Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2020]


Recommended Posts

"க‌ருணாவின் திரும‌ண‌ புகைப் ப‌ட‌ம்"  எனும் தலைப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 65
  • Created
  • Last Reply

செய்தி திரட்டி பகுதியில் இணைக்கப்பட்ட “13-ம் நம்பரைப் பார்த்து பயப்படணுமா?  ‘வாழைக்கு தாலி’ பரிகாரம் சரியா?” எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

தொடர்பான களவிதிகள்:

  • எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். தீவிர நம்பிக்கையை ஊக்கப்படுத்தாமல் பொழுதுபோக்காக அமையும் பதிவுகளுக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • மானுடம், மக்கள் நலன், நன்நெறி, பண்பாடு, சீர்திருத்தங்கள், தனிமனித ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்து மக்களை நெறிப்படுத்தும் மெய்யியல்/இறையியல் சம்பந்தமான பதிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றது. எனினும் மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.
Link to comment
Share on other sites

எங்கள் மண் பகுதியில் திறக்கப்பட்ட எந்த ஆதாரமும் அற்ற விடயங்களை உள்ளடக்கிய திரி நீக்கப்பட்டது. 

நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து எனும் திரியில் இறுதியாகப் பதிந்த தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம் எனும் திரியில் கள உறுப்பினரை சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் கருத்தாடற்பண்பைக் கடைப்பிடித்து கருத்துக்கள் வைக்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அநாமேதய தளங்களில் இருந்து ஒட்டப்பட்ட நம்பகத்தன்மையில்லாத சில செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.

பரபரப்பைத் தூண்டும் நோக்கிலும், இலங்கையில் நடக்கவுள்ள தேர்தலில் பங்குபற்றும் அரசியல்வாதிகளை இழிவாக தூற்றும் நோக்கிலும் செய்திகள், பதிவுகள் இணைப்பது தவிர்க்கப்படவேண்டும்.

யாழ் களம் கள உறுப்பினர்களிடம் இருந்து பண்பான, ஆக்கபூர்வமான கருத்து/விமர்சனங்களையே எதிர்பார்க்கின்றது.

Link to comment
Share on other sites

"நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதாவின் மூன்றாவது கலியாணமும் சிக்கலில்" எனும் திரி மூடப்பட்டு அகற்றப்படுகின்றது.

இத்தகைய நாலாம் தரமான மற்றவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கும் செய்திகளையோ அல்லது திரிகளையோ திறக்க வேண்டாம் என யாழ் இணையம் தொடச்சியாக உறவுகளிடம் கேட்டுக் கொண்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு விடயம் யாழிலும் இணைக்கப்படும் போது அதன் தரத்தை எடை போட்டு அது யாழின் தரத்திற்கு எந்த வகையில் செல்வாக்கு செலுத்தும் என்பது தொடர்பாக மதிப்பீடு செய்து இணைக்கவும்.

 

Link to comment
Share on other sites

விஞ்ஞான ரீதியிலான அறிவியல் ரீதியிலான எந்த அடிப்படையும் இன்றிய கருத்துகளை கொண்டிருந்த 'அடையாளங்களை தொலைக்கும் தமிழன்!' திரி அகற்றப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் எந்த அடிப்படையும் அற்ற மருத்துவ பதிவுகளும், மருத்துவ குறிப்புகளும், மூட நம்பிக்கைகளை பரப்பும் திரிகளும் யாழில் பெருகி வருவது அவதானிக்கப்படுகின்றது. தமிழக சஞ்சிகைகளில் இருந்தும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் பெறப்படும் இத்தகையை பதிவுகளை யாழில் இணைக்க வேண்டாம் என மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம். 

இவ்வாறு இணைக்கப்படும் பதிவுகள் கருத்துகள் மேலதிக விளக்கம் எதுவும் கொடுக்கப்படாமல் அகற்றப்படும்.

Link to comment
Share on other sites

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு எனும் திரியில் இறுதியாகப் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டு திரியும் மூடப்பட்டுள்ளது.

தொடர்பான களவிதிகள்:

  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும்.
  • கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
Link to comment
Share on other sites

சமூகச் சாளரம் பகுதியில் இருந்து “குறிப்பு பொருத்தம் பாருங்கோவன்” எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

களவிதி:

எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்

Link to comment
Share on other sites

'பண்டாரநாயக்க: ஆங்கிலேயத்தனத்திலிருந்து சிங்களத்தனம் வரை' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரைச் சீண்டி எழுதிய கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வீழ்ச்சியடைந்த பிரான்ஸ் – உலகப்போர் 2 - பகுதி 7 எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் திசை திருப்பும் வகையிலும், வெறுமனே சீண்டுவதற்காகவும் பதியப்பட்ட இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்பான களவிதி:

  • கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலும் தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலும், வீண் விதண்டாவாதங்களாகவும் எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
Link to comment
Share on other sites

ஆங்கிலத்தில் பதியப்பட்ட கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

 

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
    • விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி:
      • இகலப்பை. காணொளி விளக்கம்: 
      • Keyman - தமிழ் சுரதா பாமுனி. கட்டணமற்றது. விண்டோஸ் 8 எனில் அதில் உள்ள Short-Cut வசதியைப் பாவித்து தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றிக் கொள்ள முடியும்
      • Keyman Tavultesoft * கட்டணம் செலுத்தவேண்டும்.
    • iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):
      • தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal
      • தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99
    • Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):
Link to comment
Share on other sites

முகநூலில் இருந்து இணைக்கப்பட்ட காணொளிச் செய்திகள் ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன

களவிதி:

  • சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

மேலும் ஊர்ப்புதினம் பகுதியில் செய்திகள் இணைப்பது பற்றிய விளக்கங்களை கீழுள்ள இணைப்பில் படித்து உள்வாங்கி எதிர்காலத்தில் இணையுங்கள்.

 

Link to comment
Share on other sites

காத‌ல் என்ற‌ பெய‌ரில் காசு ப‌றித்த‌ பெண் எனும் திரி நீக்கப்படுகின்றது. இவ்வாறான மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்கள் சார்ந்த தட்டைப் பார்வை கொண்ட திரிகளை / பதிவுகளையும், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், ஒருமையில் தனிப்பட்டவர்களை அழைக்கும் சொற்களுடனான கட்டுரைகளையும்  இணைக்க வேண்டாம் என பல முறை கேட்டும் தொடர்ந்து இணைப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதை தவிர எமக்கு வேறு வழிகள் இல்லையென்பதையும் உணர்ந்து கொள்க.

யாழ் இணையம் தொடர்ந்து ஆரோக்கியமான உரையாடல்களுக்கும் கருத்துகளுக்கும் உரிய தளமாக பேண உங்கள் அனைவரினது உதவியும், பங்களிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து செயற்படவும்.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர் எனும் திரியில் சக கருத்தாளர்களை பணத்திற்காக கருத்து எழுதுபவர்கள் என்ற அவதூறான கருத்துக்களும் அதன் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் களம் ஆக்கபூர்வமான விவாதங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது. எனவே, கருத்தாளர்களைப் பற்றிய ஊகங்களைத் தவிர்த்து பண்புடன் கருத்தாடல்களைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் எனும் திரியில் ஆங்கிலத்தில் பதியப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

களவிதிகளின்படி கருத்துக்கள் தமிழில் மாத்திரமே பதியப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

அறிவியல் விவாதம் எனும் திரியில் இணைக்கப்பட்ட அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இரண்டு வீடியோக்கள் நீக்கப்பட்டன.  இணைய வெளியில் கொட்டிக் கிட்டக்கும் இவ்வாறான போலி அறிவியல் வீடியோக்களை இணைக்க வேண்டாம் என அடிக்கடி வலியுறுத்தியும் தொடர்ந்து இணைக்கப்படுவதை தவிர்க்கவும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'சுற்றுச்சூழல்' எனும் பெயரில் திறக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட கட்சி ஒன்றினது ஒளித்தொகுப்புகளை / வீடியோக்களை மாத்திரம் இடப்பட்டுக் கொண்டு இருந்தமையால் அந்த திரி நீக்கப்படுகின்றது.

யாழ் இணையம் எந்தக் கட்சியையும் சாராத தளம். அதனால் எந்தக் கட்சியினதும் பிரச்சார மேடையாக யாழை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவ்வாறு திறக்கட்டுள்ள திரிகளும் விரைவில் அகற்றப்படும் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்.

நன்றி

Link to comment
Share on other sites

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 எனும் திரியில் கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளமையால் அவற்றினை பரிசீலித்து மட்டுறுத்தும்வரை திரி தற்காலிகமாக பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 திரியில் இருந்து கள உறுப்பினர்களைப் பற்றிய அநாவசியமான பல கருத்துக்கள் நீக்கப்பட்டு மீண்டும் கருத்தாடலுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கள உறுப்பினர்கள் வெறும் கட்சிப் பிரச்சாரத்திற்காக அளவுக்கதிகமான காணொளிகளை இணைப்பதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.

 

Link to comment
Share on other sites

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் சக கள உறுப்பினரை நையாண்டி செய்யும் வகையில் திறக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

இப்படியான அப்ப்பட்டமான களவிதிகளை மீறும் பதிவுகளை கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் அரசியல் - பாகம் 2 இல் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் களம் ஆக்கபூர்வமான வகையிலும் பண்புடனும் கருத்தாடுவதற்கான தளம். களவிதிகளை மீறும் சீண்டல் கருத்துக்களை தொடர்ந்தும் வைப்பது ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழிவகுக்காது. எனவே இத்தகைய கருத்துக்களை பதிவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். 

சக உறுப்பினர்கள் சீண்டும் கருத்துக்களை வைத்தால் முறைப்பாட்டு முறை மூலம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.