Jump to content

பெண் விடுதலைக்கு ஈடாக ஆண் விடுதலைக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறுவது ஏன்?


Recommended Posts

பெண் விடுதலையை அழுத்தமாக வலியுறுத்தும் பெரும்பாலானோர் கடந்து செல்லும் அல்லது அதே அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறும் ஓரிடம் உண்டு. அது, ஆண் விடுதலை. ஒரு பெண் தன்னை மீட்டெடுத்துக்கொள்ள எவ்வளவு கடினமாகப் போராடவேண்டியிருக்கிறதோ அதே அளவுக்கு ஓர் ஆணும் தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடவேண்டியிருக்கிறது. இருந்தும் முதல் போராட்டத்துக்குக் கொடுக்கப்படும் கவனம் இரண்டாவதற்குக் கொடுக்கப்படுவதில்லை.

ஆனால், இப்படிச் சொல்வது அபத்தமாக இல்லையா? உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கே ஆணாதிக்கம் அல்லவா செல்வாக்குமிக்கதாக இருக்கிறது? அந்த ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட ஒவ்வொரு பெண்ணும் கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது என்பதுதானே உண்மை!

ஓர் ஆண் எதற்காகப் போராட வேண்டும்? யாரை எதிர்த்து, எதிலிருந்து அவன் விடுபட வேண்டும்?

பெண் என்றோர் அட்டைப்பெட்டியை உருவாக்கி, அதற்கென்று சில கறாரான பண்புகளை நிர்ணயித்து அதற்குள் ஒவ்வொரு பெண்ணையும் தூக்கிப்போட்டு அடைப்பதுபோல ஆணுக்கும் ஓர் அட்டைப்பெட்டி சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் ஒவ்வோர் ஆணும் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறான். அதற்குள் அடங்கி இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறான்...

...அறிவியலால் தீர்க்கமுடியாத பெரும் குழப்பம் ஒன்று உண்டு என்பார் சிக்மண்டு ஃபிராய்டு. ஆண்மை என்றால் என்ன? பெண்மை என்றால் என்ன? 'ஒரு தெளிவான கோட்பாட்டு விளக்கத்தை அறிவியல் இதுவரை அளிக்கவில்லை' என்கிறார் அவர்.

'ஒருவர் என்னவாகப் பிறக்கிறார் என்பதற்கும் அவர் தன்னை என்னவாக உணர்கிறார் என்பதற்கும் தொடர்பு இருக்கவேண்டிய அவசியமில்லை' என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு பெண்ணாக இருப்பதற்கும் பெண்மைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதுபோல ஓர் ஆணாக இருப்பதற்கும் ஆண்மைக்கும்கூட எந்தத் தொடர்புமில்லை. ஆண்மை என்பது ஒரு கருத்தாக்கம். சமூகத்தின் கூட்டுக்கரங்கள் அதைக் கட்டமைக்கின்றன. அந்தக் கட்டுமானத்தை ஏற்று, அதற்குள் தன்னைப் பொருத்திக்கொள்ளும் ஆண், ஆண்மையுள்ள ஆணாக அங்கீகரிக்கப்படுகிறான்.

'எனக்குச் சமையல் பிடிக்கும்' என்றோ, 'நான் வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளப் போகிறேன்' என்றோ, 'என் மனைவி என்னைவிட அதிகம் படித்தவர்' என்றோ ஓர் ஆணால் நெருடலின்றி, இயல்பாகத் தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா?

முடியாது! அவ்வாறு செய்தால் தனது ‘ஆண்மை’ கேள்விக்குள்ளாக்கப்படும் என்பது அவனுக்குத் தெரியும். தீராத மன உளைச்சலுக்கு அவன் ஆட்படுகிறான். ஓர் ஆணால் தன் இயல்பான உணர்வுகளைக்கூடப் பல நேரங்களில் வெளிப்படுத்தமுடியாமல் போகிறது. 'இது, அவனை மட்டுமல்ல; அவனுடன் இருப்பவர்களையும் சேர்த்தே பாதிக்கிறது' என்கிறார்கள் உளவியலாளர்கள்...

...இனவெறுப்பை அதிகம் உமிழ்பவர்கள் ஆண்கள். வெறுப்பு அரசியலை அதிகம் முன்னெடுப்பவர்கள் ஆண்கள். மாற்று சாதியினரை, மாற்று மதத்தினரை, அயல் நாட்டினரைத் தாக்குபவர்களில் அதிகம் பேர் ஆண்கள். வீதி தொடங்கி இணையவெளிவரை எல்லா இடங்களிலும் மோசமான நடத்தையை வெளிப்படுத்துபவர்களில் அதிகம் பேர் ஆண்கள். தன்னைக் காதலிக்க மறுத்ததற்காக ஒரு பெண்ணைத் துன்புறுத்துபவர்கள், கொல்பவர்கள் பட்டியலில் ஆண்களுக்கே முதலிடம். ஒரு பெண்ணைச் சீண்டுவது பெரும் குற்றமல்ல என்று வாதிடுபவர்கள் ஆண்கள். 'பிரச்னை என்னிடம் இல்லை' என்று மற்றவர்களை நோக்கி கை நீட்டுபவர்கள் ஆண்கள்.

 

அவர்களால் சிலவற்றை வாய் திறந்து சொல்ல முடிவதே இல்லை. குறிப்பாக, பெண்களிடம். 'எனக்குச் சில பிரச்னைகள் இருக்கின்றன. என்னால் இதைச் செய்ய முடியவில்லை. எனக்கு அங்கே செல்ல பயமாக இருக்கிறது. எனக்கு இந்தப் பாடம் புரியவில்லை, விளக்குவாயா... என்னைவிட நீ நன்றாக எழுதுகிறாய், பாடுகிறாய், பணியாற்றுகிறாய். இதை எப்படி இயக்குவது என்று எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா... நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னிப்பாயா?'

...'நீ காலம் காலமாக அடங்கி நடப்பவள், அமைதியாக இரு' என்று இன்றும் சொல்கிறது பெண் பெட்டி. 'வரலாற்றில் நீ என்றென்றும் முதல் பாலினமாக இருந்து வந்திருக்கிறாய். வேட்டையாடியிருக்கிறாய். போர் தொடுத்திருக்கிறாய். எதிரிகளை அடிமைப்படுத்தியிருக்கிறாய். பல நாடுகளை ஆண்டிருக்கிறாய். எங்கெங்கும் நீயே அதிகாரமிக்கவன்' என்று இன்னமும் போலிப் பெருமிதங்களை ஊட்டிக்கொண்டிருக்கிறது ஆணின் பெட்டி.

இந்தப் பெருமிதங்களிலிருந்து ஒவ்வோர் ஆணும் விடுபடவேண்டியிருக்கிறது. ஆண்மை என்னும் கருத்தாக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டம் ஒன்றை அவன் முன்னெடுக்கவேண்டியிருக்கிறது. வலிமை, துணிவு, அதிகாரம், ஆதிக்கம், முதல் பாலினம் போன்ற பண்புகளைத் தீவிர மறுவாசிப்புக்கு உட்படுத்தி அவற்றையெல்லாம் களையவேண்டியிருக்கிறது.

ஆண் என்னும் பெட்டியிலிருந்து ஒவ்வோர் ஆணும் வெளியில் வந்தால்தான் பெண் என்னும் பெட்டியிலிருந்தும் பெண்களால் வெளிவர இயலும். முதலாவது நடக்காமல் இரண்டாவது நடக்கப்போவதில்லை.

https://www.vikatan.com/lifestyle/women/gender-inequality-occurs-even-for-freedom

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துருவாக்கத்துக்கான விதையை யாழில் விதைத்த போது சந்தித்த விளைவுகளை இப்ப சிந்தித்துப் பார்க்க முடிகிறது. அன்று வசை பாடியவர்களில்.. பலர் இன்று யாழில் இல்லை. இருந்திருந்தால்.... இதைப் படித்துச் சிந்தித்துப் பார்த்திருப்பர்.. தாம் கடந்து வந்து பதிந்த கருத்துக்களை.

ஆண்களுக்கு எதிரான பலதரப்பட்ட சமூக அழுத்தங்கள்.. பெண்களால் இழைக்கப்படும் வன்முறைகள்.. சமூகத்தால் திணிக்கப்படும் வேலைப்பளுக்கள்.. பொறுப்புக்கள்.. என்று எத்தனையோ.. விடயங்கள் ஆண் என்பதற்காக.. ஆண் தனியொருவனாக சுமக்க வேண்டி இருப்பது கூட ஆண் விடுதலைக்கான அடிப்படை சிந்தனையோட்டத்தின் ஆரம்பமாகும். 

வரவேற்கத்தக்க சிந்தனை ஓட்டம். 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான ஆண்கள் தமது இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தாமல் விடுவதால் அது அந்த ஆணை மட்டுமல்ல அந்த ஆணை சார்ந்தோரை எந்தளவு தூரம் பாதிக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள்?

நல்லதொரு பகிர்வு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பெண்ணாவது ஆணை பத்து மாதங்களுக்கு மேல் அடக்கி வைத்திருந்திருக்கிறாளா......அதுக்கு மேலேயும் நான் பெண்ணிடம் அடிமையாய்த்தான் இருப்பேன் என்று அடம்பிடித்தால் அது யார் குற்றம்.......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து மாதம் இல்லை பரலோகத்தில் இருக்குமட்டும் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என என்னும் பெண்களும் இருக்கிறார்கள்.. அப்படியானவர்களிடம் இருந்து வெளியே வரமுடியாமல், “சமூக அந்தஸ்து, பிள்ளைகள்” , என்ற பெட்டிக்குள் சிக்கி இருப்பவர்களை பற்றி எங்களுக்கு தெரிவது இல்லை ஏனெனில் அவர்கள்(அந்த ஆண்கள்) இதைப்பற்றி வெளியே சொல்லமுடியாமல் அவர்களுடைய இயல்பும், சமூகம் அவர்களுக்கு கொடுத்த “ ஆண், ஆண்மை” என்ற தோற்றமும் தடுத்துவிடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண், ஆணாக😉 இல்லாத விடத்து பெண்ணிடம் அடிமையாய்த்🙁 தான் இருக்க வேண்டும்...யாரில் பிழை😐 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாமே.. அடிமைப்பட்ட பெண்ணிடம் போலியாக ஒரு முகம், தனக்காக இன்னொரு முகம் கொண்டு வாழலாம். 

ஆனால் இந்த பிரச்சனைகளை முறையான ஆலோசனை/ உதவிகளை  “ஆண்” எனபதற்காக நாடாதவிடத்து வேறு விதமான பழக்கங்களுக்கு அடிமையாகி, மன உளைச்சலால் மனநிலை பாதிக்கப்பட்டு நோயாளி ஆகி  சிறுவயதிலேயே(40 -50 வயது) மரணமடைவார்கள், இல்லை தற்கொலை செய்வார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த ஆணை சார்ந்தவர்கள் மட்டுமே. 

அதனால்தான் ஆண்களது விடுதலையும் அவசியமாகிறது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.