Jump to content

நான்கு ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்


Recommended Posts

நான்கு ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்

By
 Mohamed Shibly
 -
 

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துடன் இலங்கை அணி அதிக போட்டிகள் கொண்ட ஆண்டாக 2020 ஆம் ஆண்டை ஆரம்பிக்கவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கை அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் ஆரம்பமாகவுள்ளது. 

இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடருக்கு இலங்கை அணி தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (27) அறிவித்தது.

புத்தாண்டை ஆரம்பித்து இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜனவரி 5 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அந்த போட்டிகள் ஐ.சி.சி. எதிர்கால போட்டி அட்டவணையில் (FTP) உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.    

எவ்வாறாயினும் ஜனவாரி மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே அணி இந்திய சுற்றுப்பயணத்திற்காக தயாராக இருந்தபோதும் (மூன்று டி-20 போட்டிகள்) ஜிம்பாப்வே அணிக்கு கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி விதிக்கப்பட்ட சர்வதேச போட்டித் தடை காரணமாக அந்த போட்டிகளை கைவிடுவதற்கு வேண்டி ஏற்பட்டது. அதனால் அந்த தொடர் நடத்த ஏற்பாடாகி இருந்த காலத்தில் இலங்கையுடன் டி-20 போட்டித் தொடர் ஒன்றை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்தது.  

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. எதிர்கால போட்டிகளுக்கான போட்டி அட்டவணையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஜிம்பாப்வே அணிக்குள் இருந்த முரண்பாடுகள் காரணமாக அந்த தொடர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை மூலம் இறுதி முடிவொன்று எடுக்கப்படாமல் இருந்தபோதும் ஜிம்பாப்வே அணிக்கு ஐ.சி.சி. இனால் விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை கடந்த ஒக்டோபர் மாத்தில் நீக்கப்பட்டதை அடுத்து அந்தத் தொடரை நடத்துவதற்கு முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று உறுதி செய்துள்ளது.     

“இலங்கை அணிக்கு இருக்கின்ற அடுத்த டெஸ்ட் தொடர் ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறுகின்ற டெஸ்ட் தொடராகும். இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஐ.சி.சி மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட சர்வதேச போட்டித் தடைக்கு பின்னர் அந்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்” என்று இலங்கை கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இந்த சுற்றுப்பயணம் எதிர்பார்த்ததுபோன்று இடம்பெற்றால் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதிக்கு பின்னர் ஜிம்பாப்வேயில் டெஸ்ட் போட்டித் தொடர் ஒன்று இடம்பெறுகின்ற முதல் சந்தர்ப்பமாக அமையும்.  

இலங்கை அணி மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே கடைசியாக இடம்பெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற்றிருப்பதோடு 2016 நவம்பர் மாதத்திற்கு பின்னர் இலங்கை அணி ஜிம்பாப்வேயுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாகவும் அமையும். 

http://www.thepapare.com/sri-lanka-confirm-cricket-tour-of-zimbabwe-tamil/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த‌ நாட்டில் வைச்சு இல‌ங்கை அணியை சிம்மாவே வென்ற‌து / சொந்த‌ நாட்டில் சிம்பாவே அணி ந‌ல்லா விளையாடுவின‌ம் 💪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.