Jump to content

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு


Recommended Posts

Tamil_News_Dec27_2019__96172511577607.jpg

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2  இடங்களில் துறைமுகம் இயங்கி வருகிறது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  3 விசைப்படகுகளில் 13 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 13 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்திய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு  சென்றனர்.
மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=552279

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

 

Link to comment
Share on other sites

2 hours ago, Kavi arunasalam said:

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

 

யார் தவறு....? தமிழ்நாட்டிற்கு உட்பட்ட பகுதியை சிறீலங்காவிற்கு கொடுத்தது யார்...? தமிழ்நாடு கொடுக்கவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

ஜெகதாபட்டினத்தையும் இலங்கைக்கு தாரை வார்த்தாகிவிட்டதா..?

சொல்லவே இல்லை..! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

யார் தவறு....? தமிழ்நாட்டிற்கு உட்பட்ட பகுதியை சிறீலங்காவிற்கு கொடுத்தது யார்...? தமிழ்நாடு கொடுக்கவில்லையே.

Paanch,

நிலத்தை இன்னுமொரு நாட்டுக்குத் தாரை வார்ததுக் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. மத்திய அரசு கச்சதீவை சிறிலங்காவிற்கு கொடுத்த போது மாநிலத்தில் முதல்வராக இருந்தது கலைஞர் மு.க.கருணாநிதி.

1 hour ago, ராசவன்னியன் said:

ஜெகதாபட்டினத்தையும் இலங்கைக்கு தாரை வார்த்தாகிவிட்டதா..?

பயந்து விடாதீர்கள் ராசவன்னியன். ஜெகதாபட்டினம் அங்கேயே இருக்கிறது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டது சிறீலங்கா கடல்எல்லைக்குள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் வந்ததால் ஒருவேளை குழம்பி விட்டீர்களோ  என்று தெரியவில்லை ராசவன்னியன்.

இங்கே நான் இணைத்திருக்கும் படம் 2014இல் வரைந்தது

7-BCAC3-CB-84-AE-4946-9-B00-2-E97357-E9-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

....

பயந்து விடாதீர்கள் ராசவன்னியன். ஜெகதாபட்டினம் அங்கேயே இருக்கிறது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டது சிறீலங்கா கடல்எல்லைக்குள்

மீனவர்கள் கைது செய்யப்பட்டது இலங்கையின் கடல் எல்லைக்குள் என்பதை எப்படி நிறுவுவீர்கள்..?

இலங்கை அரசு சொல்வதை வைத்துதானே..?

அப்படி பார்த்தால் மரணித்த பல்வேறு போராளிகள் அனைவரும் 'பயங்கரவாதிகள்' என இலங்கை அரசு சொல்வதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே..?

இதுவரைக்கும் 'ஈழத்தில் கொடுமைகளே நடக்கவில்லையென' இலங்கை அரசு சர்வதேசத்திற்கு சொல்லி வருகிறது.. ஏன் மறுக்கிறீர்கள்..?

பொந்திய அரசும், இலங்கை அரசும் இதுவரை சொல்லிவரும் செய்தியான 'தமிழர்கள் யாரும் இலங்கையில் கொல்லப்படவில்லை, இறந்தது பயங்கரவாதிகள்தான்' என அவர்கள் சொல்வதை தமிழக தமிழர்களாகிய நாங்களும் அப்படியே நம்பலாமா?

13 hours ago, Kavi arunasalam said:

... அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

அடுத்தவன் எல்லை என்கிறீர்களே..? அடுத்தவன் நாட்டில் வன்முறையில், குற்றங்களில் ஈடுபட்டோரை சிறையிலடைத்தால் ஈழத்தமிழர்களுக்கு, தமிழகம் துரோகம் செய்துவிட்டது என விசனப்படுகிறீர்கள்.

என்ன உங்களின் மனநிலை?

சந்தர்பத்திற்கு/அனுகூலத்திற்கு ஏற்றவாறு கருத்து சொல்லப்படாது..! 🤪😡

பல்வேறு சமயங்களில் இலங்கை கடற்படை ராமேஸ்வரம் கடல் எல்லைக்குள்ளும், பொந்திய கடல் எல்லைக்குள்ளும் தமிழக மீன்வர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது.

வரலாற்று தவறுகளில், பொந்தியா இலங்கைக்கு தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்தது பெரிய இழப்பும், பின்னடைவும் ஆகும். பொந்தியாவிடம் தமிழகத்தின் பகுதிகள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல!

கையாலாகாத, வக்கற்ற தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் cool..cool.. எதுக்கு இப்போ கோபம்?

அரசியலில் பேசுவதற்கு பல இருக்கிறது. அதைப் பற்றி பேச இது இடமல்ல. இங்கு சந்தர்ப்ப வாதமும் துளியும் இல்லை.

முதலில் ஒன்றை மட்டும்  சொல்லிவிடுகிறேன் தமிழகத்திற்கு மட்டும் கச்சதீவு சொந்தமானது என்பது தவறு.

இந்தியா கச்சதீவை மட்டுமல்ல நேபாளத்தில் இருந்த புத்தரின் பல்லையும் சிறிலங்காவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது.

2 hours ago, ராசவன்னியன் said:

கையாலாகாத, வக்கற்ற தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

இப்படிச் சொன்னீர்களே ராசவன்னியன்அது ஓரளவுக்குச் சரி.

கச்சதீவைகொடுக்கும் போதே தமிழக மக்கள் கிளர்ந்து எழவில்லேயே அங்கே தவறு தொடங்குகிறது. மீனவர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் வரும் போது அதை ஓட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்ககவில்லையே என்பது வேதனையானது. ஜல்லிகட்டு தடைக்கெதிராக மெரினாவை முற்றுகையிட்ட தமிழக மக்களுக்கு மீனவர்களுக்காக ஏன் ஒரு பாரிய போராட்டத்தை நடத்த முடியவில்லை என்பது ஒரு கேள்வி.

ரோலர்களைக் கொண்டு ஆழ்கடல் மீன்களை பிடிப்பதால் மீன்கள் அற்றுப் போவதுடன் அது தொப்புள் கொடி உறவு என்று சொல்லும் ஈழத்தமிழனையும் பாதிப்புக்கள்ளாக்குகிறதே. அவனின் மீன்பிடி தொழில் பாதிப்படைகிறதே. அவனின் வாழ்வாதாரம் அழிக்கப் படுகிறதே. ஈழத் தமிழ் கடலில் ஒரு பக்கம் தென் இலங்கை சிங்களவர்கள் வந்து வாடி அமைத்து மீன் பிடிக்கிறார்கள். மறு புறம் தென்னகத் தமிழர் என்றால் அவன் என்ன செய்ய முடியும்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

ரோலர்களைக் கொண்டு ஆழ்கடல் மீன்களை பிடிப்பதால் மீன்கள் அற்றுப் போவதுடன் அது தொப்புள் கொடி உறவு என்று சொல்லும் ஈழத்தமிழனையும் பாதிப்புக்கள்ளாக்குகிறதே. அவனின் மீன்பிடி தொழில் பாதிப்படைகிறதே. அவனின் வாழ்வாதாரம் அழிக்கப் படுகிறதே. ஈழத் தமிழ் கடலில் ஒரு பக்கம் தென் இலங்கை சிங்களவர்கள் வந்து வாடி அமைத்து மீன் பிடிக்கிறார்கள். மறு புறம் தென்னகத் தமிழர் என்றால் அவன் என்ன செய்ய முடியும்

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய செய்திதான் ஆனாலும் இணைப்பதில் தவறில்லை

இழுவை மீன்பிடி, இந்திய மீன்பிடிக்கு எதிராக யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வட பகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்களினதும், உள்ளுர் மீனவர்களினதும் இழுவைப் படகு மீன்பிடி தொழிலைத் தடைசெய்யக் கோரியும், வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கக் கூடாது எனக் கோரியும் வடமாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

160712074617_srilankafishermenjaffna_640

வடமாகாண மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு எதிரில் கூடிய வடமாகாண மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய மீனவர்களின் வருகையை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்குரிய தீரமானம் ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வடமாகாண சபை முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் வடமாகாண ஆளுனர் சிறிசேன குரே, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160712_fishingsrilanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kavi arunasalam said:

...முதலில் ஒன்றை மட்டும்  சொல்லிவிடுகிறேன் தமிழகத்திற்கு மட்டும் கச்சதீவு சொந்தமானது என்பது தவறு..

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.

கச்சதீவு இந்திய உரிமை என்பதற்கு சான்று:

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

விக்கிப்பீடியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும்

அப்படியான  நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மீன் பிடிப்பவர்கள் எதற்காக சுற்றி சுற்றி இலங்கையின் எல்லைக்குள்ளேயே வருகிறார்கள்?
இந்திய மீனவர்கள் தங்களை வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசை கொண்டு எதற்காக கேட்க வேண்டும்?

 

14 minutes ago, Kavi arunasalam said:

இது ஒரு பழைய செய்திதான் ஆனாலும் இணைப்பதில் தவறில்லை

யாழ் மீனவர்கள் நிலைமை இப்போதும் துயரம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்திய மீனவர்கள் தங்களை வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசை கொண்டு எதற்காக கேட்க வேண்டும்?

விதைத்தவர்  அவர்கள் என்று நினைக்கிறார்கள் நீங்களும் அவர்கள் போல் செய்ய அவர்கள் வாதம் அடிபட்டு போகும் அல்லவா ?

புலிகள் காலத்தில் உள்  கடலில் ரோலர் போட  தடை இருந்தது இப்போது அந்த முறை ஏன் இல்லை ?

கொஞ்சம் விளங்குக்குங்க  ராசா மாரே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

நன்றி ராசவன்னியன்.

இந்தத் தகவல்களை நான் தெரிந்திருக்கிறேன். பழையதை எல்லாம் பார்க்கப் போனால் ஈழத்தை சோழ வாரிசுகளுக்கு நாம் கொடுக்க வேண்டிவரும்.

கடல் எல்லையை இலங்கை இந்தியா இரண்டும் கணக்கிட்டு (அது சரியான முறையில் அளவிடப்படவில்லை என்ற வாதம் ஒன்று இருக்கிறது) இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கச்சதீவை பொதுவாகவே பயன்படுத்தின. மீனவர்கள் இளைப்பாற, வலைகளை காயப் போட, ஆண்டொன்றுக்கு ஒரு அந்தோணியார் திருவிழா கொண்டாட என அது வழிவகுத்தது.

ஆனால்  முழுமையாக இலங்கைக்கு இந்தியா கச்சதீவை கையளித்தபின் அங்கே இந்தியா உரிமையை இழந்து விடுகிறது என்பதுதானே உண்மை.

கொடுத்ததை திரும்பப் பெற  இந்தியாவால் முடியாது என்ற நிலையில் அது தமிழக மாநில அரசினூடாக தமிழக மீனவர்களுக்கு  மாற்றுவழியைக் காண்பிக்க வேண்டும். வெறுமனவே இலங்கை கடற்படை தாக்குகிறது, கைது செய்கிறது, சுடுகிறது என்று மீனவர்களை புலம்ப விட்டு கை கட்டிக் கொண்டு நிற்பதில்  எதுவுமே நடக்கப் போவதில்லை. மற்றும்படி இந்த நிலையை பெரிதாக்கி  கடல், நீர்பபறவை போன்ற  சினிமாப் படங்களை உருவாக்கி காசு பார்கக மணிரத்தினம், சீனு ராமசாமி போன்றோர்களுக்குத்தான் பயன்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

நன்றி ராசவன்னியன்.

இந்தத் தகவல்களை நான் தெரிந்திருக்கிறேன். பழையதை எல்லாம் பார்க்கப் போனால் ஈழத்தை சோழ வாரிசுகளுக்கு நாம் கொடுக்க வேண்டிவரும்.

கடல் எல்லையை இலங்கை இந்தியா இரண்டும் கணக்கிட்டு (அது சரியான முறையில் அளவிடப்படவில்லை என்ற வாதம் ஒன்று இருக்கிறது) இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கச்சதீவை பொதுவாகவே பயன்படுத்தின. மீனவர்கள் இளைப்பாற, வலைகளை காயப் போட, ஆண்டொன்றுக்கு ஒரு அந்தோணியார் திருவிழா கொண்டாட என அது வழிவகுத்தது.

ஆனால்  முழுமையாக இலங்கைக்கு இந்தியா கச்சதீவை கையளித்தபின் அங்கே இந்தியா உரிமையை இழந்து விடுகிறது என்பதுதானே உண்மை.

கொடுத்ததை திரும்பப் பெற  இந்தியாவால் முடியாது என்ற நிலையில் அது தமிழக மாநில அரசினூடாக தமிழக மீனவர்களுக்கு  மாற்றுவழியைக் காண்பிக்க வேண்டும். வெறுமனவே இலங்கை கடற்படை தாக்குகிறது, கைது செய்கிறது, சுடுகிறது என்று மீனவர்களை புலம்ப விட்டு கை கட்டிக் கொண்டு நிற்பதில்  எதுவுமே நடக்கப் போவதில்லை. மற்றும்படி இந்த நிலையை பெரிதாக்கி  கடல், நீர்பபறவை போன்ற  சினிமாப் படங்களை உருவாக்கி காசு பார்கக மணிரத்தினம், சீனு ராமசாமி போன்றோர்களுக்குத்தான் பயன்படும்.

திரு.கவி ஐயா,

மன்னிக்கவும், தங்களின் 'அணுகுமுறை சரியாக இல்லை'யென எனது தாழ்மையான அபிபிப்ராயம்.

"தமிழகத்தின் கச்சத்தீவு உரிமைக்கான வரலாற்று உண்மைகளை மறுத்து புறந்தள்ளி, கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தாகிவிட்டது மறந்துவிடுங்கள்" என தாங்கள் சொல்வதென்றால்,

இப்படியும் சொல்லலாம்தானே? vil-ddispute.gif

"இலங்கையில் ஈழத்தமிழர்களின் பல்லாண்டு கால தாயக உரிமையை புறந்தள்ளி, ஆங்கிலேயர்கள் ஈழத்தை சிங்களவர்களிடம் கையளித்துவிட்டார்கள், அதனால் ஈழத்தமிழர்கள் தனி தாயகத்தின் உரிமையை இழந்துவிடுகிறார்கள் என்பதும்,  நீங்கள் அவர்களிடமே வாழ்ந்துகொள்ளுங்கள் தனிநாடு கேட்காதீர்கள்" என நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

'கொடுத்ததை திரும்ப பெறமுடியாது, சிங்கள அரசினூடாக ஏதாவது மாற்று வழிகளை தேடுங்கள், தமிழர்களே..! சிங்களவர்கள் எங்களை தாக்குகிறார்கள், எங்களை இரண்டாம்தர குடிகளாக நடத்துகிறார்கள்' என ஈழத்தமிழர்கள் புலம்புவதிலும் அர்த்தம் இல்லைதானே?

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தையும் தங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், கவி ஐயா..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

..கடல் எல்லையை இலங்கை இந்தியா இரண்டும் கணக்கிட்டு (அது சரியான முறையில் அளவிடப்படவில்லை என்ற வாதம் ஒன்று இருக்கிறது) இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கச்சதீவை பொதுவாகவே பயன்படுத்தின. மீனவர்கள் இளைப்பாற, வலைகளை காயப் போட, ஆண்டொன்றுக்கு ஒரு அந்தோணியார் திருவிழா கொண்டாட என அது வழிவகுத்தது.

இந்த ஒழுங்கும் ஒப்பந்தப்படி தமிழக தமிழர்களுக்கு நிரந்தரமில்லை.

ஒப்பந்தம் கையெழுத்தான வருடத்திலிருந்து பத்து வருடங்களுக்கு மட்டுமே 'தமிழக தமிழர்களுக்கு கச்சத்தீவில் மீனவர்கள் பொதுவாக பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது' என படித்த ஞாபகம் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இலங்கையில் ஈழத்தமிழர்களின் பல்லாண்டு கால தாயக உரிமையை புறந்தள்ளி, ஆங்கிலேயர்கள் ஈழத்தை சிங்களவர்களிடம் கையளித்துவிட்டார்கள், அதனால் ஈழத்தமிழர்கள் தனி தாயகத்தின் உரிமையை இழந்துவிடுகிறார்கள் என்பதும்,  நீங்கள் அவர்களிடமே வாழ்ந்துகொள்ளுங்கள் தனிநாடு கேட்காதீர்கள்" என நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

ராசவன்னியன், உங்கள் பதில் குழப்புகிறது.

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த போது அது இலங்கையில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒருங்கே கிடைத்தது. அப்பொழுது ஆட்சியில் பிரதிநிதித்துவ உரிமை ஐம்பதுக்கு ஐம்பது என்ற ஒரு கருத்து தமிழர் தரப்பால் வைக்கப்பட்டது. ஆனால் இன விகிதாசார அடிப்படையில் அது 68:32 என்றானது. இது ஆட்சியில் மட்டுமே. நாங்கள் எங்கள் நிலத்தில் இருந்து சேர்ந்து வாழவே விரும்பினோம். மற்றும்படி தமிழர்கள் நிலத்தை ஆங்கலேயர்கள் சிங்களவர்களிடம் எடுத்துக் கொடுத்துவிடவில்லை. பின்னாளில் சிங்களவர்கள்தான் எங்களது நிலங்களை ஆக்கிரமித்தார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில் கை வைத்தார்கள், அரசியல் பலம் கொண்டு நசுக்கினார்கள். அதனால் எங்கள் நிலத்திற்காகவும் உரிமைக்காகவும் எங்கள் நிலத்திலேயே நின்று போராட வேண்டிய சூழல் எங்களுக்கு உருவானது. இந்தப் போராட்டத்தை  இந்தியா எப்படி பயன்படுத்திக் கொண்டது என்பது கண்கூடு. அந்த விவகாரம் இங்கு தேவையில்லை. சமீபத்தில் கூட பிரித்தானியப் பிரதமர்   ஈழத்தமிழர் உரிமை பற்றி பேசி இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

ஈழத்தையும், கச்சதீவையும் நீங்கள் ஒப்பிடுவது வேடிக்கை. மீண்டும் சொல்வேன் கச்சதீவைஏன் இலங்கைக்குக் கொடுத்தீர்கள்?” என்று நீங்கள் கேட்க வேண்டிய இடம் இந்தியா. அது கூட பலன் தராது. முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இது சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்து எதிர்மறையான முடிவையே பெற்றார்.

கச்சதீவு பூர்வீகமாக இந்தியாவுக்குச் சொந்தம் என்றாலும் சட்டப்படி அதை இலங்கைக்குக் கொடுத்தாயிற்று. இனி அது எங்களுடையது என்று அடம் பிடிப்பது அழகல்ல. மேலும் நீங்கள் குறிப்பிட்ட பத்து வருட ஒப்பந்தம் முடிந்து கச்சதீவை இலங்கைக்கு முழுமையாகக் கொடுத்த பின்னரே அவர்களது ஆட்டம் அங்கே ஆரம்பமானது.

ஒரு நிலத்தை ஒருவருக்கு இனாமாகவோ அல்லது பணத்துக்காகவோ சட்டப்படி எழுதிக் கொடுத்துவிட்டு இது எங்கள் பாட்டன் சொத்து ஆகவே என்னுடையதுதான் என்று எப்படி உரிமை கொண்டாட முடியாதோ அதுபோல்தான் இதுவும்.

ராசவன்னியன், இந்த விடயத்தில் வாதாட என்னைப் பொருத்தவரையில் எதுவும் இல்லை. உங்களைப் போல் எனக்கும் நிறைய வேலைகள் இருக்கிறது.

விடை பெறுகிறேன்.

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து.😏

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Iஇந்திய மீன்பிடி முறைகள் முற்றுமுழுதாக மீன்வளத்திற்குமே அழிவைத் தருவது. அவர்களின் மீன்பிடி முறைகளில் முழுமையான மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே இவ்வாறான பிரச்சனைகளுக்கு நீண்டகால தீர்வை தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

பெருமாள்,

உங்கள் கருத்தது சற்று  தெளிவில்லாமல் இருக்கிறது. 

1] இந்திய மீனவர்கள் ஏன் இலங்கை கடற்பரப்பில் தமது மீன்பிடிப்பை செய்ய முனைகின்றனர் ? அங்கே மீன்வளம் குறைவாகவும் இங்கே அதிகமாக இருப்பதுதானே காரணமாக இருக்க முடியும்.

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்க அனுமதித்தல் இப் பிரச்சனைக்கு தீர்வாக முடியும் என கருதுகிறீர்களா ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

அவர்கள் மீன்கள் இனப் பெருக்க காலத்தில் தங்கட பக்கம் மீன் பிடிக்க மாட்டார்கள் ...எல்லை தாண்டி வந்து இங்கால பக்கம் தான்  மீன்  பிடிப்பார்கள் 
மீன் வளம் அழியுது....மீனவர்கள் வறுமை கோட்டுக்குள் இருந்து கொண்டு கஷ்டப் படுகிறார்கள்...மீன் பிடிக்க நவீன வசதிகள் கூட எங்கட மீனவருக்கு இல்லை...அதை பற்றி சிலருக்கு அக்கறை இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

..உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து.😏

சரி, அடுத்த திரியில் பேசலாம்..

வாழ்த்துக்களுக்கு நன்றி,

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிவருவதற்கான காரணம் என்ன ? அங்கே போதிய மீன் வளம் இல்லை என்பதுதான் காரணம். 

அப்படி மீன் வளம் இன்மைக்கான அல்லது அழிந்ததற்கான காரணம் என்ன ? 

இந்தக் கேள்விக்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் இலங்கையும் இந்தியாவும் ஒரே கண்டமேடையிலேதான் அமைந்துள்ளன. அப்படி இருக்கயில் ஏன் தென் இந்திய கண்டமேடையில் மட்டும் மீன் வளம் இல்லை ?

உண்மையில் இதற்கான விடையில்தான்  பிரச்சனைக்கான தீர்வும் இருக்கிறது.

இந்திய கண்ட மேடையில் மீன்வளம் அருகியது , அழிந்தது  குறிப்பாக இந்திய மீனவர்களின் பேராசைதான் காரணம்.

It's a man made disaster . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிவருவதற்கான காரணம் என்ன ? அங்கே போதிய மீன் வளம் இல்லை என்பதுதான் காரணம். 

அப்படி மீன் வளம் இன்மைக்கான அல்லது அழிந்ததற்கான காரணம் என்ன ? 

இந்தக் கேள்விக்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் இலங்கையும் இந்தியாவும் ஒரே கண்டமேடையிலேதான் அமைந்துள்ளன. அப்படி இருக்கயில் ஏன் தென் இந்திய கண்டமேடையில் மட்டும் மீன் வளம் இல்லை ?

உண்மையில் இதற்கான விடையில்தான்  பிரச்சனைக்கான தீர்வும் இருக்கிறது.

இந்திய கண்ட மேடையில் மீன்வளம் அருகியது , அழிந்தது  குறிப்பாக இந்திய மீனவர்களின் பேராசைதான் காரணம்.

It's a man made disaster . 

👍

உண்மை காரணத்தை தெரிவிக்கும் கருத்து.
இந்திய மீனவர்கள் பேராசைகாரணமாக தங்களது கடல் வளந்தை அழித்த பின்பு ஏழை ஈழத்து மீனவர்களின் வயிற்றில் அடிக்க எல்லை தாண்டி இங்கே வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

👍

உண்மை காரணத்தை தெரிவிக்கும் கருத்து.
இந்திய மீனவர்கள் பேராசைகாரணமாக தங்களது கடல் வளந்தை அழித்த பின்பு ஏழை ஈழத்து மீனவர்களின் வயிற்றில் அடிக்க எல்லை தாண்டி இங்கே வருகிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) இந்திய மீனவர்களின் சமூகச் சூழலும் அதனோடிணைந்த அவர்களின் சிந்தனை முறைகளும். 

அவர்களது சமூகம்  கல்வி அறிவு குறைந்த, வெளித்தொடர்புகள் குறைந்த அதன் காரணமாக நவீன வளர்ச்சி, நவீன தொழில் நுட்ப அறிவு குறைந்த, சுற்றுச் சூழல் பற்றிய ஆர்வம் குறைந்த அல்லது அக்கறை அற்ற சமூகமாக உள்ளது . அதனால் அவர்களுக்கு அவர்களின் தொழில் முறையில் அக்கறை இல்லை.

2) அவர்களின் தொழில்  முறைமையும் அவர்கள் உபயோகப்படுத்தும் தொழில் நுட்பமும்.

எங்எகள் எல்லோருக்கும் மீன்பிடி என்றவுடன் மனதில் வருவது கடலில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டும்தான். அது பெருமளவு உண்மைதான். ஏனென்றால் இலங்கையின் மீன்பிடி முறை மிகப் பெரும்பான்மையாக மீன், இறால் மற்றும் கடலட்டையுடன் (மிகக் குறைந்த அளவில்) நின்றுவிடுகிறது. ஆனால் தென் இந்திய மீன்பிடி முறை இவற்றிற்கும் மேலதிகமாக சங்கு, சிப்பி (Oysters ) போன்றவற்றிற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கிறது. இவை மீன்களின் பெறுமதியைவிட அதிகம பெறுமதி மிக்கவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடலட்டைகள் சுழியோடுதலின் மூலமாகவே பிடிக்கப் படுகிறது. ஆனால் தென் இந்திய மீனவர்கள் கடலட்டை, சங்கு மற்றும் சிப்பி போன்றவ்ற்றிற்கு இழுவைப் படகுகளைப் பாவிப்பர்.  இந்த முறையை பிரயோகிப்பதால் கடலில் உள்ள பவளப் பாறைகள் முற்றுமுழுதாக அழிவடைந்து விடுகின்றன.  மீன்களின் இனப் பெருக்கத்திற்கு பவளப் பாறைகள் இன்றியமையாதனவென்று எல்லோருக்குமே தெரியும். 

இதனை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஓர் இரவில் சராசரியாக 300 - 500 வரையிலான இழுவைப் படகுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும்,  இரவு முழுவதும் தடை செய்யப்பட்ட வலைகளை பாவித்து , மிகவும் சக்தி மிக்க  (6-12 valves Engine ) இழுவைப் படகின் உதவியுடன் மீன் பிடித்து (றோளர் அடித்தல்) விடிந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று விடுகிறார்கள்

அவர்கள் ஏற்படுத்தும் அழிவின் அளவு என்ன ?

அவ்விடத்தில் ஏதேனும் மிஞ்சுமா ?

அப்பிரதேசத்தில் பாரம்பரிய முறைப்படி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நிலை என்ன ? 

தென் இந்திய மீனவர்களிடம் எத்தனை ஆயிரம் இழுவைப் படகுகள் உள்ளன ?

வருடத்தில் ஆகக் குறைந்தது ஒன்பது மாதங்களும் தொடர்ச்சியாக, இத்தனை ஆயிரம் இழுவைப் படகுகளும் தென் இந்திய கட்ற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவின் அளவு என்ன ?

இதனை எவ்வாறு அழைப்பீர்கள் ?

பகற் கொள்ளை ?

சூறையாடல் ?

கற்பழித்தல் ?

உண்மையில் இவர்கள் கடலை கற்பழித்த பின்னர் (கடலின் கற்பை அழித்த பின்) படுகொலை செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.