Jump to content

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு


Recommended Posts

Tamil_News_Dec27_2019__96172511577607.jpg

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2  இடங்களில் துறைமுகம் இயங்கி வருகிறது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  3 விசைப்படகுகளில் 13 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 13 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்திய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு  சென்றனர்.
மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=552279

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

 

Link to comment
Share on other sites

2 hours ago, Kavi arunasalam said:

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

 

யார் தவறு....? தமிழ்நாட்டிற்கு உட்பட்ட பகுதியை சிறீலங்காவிற்கு கொடுத்தது யார்...? தமிழ்நாடு கொடுக்கவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

இதில் அச்சப்பட என்ன இருக்கிறது?  அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

ஜெகதாபட்டினத்தையும் இலங்கைக்கு தாரை வார்த்தாகிவிட்டதா..?

சொல்லவே இல்லை..! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

யார் தவறு....? தமிழ்நாட்டிற்கு உட்பட்ட பகுதியை சிறீலங்காவிற்கு கொடுத்தது யார்...? தமிழ்நாடு கொடுக்கவில்லையே.

Paanch,

நிலத்தை இன்னுமொரு நாட்டுக்குத் தாரை வார்ததுக் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. மத்திய அரசு கச்சதீவை சிறிலங்காவிற்கு கொடுத்த போது மாநிலத்தில் முதல்வராக இருந்தது கலைஞர் மு.க.கருணாநிதி.

1 hour ago, ராசவன்னியன் said:

ஜெகதாபட்டினத்தையும் இலங்கைக்கு தாரை வார்த்தாகிவிட்டதா..?

பயந்து விடாதீர்கள் ராசவன்னியன். ஜெகதாபட்டினம் அங்கேயே இருக்கிறது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டது சிறீலங்கா கடல்எல்லைக்குள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் வந்ததால் ஒருவேளை குழம்பி விட்டீர்களோ  என்று தெரியவில்லை ராசவன்னியன்.

இங்கே நான் இணைத்திருக்கும் படம் 2014இல் வரைந்தது

7-BCAC3-CB-84-AE-4946-9-B00-2-E97357-E9-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

....

பயந்து விடாதீர்கள் ராசவன்னியன். ஜெகதாபட்டினம் அங்கேயே இருக்கிறது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டது சிறீலங்கா கடல்எல்லைக்குள்

மீனவர்கள் கைது செய்யப்பட்டது இலங்கையின் கடல் எல்லைக்குள் என்பதை எப்படி நிறுவுவீர்கள்..?

இலங்கை அரசு சொல்வதை வைத்துதானே..?

அப்படி பார்த்தால் மரணித்த பல்வேறு போராளிகள் அனைவரும் 'பயங்கரவாதிகள்' என இலங்கை அரசு சொல்வதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே..?

இதுவரைக்கும் 'ஈழத்தில் கொடுமைகளே நடக்கவில்லையென' இலங்கை அரசு சர்வதேசத்திற்கு சொல்லி வருகிறது.. ஏன் மறுக்கிறீர்கள்..?

பொந்திய அரசும், இலங்கை அரசும் இதுவரை சொல்லிவரும் செய்தியான 'தமிழர்கள் யாரும் இலங்கையில் கொல்லப்படவில்லை, இறந்தது பயங்கரவாதிகள்தான்' என அவர்கள் சொல்வதை தமிழக தமிழர்களாகிய நாங்களும் அப்படியே நம்பலாமா?

13 hours ago, Kavi arunasalam said:

... அடுத்தவன் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது சட்டப்படி தவறு அல்லவா?

அடுத்தவன் எல்லை என்கிறீர்களே..? அடுத்தவன் நாட்டில் வன்முறையில், குற்றங்களில் ஈடுபட்டோரை சிறையிலடைத்தால் ஈழத்தமிழர்களுக்கு, தமிழகம் துரோகம் செய்துவிட்டது என விசனப்படுகிறீர்கள்.

என்ன உங்களின் மனநிலை?

சந்தர்பத்திற்கு/அனுகூலத்திற்கு ஏற்றவாறு கருத்து சொல்லப்படாது..! 🤪😡

பல்வேறு சமயங்களில் இலங்கை கடற்படை ராமேஸ்வரம் கடல் எல்லைக்குள்ளும், பொந்திய கடல் எல்லைக்குள்ளும் தமிழக மீன்வர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது.

வரலாற்று தவறுகளில், பொந்தியா இலங்கைக்கு தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்தது பெரிய இழப்பும், பின்னடைவும் ஆகும். பொந்தியாவிடம் தமிழகத்தின் பகுதிகள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல!

கையாலாகாத, வக்கற்ற தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் cool..cool.. எதுக்கு இப்போ கோபம்?

அரசியலில் பேசுவதற்கு பல இருக்கிறது. அதைப் பற்றி பேச இது இடமல்ல. இங்கு சந்தர்ப்ப வாதமும் துளியும் இல்லை.

முதலில் ஒன்றை மட்டும்  சொல்லிவிடுகிறேன் தமிழகத்திற்கு மட்டும் கச்சதீவு சொந்தமானது என்பது தவறு.

இந்தியா கச்சதீவை மட்டுமல்ல நேபாளத்தில் இருந்த புத்தரின் பல்லையும் சிறிலங்காவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது.

2 hours ago, ராசவன்னியன் said:

கையாலாகாத, வக்கற்ற தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

இப்படிச் சொன்னீர்களே ராசவன்னியன்அது ஓரளவுக்குச் சரி.

கச்சதீவைகொடுக்கும் போதே தமிழக மக்கள் கிளர்ந்து எழவில்லேயே அங்கே தவறு தொடங்குகிறது. மீனவர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் வரும் போது அதை ஓட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்ககவில்லையே என்பது வேதனையானது. ஜல்லிகட்டு தடைக்கெதிராக மெரினாவை முற்றுகையிட்ட தமிழக மக்களுக்கு மீனவர்களுக்காக ஏன் ஒரு பாரிய போராட்டத்தை நடத்த முடியவில்லை என்பது ஒரு கேள்வி.

ரோலர்களைக் கொண்டு ஆழ்கடல் மீன்களை பிடிப்பதால் மீன்கள் அற்றுப் போவதுடன் அது தொப்புள் கொடி உறவு என்று சொல்லும் ஈழத்தமிழனையும் பாதிப்புக்கள்ளாக்குகிறதே. அவனின் மீன்பிடி தொழில் பாதிப்படைகிறதே. அவனின் வாழ்வாதாரம் அழிக்கப் படுகிறதே. ஈழத் தமிழ் கடலில் ஒரு பக்கம் தென் இலங்கை சிங்களவர்கள் வந்து வாடி அமைத்து மீன் பிடிக்கிறார்கள். மறு புறம் தென்னகத் தமிழர் என்றால் அவன் என்ன செய்ய முடியும்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

ரோலர்களைக் கொண்டு ஆழ்கடல் மீன்களை பிடிப்பதால் மீன்கள் அற்றுப் போவதுடன் அது தொப்புள் கொடி உறவு என்று சொல்லும் ஈழத்தமிழனையும் பாதிப்புக்கள்ளாக்குகிறதே. அவனின் மீன்பிடி தொழில் பாதிப்படைகிறதே. அவனின் வாழ்வாதாரம் அழிக்கப் படுகிறதே. ஈழத் தமிழ் கடலில் ஒரு பக்கம் தென் இலங்கை சிங்களவர்கள் வந்து வாடி அமைத்து மீன் பிடிக்கிறார்கள். மறு புறம் தென்னகத் தமிழர் என்றால் அவன் என்ன செய்ய முடியும்

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய செய்திதான் ஆனாலும் இணைப்பதில் தவறில்லை

இழுவை மீன்பிடி, இந்திய மீன்பிடிக்கு எதிராக யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வட பகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்களினதும், உள்ளுர் மீனவர்களினதும் இழுவைப் படகு மீன்பிடி தொழிலைத் தடைசெய்யக் கோரியும், வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கக் கூடாது எனக் கோரியும் வடமாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

160712074617_srilankafishermenjaffna_640

வடமாகாண மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு எதிரில் கூடிய வடமாகாண மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய மீனவர்களின் வருகையை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்குரிய தீரமானம் ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வடமாகாண சபை முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் வடமாகாண ஆளுனர் சிறிசேன குரே, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160712_fishingsrilanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kavi arunasalam said:

...முதலில் ஒன்றை மட்டும்  சொல்லிவிடுகிறேன் தமிழகத்திற்கு மட்டும் கச்சதீவு சொந்தமானது என்பது தவறு..

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.

கச்சதீவு இந்திய உரிமை என்பதற்கு சான்று:

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

விக்கிப்பீடியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும்

அப்படியான  நவீன தொழில் நுட்பங்கள் மூலம் மீன் பிடிப்பவர்கள் எதற்காக சுற்றி சுற்றி இலங்கையின் எல்லைக்குள்ளேயே வருகிறார்கள்?
இந்திய மீனவர்கள் தங்களை வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசை கொண்டு எதற்காக கேட்க வேண்டும்?

 

14 minutes ago, Kavi arunasalam said:

இது ஒரு பழைய செய்திதான் ஆனாலும் இணைப்பதில் தவறில்லை

யாழ் மீனவர்கள் நிலைமை இப்போதும் துயரம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்திய மீனவர்கள் தங்களை வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசை கொண்டு எதற்காக கேட்க வேண்டும்?

விதைத்தவர்  அவர்கள் என்று நினைக்கிறார்கள் நீங்களும் அவர்கள் போல் செய்ய அவர்கள் வாதம் அடிபட்டு போகும் அல்லவா ?

புலிகள் காலத்தில் உள்  கடலில் ரோலர் போட  தடை இருந்தது இப்போது அந்த முறை ஏன் இல்லை ?

கொஞ்சம் விளங்குக்குங்க  ராசா மாரே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

நன்றி ராசவன்னியன்.

இந்தத் தகவல்களை நான் தெரிந்திருக்கிறேன். பழையதை எல்லாம் பார்க்கப் போனால் ஈழத்தை சோழ வாரிசுகளுக்கு நாம் கொடுக்க வேண்டிவரும்.

கடல் எல்லையை இலங்கை இந்தியா இரண்டும் கணக்கிட்டு (அது சரியான முறையில் அளவிடப்படவில்லை என்ற வாதம் ஒன்று இருக்கிறது) இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கச்சதீவை பொதுவாகவே பயன்படுத்தின. மீனவர்கள் இளைப்பாற, வலைகளை காயப் போட, ஆண்டொன்றுக்கு ஒரு அந்தோணியார் திருவிழா கொண்டாட என அது வழிவகுத்தது.

ஆனால்  முழுமையாக இலங்கைக்கு இந்தியா கச்சதீவை கையளித்தபின் அங்கே இந்தியா உரிமையை இழந்து விடுகிறது என்பதுதானே உண்மை.

கொடுத்ததை திரும்பப் பெற  இந்தியாவால் முடியாது என்ற நிலையில் அது தமிழக மாநில அரசினூடாக தமிழக மீனவர்களுக்கு  மாற்றுவழியைக் காண்பிக்க வேண்டும். வெறுமனவே இலங்கை கடற்படை தாக்குகிறது, கைது செய்கிறது, சுடுகிறது என்று மீனவர்களை புலம்ப விட்டு கை கட்டிக் கொண்டு நிற்பதில்  எதுவுமே நடக்கப் போவதில்லை. மற்றும்படி இந்த நிலையை பெரிதாக்கி  கடல், நீர்பபறவை போன்ற  சினிமாப் படங்களை உருவாக்கி காசு பார்கக மணிரத்தினம், சீனு ராமசாமி போன்றோர்களுக்குத்தான் பயன்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

நன்றி ராசவன்னியன்.

இந்தத் தகவல்களை நான் தெரிந்திருக்கிறேன். பழையதை எல்லாம் பார்க்கப் போனால் ஈழத்தை சோழ வாரிசுகளுக்கு நாம் கொடுக்க வேண்டிவரும்.

கடல் எல்லையை இலங்கை இந்தியா இரண்டும் கணக்கிட்டு (அது சரியான முறையில் அளவிடப்படவில்லை என்ற வாதம் ஒன்று இருக்கிறது) இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கச்சதீவை பொதுவாகவே பயன்படுத்தின. மீனவர்கள் இளைப்பாற, வலைகளை காயப் போட, ஆண்டொன்றுக்கு ஒரு அந்தோணியார் திருவிழா கொண்டாட என அது வழிவகுத்தது.

ஆனால்  முழுமையாக இலங்கைக்கு இந்தியா கச்சதீவை கையளித்தபின் அங்கே இந்தியா உரிமையை இழந்து விடுகிறது என்பதுதானே உண்மை.

கொடுத்ததை திரும்பப் பெற  இந்தியாவால் முடியாது என்ற நிலையில் அது தமிழக மாநில அரசினூடாக தமிழக மீனவர்களுக்கு  மாற்றுவழியைக் காண்பிக்க வேண்டும். வெறுமனவே இலங்கை கடற்படை தாக்குகிறது, கைது செய்கிறது, சுடுகிறது என்று மீனவர்களை புலம்ப விட்டு கை கட்டிக் கொண்டு நிற்பதில்  எதுவுமே நடக்கப் போவதில்லை. மற்றும்படி இந்த நிலையை பெரிதாக்கி  கடல், நீர்பபறவை போன்ற  சினிமாப் படங்களை உருவாக்கி காசு பார்கக மணிரத்தினம், சீனு ராமசாமி போன்றோர்களுக்குத்தான் பயன்படும்.

திரு.கவி ஐயா,

மன்னிக்கவும், தங்களின் 'அணுகுமுறை சரியாக இல்லை'யென எனது தாழ்மையான அபிபிப்ராயம்.

"தமிழகத்தின் கச்சத்தீவு உரிமைக்கான வரலாற்று உண்மைகளை மறுத்து புறந்தள்ளி, கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தாகிவிட்டது மறந்துவிடுங்கள்" என தாங்கள் சொல்வதென்றால்,

இப்படியும் சொல்லலாம்தானே? vil-ddispute.gif

"இலங்கையில் ஈழத்தமிழர்களின் பல்லாண்டு கால தாயக உரிமையை புறந்தள்ளி, ஆங்கிலேயர்கள் ஈழத்தை சிங்களவர்களிடம் கையளித்துவிட்டார்கள், அதனால் ஈழத்தமிழர்கள் தனி தாயகத்தின் உரிமையை இழந்துவிடுகிறார்கள் என்பதும்,  நீங்கள் அவர்களிடமே வாழ்ந்துகொள்ளுங்கள் தனிநாடு கேட்காதீர்கள்" என நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

'கொடுத்ததை திரும்ப பெறமுடியாது, சிங்கள அரசினூடாக ஏதாவது மாற்று வழிகளை தேடுங்கள், தமிழர்களே..! சிங்களவர்கள் எங்களை தாக்குகிறார்கள், எங்களை இரண்டாம்தர குடிகளாக நடத்துகிறார்கள்' என ஈழத்தமிழர்கள் புலம்புவதிலும் அர்த்தம் இல்லைதானே?

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தையும் தங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், கவி ஐயா..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

..கடல் எல்லையை இலங்கை இந்தியா இரண்டும் கணக்கிட்டு (அது சரியான முறையில் அளவிடப்படவில்லை என்ற வாதம் ஒன்று இருக்கிறது) இரண்டு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து கச்சதீவை பொதுவாகவே பயன்படுத்தின. மீனவர்கள் இளைப்பாற, வலைகளை காயப் போட, ஆண்டொன்றுக்கு ஒரு அந்தோணியார் திருவிழா கொண்டாட என அது வழிவகுத்தது.

இந்த ஒழுங்கும் ஒப்பந்தப்படி தமிழக தமிழர்களுக்கு நிரந்தரமில்லை.

ஒப்பந்தம் கையெழுத்தான வருடத்திலிருந்து பத்து வருடங்களுக்கு மட்டுமே 'தமிழக தமிழர்களுக்கு கச்சத்தீவில் மீனவர்கள் பொதுவாக பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது' என படித்த ஞாபகம் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இலங்கையில் ஈழத்தமிழர்களின் பல்லாண்டு கால தாயக உரிமையை புறந்தள்ளி, ஆங்கிலேயர்கள் ஈழத்தை சிங்களவர்களிடம் கையளித்துவிட்டார்கள், அதனால் ஈழத்தமிழர்கள் தனி தாயகத்தின் உரிமையை இழந்துவிடுகிறார்கள் என்பதும்,  நீங்கள் அவர்களிடமே வாழ்ந்துகொள்ளுங்கள் தனிநாடு கேட்காதீர்கள்" என நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

ராசவன்னியன், உங்கள் பதில் குழப்புகிறது.

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த போது அது இலங்கையில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒருங்கே கிடைத்தது. அப்பொழுது ஆட்சியில் பிரதிநிதித்துவ உரிமை ஐம்பதுக்கு ஐம்பது என்ற ஒரு கருத்து தமிழர் தரப்பால் வைக்கப்பட்டது. ஆனால் இன விகிதாசார அடிப்படையில் அது 68:32 என்றானது. இது ஆட்சியில் மட்டுமே. நாங்கள் எங்கள் நிலத்தில் இருந்து சேர்ந்து வாழவே விரும்பினோம். மற்றும்படி தமிழர்கள் நிலத்தை ஆங்கலேயர்கள் சிங்களவர்களிடம் எடுத்துக் கொடுத்துவிடவில்லை. பின்னாளில் சிங்களவர்கள்தான் எங்களது நிலங்களை ஆக்கிரமித்தார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில் கை வைத்தார்கள், அரசியல் பலம் கொண்டு நசுக்கினார்கள். அதனால் எங்கள் நிலத்திற்காகவும் உரிமைக்காகவும் எங்கள் நிலத்திலேயே நின்று போராட வேண்டிய சூழல் எங்களுக்கு உருவானது. இந்தப் போராட்டத்தை  இந்தியா எப்படி பயன்படுத்திக் கொண்டது என்பது கண்கூடு. அந்த விவகாரம் இங்கு தேவையில்லை. சமீபத்தில் கூட பிரித்தானியப் பிரதமர்   ஈழத்தமிழர் உரிமை பற்றி பேசி இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

ஈழத்தையும், கச்சதீவையும் நீங்கள் ஒப்பிடுவது வேடிக்கை. மீண்டும் சொல்வேன் கச்சதீவைஏன் இலங்கைக்குக் கொடுத்தீர்கள்?” என்று நீங்கள் கேட்க வேண்டிய இடம் இந்தியா. அது கூட பலன் தராது. முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இது சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்து எதிர்மறையான முடிவையே பெற்றார்.

கச்சதீவு பூர்வீகமாக இந்தியாவுக்குச் சொந்தம் என்றாலும் சட்டப்படி அதை இலங்கைக்குக் கொடுத்தாயிற்று. இனி அது எங்களுடையது என்று அடம் பிடிப்பது அழகல்ல. மேலும் நீங்கள் குறிப்பிட்ட பத்து வருட ஒப்பந்தம் முடிந்து கச்சதீவை இலங்கைக்கு முழுமையாகக் கொடுத்த பின்னரே அவர்களது ஆட்டம் அங்கே ஆரம்பமானது.

ஒரு நிலத்தை ஒருவருக்கு இனாமாகவோ அல்லது பணத்துக்காகவோ சட்டப்படி எழுதிக் கொடுத்துவிட்டு இது எங்கள் பாட்டன் சொத்து ஆகவே என்னுடையதுதான் என்று எப்படி உரிமை கொண்டாட முடியாதோ அதுபோல்தான் இதுவும்.

ராசவன்னியன், இந்த விடயத்தில் வாதாட என்னைப் பொருத்தவரையில் எதுவும் இல்லை. உங்களைப் போல் எனக்கும் நிறைய வேலைகள் இருக்கிறது.

விடை பெறுகிறேன்.

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து.😏

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Iஇந்திய மீன்பிடி முறைகள் முற்றுமுழுதாக மீன்வளத்திற்குமே அழிவைத் தருவது. அவர்களின் மீன்பிடி முறைகளில் முழுமையான மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே இவ்வாறான பிரச்சனைகளுக்கு நீண்டகால தீர்வை தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

பெருமாள்,

உங்கள் கருத்தது சற்று  தெளிவில்லாமல் இருக்கிறது. 

1] இந்திய மீனவர்கள் ஏன் இலங்கை கடற்பரப்பில் தமது மீன்பிடிப்பை செய்ய முனைகின்றனர் ? அங்கே மீன்வளம் குறைவாகவும் இங்கே அதிகமாக இருப்பதுதானே காரணமாக இருக்க முடியும்.

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்க அனுமதித்தல் இப் பிரச்சனைக்கு தீர்வாக முடியும் என கருதுகிறீர்களா ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

அண்ணெய்  கோவிக்க  கூடாது தமிழ்நாட்டில் மீன் பிடித்தல் முகாமைத்துவம் நன்றாகவே நடக்கின்றது  மீன் குஞ்சுகள் றால் குஞ்சுகள் வளர்த்து மீன் குஞ்சு பொரிக்கும் காலங்களில் விடுவதும் அதை வளர்ந்த பின் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பிடிப்பதும் வழக்கமான ஒன்று ஆனால் எமது பக்கம்  அது முற்று  முழுதாக இல்லை பிழையை ஒப்புக்கொள்ளனும் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கணும் அதை விட்டு பிரச்சனையை வேறுபக்கம் கொண்டு போவது பிழையானது .

அவர்கள் மீன் இனப்பெருக்க காலங்களில் முற்றாகவே மீன்  பிடியை தவிர்க்கிறார்கள் எங்கடை பக்கமா அப்படி ஒன்று கேள்வி இல்லாமல் ரோலரை போட்டு குஞ்சு குருமான் எல்லாத்தையும் அள்ளினம் .

அவர்கள் மீன்கள் இனப் பெருக்க காலத்தில் தங்கட பக்கம் மீன் பிடிக்க மாட்டார்கள் ...எல்லை தாண்டி வந்து இங்கால பக்கம் தான்  மீன்  பிடிப்பார்கள் 
மீன் வளம் அழியுது....மீனவர்கள் வறுமை கோட்டுக்குள் இருந்து கொண்டு கஷ்டப் படுகிறார்கள்...மீன் பிடிக்க நவீன வசதிகள் கூட எங்கட மீனவருக்கு இல்லை...அதை பற்றி சிலருக்கு அக்கறை இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

..உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து.😏

சரி, அடுத்த திரியில் பேசலாம்..

வாழ்த்துக்களுக்கு நன்றி,

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிவருவதற்கான காரணம் என்ன ? அங்கே போதிய மீன் வளம் இல்லை என்பதுதான் காரணம். 

அப்படி மீன் வளம் இன்மைக்கான அல்லது அழிந்ததற்கான காரணம் என்ன ? 

இந்தக் கேள்விக்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் இலங்கையும் இந்தியாவும் ஒரே கண்டமேடையிலேதான் அமைந்துள்ளன. அப்படி இருக்கயில் ஏன் தென் இந்திய கண்டமேடையில் மட்டும் மீன் வளம் இல்லை ?

உண்மையில் இதற்கான விடையில்தான்  பிரச்சனைக்கான தீர்வும் இருக்கிறது.

இந்திய கண்ட மேடையில் மீன்வளம் அருகியது , அழிந்தது  குறிப்பாக இந்திய மீனவர்களின் பேராசைதான் காரணம்.

It's a man made disaster . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிவருவதற்கான காரணம் என்ன ? அங்கே போதிய மீன் வளம் இல்லை என்பதுதான் காரணம். 

அப்படி மீன் வளம் இன்மைக்கான அல்லது அழிந்ததற்கான காரணம் என்ன ? 

இந்தக் கேள்விக்கு காரணம் இருக்கிறது. ஏனெனில் இலங்கையும் இந்தியாவும் ஒரே கண்டமேடையிலேதான் அமைந்துள்ளன. அப்படி இருக்கயில் ஏன் தென் இந்திய கண்டமேடையில் மட்டும் மீன் வளம் இல்லை ?

உண்மையில் இதற்கான விடையில்தான்  பிரச்சனைக்கான தீர்வும் இருக்கிறது.

இந்திய கண்ட மேடையில் மீன்வளம் அருகியது , அழிந்தது  குறிப்பாக இந்திய மீனவர்களின் பேராசைதான் காரணம்.

It's a man made disaster . 

👍

உண்மை காரணத்தை தெரிவிக்கும் கருத்து.
இந்திய மீனவர்கள் பேராசைகாரணமாக தங்களது கடல் வளந்தை அழித்த பின்பு ஏழை ஈழத்து மீனவர்களின் வயிற்றில் அடிக்க எல்லை தாண்டி இங்கே வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

👍

உண்மை காரணத்தை தெரிவிக்கும் கருத்து.
இந்திய மீனவர்கள் பேராசைகாரணமாக தங்களது கடல் வளந்தை அழித்த பின்பு ஏழை ஈழத்து மீனவர்களின் வயிற்றில் அடிக்க எல்லை தாண்டி இங்கே வருகிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) இந்திய மீனவர்களின் சமூகச் சூழலும் அதனோடிணைந்த அவர்களின் சிந்தனை முறைகளும். 

அவர்களது சமூகம்  கல்வி அறிவு குறைந்த, வெளித்தொடர்புகள் குறைந்த அதன் காரணமாக நவீன வளர்ச்சி, நவீன தொழில் நுட்ப அறிவு குறைந்த, சுற்றுச் சூழல் பற்றிய ஆர்வம் குறைந்த அல்லது அக்கறை அற்ற சமூகமாக உள்ளது . அதனால் அவர்களுக்கு அவர்களின் தொழில் முறையில் அக்கறை இல்லை.

2) அவர்களின் தொழில்  முறைமையும் அவர்கள் உபயோகப்படுத்தும் தொழில் நுட்பமும்.

எங்எகள் எல்லோருக்கும் மீன்பிடி என்றவுடன் மனதில் வருவது கடலில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டும்தான். அது பெருமளவு உண்மைதான். ஏனென்றால் இலங்கையின் மீன்பிடி முறை மிகப் பெரும்பான்மையாக மீன், இறால் மற்றும் கடலட்டையுடன் (மிகக் குறைந்த அளவில்) நின்றுவிடுகிறது. ஆனால் தென் இந்திய மீன்பிடி முறை இவற்றிற்கும் மேலதிகமாக சங்கு, சிப்பி (Oysters ) போன்றவற்றிற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கிறது. இவை மீன்களின் பெறுமதியைவிட அதிகம பெறுமதி மிக்கவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடலட்டைகள் சுழியோடுதலின் மூலமாகவே பிடிக்கப் படுகிறது. ஆனால் தென் இந்திய மீனவர்கள் கடலட்டை, சங்கு மற்றும் சிப்பி போன்றவ்ற்றிற்கு இழுவைப் படகுகளைப் பாவிப்பர்.  இந்த முறையை பிரயோகிப்பதால் கடலில் உள்ள பவளப் பாறைகள் முற்றுமுழுதாக அழிவடைந்து விடுகின்றன.  மீன்களின் இனப் பெருக்கத்திற்கு பவளப் பாறைகள் இன்றியமையாதனவென்று எல்லோருக்குமே தெரியும். 

இதனை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஓர் இரவில் சராசரியாக 300 - 500 வரையிலான இழுவைப் படகுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும்,  இரவு முழுவதும் தடை செய்யப்பட்ட வலைகளை பாவித்து , மிகவும் சக்தி மிக்க  (6-12 valves Engine ) இழுவைப் படகின் உதவியுடன் மீன் பிடித்து (றோளர் அடித்தல்) விடிந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று விடுகிறார்கள்

அவர்கள் ஏற்படுத்தும் அழிவின் அளவு என்ன ?

அவ்விடத்தில் ஏதேனும் மிஞ்சுமா ?

அப்பிரதேசத்தில் பாரம்பரிய முறைப்படி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நிலை என்ன ? 

தென் இந்திய மீனவர்களிடம் எத்தனை ஆயிரம் இழுவைப் படகுகள் உள்ளன ?

வருடத்தில் ஆகக் குறைந்தது ஒன்பது மாதங்களும் தொடர்ச்சியாக, இத்தனை ஆயிரம் இழுவைப் படகுகளும் தென் இந்திய கட்ற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவின் அளவு என்ன ?

இதனை எவ்வாறு அழைப்பீர்கள் ?

பகற் கொள்ளை ?

சூறையாடல் ?

கற்பழித்தல் ?

உண்மையில் இவர்கள் கடலை கற்பழித்த பின்னர் (கடலின் கற்பை அழித்த பின்) படுகொலை செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.