Jump to content

வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…!
********************

2019..!
ஆண்டொன்றை முடித்து
அனைவருக்கும் 
அகவையெனும்.

விருதை வழங்கி
வெளிக்கிடும் ஆண்டே
 
வேதனையும் சோதனையும்
வெற்றிகளும் தந்தவனே
உன் வாழ்வில் போன உயிர்
உன் மடியில் பிறந்த உயிர்
என்றும் மறவோம் நாம்-எனி
எமையாள யார் வருவார்.


2020..!
உன்னுக்குள் எமை வைத்து
ஓராண்டு உன்வாழ்வின்
எண்ணற்ற நிமிடமெல்லாம்
எமைக்காக்க வருவாயே!

புதிய உன் வரவால் 
பூமித்தாய் மலரட்டும் 
புதுமைகள் பிறக்கட்டும்
இயற்கை செழிக்கட்டும் 
இன்னல்கள் அழியட்டும் 

பொய்,களவு பொறாமை 
போலியான வாழ்க்கை 
போதைக்கு அடிமை

சாதி,மத சண்டை 
சரும நிற வெறித்தனம் 

அரசியல் சாக்கடை 
ஆதிக்க தலைக்கனம் 
அகதியாய் அலைதல் 
அடிமை புளு வாழ்வு 

வாள்வெட்டு கலாச்சாரம்
வதைக்கின்ற தற்கொலை
பாலியல் கொடுமை
பரிதவிக்கும் ஆட்கடத்தல்

காலத்தால் அழியா-இந்த 
கதி நிலை போக்க 
வீரனாய் வருக! 
விடியட்டும் உலகம்.🙏🏿

அன்புடன் -பசுவூர்க்கோபி-
ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பசுவூர்க்கோபி said:

வாள்வெட்டு கலாச்சாரம்
வதைக்கின்ற தற்கொலை
பாலியல் கொடுமை
பரிதவிக்கும் ஆட்கடத்தல்

காலத்தால் அழியா-இந்த 
கதி நிலை போக்க 
வீரனாய் வருக! 
விடியட்டும் உலகம்.🙏🏿

அன்புடன் -பசுவூர்க்கோபி-
ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.

பிறந்துள்ள புதிய ஆண்டில், இவை நடக்கமால் இருக்க வேண்டும் என்பதே... எமது விருப்பமும்.

யாழ். களத்தில்  இணைந்து...  உங்கள் முதல் கவிதையே... அருமையாக உள்ளது.
கவிதைக்கு நன்றி, பசுவூர்க்கோபி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உன் வரவால் 
பூமித்தாய் மலரட்டும் 
புதுமைகள் பிறக்கட்டும்
இயற்கை செழிக்கட்டும் 
இன்னல்கள் அழியட்டும் ....!

 

நல்ல நம்பிக்கையான வரிகள் நண்பரே......!  😁

வணக்கம் ! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பசுவூர்க்கோபி. 
மனிதம் மாற வேண்டும். 
வருட மாற்றங்களால் பயனேதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல் வரவு....பசுவூர்க் கோபி....!

எதிர் பார்ப்புகளும் ....நம்பிக்கைகளும் தானே....நாளைய வாழ்வின் திசை காட்டிகள்! 

நீங்கள் நெடுந்தீவைச் சேர்ந்தவர் போல உள்ளது..!

தொடர்ந்தும் கவியுங்கள்...!

Link to comment
Share on other sites

வணக்கம் கோபி. அருமையான கவிதையுடன் களமிறங்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2020 at 07:04, தமிழ் சிறி said:

பிறந்துள்ள புதிய ஆண்டில், இவை நடக்கமால் இருக்க வேண்டும் என்பதே... எமது விருப்பமும்.

யாழ். களத்தில்  இணைந்து...  உங்கள் முதல் கவிதையே... அருமையாக உள்ளது.
கவிதைக்கு நன்றி, பசுவூர்க்கோபி. :)

உங்களின் ஆதரவுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2020 at 00:13, புங்கையூரன் said:

நல் வரவு....பசுவூர்க் கோபி....!

எதிர் பார்ப்புகளும் ....நம்பிக்கைகளும் தானே....நாளைய வாழ்வின் திசை காட்டிகள்! 

நீங்கள் நெடுந்தீவைச் சேர்ந்தவர் போல உள்ளது..!

தொடர்ந்தும் கவியுங்கள்...!

மனமார்ந்த நன்றிகள் 

நீங்கள் ஊகிப்பதுபோல் நெடுந்தீவுதான் எனது சொந்த ஊர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2019 at 08:44, பசுவூர்க்கோபி said:

புதிய உன் வரவால் 
பூமித்தாய் மலரட்டும் 
புதுமைகள் பிறக்கட்டும்
இயற்கை செழிக்கட்டும் 
இன்னல்கள் அழியட்டும் 

பசுவூர்கோபி
வெயிற் போ 2021.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.