Jump to content

சபதம் ஏற்றால் தானே அது புத்தாண்டு.! உற்சாகமாய் அடியெடுத்து வைப்போம்


Recommended Posts

இளைஞர்கள், வாலிபர்கள், நடுத்தர வயதினர் என அவரவருக்கு ஏற்ப புத்தாண்டு சபதங்கள் வேண்டுமானாலும் மாறுமே தவிர, சபதம் ஏற்பதை பெரும்பாலும் மறைத்து, பொது வெளியிலோ அல்லது நண்பர்களிடமோ சொல்லாதவர்கள் கூட எதாவது ஒரு தீர்மானம் மனதளவில் செய்து கொண்டிருப்பீர்களே இந்நேரம்.!

 

புகையும்.. தண்ணீரும்:

பெரும்பாலும் பணத்தை புகையும்(சிகரெட்), தண்ணீருமாய்(மது) செலவழிபவர்களே புத்தாண்டு சபதம் என்றாலே நம் கண் முன் வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் சபதம் அலாதியானது தான். இனி அப்பழக்கத்தை சிறிது சிறிதாக அவர்கள் குறைக்க எடுக்கும் ஆண்டாண்டு காலமான சபதங்கள், காற்றில் கரைந்து அண்டவெளி எங்கும் பரவி உள்ளது. கண்டிப்பாக மது மற்றும் புகை பழக்கத்தை குறைக்க எடுக்கும் சபதம் உண்மையில் மிக நல்லதே. அப்பழக்கத்தில் உள்ளவருக்கு மட்டும் அல்ல, அவரை சார்ந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்குமே இது பெரிய மகிழ்ச்சியை அளிக்க கூடியது.

மேற்கண்ட இருபழக்கங்களை கொண்டவர்கள் சுயநலமாக யோசித்தாலே போதும். அல்லது ஒரு வேளை உணவிற்கு கஷ்டப்படுபவர்கள் இருக்கையில், சர்வசாதாரணமாக பணத்தை கொட்டி உடல்நலக்கேட்டை வாங்குகிறோமே என்ற உணர்வு மேலோங்கினால், இப்பழக்கங்களை அரிதாக்கி கொள்ளலாம்.

https://www.polimernews.com/dnews/95043/சபதம்-ஏற்றால்-தானே-அதுபுத்தாண்டு.!-உற்சாகமாய்அடியெடுத்து-வைப்போம்

 

வெல்கம் ஜிம் பாய்ஸ்:

வந்துருச்சு ல நியூஇயர்.. எடுடா வண்டிய.. விடுடா ஜிம்முக்கு வகையை சேர்ந்தவர்களே உங்க புத்தாண்டு சபதம் எவ்வளவு உன்னதமானது தெரியுமா? சுவர் இன்றி சித்திரம் இல்லை. உங்க தன்னம்பிக்கையை வளர்க்கும் மிக பெரிய ஆயுதம் உடல்நலன். நீங்கள் சாதரணமாக இருப்பதை விட, உற்சாகமாக இருக்கும் போது பெரிய பெரிய விஷயங்களை கூட பதற்றமில்லாமல் செய்வீர்கள். உடலும் உள்ளமும் உற்சாகமாக இருக்க உடல் வலு என்பது மிகமுக்கியம். இயந்திர வாழ்க்கையில் நினைத்தால் கூட ஜிம்மிற்கு வழக்கமாக செல்ல நேரம் இல்லாதது ஒரு பக்கம், சோம்பேறித்தனம் மறுபக்கம் என அல்லாடுவதை எளிய உடற்பயிற்சிகள் மூலமே தவிர்க்கலாம்.

காலையில் வழக்கமாக எழும் நேரத்தை விட ஒரு அரை மணி நேரம் முன்பாக எழுந்து, உங்கள் உடல் நலனை மேம்படுத்தும் எளிய பயிற்சிகள், மற்றும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றுங்கள். நீங்க புத்துணர்ச்சியாக இருந்தால், உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும்.

 

 

அரட்டை அடிங்க:

அரட்டை அடிப்பது எல்லாம் ஒரு சபதமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அலுவலகத்தில், வெளியிடங்களில் என நண்பர்களுடன் அரட்டை அடித்து தள்ளும் நாம், வீட்டில் உள்ளவர்களுடன் அது மாதிரி எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக செலவிடுகிறோம் என யோசித்தால் அந்த நேரம் மிக குறைவே என்பதை உணர முடியும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பின், அனைவரும் ஒரு சேர உட்கார்ந்து சாப்பிட்டு, மனம் விட்டு பேசும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளலாம்.

 

கூடவே இருக்கும் எதிரியை கட்டுப்படுத்துங்க:

நாம சும்மா இருந்தாலும் வாய் சும்மா இருக்காது, வாய் சும்மா இருந்தாலும் நாம சும்மா இருக்க மாட்டோம். இதுதானே உலக வழக்கம். கண்டிப்பாக வெளியே நாம் பல எதிரிகளை சம்பாதிக்க, கூடவே இருக்கும் நாக்கை கட்டுப்படுத்தாததும் காரணம். வார்த்தைகளை அளவாக பேசினால் நமக்கு வரும் பாதி பிரச்சனைகள் குறையும்.

நாம் பழகும் ஒரு ஒரு மனிதர்களின் இயல்பையும் நம்மால் மாற்ற முடியாது. ஆனால் அவர்களுடன் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் மோதல்களை நாம் நினைத்தால் தவிர்க்கலாம். நாம் பேசுவது சரியாக இருந்தாலும், எதிர்தரப்பு நான் பேசுவது தான் சரி என கூறும். அப்போது மேலும் விவாதிக்காமல் நாக்கை கட்டுப்படுத்தி அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுங்கள். மல்லுக்கட்டி நிற்காமல் விலகி செல்வதால் நமக்கு நேரமும், ஆற்றலும் மிச்சமாகும்.

செலவும், சேமிப்பும்:

தேவையற்ற செலவை குறைத்து, சேமிப்பை வழக்கமாக்கி கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்களுக்கு மட்டுமே பணத்தை தாராளமாக செலவு செய்வது, அத்தியாவசியமில்லாத பொருட்கள் வாங்க காசை வாரி இறைக்க போவதில்லை என்ற சபதத்தை செயல்படுத்துங்கள். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டு, புத்தாண்டில் வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள்...

Link to comment
Share on other sites

மனதில் உறுதி வேண்டும்... கனவு மெய்ப்பட வேண்டும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபதம் என்றில்லை. இந்த ஆண்டு இந்த திட்டத்தை நிறைவு செய்ய எல்லா வகையிலும் முயற்சி செய்வேன்.. என்று செயற்படுவது அவசியம்.

கடந்த ஆண்டில்.. சில திட்டங்களை செய்து முடிக்கனும் என்ற உறுதிப்பாட்டோடு.. செயற்பட்டு செய்து முடித்த திருப்தி.. இந்த ஆண்டுக்கான செயற்திட்டங்களை தீட்டவும் செயற்படுத்த முயற்சிக்கவும் தெம்பாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎1‎/‎2020 at 12:41 PM, nedukkalapoovan said:

சபதம் என்றில்லை. இந்த ஆண்டு இந்த திட்டத்தை நிறைவு செய்ய எல்லா வகையிலும் முயற்சி செய்வேன்.. என்று செயற்படுவது அவசியம்.

கடந்த ஆண்டில்.. சில திட்டங்களை செய்து முடிக்கனும் என்ற உறுதிப்பாட்டோடு.. செயற்பட்டு செய்து முடித்த திருப்தி.. இந்த ஆண்டுக்கான செயற்திட்டங்களை தீட்டவும் செயற்படுத்த முயற்சிக்கவும் தெம்பாக இருக்கிறது. 

உங்கட ரிசேஜ் எல்லாம் எப்படி போகுது?  
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.