Jump to content

காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா

இரானின் புரட்சிகர காவலர்படையின் தலைவரான ஜெனரல் காசீம் சூலேமானிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES / AFP Image captionஇரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் காசீம் சூலேமானி

இரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசீம் சூலேமானி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சூலேமானியை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இச்செய்தி வெளியானது. இத்தாக்குதலில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை "மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது" என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @JZarif
 

The US' act of international terrorism, targeting & assassinating General Soleimani—THE most effective force fighting Daesh (ISIS), Al Nusrah, Al Qaeda et al—is extremely dangerous & a foolish escalation.

The US bears responsibility for all consequences of its rogue adventurism.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @JZarif

இரானின் ஆட்சியில் ஜெனரல் காசீம் சூலேமானி, ஒரு முக்கியமான நபர். அவரது படைப்பிரிவு நேரடியாக இரான் நாட்டின் தலைவர் ஆயத்துல்லா அலி காமினேவிடம் தொடர்பில் இருக்கும். மேலும் சூலேமானி, அந்நாட்டில் ஹீரோ போல பார்க்கப்பட்டவர்.

இரான் நாட்டின் தலைவர் ஆயத்துல்லா அலிபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY / GETTY IMAGES

சூலேமானி கொல்லப்பட்ட செய்தி வெளியானவுடன் ட்வீட் செய்த அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கக் கொடியின் படத்தை பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து உலகளவில் எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

என்ன நடந்தது?

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சூலேமானி கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவல் படை உறுதிபடுத்தியுள்ளது.

இராக் போராளிகளின் தலைவர் அபு மஹ்தி அல்-முஹன்டியும் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், "அதிபரின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசீம் சூலேமானியை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது" என்று கூறப்பட்டுள்ளது.

"இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாதில் இராக்கின் போராளிகள் தலைவர்கள் சிலர் அமெரிக்கப் படைகளால் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இத்தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராளிகள் அமைப்பு சுற்றி வளைத்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்படத்தின் காப்புரிமைAHMAD AL-RUBAYE / GETTY Image captionஇரானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

யார் இந்த காசீம் சூலேமானி?

1998 ஆண்டு முதல் காசீம் சூலேமானி, இரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவு (Quds Force) ஒன்றின் தலைவராக இருந்த வந்தார். இந்தப்பிரிவு வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

இரான் புரட்சிகர காவலர் படையையும், அதன் பிரிவையும் தீவிரவாத அமைப்பு என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் பட்டியலிட்டார் அமெரிக்க வெளியுறவு செயலரான மைக் பாம்மையோ.

https://www.bbc.com/tamil/global-50980023

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

ஈராக்கின் பாக்தத் அமெரிக்க தூதுவராலயத்தின் மீதான அண்மைய நிகழ்வுகளின் எதிரொலி. 

இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது

உலகம் முழுவதும் மசகு / கச்சாய் எண்ணெய் விலை அதிகரிக்கும். உலக மக்கள் அனைவரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.  

Link to comment
Share on other sites

ஈராக்கிலிருந்து தனது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வேண்டுகோள்

ஈராக்கிலிருந்து தனது பிரஜைகள்  அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரானின் முக்கிய இராணுவஅதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றநிலை அதிகரித்துள்ளதை தொடர்ந்தே அமெரிக்கா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

security_alert.jpg

ஈராக்கிலும் பிராந்தியத்திலும் பதட்ட நிலை அதிகரித்துள்ளதன் காரணமாக ஈராக்கிலுள்ள அமெரிக்க பிரஜைகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இராஜாங்க திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரான் ஆதரவு ஆயுதகுழுக்களின் வன்முறை காரணமாக ஈராக்கிற்கான அமெரிக்க தூதரகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன,அமெரிக்க பிரஜைகள் தூதரகத்திற்கு செல்லக்கூடாது எனவும் இராஜாங்க திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/72458

மத்திய கிழக்கில் ஈரானின் மறைமுக யுத்தங்களை முன்னெடுத்த- டிரம்பிற்கு சவால் விட்ட தளபதியை இழந்தது ஈரான்

ரொய்ட்டர்

thumb_solemani__10.jpg                          

ஈரானின் மேஜர்ஜெனரல் காசேம் சொலைமானி ஈரான் மத்திய கிழக்கில் மறைமுக யுத்தங்களில் ஈடுபடுவதற்கு உதவியவர்.

ஆயுதகுழுக்களை உற்சாகப்படுத்தியதன் மூலமும் பேச்சுவார்த்தைகளின் மூலமும் இவர் ஈரானின் மறைமுக யுத்தங்களை முன்னெடுத்தார்.

பக்தாத் விமான நிலையத்தில் இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதல் மூலம் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

ஈரானில் மிகவும் பிரபலமானவராகவும், அமெரிக்காவாலும் சவுதிஅரேபியாவாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்ட காசெம் சொலைமானி ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானின் எதிர்கால தாக்குதல்களை தடுப்பதற்காகவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் இரகசிய நடவடிக்கைகளிற்கு பொறுப்பானவராக சொலைமானி காணப்பட்டார்,ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான மோதல்களில் ஈடுபடும் சியா ஆயுதக்குழுக்கள் மத்தியில் இவர்  காணப்பட்டார்.

இவருடன் ஈரான் சார்பு ஆயுத குழுவின் முக்கியதளபதியான அபு மஹ்டி அல் முகான்டிசும் கொல்லப்பட்டுள்ளார்.

இவரும் ஈரானின் எதிரிகளிற்கு எதிரான போராட்டங்களின் கதாநாயகர்களாக கருதப்பட்டனர்.

இவர்கள் கொலைசெய்யப்பட்டபின்னர் ஈரானின் தேசிய தொலைக்காட்சி இவர்களிற்கு புகழாரம் சூட்டிவருகின்றது.

ஈரான் தொலைக்காட்சி சொலைமானி ஈரானின் ஆன்மீக தலைவர் அலி கமேனியுடன் யுத்த களங்களில் சீருடையில் காணப்படும் காட்சிகளை வெளியிட்டு வருகின்றது.

1980 களில் ஈராக் ஈரான் யுத்தத்தின்போது படைப்பிரிவொன்றிற்கு சொலைமானிதலைமை தாங்கும் படத்தையும் ஈரான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதன் பின்னர் மிகவேகமாக முன்னணிக்கு வந்த இவர் குட்ஸ் படையணியின் தளபதியாக மாறினார்.

இந்த பதவியை பயன்படுத்தி அவர் ஈரான் மத்திய கிழக்கில் புதிய கூட்டணிகளை உருவாக்கினார். அமெரிக்காவின் தடைகளை ஈரான் எதிர்கொண்டிருந்தவேளை இந்த கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.

2019 இல் அமெரிக்கா ஈரானின் புரட்சிகர படையணியை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.

ஈரானை அதன் அணுவாயுத கொள்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக  அமெரி;க்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

அவ்வேளை அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டாலும் அது முற்றுமுழுதாக சரணடைவதாக அமையும் என சொலைமானிதெரிவித்திருந்தார்.

2011 இல் சிரியாவின் ஜனாதிபதி பசீர் அல் அசாத் உள்நாட்டு மோதலில்தோல்வியடையும் நிலையேற்பட்டவேளை சொலைமானியின்படையணிகளே அவரை பலப்படுத்தின.

ஐஎஸ் அமைப்பை ஆயுதக்குழுக்கள் தோற்கடிப்பதற்கும் அவை உதவின.

இந்த வெற்றிகள் காரணமாக மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு அவர் காரணமாகயிருந்தார்.ஈரானின் செல்வாக்கு மத்திய கிழக்கில்அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் திணறுகின்றன.

1998 இல் கமேனி சொலைமானியை விசேட படைப்பிரிவின் தளபதியாக நியமித்தார்,எனினும் இந்த பதவியை பயன்படுத்தி அவர் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்புடனும்;, சிரியஅரசாங்கத்துடனும்,ஈராக்கில் உள்ள சியா ஆயுதகுழுக்களுடனும் உறவை வலுப்படுத்தினார்.

கடந்த சில வருடங்களாக சொலைமானி ஈராக் சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் தலைவர்களின் அங்கீகாரத்தை அதிகமாக பெற்றவராக மாறிவந்தார்,போர்க்களங்களில் அவர்காணப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் அதிகளவிற்கு வெளியாகின.

நாங்கள் உங்களிற்கு அருகில் இருக்கின்றோம்

2019 இல் கமேனி ஈரான் இராணுவத்திற்கான உயர் விருதை சொலைமானிக்கு வழங்கியவேளை ஈரான் இராணுவத்திற்குள் சொலைமானிக்கு உள்ள செல்வாக்கு புலனாகியது.

1979இல் இஸ்லாமிய குடியரசு வழங்கப்பட்ட பின்னர் இராணுவ அதிகாரியொருவருக்கு அந்த பதக்கம் வழங்கப்பட்டமை அதுவே முதல்தடவை.

ஈரானின் விசேட படையணியின் இரகசிய நடவடிக்கைகளிற்கும் புலனாய்வு நடவடிக்களிற்கும் பொறுப்பாக விளங்கியசொலைமானி 2018 இல் அமெரிக்க ஜனாதிபதிக்கு பகிரங்க சவால் ஒன்றை விடுத்தார்.

சூதாட்டக்காரனான டிரம்ப அவர்களே நான் இதனை உங்களிற்கு தெரிவிக்கின்றேன், நீங்கள் நாங்கள் உங்களிற்கு அருகிலிருக்கின்றோம் என நினைக்காத பகுதியில் நாங்கள் உங்களிற்கு அருகில் இருக்கின்றோம், என அவர் ஒரு முறை தெரிவித்திருந்தார்.

நீங்கள் யுத்தத்தை ஆரம்பிப்பீர்கள் ஆனால் அதனை நாங்கள் முடித்துவைப்போம் எனவும் அவர் அவ்வேளை தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/72454

Link to comment
Share on other sites

மத்திய கிழக்கு | ஈரான் இராணுவத் தளபதி சொலைமானி அமெரிக்க குண்டு வீச்சில் பலி

ஜனவர் 3, 2020

சொலைமானி இல்லாமலிருந்திருந்தால் இன்று மத்திய கிழக்கு முழுவதும் ஐசிஸ் கறுப்புக் கொடிகள் பறந்திருக்கும்

ஈரான் பல்கலைக் கழகத்தின் அமெரிக்கக் கற்கையின் தலைவர் மஹாமெட் மராண்டி.

ஈரானின் புரட்சிக் காவலர் என அழைக்கப்படும் அந் நாட்டின் இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜெனெரல் கசிம் சொலைமானி உட்பட, ஆறு பேர், ஈராக்கில் அமெரிக்கப் படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கொண்ட வான் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்கள்.

Ayatollah-Khameni-and-Soleimani.jpg
ஈரானிய மதத் தலைவர் அயத்தொல்லா கமேனியுடன் கசிம் சொலைமானி

‘கட்ஸ் ஃபோர்ஸ்’ எனப்படும் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஈரானிய இராணுவத்தின் பிரிவிற்குத் தலைமை தாங்கிவந்த சொலைமானி சிரியாவிலும், ஈராக்கிலும் பெரும் பங்காற்றி வந்தவர். மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கம் பரவுவதற்கு இவர் தான் பாத்திரவாளி எனக் கூறி இவரைக் கொல்வதற்கு அமெரிக்க, சவூதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த 20 வருடங்களாக முயற்சித்து வந்திருந்தன.

ஈரானின் எல்லைகளைக் கடந்து தாக்குதல்களை நடத்தும் கட்ஸ் ஃபோர்ஸ் என்னும் படையை இவர் வழிநடத்தி வந்தார். 2011 இல் சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அஷாட் தோற்கடிக்கப்படும் நிலையில் இருந்தபோது அவருக்கு உதவியை வழங்கி அவரது ஆட்சியைக் காப்பாற்றினார். ஐசிஸ் பயங்கரவாதக் குழுவினை முறியடித்ததிலும் இவருக்கு மிகப் பெரிய பங்குண்டு.

சொலைமானி 1998 இல் இப் பதவிக்கு வந்திருந்தாலும், அவர் தன் இருப்பை அதிகம் முக்கியப்படுத்தவில்லை. லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லா, சிரியா, ஈராக்கிலுள்ள ஷியா துணைக்குழுக்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தினார்.

சமீப காலங்களில் அவர் ஈரானின் மதத் தலைவர் அயத்தொல்லா அலி கமேனியுடனநும் இதர ஷியா தலைவர்களுடனும் வெளிப்படத் தொடங்கியிருந்தார்.

இவரது தலைமையில், ஈரானின் புரட்சிக் காவலர் படை ஈரானுக்கு வெளியிலும் உளவு, நிதி, அரசியல் போன்ற விடயங்களில் செல்வாக்குச் செலுத்திவந்திருந்தது.

சொலைமானி, ஈரானின் கேர்மான் மாகாணத்திலுள்ள ஒரு வறிய குடும்பத்திலிருந்து வந்தவர். 13 வயதில் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றியவர். 1979 இல் ஈரானியப் புரட்சியின்போது இராணுவத்தில் சேர்ந்து ஆறு வாரப் பயிற்சியுடன் போர்க்களம் சென்றவர். ஈரான் – ஈராக் போரில் இவர் மேர்கொண்ட சாகசங்கள் இவரது புகழை உலகெங்கும் பரப்பின.

2005 இல், போருக்குப் பின்னான புதிய ஆட்சியில் ஈராக் அரசியலில் சொலைமானியின் ஆதிக்கம் அதிகரித்தது. ஈராக்கில் ஷியா குலத்தினர் அதிகமாக இருப்பினும் சதாம் ஹுசேன் போன்ற சுனி குலத்தவரே ஆட்சியில் இருந்தனர். 2005 இற்குப் பிறகு சொலைமான் போன்றவர்களின் முயற்சியால் அங்கு மீண்டும் ஷியா குல ஆட்சி தலையெடுத்தது. சதாம் ஹுசேனின் முன்னாள் சுனி குல இராணுவமே பின்னர் ஐசிஸ் ஆக வடிவெடுத்தது.

2011 இல் சிரியாவில் போர் தொடங்கியபோது, சொலைமானியின் கட்டுப்பாட்டில் ஈராக்கில் இருந்த துணைப்படைகளை அவர் சிரியாவுக்கு அனுப்பி அசாட் ஆட்சியைக் காப்பாற்றினார். ஈராக்கிலுள்ள ஐசிஸ் படைகளை ஒழிக்க அவரது தலைமையின் கீழ் இயங்கிய ஈராக் ஷியா துணைப்படைகள் பெருமுதவி செய்தன.

 

சொலைமானி இல்லாமலிருந்திருந்தால் இன்று மத்திய கிழக்கு முழுவதும் ஐசிஸ் இன் கறுப்புக் கொடிகள் பறந்திருக்கும் என்கிறார் ஈரான் பல்கலைக் கழகத்தின் அமெரிக்கக் கற்கையின் தலைவர் மஹாமெட் மராண்டி.

https://marumoli.com/மத்திய-கிழக்கு-ஈரான்-இரா/?fbclid=IwAR1FP0LMtA5ZG-24FEJbHcpCJK6W4KDfNOaPrtKCjpYHCvG2gtz55lOdVQQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசெம் சுலேமானீ: அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் ராணுவ தளபதி யார்?

காசெம் சுலேமானீ: அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் ராணுவ தளபதி யார்?படத்தின் காப்புரிமைAFP

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் காசெம் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.

''இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது'' என்று இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி எச்சரித்துள்ளார்.

அயத்துல்லா அலி காமேனிக்கு அடுத்தபடியாக இரானில் சக்திவாய்ந்த நபராகக் கருதப்பட்டவர் சுலேமானீ.

சரி. யார் இந்த காசெம் சுலேமானீ? இரானின் ராணுவ முகமாக இருந்த இவரது மரணம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் என்ன?

இரானின் ஆட்சியில் ஜெனரல் காசெம் சுலேமானீ, ஒரு முக்கியமான நபர். 1998 ஆண்டு முதல் காசெம் சுலேமானீ, இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (Quds Force) ஒன்றின் தலைவராக இருந்து வந்தார். இந்தப்பிரிவு வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைMEHDI GHASEMI/GETTY IMAGES Image captionகாசெம் சுலேமானீ

இரானின் புரட்சிகர ராணுவ படையானது, அந்நாட்டின் இஸ்லாமிய கட்டமைப்பை பாதுகாக்க 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது.

இந்த படையின் Quds என்ற பிரிவு, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள கூட்டணி அரசுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழுவிற்கு ரகசியமாக பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனை போன்ற உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரானின் ஆதிகத்தை மத்திய கிழக்கு பகுதிகளில் விரிவுபடுத்தும் லட்சியம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு பின்னால் இருந்த முக்கிய புள்ளிதான் காசெம் சுலேமானீ. போர் என்று வரும்போது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்று இவர் செயல்பட்டார் என்கிறார் பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லைஸ் டவுசட்.

இரான் - ஜெனரல் காசெம் சுலேமானீ - அமெரிக்கா

இரானும் அமெரிக்காவும் சித்தாந்த ரீதியாக எதிரிகளாக இருந்தாலும், இராக்கில் ஐ.எஸ் அமைப்பு நடத்திய தாக்குதல், இரு நாடுகளுக்கு இடையே மறைமுக தொடர்பை ஏற்படுத்தியது.

2001ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பை அகற்ற அமெரிக்காவுக்கு ராணுவ புலனாய்வு உதவிகளை வழங்கியது இரான்.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY/GETTY IMAGES

மேலும், 2007ஆம் ஆண்டு, இராக்கின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்கா மற்றும் இரான் நாடுகள் தங்கள் அதிகாரிகளை பாக்தாத்துக்கு அனுப்பின.

அப்போது இராக்கில் வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார் அந்நாட்டின் பிரதமர் நூரி மலிகி.

இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர் காசெம் சுலேமானீ. அது எப்படி?

இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ரியான் க்ரோக்கர் இது தொடர்பாக பிபிசி பெர்சிய சேவைக்கு 2013இல் அளித்த பேட்டியில், பாக்தாத் பேச்சுவார்த்தைக்கு பின்னால் ஜெனரல் காசெம் சுலேமானீயின் பங்கு குறித்து விவரித்தார்.

"பேச்சுவார்த்தையின்போது இராக்கிற்கான இரான் தூதர் அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொண்டார். எனக்கு அது ஏன் என்று தெரியவில்லை. அவர் குறிப்பிடாத சில விஷயங்களை நான் பேசும்போதெல்லாம் அவர் இடைவேளை எடுத்துக் கொண்டு இரானுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசுவார். அவரை இரான் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொலைபேசியின் அந்த முனையில் பேசியவர் காசெம் சுலேமானீ," என்றார் க்ரோக்கர்.

க்ரோக்கர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதராக பணியாற்றிய போதும் சுலேமானீயின் தாக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்த இரான் நாட்டின் பேச்சுவார்த்தை அதிகாரிகள், அனைத்து விஷயங்களையும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்திடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இறுதி முடிவு எடுப்பது காசெம் சுலேமானீதான் என்று பிபிசியிடம் க்ரோக்கர் தெரிவித்தார்.

ஒருசில ஆண்டுகளில் சுலேமானீயின் பங்கு வெளிச்சத்திற்கு வந்தது. தொலைபேசியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நபர், வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தார்.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY/GETTY IMAGES

பிறகு இரானின் முக்கிய முகமாக மாறினார் சுலேமானீ, எந்த பிரச்சனை இருந்தாலும், அவரிடம்தான் எடுத்து செல்லப்படும்.

சிரியா போர், இராக் உடனான மோதல், இஸ்லாமிய அரசுக்கு எதிரான சண்டை, மற்றும் பல விவகாரங்களில் சிரியாவின் அதிபர் பஷர் அல்-அசாதின் மூளையாகவும் காசெம் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்துதான் வெறும் ஓர் அதிகாரியாக இருந்த காசெம், கதாநாயகர் போல பார்க்கப்பட்டார்.

காசெம் சுலேமானீ கட்டுப்படுத்திய படைப்பிரிவு நேரடியாக இரான் நாட்டின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமினேவிடம் தொடர்பில் இருக்கும்.

காசெம் சுலேமானீ தலைமை வகிக்கும் Quds பிரிவு, அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

ஏற்கனவே இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பிரச்சனையில், தற்போது சுலேமானீயின் மரணமும் சேர்ந்திருக்கிறது.

பிரச்சனை பெரிதாகும் அதே நேரத்தில், இரானின் பதிலடியும் தீவிரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுலேமானீ கொல்லப்பட்டது எப்படி?

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சுலேமானீ கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவல் படை கூறுகிறது.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சுலேமானீ மற்றும் இரான் ஆதரவு பெற்ற போராளிகள் இரண்டு கார்களில் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து செல்லும்போது, அமெரிக்க ட்ரோனால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், "அதிபரின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசெம் சுலேமானீயை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது" என்று கூறப்பட்டுள்ளது.

"இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-50982773

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசெம் சுலேமானீ: அமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்?

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டது, அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும்.

இந்த பிரச்சனையில் இரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடக்கும் தாக்குதலும் அதற்கு நடத்தப்படும் எதிர்தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையில் வெளிப்படையான மோதலை ஏற்படுத்தும்.

இதனால் இராக் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையாள உத்தி என்று ஒன்று இருந்தால், அந்த உத்தி இதுவரை இல்லாத அளவுக்கு சோதனைக்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின்போது மத்திய கிழக்கு மற்றும் பெர்சிய வளைகுடா பகுதிகளுக்கான வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரான ஃபிலிப் கார்டன், இந்த கொலை, இரானுக்கு எதிராக அமெரிக்காவால் விடுக்கப்பட்ட போருக்கான அழைப்பு என கூறியுள்ளார்.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைAFP Image captionகாசெம் சுலேமானீ

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (குட்ஸ் படை ) என்பது இரானிய ராணுவப்படையில் வெளிநாட்டு நடவடிக்கைகளை கையாளும் ஒரு பிரிவு.

லெபனான், இராக், சிரியா மற்றும் பிற நாடுகளில் தாக்குதலுக்கு திட்டமிடுதல் மூலமாகவும் இரானியப் படைகளின் சிறு பிரிவுகளை ஆதரிப்பது மூலமாகவும் இரானிய ராணுவப் படையை வலுவாக்குவதிலும் விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர் காசெம் சுலேமானீ.

அமெரிக்காவை பொறுத்தவரையில், 62 வயதான காசெம் சுலேமானீ பல அமெரிக்கர்களைக் கொன்றவர். ஆனால் அவர் இரானில் மிகவும் பிரபலமானவர். இரான் நாட்டின் மீது அமெரிக்கா கொடுத்த அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடை ஆகியவைக்கு இரான் எடுத்த பதில் நடவடிக்கைகளில் முக்கியமான பங்காற்றியவர் ஆவார்.

அதிபர் டிரம்பின் கவனம் சுலேமானீ மீது இருந்ததைவிட, அமெரிக்கா இப்போது அவர் மேல் ஏன் தாக்குதல் நடத்தியது என்பதே ஆச்சரியத்தை அளிக்கிறது.

இராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட சிறு தாக்குதல்களுக்கு இரான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இரானின் நடவடிக்கையான, வளைகுடா பகுதியில் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அமெரிக்க வான்வழி விமானங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சௌதி எண்ணெய் கிடங்கின் மீது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதல் என எதற்கும் அமெரிக்கா நேரடியாக பதிலளிக்கவில்லை.

ஆனால் இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இரானிய ஆதரவு படைகள் என நம்பப்படும் படைகள் மீது ஏற்கனவே அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது.

சுலேமானீ கொல்லப்பட்டதற்கு, அவருடைய கடந்த கால நடவடிக்கைகளை மட்டும் அமெரிக்கா காரணமாக கூறவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இராக்கிலுள்ள அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளில் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடக்கயிருந்ததை நிறுத்தும் நோக்கம் என விளக்கியிருந்தது.

அமெரிக்கா - இரான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அடுத்து என்ன என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கும். இந்த ஒரு நடவடிக்கையில் இரானை அச்சுறுத்தியதாகவும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா போன்ற தங்கள் கூட்டு நாடுகளுக்கு அமெரிக்காவின் ராணுவ வலிமையைக் காட்டியதாகவும் டிரம்ப் நம்புவார். ஆனால் சிறிது கால தாமதம் ஆனாலும் இரான் இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்காது.

இராக்கில் உள்ள 5000 அமெரிக்க படை வீரர்களே இரானின் குறியாக இருக்கும். அல்லது இரான் மற்றும் அதன் கூட்டாளிகள் இராக்கில் இதற்கு முன்பு இலக்கு வைத்த நிலைகள் மீது மீண்டும் தாக்குதல் நடக்கவும் வாய்ப்புண்டு. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இதன் முதல் தாக்கமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்.

அதே நேரம் அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும். அமெரிக்கா ஏற்கனவே பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புக்காக தன்னுடைய சிறு படைகளை அனுப்பிவிட்டது. வேறு எங்கு பாதுகாப்பு தேவை என நினைக்கிறதோ அங்கு மேலும் சில படை வீரர்களை அனுப்ப அமெரிக்காவிடம் திட்டம் தயாராக இருக்கும்.

ஆனால் இரானின் பதிலடி தாக்குதலாக மட்டுமில்லாமல், சுலேமானீ நிறுவி, நிதி உதவி செய்த சிறிய அளவிலான குழுக்களின் உதவி மூலம் அப்பிராந்தியத்தில் மேற்கொள்ளும் வேறு நடவடிக்கைகளாகவும் இருக்கலாம்.

அமெரிக்க ராணுவப்படைபடத்தின் காப்புரிமைREUTERS

உதாரணமாக பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை சுற்றி வளைக்கலாம், அமெரிக்க ராணுவத்தின் படைகளை இராக்கில் நிறுத்தி வைப்பது குறித்து கேள்வி எழுப்பி இராக் அரசை பலவீனப்படுத்தலாம். போராட்டங்களை தூண்டிவிட்டு தாக்குதலிலிருந்து திசை திருப்ப முயற்சி செய்யலாம்.

காசெம் சுலெமானீக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமெரிக்க ராணுவத்தின் திறனுக்கு ஒரு வெளிப்படையான சான்று. அந்த பகுதியில் இருக்கும் நிறைய பேர் அவருக்காக வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் இது அமெரிக்க அதிபர் டிரம்பின் புத்திசாலித்தனமாக கருதப்படுமா?

இதற்கு பிறகு பென்டகன் எவ்வளவு தயாராக இருக்கிறது? மத்திய கிழக்கு பகுதியைப் பற்றி டிரம்ப் என்ன நினைக்கிறார் என்பதை இது காட்டுகிறதா? இரானிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் சகிப்புதன்மையற்ற நிலையா இது? அல்லது மிகவும் மோசமானவர் என அதிபர் டிரம்பால் வர்ணிக்கப்பட்ட ஓர் இரானிய ராணுவத் தளபதிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையா?

இவற்றுக்கான பதில்கள் இனிமேல்தான் தெரியும்.

https://www.bbc.com/tamil/global-50986693

Link to comment
Share on other sites

அமேரிக்கா 3500 அதிக துருப்புக்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது.

இந்த ஜெனரலை பல காலத்திற்கு முன்னதாகவே கொன்றிருக்கவேண்டும் என்கிறார் ட்ரம்ப்.

ஈரானும் பதிலடி கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.  அநேகமாக இணைய ஊடறுப்புக்களை செய்யலாம் என கருதப்படுகின்றது.

ஈரானுடன் ஒரு போருக்கான சாத்தியங்கள் உள்ளன. 2020 மீண்டும் மத்திய கிழக்கு யுத்தத்துடன் ஆரம்பம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

ஈராக்கின் பாக்தத் அமெரிக்க தூதுவராலயத்தின் மீதான அண்மைய நிகழ்வுகளின் எதிரொலி. 

இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது

உலகம் முழுவதும் மசகு / கச்சாய் எண்ணெய் விலை அதிகரிக்கும். உலக மக்கள் அனைவரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.  

ஏற்கெனவே... எரி பொருட்களின் விலை அதிகரிப்பாலும்,
மின்சார வாகனங்களின் வருகையும், அதற்கு சில நாடுகள் கொடுக்கும் வரி விலக்கும்... 
பல நாடுகளில் உள்ள... மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள்...
திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில்...

எரி பொருளின்  விலை, இன்னும்.. அதிகரித்தால்,
பல நிறுவனங்களும் மூடி, அங்கு வேலை செய்பவர்களும் வீட்டிற்கு போக வேண்டி இருக்கும்.   

Link to comment
Share on other sites

ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டது குறித்து டிரம்ப் விளக்கம்...

அமெரிக்க அதிகாரிகளை கொல்ல திட்டமிட்டதால் ஈரானின் தளபதி சுலைமானியை அமெரிக்க படையினர் கொன்றதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை மீண்டும் அமெரிக்கப்படைகள் பாக்தாத்தில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது.

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் ஆளில்லா குட்டி விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் குருதுஸ் பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளதால், அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மியாமி நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப்,  உலகின் முதன்மையான தீவிரவாதியான காசிம் சுலைமானியை தமது உத்தரவின் பேரில் அமெரிக்க படையினர் மிகச்சரியாக திட்டமிட்டு தாக்கி அழித்ததாக தெரிவித்தார்.

அமெரிக்க உயர் அதிகாரிகளைக் கொல்வதற்கு திட்டமிட்டதாகவும் கையும் களவுமாக சிக்கிய அவரை அமெரிக்க வீரர்கள் கொன்றதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரு போரை நிறுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போரை தொடங்குவதற்காக அல்ல என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஈரானியர்கள் மீது மிகுந்த மதிப்பு உண்டு என்று குறிப்பிட்ட டிரம்ப், ஈரானின் கொடுங்கோன்மையும் அண்டை நாடுகள் மீது மறைமுக யுத்தம் தொடுக்கும் போக்கும் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனிடையே ஈராக்கில் இன்று அதிகாலை மீண்டும் அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆளில்லா குட்டி விமானம் மூலம் பாக்தாத் கிழக்கு பகுதியில் தீவிரவாத இயக்கத்தின் ராணுவ படையினரை குறி வைத்து தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாக ஈராக் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

https://www.polimernews.com/dnews/95366/ஈரானின்-முக்கிய-தளபதிகொல்லப்பட்டது-குறித்துடிரம்ப்-விளக்கம்...

 

Link to comment
Share on other sites

காசிம் சுலைமானியை தமது உத்தரவின் பேரில் அமெரிக்க வீரர்கள் கொன்றனர் -அதிபர் டிரம்ப்

உலகின் முதன்மையான தீவிரவாதியான காசிம் சுலைமானியை தமது உத்தரவின் பேரில் அமெரிக்க படையினர் மிகச்சரியாக திட்டமிட்டு தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உயர் அதிகாரிகளைக் கொல்வதற்கு அவர் திட்டமிட்டதாகவும் கையும் களவுமாக சிக்கிய அவரை அமெரிக்க வீரர்கள் கொன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு போரை நிறுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, போரை தொடங்குவதற்காக அல்ல என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் மக்கள் மீது மிகுந்த மதிப்பு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர், ஈரானின் கொடுங்கோன்மையும் அண்டை நாடுகள் மீது மறைமுக யுத்தம் தொடுக்கும் போக்கும் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள சர்வதேச விமான நிலயத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் குருதுஸ் பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

https://www.polimernews.com/dnews/95381/காசிம்-சுலைமானியை-தமதுஉத்தரவின்-பேரில்-அமெரிக்கவீரர்கள்-கொன்றனர்--அதிபர்டிரம்ப்

Link to comment
Share on other sites

வடக்கு ஈராக்கில் அமெரிக்க படை மீண்டும் தாக்குதல்

ஜன 04, 2020  06:51 

வாஷிங்டன்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் புரட்சி படையைச் சேர்ந்த சுலைமானி, அபு மஹ்தி என்ற இரு தளபதிகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவுப்படி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து, இந்திய, சீன, ரஷ்ய வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை ஏற்படுத்துவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளன.

 

3500 வீரர்கள்
போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா மேலும் 3500 வீரர்களை அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டார தகவல் வெளியாகியுள்ளன.

மீண்டும் தாக்குதல்

இந்நிலையில் இன்று காலை மீண்டும் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் வான் தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவ தளபதி ஒருவரை குறி வைத்து நடந்த இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாக ஈராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2450133

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரான் - அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால் பெட்ரோல் விலை எவ்வளவு உயரும்? - விரிவான தகவல்கள்

இரான் - அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால் பெட்ரோல் விலை எவ்வளவு உயரும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீயை அமெரிக்கப் படை கொன்றுள்ளது. இதற்குப் பழிக்குப் பழி வாங்கியே தீருவோம் என்கிறது இரான்.

இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது சாமான்ய மனிதனை எப்படி பாதிக்கும்? எரிபொருள் விலை எவ்வளவு உயரும்? கடந்தகாலங்களில் இவ்வாறு நடந்தது உண்டா?

ஒது குறித்து விவரிக்கிறார் பிபிசி வணிக செய்தியாளர் நெல் மாக்கென்ஸி.

கடந்த கால படிப்பினைகள்

நியூயார்க் மெர்கெண்டைல் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் வணிகர் மிச் கான், ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கா - இராக் யுத்தம் எப்படி எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தியது என நினைவு கூறுகிறார்.

"பங்குச்சந்தையில் ஒரு நிச்சயமற்ற நிலை நிலவியது. 2004ஆம் ஆண்டு போர் தொடங்கிய அந்த நாளில், என் அருகே அமர்ந்திருந்த மற்றொரு வர்த்தகர் எண்ணெய் நிறுவனப் பங்குகளை விற்க முயன்றார். ஆனால், அதற்குள் சந்தை மொத்தமாக சரிந்துவிட்டது," என்கிறார் மிச் கான்.

இரான் - அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால் பெட்ரோல் விலை எவ்வளவு உயரும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

விலை சீராக இல்லாமல், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

ஓர் இரவில் பேரலுக்கு பத்து டாலர்கள் ஏறிய விலை, திடீரென 20 டாலர்கள் விலை குறைந்தது.

ஆனால் அப்படியான சூழல் இப்போது இல்லை என்கிறார் கான்.

இப்போது எரிபொருள் உற்பத்தி செய்யும் இடம், அது சுத்திகரிக்கப்படும் இடம் என எல்லாம் இந்த 16 ஆண்டுகளில் மாறி இருக்கிறது.

முன்பு நடந்தது போல இப்போது நடக்காது. அதற்காக எதுவுமே நடக்காது என்று இல்லை.

அமெரிக்காவின் வர்த்தகம்

ஏன் 16 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் செல்ல வேண்டும்? அண்மையில் நடந்த ஒரு விஷயத்தை வைத்தே பார்ப்போம்.

அண்மையில் அராம்கோ எரிபொருள் உற்பத்தி நிலையம் தாக்கப்பட்டது.

இரான் - அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால் பெட்ரோல் விலை எவ்வளவு உயரும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதனை அடுத்து பெட்ரோல் விலை குறித்த அச்சம் நிலவியது. ஆனால், சில நாட்களுக்கு மட்டுமே பெட்ரோல் விலையில் ஓர் ஏற்றம் இருந்தது. அதன் பின் கட்டுக்குள் வந்தது.

இதற்கு காரணம் எரிபொருள் வர்த்தகத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் தாக்கம் குறைந்ததுதான்.

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளை தங்கள் எரிபொருள் தேவைக்காக சார்ந்து இல்லை.

1990 ஆண்டுகளில் வளைகுடா போர் நடந்த போது, எரிபொருள் இரண்டு இடங்களிலிருந்துதான் வந்தது, ஒன்று ஒபெக் அல்லது எரிபொருள் உற்பத்தி செலவு அதிகமாக இருந்த வடக்கு கடல் பகுதி.

இரான் - அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால் பெட்ரோல் விலை எவ்வளவு உயரும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அப்போது எங்கு எரிபொருள் இருக்கிறதெனக் கண்டுபிடிப்பது செலவு அதிகமாகும் விஷயம் மற்றும் ஆபத்தான செயல்.

ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.

வடக்கு அமெரிக்காவிலேயே மிதமிஞ்சிய அளவில் எரிபொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், ரஷ்யாவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால் முன்பு இருந்த சூழ்நிலை இப்போது இல்லை.

ஆனால் அதே நேரம் அமெரிக்காவில் எண்ணெய் பைப் லைன்கள் தாக்கப்பட்டால் எண்ணெய் விலை நிச்சயமாக உயரும்.

https://www.bbc.com/tamil/global-50991130

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் தனது impeachment senate  inquiry யிலிருந்து மக்களை திசை திருப்பத்தான் இந்த வரதம் தாக்குதலை செய்திருக்கிறார். இந்த ராணுவத்தளபதியை பு(b)ஷ் காலத்திலிருந்து அமேரிக்கா குறி வைத்திருந்தது ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி அதை முன்னெடுக்கவில்லை.  அமேரிக்கா நினைத்திருந்தால் காதும் காதும் வைத்தது போல் தமது proxies ஐ வைத்து அத்தளபதியை கொன்றிருகலாம். 

2011 நவம்பர் டிரம்ப், ஒரு பேட்டியொன்றில், ஒபாமா 2012 தேர்தலில் வெல்லுவதற்காக இரான் மேல் தாக்கிவார் என்று ஆருடம் கூறி குற்றம் சாட்டியவருக்கு அதே tactic ஐ நடைமுறைப்படுத்துவது ஒன்றும் கஷ்டமில்லை

டிரம்ப் என்னதான் தகிடுதித்தம் பண்ணினாலும் அதை நம்பிறதற்கென்று அமேரிக்காவில் ஒரு கூட்டம் இருக்குத.

Link to comment
Share on other sites

சுலைமானி உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

157813684595462.jpg

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் மூலம் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுலைமானி, கொல்லப்பட்டார்.

அவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி, திறந்த ஜீப்புகளில் பாக்தாத்தின் முக்கிய பகுதிகளில் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் ஈராக் பிரதமர் அடல் அப்துல் மஹ்தி ((Adel Abdul Mahdi)) உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

https://www.polimernews.com/dnews/95462/சுலைமானி-உடலுக்குஏராளமானோர்-அஞ்சலி

 

 

ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால், இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி,  உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஆதரவு  அமைப்புகளான ஹெஸ்புல்லா ((hezbollah)), ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் ஆகியவை தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது. எனவே ஏவுகணை மற்றும் ராக்கெட் வீச்சை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை இஸ்ரேல் செய்துள்ளது.

https://www.polimernews.com/dnews/95439/ஈரான்-ஆதரவு-குழுக்கள்தாக்குதல்-நடத்தலாம்-என்றஅச்சத்தால்-இஸ்ரேலில்பாதுகாப்பு-அதிகரிப்பு

Link to comment
Share on other sites

ஈராக் அணு யுத்தத்தை ஆரம்பிக்க உள்ளது என அன்று (பொய்)  கூறிய அமேரிக்கா ( டிக் செய்னி / புஸ் ) பல நூறு ஆயிரம் மக்கள் கொல்ல காரணம் ஆனார்கள். 

இன்று, அதே போன்று ஒரு கருத்தை கூறி, அதாவது ஒட்டுக்குழுக்கள் ஊடாக தாக்குதல் செய்ய உள்ளார்கள், ஒரு அரச இராணுவ அதிகாரியை கொன்றுள்ளது அமெரிக்க அரசு. 

எமது தாயக சுய நிர்ணய விடுதலை போராட்டத்திலும், ஒட்டுக்குழுக்களை அரசுகள் உருவாக்கின. ஆனால், அந்த உருவாக்கிய சிற்பிகளை தாக்கினால் அது பயங்கரவாதம் என முத்திரை குத்தின  நிர்வாண உலக வல்லரசுகள்.    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசெம் சுலேமானீ கொலை மூன்றாம் உலகப் போரைத் தூண்டுமா?

காசெம் சுலேமானீ கொலைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளது சர்வதேசஅளவில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

இந்த பதற்றம் குறித்து பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தியாளர் ஜொனாதன் மார்க்கஸ் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்.

மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் உள்ளதா?

இரானுக்கு எதிராக அமெரிக்கா போரை அறிவிப்பதற்காகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளார் என பலர் விவரிக்கின்றனர். இந்த விவகாரத்தை மிகைப்படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது.

இது மூன்றாம் உலகப் போரை தூண்டாது. பொதுவாக இத்தகைய மோதலில் ஈடுபடக் கூடிய சீனாவும் ரஷ்யாவும், இந்த விவகாரங்களில் தலையிடவில்லை.

ஆனால், அமெரிக்க அரசின் நடவடிக்கையால், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் அவர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

காசெம் சுலேமானீ கொலைபடத்தின் காப்புரிமைAFP

இரானின் பதிலடியை நிச்சயம் எதிர்பார்க்க வேண்டிய தருணம் இது. இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்கு இடையேயான பகை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரானின் பதில் நடவடிக்கை, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக அமையலாம்.

அதேபோல இரானை பாதிக்கக்கூடிய வகையில் அமெரிக்கா வைக்கும் இலக்கை முறியடிக்கும் வகையிலும் இரான் செயல்படும்.

சர்வதேச சட்டத்தின்கீழ் ஒருவரை கொள்வது சரியா?

இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த இரான் திட்டமிட்டிருந்ததால் இவ்வாறானா நடவடிக்கை மேற்கொண்டதாக அமெரிக்கா வாதிடுகிறது.

அமெரிக்கா - இரான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நடக்காத குற்றச்செயலுக்காக முன்கூடியே தற்காத்துக்கொள்ளும் நோக்கத்தில் ஒருவரை கொலை செய்வது சட்டபூர்வமாக நியாயம் அல்ல, என நோட்ர டாம் ஸ்கூல் ஆஃப் லாவின் சட்ட பேராசிரியர் மேரி எலன் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் தற்காப்புக்காக, தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஜெனரல் காசெம் சுலேமானீ பாக்தாதில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டது, அமெரிக்க மீதான ஆயுத தாக்குதலுக்கு பதிலடி இல்லை. மேலும் அமெரிக்காவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பிராந்தியத்துக்குள்ளும் இரான் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவிரை அமெரிக்கா சட்ட விரோதமாகக் கொலை செய்தது என்றுதான் கூறவேண்டும்," என சட்டப் பேராசிரியர் மேரி எலன் கூறினார்.

அணு ஆயுதத்தை கொண்டு இரான் பதில் தாக்குதல் நடத்தமுடியுமா? இரானுக்கு அத்தகைய வலிமை உள்ளதா?

இதுவரை இரான் தங்களிடம் அணு ஆயுதத்திட்டம் எதுவும் இல்லை என்றும் எப்போதுமே தாங்கள் ஆயுதத் தாக்குதலை விரும்பியதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் பகையால், இரான் அனைத்து தடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, சர்வதேச சமூகத்துடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுவதுமாக கைவிட முயற்சி செய்யும் என்றால் அதற்கான சாத்தியங்கள் உள்ளது.

https://www.bbc.com/tamil/global-50992313

Link to comment
Share on other sites

பாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க நிலைகள் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள பழமையான, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் தாக்கி அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். 

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள விமான நிலையத்தின் மீது அண்மையில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று ஈரான் மிரட்டியுள்ளதால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம், அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள ஈராக்கின் பலாட் (Balad) விமான படைதளம், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கிரீன் ஜோன் (green zone) பகுதியை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசி நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஒரு ராக்கெட், கிரீன் ஜோன் பகுதிக்குள் விழுந்தது. மேலும் ஓர் ராக்கெட், கிரீன் ஜோன் பகுதி அருகே விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை என்று ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராக்கெட்டுகளை வீசி யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து தகவல் இல்லை. எனினும், ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் ஈரானில் 1979ம் ஆண்டு அமெரிக்கர்கள் 52 பேர் சிறைபிடித்து வைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதே எண்ணிக்கையிலான கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த 52 இடங்களும், ஈரானுக்கும், ஈரான் கலாச்சாரத்துக்கும் மிகவும் முக்கியமானவை என்பதையும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் மீது மிக கடுமையாகவும், மிக வேகமாகவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ள டிரம்ப், மேலும் அச்சுறுத்தல்கள் நிலவுவதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

https://www.polimernews.com/dnews/95527/பாக்தாதில்-அமெரிக்கப்படைகள்-மற்றும்-தூதரகத்தைகுறிவைத்து-தாக்குதல்--ஈரானுக்கு-டிரம்ப்எச்சரிக்கை

Link to comment
Share on other sites

ஈரானும்  உருசியாவிடம் இருந்து இந்த எஸ் 400 ஏவுகணைளை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலேமானீ கொலை: ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம், அமெரிக்காவுக்கு எதிராக முழக்கம்

சுலேமானீ இறப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் புரட்சிகர ராணுவத்தின் தளபதி காசெம் சுலேமானீக்கு அஞ்சலி செலுத்த இரானில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் துக்கத்தில், தங்கள் மார்பை அடித்துக்கொண்டு '' அமெரிக்காவிற்கு மரணம் '' என முழக்கமிட்டனர்.

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரான் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமாக உருவெடுத்தற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் இரண்டாவது அதிகாரமிக்க நபராகவும் சுலேமானீ விளங்கினார்.

அவரது படுகொலை இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

சுலேமானீயுடன் நெருங்கிய நட்பு கொண்ட இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமெனி, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடுமையான பதிலடி இருக்கும் என எச்சரித்துள்ளார். ஈரான் அமெரிக்காவிற்கு எதிரான இணைய தாக்குதல்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை அன்று சுலேமானீ கொல்லப்பட்டதை அறிவித்த அதிபர் டிரம்ப், ''இது மிகவும் ஆபத்தான செயல் என்பதால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ் மற்றும் ஒபாமாவால் தவிர்க்கப்பட்டது'' என்றார். மேலும் இரானின் முக்கியமான 52 தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராகவுள்ளது என்றும் சனிக்கிழமை அன்று தெரிவித்தது.

இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படுமோ என்ற கவலை தொடர்ச்சியான பல ட்விட்டர் பதிவுகள் மூலம் எழுகிறது. இரான் அமெரிக்க தளத்தில் உள்ள துருப்புகள் மீது இலக்கு வைத்தால், மிகவும் கடுமையான மற்றும் விரைவாக இராக் மீது தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

 

சுலேமானீ மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும், எனவே இரானின் கலாசார தளங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது போர்குற்றமாகும் என இரானின் வெளியுறவு துறை அமைச்சர் முஹம்மத் ஜாவேத் ஜாரிஃப், அதிபர் டிரம்பின் ட்வீட்டர் பதிவுக்கு பதிலளித்தார்.

இரானில் என்ன நடக்கிறது ?

விடியலுக்கு முன்பே சுலேமானீயின் உடல் ஆஹ்வஸ் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த நகரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு ஆடை அணிந்தபடி துக்கம் அனுசரிக்க வந்து காத்திருந்தனர். சுலேமானீயின் உடல் ஆஹ்வஸ் நகரத்திற்கு விமானம் மூலம் புறப்படும் முன்பு இரானிய கொடி போர்த்தப்பட்டு இராணுவ மரியாதை செலுத்தப்பட்ட காட்சிகளை இரானின் மாநில செய்தி மையம் ஒன்று வெளியிட்டது.

சுலேமானீ இறப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

1980களில் இரான்-இராக் போரின்போதும் , இரானின் அதிஉயர் தலைவருடன் சுலேமானீக்கு இருந்த நட்பும், அவரை மக்கள் மத்தியில் சிறந்த ராணுவ தளபதியாக புகழ் பெற்றுத் தந்தது. எனவே இரானின் தேசிய கொடியை ஏந்தியபடியும் அவற்றின் புகைப்படங்களை ஏந்தியும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்தனர்.

இரான் தலைநகர் டெஹ்ரானில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் '' அமெரிக்காவிற்கு மரணம் '' என சில நிமிடங்களுக்கு முழக்கமிட்டதாக ஐ.எஸ்.என்.ஏ செய்தி முகமை கூறுகிறது. '' டிரம்ப், இது தான் இரானின் குரல் , கேட்டுக்கொள் '' என்று சபாநாயகர் அலி லறிஜனி குறிப்பிட்டு, அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்டுள்ளார்.

ட்ரோன் தாக்குதலின்போது சுலேமானீயுடன் சேர்ந்து இரான் நாட்டை சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். சுலேமானீயின் உடலோடு ஐந்து பேரின் உடலும் இரானுக்கு கொண்டுவரப்பட்டது.

அமெரிக்கா கூடுதலாக 3000 துருப்புகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் அமெரிக்க குடிமக்களை இராக்கில் இருந்து வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெஹ்ரான் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட சுலேமானீயின் உடலுக்கு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, நகரம் முழுவதும் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது. பிறகு செவ்வாய்கிழமை அன்று இறுதி சடங்குகளுக்காக கோம் என்ற புனித தலத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இரான் முழுவதும் சுலேமானீயின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கப்பட்டாலும், சிறியா மற்றும் இராக்கின் நகரவீதிகளில் சுலேமானீயின் மரணத்தை மக்கள் கொண்டாடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/global-50998307

Link to comment
Share on other sites

செப்., 11 தாக்குதலில் தொடர்பா?

சுட்டுக் கொல்லப்பட்ட, ஈரான் ராணுவ மூத்த தளபதி சுலைமானி குறித்து, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறிய கருத்துகளுக்கு, எதிர்ப்பு எழுந்துள்ளது. 'அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில், 2001, செப்., 11ல், விமானங்களை கடத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் ஈடுபட்ட, 12 பயங்கரவாதிகளில், 10 பேர் ஆப்கானிஸ்தான் வழியாகச் செல்வதற்கு, சுலைமானி உதவினார்' என, பென்ஸ் கூறியிருந்தார்.இதற்கு, பல்வேறு ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2451061

அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 'போர் வேண்டாம், மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும்' என, அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன், நியூயார்க் உட்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.


இந்தியாவுக்கு பாதிப்பு

'அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்னை மேலும் தீவிரமடைந்தால், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும்' என, எப்.ஐ.இ.ஓ., எனப்படும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. அதன் டைரக்டர் ஜெனரல் அஜய் சஹாய் கூறியுள்ளதாவது: இந்தியா - ஈரான் இடையேயான வர்த்தகத்தில், நம் ஏற்றுமதி, ஆண்டுக்கு, 24 ஆயிரத்து, 920 கோடி ரூபாய். அதேபோல், இறக்குமதி, 96 ஆயிரம் கோடி ரூபாய். ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தோம். அமெரிக்கா - ஈரான் இடையேயான பிரச்னை தீவிரமடைந்தால், இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார். இந்தப் பிரச்னையில், தொடர்ந்து நான்காவது நாளாக, இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. டில்லியில், 1 லிட்டர் பெட்ரோல், 9 காசுகளும்; 1 லிட்டர் டீசல், 11 காசுகளும் நேற்று உயர்ந்தன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.