Jump to content

தனி நபர் / குடும்ப வரவு செலவு திட்டமிடலும் வெற்றியும்


Recommended Posts

பொதுவாக பாடசாலைகளில் கற்றுத்தராத ஒன்றாகவும் வாழ்க்கையில் மனா உளைச்சலை தரும் ஒன்றாகவும் உள்ளது வரவு - செலவை திட்டமிடல்.

இன்றை சர்வதேச உலக வலைப்பின்னல், சமூக வலைத்தளங்கள் என்பன உலகில் எனக்கும் ஒரு செல்வந்தரை போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பும் உறவினர்களால் மற்றும் நண்பர்களால் தரப்படும் அழுத்தமும் எம்மில் பலரையும் எமது எல்லைக்கு அப்பால் சென்று கடனாளிகளாக மாற்றி நிம்மதியற்ற பிரச்சனையான வாழ்க்கைக்கு வழி சமைத்து விடுகின்றது.

எளிமையான சூத்திரம் 50-25-25
 50% உழைப்பதில் ஐம்பது வீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பது ( உணவு, உடை, உறையுள், மருத்துவ காப்புறுதி, கல்வி .... ) 

25%  உழைப்பதில் இருபத்தி ஐந்து  வீதத்தை விரும்பும்  தேவைகளுக்கு செலவழிப்பது  ( புதிய செல் போன், டிசைனர் ஆடை, விரும்பிய உல்லாச பயணம் .... ) 

25% உழைப்பதில் இருபத்தி ஐந்து  வீதத்தை சேமிப்பது. ஒரு அவசர தேவை தொடக்கம் ஒரு வளமான வாழ்க்கைக்கு சேமிப்பு அத்திவாசியம். அதனால் தான் ஒப்பீட்டளவில் உலகத்தமிழினம் செழித்து உள்ளது. 

பொறுப்புத்துறப்பு : இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி இதற்கு நானோ இல்லை காளமோ பொறுப்பல்ல  !
 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

எளிமையான சூத்திரம் 50-25-25
 50% உழைப்பதில் ஐம்பது வீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பது ( உணவு, உடை, உறையுள், மருத்துவ காப்புறுதி, கல்வி .... ) 

25%  உழைப்பதில் இருபத்தி ஐந்து  வீதத்தை விரும்பும்  தேவைகளுக்கு செலவழிப்பது  ( புதிய செல் போன், டிசைனர் ஆடை, விரும்பிய உல்லாச பயணம் .... ) 

25% உழைப்பதில் இருபத்தி ஐந்து  வீதத்தை சேமிப்பது. ஒரு அவசர தேவை தொடக்கம் ஒரு வளமான வாழ்க்கைக்கு சேமிப்பு அத்திவாசியம். அதனால் தான் ஒப்பீட்டளவில் உலகத்தமிழினம் செழித்து உள்ளது. 

பொறுப்புத்துறப்பு : இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி இதற்கு நானோ இல்லை காளமோ பொறுப்பல்ல  !
 

நல்ல விடயம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். இந்த புத்தாண்டிலாவது பணத்தை பொருத்தமான முறையில் பயன்படுத்தி மகிழ்வாக வாழ அனைவருக்கும் வாழ்த்துகள். 

இந்த 50-25-25 இதற்கு முன்னரும் வேறு எங்கோ படித்த தகவல். ஆனால், பலரும் கேட்க கூடிய சில கேள்விகள்:

  1. அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பதிலேயே 80 வீதமான உழைப்பும் முடிந்து போனவர்கள் எப்படி இந்த விதியை பின்பற்றுவது? அவர்கள் 80-10-10 என்று பின்பற்றலாமா?
  2. புதிய செல் போன், டிசைனர் ஆடை, விரும்பிய உல்லாச பயணம் போன்றவற்றில் எவற்றுக்கும் மேற்படி 10 வீதம் காணாமல் போனால் என்ன செய்வது? கடனட்டையில் வாங்கி, பின்னர் கடனும் வட்டியும் கட்டலாமா? கடன் வாங்காமல், வீடோ, வாகனமோ, தொலைக்காட்சியோ, தொலைபேசியோ வாங்க முடியாதே?
  3. மீதமான சேமிக்கும் பணத்தை எங்கே சேமிப்பது? ஒரு பேழையில் போட்டு ஒழித்து வைப்பதா? வங்கியில் நீண்டகால சேமிப்பு கணக்கில் வைப்பது நல்லதா? பங்கு சந்தையில் ஆப்பிளிலும், கூகிளிலும் முதலிடுவது சிறந்ததா? அல்லது ஊருக்குள் வட்டிக்கு கொடுக்கலாமா? சீட்டுப்பிடிப்பது நல்லதா?

 

Link to comment
Share on other sites

10 minutes ago, கற்பகதரு said:

நல்ல விடயம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். இந்த புத்தாண்டிலாவது பணத்தை பொருத்தமான முறையில் பயன்படுத்தி மகிழ்வாக வாழ அனைவருக்கும் வாழ்த்துகள். 

இந்த 50-25-25 இதற்கு முன்னரும் வேறு எங்கோ படித்த தகவல். ஆனால், பலரும் கேட்க கூடிய சில கேள்விகள்:

  1. அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பதிலேயே 80 வீதமான உழைப்பும் முடிந்து போனவர்கள் எப்படி இந்த விதியை பின்பற்றுவது? அவர்கள் 80-10-10 என்று பின்பற்றலாமா?
  2. புதிய செல் போன், டிசைனர் ஆடை, விரும்பிய உல்லாச பயணம் போன்றவற்றில் எவற்றுக்கும் மேற்படி 10 வீதம் காணாமல் போனால் என்ன செய்வது? கடனட்டையில் வாங்கி, பின்னர் கடனும் வட்டியும் கட்டலாமா? கடன் வாங்காமல், வீடோ, வாகனமோ, தொலைக்காட்சியோ, தொலைபேசியோ வாங்க முடியாதே?
  3. மீதமான சேமிக்கும் பணத்தை எங்கே சேமிப்பது? ஒரு பேழையில் போட்டு ஒழித்து வைப்பதா? வங்கியில் நீண்டகால சேமிப்பு கணக்கில் வைப்பது நல்லதா? பங்கு சந்தையில் ஆப்பிளிலும், கூகிளிலும் முதலிடுவது சிறந்ததா? அல்லது ஊருக்குள் வட்டிக்கு கொடுக்கலாமா? சீட்டுப்பிடிப்பது நல்லதா?

 

உங்களின் வருமானத்தை கூட்டும் வழியை காண்பதே சிறந்த அறிவுரையாக இருக்கும். அதற்கு பல வழிகள் இருக்கலாம். உங்களுக்கு சாதகமான வழியை தேர்ந்தெடுக்கலாம்.

- பகுதி நேர கல்வி 
- மாதம் மாதம் வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான முதலீடுகள்   ( ie: REIT ) 

Link to comment
Share on other sites

சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா? 6 வழிகள் இதோ!

சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா? 6 வழிகள் இதோ!படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR

சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாயகன் போல உணரும் நாம், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு திண்டாடுவதையும், அடுத்த மாத சம்பளத்திற்காக காத்திருப்பதையும் அனுபவித்திருக்கிறோம்.

இவ்வாறு அல்லல்படும் உணர்வுகளை குறைத்து கொள்ள நீங்கள் பெரியவை எதையும் செய்ய வேண்டாம். கீழ்காணும் வழிமுறையை சற்று பின்பற்றி பாருங்கள். நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்கள் செலவை விபரங்களை அவ்வப்போது சோதியுங்கள்

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை வங்கி கணக்கின் வரவு செலவு அறிக்கை (ஸ்டேட்மண்ட்) தெளிவாக சுட்டிக்காட்டும்.

சேமிப்பு

இதனை அவ்வப்போது சோதித்து பார்த்தால், சில ஆச்சரியமூட்டும் கருத்துக்களை பெறலாம்.

உங்களுடைய பண அட்டையை (டெபிட்/ கிரடிட் கார்டு) தேய்த்து கொண்டு விரும்பியதை இன்று வாங்கி கொள்ளலாம். ஆனால், மொத்த செலவை பார்க்கும்போதுதான், எவ்வாறு ஒரு பெருந்தொகை செலவழிக்கப்பட்டுள்ளதை உணருவோம்.

இந்த செலவுகளில் எவற்றை குறைத்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்வதற்கு இது நம்மை தூண்டும்.

உங்கள் சம்பளம் செலவு செய்யப்படும் விபரங்களை, துல்லியமாக அறிந்து செலவு செய்வீர்கள்.

தேனீர், காபி குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்

தினமும் வேலை செய்கிற நீங்கள் மதியத்திற்கு முன்னும், பின்னும் தேனீர், காபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கலாம்.

தேனீர், காபிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒரு நாள் செலவாக இருந்தால், பெரிய தொகையாக இருக்காது. ஆனால், அதுவே தினமும் வாடிக்கை என்றால், ஒரு மாதத்தில் பெரிதொரு தொகை அதற்கு நீங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும்.

எனவே, மதிய உணவு எடுத்து செல்வதைபோல, ஒரு ஃபிளாஸ்கில் தேனீர் அல்லது காபி எடுத்து சென்றால் அதிக தொகையை சேமிக்கலாம்.

மின்சாரம், தண்ணீர், எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்தும்போது, சிக்கனமாக இருந்து கொள்வது அவற்றுக்கும் நாம் கொடுக்கும் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

குறைந்த செலவில் நல்ல சேவை வழங்குநரை நாடுங்கள்

நம்முடைய அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய பல சேவை வழங்குநர்களின் சேவைகளை பயன்படுத்தி கொண்டிருப்போம்.

மலிவாக விலையில் தரமான பொருட்களை விற்கின்ற கடைகளை தேடி கண்டுபிடியுங்கள். இணையம், செல்பேசி சேவை நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

உண்டியல்படத்தின் காப்புரிமைJUSTIN SULLIVAN/GETTY IMAGES

ஏற்கெனவே நீங்கள் சேவை பெற்று வருகின்றவர் மேலதிக சிறந்த சேவையை குறைந்த செலவில் வங்குவார்களா என்று பேசி பார்த்துவிட்டு, மாற்று வழிகளை தேடிக் கொள்ளலாம். சோம்பி திரியாமல், பல வழிமுறைகளில் இவற்றை ஆராய்ந்து அறிவது நல்ல பயனை கொடுக்கும்.

வீட்டு சினிமா

நவீன காலத்தில் பொழுதுபோக்கிற்காக பெருவணிக வளாகங்களிலுள்ள திரையங்கம் செல்வது என்பது ஒரே நாளில் அதிக தொகை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது.

அந்த திரைப்படத்தின் குறுந்தகடுகளை வாங்கி, வீட்டிலேயே பார்த்து மகிழ்வது உங்கள் பணப்பையை பதம் பார்க்காது. விருது பெற்ற திரைப்படங்களின் குந்தகடுகளை மிகவும் குறைவான விலையில் நீங்கள் பெற முடியும்.

நீங்களே செய்ய முயலுங்கள், சரி செய்யுங்கள்

நம்முடைய பொருட்களில் சிறிய பழுது ஏற்பட்டால் போதும், புதியவை வாங்க எண்ணும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், கிழிந்த துணியை தைத்து, வீட்டு வேலைகளில் செய்ய முடிகிறவற்றை சற்று முயற்சித்துதான் பாருங்களேன். மாத முடிவில் பெரும் சேமிப்பு உங்கள் வசமாகியிருக்கும்.

தெரியாதவற்றை செய்து கொள்ளும் வழிமுறையை இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிந்து அவற்றை நீங்களே செய்ய தொடங்குங்கள். இயன்ற வரை சரி செய்து மீண்டும் பயன்படுத்த முயலுங்கள்.

பணப்பை காலியாகிவிடும் நிலைதான் உள்ளதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சாப்பாட்டை திட்டமிடுங்கள்

தற்போதைய சூழ்நிலையில், மாதம் இரண்டு, மூன்று முறை ஹோட்டல் ஏறிவிட்டால் போதும், உங்கள் பணப்பை காலியாகிவிடும் நிலைதான் உள்ளது.

எனவே வீட்டிலும் சரி, வெளியே சென்றாலும் சரி, உணவை திட்டமிட்டு கொள்ளுங்கள். சமைத்து எடுத்து செல்வது, குடிநீர் கொண்டு செல்வது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கத்திற்கும் துணைபுரியும்.

இவ்வாறு திட்டமிடுவதால், உணவுக்கு தேவையானதை மட்டுமே வாங்கிவிட்டு, பிற பொருட்களை வாங்காமல் இருந்து விடுவீர்கள்.

https://www.bbc.com/tamil/india-43023166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

பொதுவாக பாடசாலைகளில் கற்றுத்தராத ஒன்றாகவும் வாழ்க்கையில் மனா உளைச்சலை தரும் ஒன்றாகவும் உள்ளது வரவு - செலவை திட்டமிடல்.

இன்றை சர்வதேச உலக வலைப்பின்னல், சமூக வலைத்தளங்கள் என்பன உலகில் எனக்கும் ஒரு செல்வந்தரை போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பும் உறவினர்களால் மற்றும் நண்பர்களால் தரப்படும் அழுத்தமும் எம்மில் பலரையும் எமது எல்லைக்கு அப்பால் சென்று கடனாளிகளாக மாற்றி நிம்மதியற்ற பிரச்சனையான வாழ்க்கைக்கு வழி சமைத்து விடுகின்றது.

 

👍

வருமானத்தை கூட்டும் வழிகளில் பகுதி நேர கல்வி என்று tution சொல்லி கொடுக்கும் வேலையை தானே சொல்கிறீர்கள். இது இலங்கையிலும் தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களிலும்  பயன் அடையலாம் முதலீடுகள் என்று பெரும்பாலோரை கவர்ந்தது சீட்டுப்பிடிப்பது வட்டிக்கு கொடுப்பது.

Link to comment
Share on other sites

On 1/1/2020 at 4:02 PM, கற்பகதரு said:

நல்ல விடயம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். இந்த புத்தாண்டிலாவது பணத்தை பொருத்தமான முறையில் பயன்படுத்தி மகிழ்வாக வாழ அனைவருக்கும் வாழ்த்துகள். 

இந்த 50-25-25 இதற்கு முன்னரும் வேறு எங்கோ படித்த தகவல். ஆனால், பலரும் கேட்க கூடிய சில கேள்விகள்:

  1. அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பதிலேயே 80 வீதமான உழைப்பும் முடிந்து போனவர்கள் எப்படி இந்த விதியை பின்பற்றுவது? அவர்கள் 80-10-10 என்று பின்பற்றலாமா?
  2. புதிய செல் போன், டிசைனர் ஆடை, விரும்பிய உல்லாச பயணம் போன்றவற்றில் எவற்றுக்கும் மேற்படி 10 வீதம் காணாமல் போனால் என்ன செய்வது? கடனட்டையில் வாங்கி, பின்னர் கடனும் வட்டியும் கட்டலாமா? கடன் வாங்காமல், வீடோ, வாகனமோ, தொலைக்காட்சியோ, தொலைபேசியோ வாங்க முடியாதே?
  3. மீதமான சேமிக்கும் பணத்தை எங்கே சேமிப்பது? ஒரு பேழையில் போட்டு ஒழித்து வைப்பதா? வங்கியில் நீண்டகால சேமிப்பு கணக்கில் வைப்பது நல்லதா? பங்கு சந்தையில் ஆப்பிளிலும், கூகிளிலும் முதலிடுவது சிறந்ததா? அல்லது ஊருக்குள் வட்டிக்கு கொடுக்கலாமா? சீட்டுப்பிடிப்பது நல்லதா?

 

உங்களுக்கு நல்ல 'கிரெடிட்' அதாவது உங்களை நம்பலாம் என வங்கியை நமப வைத்தால் நீங்களும் உங்கள் நாட்டில் உள்ளது போன்று ஒரு  ட்ரம்பாக வரலாம், ஏன் நாளை அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்து தமிழீழம் பெற உதவலாம் 🙂 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.