Jump to content

தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்!

இலங்கையில் தற்போது கல்விப் பொதுத் தராதர முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைத் தளங்களில் பலரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களைப் பாராட்டி மகிழ்வதைக் கண்டிருப்பீர்கள். இது நல்ல ஒரு விடயம்தான்.

ஆனால் அவர்களைவிடவும் இந்த நேரத்தில் ஊக்கப்படுத்த வேண்டியது பல்கலைகழகம் நுழையத் தவறியவர்களைத்தான். அவர்களுள்தான் எமது  எதிர்கால ஆசிரியர்கள், தொழில் முனைவர்கள், தாதிகள், உற்பத்தியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப விற்பன்னர்கள், நிர்வாகிகள், சமூக சேவகர்கள் போன்றோர் இருக்கிறார்கள். 

அவர்களின் திறமைகளை விரைவாகவும் முறையாகவும் வெளிக்கொணர என்ன பொறிமுறையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்? Career Guidance மற்றும் Mentoring போன்ற சேவைகள் எவ்வளவு தூரம் இலங்கை போன்ற நாடுகளில் வளர்ச்சியடைந்துள்ளன? Paid placement மற்றும் unpaid Placement போன்ற வாய்ப்புகளும் இலங்கையில் போதுமான அளவு இல்லை என்பதும் மறுக்க முடியாத ஒரு விடயமாகும்.

இவ்வாறான சேவைகளை வளப்படுத்தி மாணவர்களை காலம் தாழ்த்தாது உரிய பாதையில் செல்ல வழிகாட்டுவதற்கு முக்கியமான தடையாக இருப்பது எமது “கல்விச் சமூகத்தின் தவறான முன்மாதிரிகளால்” பிழையாக வழிநடத்தப்பட்டு வரும் பெற்றோரே. ஏனைய தடைகளெல்லாம் இலகுவாகத் தகர்க்கக் கூடியவையே.

எமது பிள்ளைகள் தாமே தமது துறையைத் தெரிவுசெய்யவும் அவர்களின் கனவை நனவாக்கவும் எமது பங்களிப்பை வழங்கத் நாம் தயாராகும்வரை உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி, எமது சமூகம் தொடர்ந்தும் பெற்றோரின் கனவை பிள்ளைகள்மேல் திணிக்கும் சமூகமாகவே இருக்கப்போகிறது. 

பிள்ளைகளும் முட்டி மோதிக் காலத்தையும் பணத்தையும் வீணடித்துத்தான் தொழிற்சந்தையில் தம்மை நிலைநிறுத்தப் போகிறார்கள்.

இதன் மறுபக்கத்தில் இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்கள் உயர் கல்வியை பெறும் பொருட்டு அல்லது  தொழில் தேவைகளை கருதி இலங்கையை விட்டு இடம்பெயர்ந்து செல்லுவதும் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. 

இது சிறுபான்மைச் சமூகமான எமது மனிதவளத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு Brain Drain என்று சொல்லப்படும் அறிவாளிகளின் வெளியேற்றம் தொடரத்தான் போகிறது. தேசியம், தமிழர் தாயகம் என்று பேசுவோர் முதலில் இதுபற்றிக் விரைவாகக் கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


https://www.facebook.com/101881847986243/posts/114852020022559/?d=n
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எமது பிள்ளைகள் தாமே தமது துறையைத் தெரிவுசெய்யவும் அவர்களின் கனவை நனவாக்கவும் எமது பங்களிப்பை வழங்கத் நாம் தயாராகும்வரை உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி, எமது சமூகம் தொடர்ந்தும் பெற்றோரின் கனவை பிள்ளைகள்மேல் திணிக்கும் சமூகமாகவே இருக்கப்போகிறது. 

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன தமிழ் கல்விச் சமூகம். யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2020 at 8:23 PM, Kapithan said:

அது என்ன தமிழ் கல்விச் சமூகம். யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?

தமிழர்களில் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள். ஆசிரியர்கள்,  கல்வித் திணைக்கள அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், சமூக சிந்தனையுடைய தனிநபர்கள் என்று பலரையும் அடக்கலாம்.

சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கினைத் தெளிவாக்கி அதனை மேலும் தரமுயர்த்தவும், சமூக விளைவுகளுக்கு தகுந்த கற்றலை ஊக்குவிக்கவும் முயல்பவர்கள். தனியே எஞ்சினியர்கள், டொக்டர்கள், அக்கவுண்டண்ட்கள் மாத்திரம் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பமுடியாது என்பதனை உணரச் செய்பவர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

தமிழர்களில் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள். ஆசிரியர்கள்,  கல்வித் திணைக்கள அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், சமூக சிந்தனையுடைய தனிநபர்கள் என்று பலரையும் அடக்கலாம்.

சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கினைத் தெளிவாக்கி அதனை மேலும் தரமுயர்த்தவும், சமூக விளைவுகளுக்கு தகுந்த கற்றலை ஊக்குவிக்கவும் முயல்பவர்கள். தனியே எஞ்சினியர்கள், டொக்டர்கள், அக்கவுண்டண்ட்கள் மாத்திரம் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பமுடியாது என்பதனை உணரச் செய்பவர்கள்!

அப்படி ஒர் தெளிவான நோக்கை எமது கல்விச் சமூகம் கொண்டிருந்ததா அல்லது கொண்டிருக்கிறதா ? தெளிவாகக் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

தமிழர்களில் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள். ஆசிரியர்கள்,  கல்வித் திணைக்கள அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், சமூக சிந்தனையுடைய தனிநபர்கள் என்று பலரையும் அடக்கலாம்.

சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கினைத் தெளிவாக்கி அதனை மேலும் தரமுயர்த்தவும், சமூக விளைவுகளுக்கு தகுந்த கற்றலை ஊக்குவிக்கவும் முயல்பவர்கள். தனியே எஞ்சினியர்கள், டொக்டர்கள், அக்கவுண்டண்ட்கள் மாத்திரம் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பமுடியாது என்பதனை உணரச் செய்பவர்கள்!

தமிழ் கல்விச் சமூகம் பற்றி விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

On 1/1/2020 at 4:18 PM, கிருபன் said:

மாணவர்களை காலம் தாழ்த்தாது உரிய பாதையில் செல்ல வழிகாட்டுவதற்கு முக்கியமான தடையாக இருப்பது எமது “கல்விச் சமூகத்தின் தவறான முன்மாதிரிகளால்” பிழையாக வழிநடத்தப்பட்டு வரும் பெற்றோரே.

கல்வியில் சிறந்து விளங்கும் யாழ் மக்கள் என்று சொல்லபடுகிறவர்களை  வழிநடத்தி வருபவர்கள்   இவர்கள் தானா?:rolleyes: 

Tution master  பிள்ளைகளுக்கு வைத்திருக்காத ஈழத்து பெற்றோர்களை, வெளிநாடானாலும் இலங்கையானாலும் காண்பது மிகவும் குறைவு. tution master ராக இருப்பது வருமானம் மிகவும் அதிகம் பெற கூடிய தொழில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

அப்படி ஒர் தெளிவான நோக்கை எமது கல்விச் சமூகம் கொண்டிருந்ததா அல்லது கொண்டிருக்கிறதா ? தெளிவாகக் கூறுங்கள்.

இல்லை. பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களையும், சாதனை படைத்தவர்களையும் மெச்சுவதோடு நின்றுவிடுகின்றார்கள். பல்கலைக் கழகங்களிக்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு மேற்படிப்புக்கும், தொழில்சார் கற்றல்களுக்கும், சுயதொழிலில் ஈடுபடவும் தேவையான செயற்பாடுகளைச் செய்வதில்லை. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத  18-19 வயது இளையோர் ஒரு cliff edge இல் நிற்கவைக்கப்படுகின்றார்கள்.

சுயமுயற்சியும், ஊக்கமும் உள்ளவர்கள் படிப்பைக் கைவிடாது திறந்த பல்கலைக்கழகம், மென்பொருள் துறை என்று சென்று நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள். எனது நண்பர்களில் சிலர் தமது துறையில் விடாமுயற்சியுடன் முன்னுக்குவந்து இன்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஆயினும் 22- 25 வயதுகளில் முடிக்கவேண்டிய கல்வியை 20களின் இறுதியிலேயேதான் முடித்தார்கள். சரியான வழிநடத்துதல் இருந்தால் இந்த நீண்டகால கல்விச்செயற்பாட்டைக் குறைத்து வேலையை 25 வயதுக்கு முன்னரே ஆரம்பிக்கலாம்.

18 hours ago, விளங்க நினைப்பவன் said:

Tution master  பிள்ளைகளுக்கு வைத்திருக்காத ஈழத்து பெற்றோர்களை, வெளிநாடானாலும் இலங்கையானாலும் காண்பது மிகவும் குறைவு. tution master ராக இருப்பது வருமானம் மிகவும் அதிகம் பெற கூடிய தொழில்.

உண்மைதான். தரப்படுத்தல் முறை மூலம் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவதில் பாகுபாடு காட்டப்பட்டதால் படிப்பில் போட்டி ஏற்பட்டது. பலகலைக் கழகம் போகாவிட்டால் எதிர்காலமே இல்லையென்ற நிலையும் இருந்தது. இவைதான் தனியார் வகுப்புக்கள் பிரபலமாகக் காரணம். இப்போது மாற்றங்கள் உருவாகி இருந்தாலும் பாடசாலைக் கல்வியில் மாத்திரம் தங்கியிருக்கும் அளவிற்கு நம்பிக்கை பெற்ரோரிடம் வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இல்லை. பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களையும், சாதனை படைத்தவர்களையும் மெச்சுவதோடு நின்றுவிடுகின்றார்கள். பல்கலைக் கழகங்களிக்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு மேற்படிப்புக்கும், தொழில்சார் கற்றல்களுக்கும், சுயதொழிலில் ஈடுபடவும் தேவையான செயற்பாடுகளைச் செய்வதில்லை. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத  18-19 வயது இளையோர் ஒரு cliff edge இல் நிற்கவைக்கப்படுகின்றார்கள்.

சுயமுயற்சியும், ஊக்கமும் உள்ளவர்கள் படிப்பைக் கைவிடாது திறந்த பல்கலைக்கழகம், மென்பொருள் துறை என்று சென்று நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள். எனது நண்பர்களில் சிலர் தமது துறையில் விடாமுயற்சியுடன் முன்னுக்குவந்து இன்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஆயினும் 22- 25 வயதுகளில் முடிக்கவேண்டிய கல்வியை 20களின் இறுதியிலேயேதான் முடித்தார்கள். சரியான வழிநடத்துதல் இருந்தால் இந்த நீண்டகால கல்விச்செயற்பாட்டைக் குறைத்து வேலையை 25 வயதுக்கு முன்னரே ஆரம்பிக்கலாம்.

உண்மைதான். தரப்படுத்தல் முறை மூலம் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவதில் பாகுபாடு காட்டப்பட்டதால் படிப்பில் போட்டி ஏற்பட்டது. பலகலைக் கழகம் போகாவிட்டால் எதிர்காலமே இல்லையென்ற நிலையும் இருந்தது. இவைதான் தனியார் வகுப்புக்கள் பிரபலமாகக் காரணம். இப்போது மாற்றங்கள் உருவாகி இருந்தாலும் பாடசாலைக் கல்வியில் மாத்திரம் தங்கியிருக்கும் அளவிற்கு நம்பிக்கை பெற்ரோரிடம் வரவில்லை.

எங்கள் தமிழ் சமூகத்தின் கல்வி செயற்பாடு அல்லது கல்வி கொள்கை , கொழுத்த சீர்தனம் மற்றும்  அரசாங்க வேலை (ஓய்வூதியத்தை இலக்காகக் கொண்ட ) இரண்டையும் மட்டுமே இலக்காகக் கொண்டது. தமிழ் கல்விச் சமூகம் இந்த இரண்டு இலக்குகளுக்குமே சேவை செய்வதாக நான் நம்புகிறேன்.

நீங்கள்  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 1:31 PM, Kapithan said:

எங்கள் தமிழ் சமூகத்தின் கல்வி செயற்பாடு அல்லது கல்வி கொள்கை , கொழுத்த சீர்தனம் மற்றும்  அரசாங்க வேலை (ஓய்வூதியத்தை இலக்காகக் கொண்ட ) இரண்டையும் மட்டுமே இலக்காகக் கொண்டது. தமிழ் கல்விச் சமூகம் இந்த இரண்டு இலக்குகளுக்குமே சேவை செய்வதாக நான் நம்புகிறேன்.

நீங்கள்  ?

இது காலங்காலமாக மாறாமல் உள்ளதுதான்! ஆனால் மாற்றவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.