Jump to content

செல்போனை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுங்கள் - போப் பிரான்சிஸ்


Recommended Posts

157776895895013.jpg

செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகையே கைக்குள் அடக்கிவிட்ட உணர்வை தரும் செல்போனை பயன்படுத்துவதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், செல்போனை தூர வைத்துவிட்டு குடும்பத்திடருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியதுடன் ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள் காட்டினார்.

இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோர் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள் அதையே நீங்களும் செய்யுங்கள்.

மேலும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்திலாவது செல்போனை தவிர்த்து விட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும் போப் கூறியுள்ளார்.

"தந்தைகள், பெற்றோர்கள், குழந்தைகள், தாத்தா, பாட்டி, சகோதர, சகோதரிகளே, ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசும் புனித செயலை உடனே மேற்கொள்ளுங்கள் என போப் அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/95013/செல்போனை-தவிர்த்துவிட்டுகுடும்பத்தினருடன்மனம்விட்டு-பேசுங்கள்---போப்பிரான்சிஸ்

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

மேலும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்திலாவது செல்போனை தவிர்த்து விட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும் போப் கூறியுள்ளார்.

இது என்னவோ நூறு வீதம் (99.9999%) சரியாக தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேறை, டாய்லெட்டிற்கும், துணையுடன் கட்டிலுக்கும் செல்போனுடன் செல்லும் இளசுகளே இப்பொழுது அதிகம்.

இருபது வருடங்களுக்கு முன்பு, விமான நிலையதில் காத்திருக்கும்போதோ, ரயிலில் பயணம் செய்யும்போதோ சக பயணிகளுடன் பேசி உறவாட, நட்புடன் மனிதம் வளர வாய்ப்பிருந்தது.

இப்பொழுது  குதிரைக்கு கடிவாளம் கட்டிவிட்ட மாதிரி யாரும் எவரோடும் அருகில் உட்கார்ந்தாலே பேசுவதில்லை. பெரும்பாலும் அனைவரும் காதில் எயர் போனுடன் செல்போனில் அரட்டை அல்லது மும்முரமாக நோண்டிக்கொண்டிருப்பது. செகிட்டில் ஓங்கி அறையலாம் போல் தோன்றும்..!

என்ன மின்னெந்திரத்தனமான வாழ்க்கை..?

Link to comment
Share on other sites

அண்மையில் ஆங்கில மொழி ஊடான கலந்துரையாடலை வானொலியில் கேட்ட பொழுது ஒரு தகப்பனார் சொன்னார் தனது மகளின் ஆண் நண்பரை விருந்துக்கு அழைத்து அவர்கள் உணவு உண்டு மகிழ்ந்தார்கள். தான் கூறிய ஒரே ஒரு வேண்டுகோள் உங்களின் செல்லிடைதொலைபேசிகளை மேசைக்கு கொண்டுவர வேண்டாம் என்பதாகும்.

அதையும் மீறி அந்த ஆண் நண்பர் இரகசியமாக மேசைக்கு கீழே அதை பாவித்ததாகவும் தான் அவரை வீட்டை விட்டு வெளியேற கேட்டதாயும் அதன் பின்னர் அவர் 'மாறி விட்டதாயும்' கூறினார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த... செல்போன்  வியாதி, மனிதரை... எங்கு கொண்டு போய் விடப் போகுதோ.... :shocked:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.