    தனது 59அவது வயதில் இன்று (25.12.19) மாரடைப்பு ( Heart Attack) காரணமாக காலமானார்.

இணுவிலில் பிறந்த சிறீகாந்தலட்சுமி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பெங்களுரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்ட பின்படிப்பினை மேற்கொண்டுள்ளார்.

பத்தி எழுத்தாளர், கவிஞர், நூல் விமர்சகர், என பலதுறைகளில் சிறந்து விளங்கிய அவர் பெண்ணியல் சிந்தனையாளராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கியிருந்தார்.

நூலகத்துறைசார்ந்து

  • தகவல் வளங்களும் சேவைகளும் (குமரன் புத்தக நிலையம்)
  • தகவல்வள முகாமைத்துவம் (குமரன் புத்தக நிலையம்)
  • நூலக அபிவிருத்தி : ஒரு பயில்நோக்கு (சேமமடு)
  • அகரவரிசை-பகுப்பாக்கக் கலைச்சொற்தொகுதி (குமரன் புத்தக நிலையம்)
  • சொற்கருவூலம்: உருவாக்கம் பராமரிப்பு பயன்பாடு (நூலக விழிப்புணர்வு நிறுவகம்)
  • நூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல்
  • நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை

உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

அத்துடன் தமிழர் பாரம்பரிய பாவனைப்பொருட்களை சேமித்து தன்னுடைய வீட்டில் சிறிய அளவிலான ஆவணக் காப்பகத்தையும் பேணிவந்ததாககவும், பாரம்பரிய ஆவணங்களை சிறார்களுக்கு கண்காட்சிகள் ஊடாக காட்சிப்படுத்துவதிலும் அக்கறை காட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் பெண்போராளிகளின் கல்விசார் நடவடிக்கைகளிலும், அவர்களின் படைப்பியல் சார் துறை வளர்ச்சியிலும் பங்காற்றியவர்களில் ஒருவராகவும் விளங்கிய சிறீகாந்தலட்சுமி வானதி பதிப்பகத்தின் ஊடாக பல நூல்களை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/135273/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு. சரவணன்

அப்போதுதான் சாப்பிட்டு முடிய தொலைபேசியை எடுத்து பார்த்தன் பல அழைப்புக்கள்.திரும்ப ஒருவருக்கு எடுக்க,ஒரு துக்கமான செய்தி நூலகருக்கு மாரடைப்பு, இறந்துவிட்டதாக தகவல்.வைபர் குறூப்பைப்பாருங்கள் .நெஞ்சமெல்லாம் துயரம்பரவிட செய்தி உண்மைஎன்பதனை அறிந்தன்.கிட்டத்தட்ட இன்னும் ஆறு ஆண்டுகள் சேவைப்புரியக்கூடிய வயதெல்லையை உடையவர்.இப்படி இடைநடுவில் எம்மையெல்லாம் விட்டுச்செல்லுவார் என நினைக்கமுடியவில்லை.

செய்திகேட்ட அடுத்த முக்கால்மணிநேரத்தில் யாழ்.போதனாமருத்துவமனையில் அவரது பூதவுடலுக்கு முன் வெறுமையாக வாழ்வையே வெறுத்துநின்றேன். சே வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது.
விதி எவ்வளவு கொடுமையானது .விதியை நோவதை விட எம்மால் வேறென்ன செய்யமுடியும்.

நத்தாரை முன்னிட்டு நேற்றும் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு விடுமுறை.நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அவரோடு இறுதியாக இருந்துள்ளோம். எத்தனைவிதமான உயர்ந்த சிந்தனைகள், மனதிலே நல்ல செயற்றிட்டங்கள் ..
கடந்த புதன்கிழமை பின்னேரம் என்னையும் நாகேந்திரம் அண்ணையையும் அழைத்து நூலகவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார்.

பின்வெள்ளிக்கிழமை காலைநேரம் என்னை அழைத்திருந்தார். ஓய்வுபெறவுள்ள கல்விசார்நூலகர் திருமதி ராஜன்கூல் அவர்களின் சிறப்பு மலரில் என்னை நூலகவியல் சார்பான ஒருகட்டுரை வரையுமாறு அன்புக் கட்டளை இட்டிருந்தார்.
இதற்குமுதல் நூலக நிறுவன தசாப்தநிறைவு மலரான கருத்தூணில் நான் வரைந்த கட்டுரை தன்னைக்கவர்ந்ததாகவும்அதனைப்போன்ற எழுத்துநடையில் அக்கட்டுரை அமையவேண்டும் எனவும் அறிவுறுத்தினார். உள்ளூராட்சி மன்றங்களும் நூலகசேவையும் .இதுதான் தலைப்பு உன்னால் முடியும் கட்டாயம் எழுது என்று சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

திங்கட்கிழமை மதியம் நூலக்கவனிப்பாளர்களுக்கென ஒருகூட்டத்தை.ஒழுங்குசெய்திருந்தார். யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்சாராத வெளியாளர்களின் நூலக்கப்பாவனை தொடர்பில் சில விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு எமக்கு கண்டிப்பான உத்தரவுகளைப்பிறப்பித்தார்.நூல்களை நூலகர் எவ்வளவுதூரம் நேசிக்கின்றார்.என்பதனை அதிலிருந்து அறியக்கூடியதாகவிருந்தது. அனைத்துப் பல்கலைக்கழக நூலக்ககவனிப்ளாளர்களின் வருடாந்த ஒன்றுகூடல் பதுளையில் நடைபெறவுள்ளது.அங்கு செல்ல விரும்புபவர்கள் போகலாம்.ஒருநாள் முன்னதாக சென்று கொண்டாடிமகிழுங்கள் என மகிழ்ச்சியாக கூறினார். இந்த மாதம் இறுதிவரை தனக்கு சாஸ்திரமுறைப்படி காலம் கூடாதெனவும் ,பயணங்களை தவிர்க்கசொல்லி இருப்பதாகவும் ,தன்னால் எம்மோடு வரமுடியாது எனவும் ,எனினும்
இளம்யுவதிகளின் நலனினைக்கருத்தில்கொண்டு தான் எம்மோடு வருதற்குதயார் எனவும் ஒருதாயாக அன்புமேலிட கூற எமக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. பதுளை செல்வதற்கு ஏதுவாக நூலகத்தில் வார இறுதிநாட்களில் நடைபெறும் நூற் சரிபார்ப்புப்பணியினை (book verification) தான் ஒத்திவைப்பதாகவும் எமக்கு உறுதிகூறினார்.

திங்கட்கிழமை மாலை ஐந்தரைமணி இருக்கும்.நான் ரீ குடிப்பதற்காக மேலே இருந்து இறங்கிவருகின்றேன்.நூலகர் தன்னலுவலக வாசலிலே நிற்கின்றார்.என்னை அழைக்கின்றார். பதுளையில் பார்க்கவேண்டிய இடங்களைக் கூறுகின்றார்.தொலைபேசியூடாக பல்கலைக்கழக வாகனத்தை
எமக்காக ஒழுங்குசெய்கின்றார். பலவிடயங்கள் தொடர்பில் என்னோடு கதைக்கின்றார்.அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்வதற்காக அவரது துணைவர் வாசலிலே வந்துதொலைபேசியில் அழைக்கின்றார்.சசி அண்ணா வந்து மிஸ் அவர்நிக்கிறார் என்று சொல்லுகின்றார்.
அவருக்கு கையை காட்டிவிட்டு என்னோடு உரையாடுகின்றார்.நூலகத்தை உயிராக நேசிக்கின்ற, முப்பது வருடகால நூலகப்பணியனுபவம் நிரம்பப்பெற்ற , நூலகரின் நூலகத்துறை சார்ந்த இறுதி உரையாடலை, இச்சிறியேனுடன் நிகழ்த்துகின்றார் என்பதனை நான் அறியவில்லை. இன்று இதனை நினைக்க நெஞ்சம் அடைக்கின்றது.

எமக்கும் நூலகருக்கும் இடையில் முரண்பாடுகள் நிறைந்து இருக்கும்.கோபத்தில் எவரையும் நேருக்கு நேர் பேசுவது தான் மிஸ்ஸின் பலமும்,பலவீனமும்.ஆனால் எவ்வளவு பிழை என்றாலும் பேச்சுதான்.personal file க்கு கடிதம் எழுதுவதில்லை. உண்மையில் உதட்டில் தேனும் உள்ளத்தில் நஞ்சும் உடையவர்கள் உலவும் இவ்வுலகில்,மிஸ்ஸின் உதட்டில் நஞ்சும் உள்ளத்தில் தேனும் தான் இருக்கும்.ஒருவரை எவ்வளவு தூரம் பேசுறாவோ,அவ்வளவு தூரம் அவர்மீது அன்பு உடையவர்.

ஒருநாள் ஏதோகோபத்தில் தன்ர கதவுக்கு நேரே ஒருகோட்டைக்காட்டி, இதுக்குள்ளே நீ இனி வரவேண்டாம்.ஏதும் தேவை என்றா உன்ர துறைத்தலைவர் ஊடாகவோ,அல்லது உதவிப்பதிவாளர் ஊடாகவோ என்னைத்தொடர்பு கொள்ளலாம் .நீ இனி இங்கு வராதே..எனக்கோபத்தில் திட்டிவிட்டார். இச்செய்தி நூலகம்முழுதும் பரவிவிட்டது. என்னைப்பலரும் ஆற்றுப்படுத்துகின்றனர். அடுத்த முப்பதாவது நிமிடம் ..சரவணனை லைபிறறியன் வரட்டாம்..என்ற செய்தி என்னை அடைகின்றது. நான்.செல்லுகின்றேன்.

வாரும் பிள்ளை என தன் முன்உள்ள ஆசனத்தைக்காட்டி இதிலை உட்காரும் என்றுவிட்டு, இரண்டு பல்கலைக்கழக மாணவிகளின் பெயர் முகவரி எழுதப்பட்ட ஒருதாளை நீட்டுகின்றார்.வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பிள்ளைகள் என உதவிகோரி,எனது தொண்டுநிறுவனத்துக்கு விண்ணப்பம் வந்துள்ளது.வடமராட்சிப்பிள்ளைகள்.நீர் தான் விசாரித்து நாளை காலை இங்கே வந்து சொல்லவேண்டும்.உனது உறுதிப்படுத்தலில் தான் இந்த திட்டம் தங்கியுள்ளது. இவ்வாறு கோபம்வரும்போது திட்டுவதும்,பின் கோபம் சென்றபின் அரவணைப்பதும் மிஸ்ஸின் உடைய உயர்ந்தகுணம்.

நூலகவியல்துறை சார்ந்த உயர்ந்த.எண்ணங்களினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பெரும் புகழுடன் திகழ்ந்தவர்.நூலகப்பணி தொடர்பில் எம் நூலகத்தை மற்றையப்பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாக விளங்கவைத்தவர்.
மிஸ்ஸின் வாயிலிருந்து எவ்வாறு ஆங்கிலம் அருவியாக்கொட்டுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு யாழ்ப்பாணத்துக் கிராமியப்பேச்சுத்தமிழும் தவழும். மிஸ்ஸின் தமிழ்எழுத்து நடை அற்புதமானது அழகானது. நூலகரின் தமிழ்ப்பற்றுக்கு அப்பால் அவர்ஒரு தமிழ்த்தேசியவாதி.இதற்காக பல்லாண்டுகாலம் உழைத்துள்ளார்.போரில்காயமடைந்த பெண்போராளிகளின் உள ஆற்றுப்படுத்துநராக செயற்ப்பட்டுள்ளார்.
சிறந்த ஒரு பெண்ணியவாதி.ஆளுமையின் உச்சத்தில் நின்று அனைவரையும் நிர்வகித்தவர்.

தனது கண்டிப்பாலும்,அன்பாலும் நூலகப்பணியாளர்களை நூலகப்பணியில் புடமிட்டுவைத்துவிட்டுத்தான் மிஸ் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதனை உறுதியாக நம்புகின்றோம்.
நூலகத்தின் அன்னையே அமைதியாக உறங்குங்கள்.உங்கள் பணியினை நாம் தொடர்வோம்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். 

அன்னாரின் தமிழின பங்களிப்பு பல விழுதுகளை உருவாக்கி நிற்கும். 

7 hours ago, Ahasthiyan said:

இதற்காக பல்லாண்டுகாலம் உழைத்துள்ளார்.போரில்காயமடைந்த பெண்போராளிகளின் உள ஆற்றுப்படுத்துநராக செயற்ப்பட்டுள்ளார்.


சிறந்த ஒரு பெண்ணியவாதி.ஆளுமையின் உச்சத்தில் நின்று அனைவரையும் நிர்வகித்தவர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.