Jump to content

காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா


Recommended Posts

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Video shows apparent Iran missile attack on Iraq base

மன்னிக்கவும் முதலாவது ஒளிப்பதிவு இணைப்பு இயங்குனிலையில் இல்லை ( அல் அசாட் விமானத்தளத்தின் கோப்பு ஒளிப்பதிவு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Qassem-Soleimani-720x450.jpg

சோலெய்மனியின் இறுதி ஊர்வல சனநெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு

அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ உயர் தளபதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் நெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 48 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசிம் சோலெய்மனியின் உடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை அடக்கம் செய்யப்படவிருந்தது. இந்த உயிரிழப்புக்கள் காரணமாக உடல் அடக்கம் பிற்போடப்பட்டுள்ளது. புதிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சோலெய்மனியின் சொந்த ஊரான கேர்மனில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் வீதிகளில் நிரம்பியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய ராணுவத் தளபதியின் கொலை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஈரானின் அதியுயர் தலைவர் அயதொல்லாஹ் அலி கமேனிக்கு அடுத்த நிலையில் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதராக காசிம் சோலெய்மனி கருதப்பட்டார்.

எனினும் அமெரிக்கா அவரை ஒரு பயங்கரவாதியாகவும் அமெரிக்கத் துருப்புக்களுக்கு அச்சுறுத்தலாகவும் கருதியது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சோலெய்மனியின்-இறுதி-ஊர்வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனியன் பிளைட்டுக்கு அடிச்சிட்டாங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசெம் சுலேமானீ மரணம்: அமெரிக்க விமானத்தளங்கள் மீது தாக்குதல் - டிரம்ப், இரான் தரப்பு கூறுவது என்ன?

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராக்கில் அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட உலகத்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''எல்லாம் நன்றாக உள்ளது. இராக்கில் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இதுவரை உள்ள மிக வலிமையான மற்றும் மிகவும் நவீனமான ராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை ஓர் அறிக்கை வெளியிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump
 

All is well! Missiles launched from Iran at two military bases located in Iraq. Assessment of casualties & damages taking place now. So far, so good! We have the most powerful and well equipped military anywhere in the world, by far! I will be making a statement tomorrow morning.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump

இரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''பிரச்சனையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ இரான் கோரவில்லை. ஆனால் எங்களின் மீதான வலிய தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.

''எங்கள் நாட்டுமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது கோழைத்தனமான ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட தளத்தின் மீது ஐ.நா. அமைப்பின் சாசன விதிகளின் 51-ஆம் பிரிவின்படி, எங்களின் சுயபாதுகாப்புக்காக சரியான அளவில் நடவடிக்கைகளை எடுத்து அதனை நிறைவேற்றினோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @JZarif
 

Iran took & concluded proportionate measures in self-defense under Article 51 of UN Charter targeting base from which cowardly armed attack against our citizens & senior officials were launched.

We do not seek escalation or war, but will defend ourselves against any aggression.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @JZarif

அமெரிக்கா - இரான் இடையேயான பிரச்சனையை மேலும் நீட்டிக்கும் எண்ணம் இரானுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ட்வீட் செய்தி அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

காசெம் சுலேமானீ மரணம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராக்கில் உள்ள அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு முன்னதாக குறிப்பிட்டுள்ளது.

'இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-51029386

காசெம் சுலேமானீ மரணம்: அமெரிக்க விமானத்தளங்கள் மீது இரான் தாக்குதல்

அமெரிக்க விமானத்தளம் மீது இரான் தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு கூறியுள்ளது.

அல்-அசாத் விமானதளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

''இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்று இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுலேமானீ இறுதிச்சடங்குபடத்தின் காப்புரிமைEPA

''அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்துக்கு தங்களின் படைத்தளங்களை தந்துள்ள அதன் நேச நாடுகள் அனைத்தையும் நாங்கள் எச்சரிக்கிறோம். இரான் மீதான வலிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமையும் எந்த ஒரு பிராந்தியத்தின் மீதும் குறி வைக்கப்படும்'' என்று இரானின் அரசு செய்தி முகமையான ஐஆர்என்ஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. அல்-அசாத் தளத்தின் மீது தாக்குதல் நடந்ததற்கு சற்று நேரத்திலேயே இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத்தளம் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துள்ளதாக அல் மாயாதீன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் இரான் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் அதிஉயர் தலைவரான அயதுல்லா காமெனிக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரமிக்க நபராக சுலேமானீ விளங்கினார்.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைEPA

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தார். அதற்கு இரானும் தனது பாணியில் பதிலளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இராக்கில் இயங்கி வரும் இரானிய ஆதரவு பெற்ற ஆயுதக்குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது.

https://www.bbc.com/tamil/global-51029381

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் விலை 4 வீதம் அதிகரிப்பு.. இந்தியன் கோவிந்தாவா.. அப்போ இலங்கை..?  ரெல் மீ.. 😊

Link to comment
Share on other sites

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எண்ணெய் விலை 4 வீதம் அதிகரிப்பு.. இந்தியன் கோவிந்தாவா.. அப்போ இலங்கை..?  ரெல் மீ.. 😊

அங்கும் தொழில் செய்து நாட்டிற்கு வளம் சேர்க்கும் மக்கள் திரும்பினால் நிலைமை மிகவும் கடினமாகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீப் பேட்டி: நாங்கள் கோழைகள் அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளைத் தாக்குவோம்

ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் உடன் நேர்காணல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

(பிபிசி நேற்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க நிலைகள் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு எடுத்த பேட்டி இது).

''இன்றைக்கு ஈரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே ஈரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்லை.'' என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் இரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் .

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையில் இந்த வாரம் உரையாற்றச் செல்வதற்கு உங்கள் பயணத்துக்கு விசா மறுக்கப்பட்டதா என்பதை நீங்கள் உறுதி செய்ய முடியுமா?

பதில்: அப்படித்தான் பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் 2019 டிசம்பரிலேயே கடிதம் அனுப்பியும், அதைப் பரிசீலிக்க போதிய கால அவகாசம் இல்லாமல் போனதாக செயலாளர் பாம்பேயோ அழைத்து தகவல் தெரிவித்தார்.

கேள்வி: இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நல்லது. தலைமையக ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று நாங்கள் உங்களுக்குப் பதில் அளிக்கலாம். ஆனால், நல்ல ஆட்சி நிர்வாகம் இல்லாத ஒரு நாட்டுக்கு, இந்த ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா மாறுபட்டதாக உள்ளது, சர்வதேச சட்டங்களுக்கு எந்த மரியாதையும் அளிக்காத ஒரு நாட்டுக்கு, போர்க் குற்றங்கள் செய்யும் நாட்டுக்கு, கலாச்சார தலங்களைத் தாக்கி மேலும் போர் நடத்துவோம் என மிரட்டும் ஒரு நாட்டுக்கு, போர்க் குற்றம் செய்யும் நாட்டின் நிர்வாகத்திடம், எதற்கும் கட்டுப்பட்டு நடக்கும் அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை. இது நான் எதிர்பார்க்காத விஷயம் அல்ல. ஆனால் எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தான் என் கேள்வி. நியூயார்க்கில் நான் என்ன செய்துவிடப் போகிறேன்?

பாம்பியோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: நீங்கள் அனுபவம் உள்ள ராஜதந்திரி. தூதரக உறவுகளில், வெளிப்படையான மற்றும் திரை மறைவிலான அனைத்து வகையிலான செயல்பாடுகளின் மாண்புகள் பற்றியும் அறிந்துள்ளவர். பேச்சுவார்த்தை முயற்சிக்கு, முக்கியமான கதவை மூடுவது போன்ற செயல்பாடாக இது உள்ளதா?

பதில்: நல்லது. உங்களிடம் நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால், நல்ல புரிதலை உருவாக்க சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்களுடன் கலந்து பேசுவதற்கு இது ஒர் வாய்ப்பாக இருந்திருக்கும்.

இது அபாயகரமான காலக்கட்டமாக இருப்பதால், பதற்றத்தைத் தணிக்க உதவியிருக்கும்.

பதற்றத்தை தணிக்கும் வழியை அமெரிக்கா தேர்வு செய்திருப்பதாக நான் நினைக்கவில்லை. பதற்றத்தைத் தணிப்பது பற்றிப் பேசுவதும், அதற்கான பாதையை தேர்வு செய்வதும் மாறுபட்டவை. நிறைய பேரை, முக்கியமானவர்களை, இராக் மற்றும் இரான் அதிகாரிகளை, அன்னிய மண்ணில் அமெரிக்கா கொன்றிருக்கிறது. அது போருக்கான ஒரு செயல்.

தனிப்பட்ட முறையிலும், பொது வெளியிலும் அவர்களின் மூர்க்கத்தனம், விளைவுகளை அறியாத மனப்போக்கு, பிடிவாதம் ஆகியவற்றை வெளிக்காட்டியுள்ளது. அதுவே பதற்றத்தை அதிகரிக்கும் செயல் தான். ஈரான் மக்களுக்கான மிரட்டல் அது. அதிபர் டிரம்ப்பை, செயலாளர் பாம்பேயோ தவறாக வழிநடத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்.

தெஹ்ரான் மற்றும் பாக்தாத் நகரங்களில் மக்கள் தெருக்களில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் நம்புகிறார். அதுபோன்ற ஒரு விடியோவையும் தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இப்போது இராக் மற்றும் ஈரானில் நேற்று மனிதப் பேரலையை அவர் பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை தவறான பாதையில் கொண்டு செல்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லையா?

ஈரான் பதிலடி தரும்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: பதற்றத்தைத் தணிக்க இரான் திறந்த மனதுடன் உள்ளதா? பதற்றத்தைத் தணிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?

பதில்: நல்லது.அமெரிக்கா ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, அதன் தொடர் விளைவுகள் அதே பாதையில் செல்லும். முதலில் அது இராக்கின் இறையாண்மையை மீறிவிட்டது. அதுபற்றிப் பேச இராக் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. அது இரானிய குடிமக்களை, இரான் குடிமக்கள் பலரை, இரான் அதிகாரிகள் பலரை அமெரிக்கா கொன்றிருக்கிறது. பயங்கரவாதிகள் போல, கோழைத்தனமான பயங்கரவாதிகள் போல எடுத்துள்ள போருக்கான நடவடிக்கையாக இது உள்ளது. இதற்கு உரிய வகையில் இரான் பதிலடி தரும்.

பதற்றத்தைத் தணிப்பது என்பது, அமெரிக்கா மேற்கொண்டு இதுபோல செய்யாமல் இருப்பது, ஈரானை மிரட்டுவதை நிறுத்திக் கொள்வது, இரான் தேசத்திடம் மன்னிப்பு கேட்பதாக இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு, பின்விளைவுகள் இருக்கும், அது நடக்கும், ஏற்கெனவே அது தொடங்கிவிட்டது என்று நான் நம்புகிறேன். எங்கள் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

கேள்வி: இதற்கு இணையான அளவுக்கு நேரடியானதாக இரானின் பதிலடி இருக்க வேண்டும், இரான் படைகளால் அது முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரான் பாதுகாப்புக் கவுன்சிலிடம் இரான் அதிபர் கூறியுள்ளதாக இன்று காலையில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதை நீங்கள் உறுதிப்படுத்த முடியுமா?

பதில்: நல்லது. நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தேசம். நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அதிபர் டிரம்ப் கூறியது போல, அளவுக்கு அதிகமானதாக இருக்காது, சட்டமுறைப்படி சரியான இலக்குகளாக அது இருக்கும்.

அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: ராணுவமாக இருக்கும் என்று கூறலாமா?

பதில்: அது சட்டமுறைப்படி சரியான இலக்குகளுக்கு எதிரானதாக இருக்கும்.

கேள்வி: இதற்கு என்ன அர்த்தம்?

பதில்: சட்டமுறைப்படி சரியான இலக்குகள் என்பது பற்றி சர்வதேச போர் சட்டம் மிக தெளிவாகக் கூறுகிறது.

கேள்வி: அதுபற்றி சிறிது கூற முடியுமா?

பதில்: நல்லது. அவர்கள் சட்ட அகராதியை போய் புரட்டலாம் என்று நினைக்கிறேன்.

கேள்வி: இரானின் ஆதரவு அமைப்புகள், உதாரணமாக ஹிஸ்புல்லா போன்ற மறைமுக அமைப்புகள் பதிலடி நடவடிக்கையில் இறங்காது என்று நீங்கள் சொல்கிறீர்களா?

பதில்: எங்களுக்கு மறைமுக அமைப்புகள் எதுவும் கிடையாது. எங்களுடைய மக்கள் இருக்கிறார்கள் என்பதை இராக்கின் சாலைகளில் நீங்கள் பாத்திருப்பீர்கள், மறைமுகமானவர்கள் அல்ல. அவர்கள் எங்களால் கட்டுப்படுத்தப் படவில்லை, ஏனெனில் அவர்கள் எங்களின் மறைமுகமான ஆட்கள் இல்லை. உணர்வுகள், சுதந்திரமான சிந்தனை உள்ள மக்கள் அவர்கள். அதனால்தான் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இல்லை என்று நான் சொன்னேன்.

ஈரான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: பதிலடி நடவடிக்கை எதுவாக இருந்தாலும், இரான் ராணுவத்தால் தான் எடுக்கப்படும், சீருடைப் படையினரால் எடுக்கப்படும் என்று உறுதி செய்கிறீர்களா?

பதில்: 3 அத்துமீறல்கள் நடந்திருப்பதாக நான் சொன்னேன். இராக்கின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது, அதற்கு இராக் அரசும், நாடாளுமன்றமும் பதில் அளித்துள்ளன. இந்தப் பிராந்தியத்தில் உள்ள, மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டுள்ளன. அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஈரான் குடிமக்கள் பலர், உயர் அந்தஸ்தில் உள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதைத்தான் நாங்கள் செய்வோம். ஆனால் கோழைகளைப் போல அல்ல, தெளிவாக, அதற்கு இணையான வழியில் செய்வோம்.

கேள்வி: எப்போது?

பதில்: நாங்கள் தேர்வு செய்யும் சமயத்தில்.

கேள்வி: சீக்கிரமாகவா?

பதில்: நாங்கள் தேர்வு செய்யும் சமயத்தில்.

கேள்வி: காசெம் சுலேமானீ மிகவும் அறியப்பட்ட, வலிமையான கமாண்டர். நீண்டகாலமாக மேற்கத்திய நாடுகள் அவரை கண்காணித்து வந்தன. அவரைக் கொலை செய்வதற்கு அதிபர்கள் ஒபாமா, புஷ் ஆகியோர் அனுமதி தர மறுத்துவிட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படி நடந்தால் மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கேடு செய்வதாக இருக்கும் என்று அவர்கள் கருதியதே அதற்குக் காரணம். தனக்கு முன்பிருந்த இரண்டு அதிபர்கள் செய்யாததை, அதிபர் டிரம்ப் செய்துள்ளார். அவரைப் பற்றி இது என்ன கருத்தை தருவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: தெஹ்ரான் மற்றும் பாக்தாத் தெருக்களில் மக்கள் உற்சாக நடனமாடுவார்கள் என்று நம்புபவர்கள் அவருக்குத் தவறான ஆலோசனை கூறியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். தனது ஆலோசகர்கள் பற்றி அவர் பரிசீலிக்க வேண்டும்.

ஜாவத் ஜரீப் உடன் நேர்காணல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி : அவருடைய செயல்பாடுகளை யூகிக்க முடியாது, ஏனோ தானோ என செயல்படுபவர் என்பதால் அவர் என்ன செய்வார் என ஊகிக்க முடியாத அதிபராக அவர் இருக்கிறாரா?

பதில்: ஊகிக்க முடியாத மற்றும் ஒழுங்கற்ற செயல்களை சட்டத்துக்கு உள்பட்டு செய்யலாம். இப்போது அமெரிக்காவில் உள்ள ஆட்சி, சட்டத்தை மதிக்காத ஆட்சி. அதுதான் முக்கியமானது. தாங்கள் தேர்ந்தெடுத்தவர் சட்டத்தை மதிக்காத வழியில் செயல்படுவதை பார்க்க அமெரிக்கர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இது சட்டங்கள் நிறைந்த வனம் அல்ல.

கலாச்சார தலங்கள் மீது அளவு கடந்த தாக்குதல்கள், நான் மேற்கோள் தான் காட்டுகிறேன். தங்கள் மக்கள் சாப்பிட வேண்டும் என்று ஈரான் விரும்பினால், அமெரிக்கா சொல்வதை பின்பற்ற வேண்டும். இந்தக் கருத்துகள் அமெரிக்க அதிகாரிகளால் சொல்லப்பட்டவை. ஆனால், போர்க் குற்றங்கள் இழைத்த நேரத்தில், மனிதாபிமானத்துக்கு எதிராக வந்தவை. சட்டத்தை மதிக்காத கிரிமினல் வழியில் தங்கள் பிரதிநிதிகள் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கர்கள் விரும்புகிறார்களா?

கேள்வி : அணுசக்தித் திட்டம் பற்றி கடைசி கேள்வி. ஜே.சி.பி.ஓ.ஏ.ல் விதித்துள்ள வரம்புகளை இனியும் மதிக்கப் போவதில்லை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அணு கதிரியக்கப் பொருள் செறிவூட்டலை எப்போது நீங்கள் மேம்படுத்தப் போகிறீர்கள்?

பதில்: மறுபடி சொல்கிறேன். அது எங்கள் தேவையின் அடிப்படையில் தேர்வு செய்யும் காலமாக இருக்கும். ஆனால் வரம்புகளை மதிக்க மாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. நாங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், அடிப்படை வரம்புகளை மீறியதாக கிடையாது. ஜே.சி.பி.ஓ.ஏ. பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினரும் விழிப்புடன் பங்கேற்றதாக இருந்தது என்பதால், இவற்றை மாற்றிவிட முடியும்.

அதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஜே.சி.பி.ஓ.ஏ.வுக்கு உள்பட்டும், அதற்கு மாறாகவும் தனது உத்தரவாதங்களை அமல் செய்ய ஐரோப்பியர்கள் தவறவிட்டனர். நாங்கள் அறிக்கைகளாக இல்லாமல், எழுத்தூபூர்வமாக அவர்களுக்குத் தெரிவித்தோம். 5 முறைகள் தெரிவித்தோம். தரப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கையை தொடங்குகிறோம் என்று தெரிவித்தோம்.

மிகவும் சட்டபூர்வமான வழியில், சட்டத்தை மதிக்கும் வகையில், ஒப்பந்தத்தின்படியாகவே செயல்படுவதாகத் தெரிவித்தோம். மீறுதல் இருந்தால் என்ன நடவடிக்கைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்ட முறையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டோம். ஒப்பந்தத்தின்படி அளித்த உறுதிமொழிக்கு பணிந்து நடக்கத் தொடங்கினால், இந்த நடவடிக்கைகளை உடனடியாக மாற்றிவிடலாம்.

எனவே ஜே.சி.பி.ஓ.ஏ. உயிர்ப்புடன் உள்ளது. ஏனெனில் அது மிகவும் யதார்த்தமான ஒப்பந்தம். ஆனால், மரித்துப் போனது எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?அது அவ்வப்போது தோற்றுப் போவதால், அதிகபட்ச அழுத்தம் காணாமல் போகிறது. மரிக்கப் போகும் இன்னொரு விஷயம்: எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பு. இனிமேல் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

முகமது ஜாவத் ஜரீப் உடன் நேர்காணல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி : காசெம் சுலேமானீ கொல்லப்பட்டது ஈரான் அதிகார வர்க்கத்தில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளதாக நிறைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரான் அரசு மீது ஈரான் குடிமக்கள் கொண்டிருக்கும் வெறுப்பை திசை திருப்பும் வகையில் இது நிகழ்ந்துள்ளது என்று கருதுகின்றனர்.

பதில்: இன்றைக்கு இரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே இரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்லை.

கேள்வி : ஆனால் அது உங்கள் மீதான அழுத்தத்தை நீக்குகிறது.

பதில்: நாங்கள் அனைவரும் எங்கள் நாட்டை, எங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்க விரும்பும் ஈரானியர்களாக இருக்கிறோம். அமைதிக்காகப் போராடிய மனிதரின் இழப்பிற்கு அனைவரும் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.

https://www.bbc.com/tamil/global-51033521

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மக்கள் சியா முஸ்லீம் என்றும் அவர்கள் இஸ்ரேலுடன் நற்பில் உள்ளவர்கள் என்றும் ,அமேரிக்கா ,ஈரான் மோதல் ஒரு நாடகம் என்றும் ஒருவர் மு.புத்தகத்தில் எழுதி இருந்தார்..இது பற்றி யாருக்கு ஏதாவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஈரான் மக்கள் சியா முஸ்லீம் என்றும் அவர்கள் இஸ்ரேலுடன் நற்பில் உள்ளவர்கள் என்றும் ,அமேரிக்கா ,ஈரான் மோதல் ஒரு நாடகம் என்றும் ஒருவர் மு.புத்தகத்தில் எழுதி இருந்தார்..இது பற்றி யாருக்கு ஏதாவது தெரியுமா?

ரதி,

இது மிகவும் தவறானதொரு கற்பிதம். இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடுவது என்று ஈரான் சபதம் பூண்டிருக்கிறது. நீங்கள் இஸ்ரேல் - பாலஸ்த்தீனப் பிணக்கைத் தொடர்ந்து வதானித்து வருபவராக இருந்தால், இஸ்ரேலுக்கெதிராகப் போராடும் ஹிஸ்புல்லா எனும் ராணுவக் கிளர்ச்சிப் படையினை உருவாக்கி நடத்திவருவது ஈரான் என்பது உங்களுக்குப் புரியும். ஹிஸ்புல்லாவினால் இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவப்படும் கட்யூஷா ராக்கெட்டுக்கள் ஈரானின் தயாரிப்பென்பதும், இந்த கிளர்ச்சிப் படையினை தனது ப்ரொக்ஸியாகவே இஸ்ரேலுக்கெதிரான யுத்தத்தில் இரான் பாவிக்கிறதென்பதும் தெளிவு. ஈரானுக்கும் இஸ்ரேலினை அழிக்க காத்திருக்கும் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான தொடர்பென்பது, சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவை ஈரான்  களமிறக்கியதன் மூலம் எவ்வளவு உறுதியானதென்பது தெரியவரும்.

இஸ்ரேலும் பதிலுக்கு ஈரானின் அணு உலைகளைத் தாக்கத் திட்டம் தீட்டிவருவதும் நடக்கிறது. அமெரிக்கா தாக்குகிறதோ இல்லையையோ, இஸ்ரேல் ஈரானின் அணுவாயுத இலக்குகள் மீது தாக்கும் சாத்தியம் மிக அதிகமானது. இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலினை முற்றாக துடைத்தழிக்கவும், இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவும் கூடிய ஒரே நாடென்கிற வகையில், ஈரானின் நடவடிக்கைகள் மீது இஸ்ரேல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான பகை 1979 ஆம் ஆண்டு ஈரானின் அன்றைய அமெரிக்கச் சார்பு அரசுக்கெதிராக இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள்ளுடன் ஆரம்பித்து, அமெரிக்க தூதுவரலாயத்தில் வேலைசெய்துவந்த 52 அமெரிக்கர்களை சுமார் இரு வருடங்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்ததிலிருந்து ஆரம்பமாகிறது. மேலும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவும், மத்திய கிழக்கில் அமெரிக்கத் துருப்புக்களின் பிரசன்னமும் ஈரான் அமெரிக்கா மீது சினங்கொள்ள காரணம். 

ஆனால், நேற்றைய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு அமெரிக்கரேனும் கொல்லப்படவோ அல்லது காயப்படவோ இல்லையென்பது சொல்லும் செய்தி ஒன்றில், ஈரானின் ஏவுகணைகள் இலக்குத் தவறியிருக்கலாம் என்றோ அல்லது வேண்டுமென்றே அமெரிக்கத் துருப்புக்களை விலத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களாகவோதான் பார்க்கப்படவேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

ஈரானைப் பொறுத்தவரை தனது தளபதி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக ஒரு தாக்குதல் நடத்தப்படவும் வேண்டும் ஆனால் இத்தாக்குதல் அமெரிக்காவின் எதிர்வினையினை சம்பாதிக்காமலும் இருக்கவேண்டும். உள்நாட்டில் தாம் அமெரிக்காவைத் தாக்கிவிட்டோம் என்கிற தப்பட்டமும், வெளியுலகில், குறிப்பாக அமெரிக்காவில் தாம் வேண்டுமென்றே அமெரிக்கர்களை விலத்தித்தாக்கினோம் என்கிற நாடகமும் அரங்கேறியிருக்கிறது.

உண்மையில், அமெரிக்காவுக்கோ அல்லது ஈரானுக்கோ இன்னொரு போருக்குப் போவதற்கான தேவையோ அல்லது அநியாய பணவிரயத்திற்கான கட்டாயத் தேவையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ரதி,

இது மிகவும் தவறானதொரு கற்பிதம். இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடுவது என்று ஈரான் சபதம் பூண்டிருக்கிறது. நீங்கள் இஸ்ரேல் - பாலஸ்த்தீனப் பிணக்கைத் தொடர்ந்து வதானித்து வருபவராக இருந்தால், இஸ்ரேலுக்கெதிராகப் போராடும் ஹிஸ்புல்லா எனும் ராணுவக் கிளர்ச்சிப் படையினை உருவாக்கி நடத்திவருவது ஈரான் என்பது உங்களுக்குப் புரியும். ஹிஸ்புல்லாவினால் இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவப்படும் கட்யூஷா ராக்கெட்டுக்கள் ஈரானின் தயாரிப்பென்பதும், இந்த கிளர்ச்சிப் படையினை தனது ப்ரொக்ஸியாகவே இஸ்ரேலுக்கெதிரான யுத்தத்தில் இரான் பாவிக்கிறதென்பதும் தெளிவு. ஈரானுக்கும் இஸ்ரேலினை அழிக்க காத்திருக்கும் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான தொடர்பென்பது, சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவை ஈரான்  களமிறக்கியதன் மூலம் எவ்வளவு உறுதியானதென்பது தெரியவரும்.

இஸ்ரேலும் பதிலுக்கு ஈரானின் அணு உலைகளைத் தாக்கத் திட்டம் தீட்டிவருவதும் நடக்கிறது. அமெரிக்கா தாக்குகிறதோ இல்லையையோ, இஸ்ரேல் ஈரானின் அணுவாயுத இலக்குகள் மீது தாக்கும் சாத்தியம் மிக அதிகமானது. இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலினை முற்றாக துடைத்தழிக்கவும், இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவும் கூடிய ஒரே நாடென்கிற வகையில், ஈரானின் நடவடிக்கைகள் மீது இஸ்ரேல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான பகை 1979 ஆம் ஆண்டு ஈரானின் அன்றைய அமெரிக்கச் சார்பு அரசுக்கெதிராக இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள்ளுடன் ஆரம்பித்து, அமெரிக்க தூதுவரலாயத்தில் வேலைசெய்துவந்த 52 அமெரிக்கர்களை சுமார் இரு வருடங்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்ததிலிருந்து ஆரம்பமாகிறது. மேலும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவும், மத்திய கிழக்கில் அமெரிக்கத் துருப்புக்களின் பிரசன்னமும் ஈரான் அமெரிக்கா மீது சினங்கொள்ள காரணம். 

ஆனால், நேற்றைய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு அமெரிக்கரேனும் கொல்லப்படவோ அல்லது காயப்படவோ இல்லையென்பது சொல்லும் செய்தி ஒன்றில், ஈரானின் ஏவுகணைகள் இலக்குத் தவறியிருக்கலாம் என்றோ அல்லது வேண்டுமென்றே அமெரிக்கத் துருப்புக்களை விலத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களாகவோதான் பார்க்கப்படவேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

ஈரானைப் பொறுத்தவரை தனது தளபதி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக ஒரு தாக்குதல் நடத்தப்படவும் வேண்டும் ஆனால் இத்தாக்குதல் அமெரிக்காவின் எதிர்வினையினை சம்பாதிக்காமலும் இருக்கவேண்டும். உள்நாட்டில் தாம் அமெரிக்காவைத் தாக்கிவிட்டோம் என்கிற தப்பட்டமும், வெளியுலகில், குறிப்பாக அமெரிக்காவில் தாம் வேண்டுமென்றே அமெரிக்கர்களை விலத்தித்தாக்கினோம் என்கிற நாடகமும் அரங்கேறியிருக்கிறது.

உண்மையில், அமெரிக்காவுக்கோ அல்லது ஈரானுக்கோ இன்னொரு போருக்குப் போவதற்கான தேவையோ அல்லது அநியாய பணவிரயத்திற்கான கட்டாயத் தேவையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஏவுகணையினை ஈரான் செலுத்தியவுடனேயே அது தொடர்பாக ஈராக்கிற்கு ஈரான் தெரியப்படுத்திவிட்டதாக மேற்குலக ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன அதில் உண்மையும் இருக்கலாம், பொதுவாகாக மேற்குலக ஊடகங்கள் யூதர்களது கட்டுப்பாட்டில் உள்ளன இவை அந்தந்த நாடுகளில் வலதுசாரிகளிற்கு செயற்படுவதனூடாக இஸ்ரேலுக்கு இணக்கமான சூழ்னிலையை உருவாக்குவதே இவர்களின் தொழில் என்று ஒரு கருத்துநிலவுகிறது அது மட்டுமல்ல வங்கித்துறையிலும் இவர்கள் கையே உயர்ந்துள்ளது , இதனை மீறி எந்த அரசாலும் செயற்பட முடியாத நிலை மேற்குலகில்நிலவுகிறது.
ஒரு நல்லவிடயம் போர் தொடங்கவில்லை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

ரதி,

இது மிகவும் தவறானதொரு கற்பிதம். இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடுவது என்று ஈரான் சபதம் பூண்டிருக்கிறது. நீங்கள் இஸ்ரேல் - பாலஸ்த்தீனப் பிணக்கைத் தொடர்ந்து வதானித்து வருபவராக இருந்தால், இஸ்ரேலுக்கெதிராகப் போராடும் ஹிஸ்புல்லா எனும் ராணுவக் கிளர்ச்சிப் படையினை உருவாக்கி நடத்திவருவது ஈரான் என்பது உங்களுக்குப் புரியும். ஹிஸ்புல்லாவினால் இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவப்படும் கட்யூஷா ராக்கெட்டுக்கள் ஈரானின் தயாரிப்பென்பதும், இந்த கிளர்ச்சிப் படையினை தனது ப்ரொக்ஸியாகவே இஸ்ரேலுக்கெதிரான யுத்தத்தில் இரான் பாவிக்கிறதென்பதும் தெளிவு. ஈரானுக்கும் இஸ்ரேலினை அழிக்க காத்திருக்கும் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான தொடர்பென்பது, சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவை ஈரான்  களமிறக்கியதன் மூலம் எவ்வளவு உறுதியானதென்பது தெரியவரும்.

இஸ்ரேலும் பதிலுக்கு ஈரானின் அணு உலைகளைத் தாக்கத் திட்டம் தீட்டிவருவதும் நடக்கிறது. அமெரிக்கா தாக்குகிறதோ இல்லையையோ, இஸ்ரேல் ஈரானின் அணுவாயுத இலக்குகள் மீது தாக்கும் சாத்தியம் மிக அதிகமானது. இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலினை முற்றாக துடைத்தழிக்கவும், இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவும் கூடிய ஒரே நாடென்கிற வகையில், ஈரானின் நடவடிக்கைகள் மீது இஸ்ரேல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான பகை 1979 ஆம் ஆண்டு ஈரானின் அன்றைய அமெரிக்கச் சார்பு அரசுக்கெதிராக இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள்ளுடன் ஆரம்பித்து, அமெரிக்க தூதுவரலாயத்தில் வேலைசெய்துவந்த 52 அமெரிக்கர்களை சுமார் இரு வருடங்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்ததிலிருந்து ஆரம்பமாகிறது. மேலும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவும், மத்திய கிழக்கில் அமெரிக்கத் துருப்புக்களின் பிரசன்னமும் ஈரான் அமெரிக்கா மீது சினங்கொள்ள காரணம். 

ஆனால், நேற்றைய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு அமெரிக்கரேனும் கொல்லப்படவோ அல்லது காயப்படவோ இல்லையென்பது சொல்லும் செய்தி ஒன்றில், ஈரானின் ஏவுகணைகள் இலக்குத் தவறியிருக்கலாம் என்றோ அல்லது வேண்டுமென்றே அமெரிக்கத் துருப்புக்களை விலத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களாகவோதான் பார்க்கப்படவேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

ஈரானைப் பொறுத்தவரை தனது தளபதி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக ஒரு தாக்குதல் நடத்தப்படவும் வேண்டும் ஆனால் இத்தாக்குதல் அமெரிக்காவின் எதிர்வினையினை சம்பாதிக்காமலும் இருக்கவேண்டும். உள்நாட்டில் தாம் அமெரிக்காவைத் தாக்கிவிட்டோம் என்கிற தப்பட்டமும், வெளியுலகில், குறிப்பாக அமெரிக்காவில் தாம் வேண்டுமென்றே அமெரிக்கர்களை விலத்தித்தாக்கினோம் என்கிற நாடகமும் அரங்கேறியிருக்கிறது.

உண்மையில், அமெரிக்காவுக்கோ அல்லது ஈரானுக்கோ இன்னொரு போருக்குப் போவதற்கான தேவையோ அல்லது அநியாய பணவிரயத்திற்கான கட்டாயத் தேவையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நன்றி பதிலுக்கு அருமையான  விளக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசெம் சுலேமானீ: இரான் ராணுவ தளபதியை கொன்ற ட்ரோன் எப்படி செயல்படுகிறது?

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இனி உலகத்தில் போர் ஏற்பட்டால், தாக்குதலில் ஈடுபட பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும், ஆயிரக்கணக்கான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேவைப்படாது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது தொழில்நுட்ப வளர்ச்சி.

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீயை மனிதர்களே இல்லாமல் வெறும் ட்ரோனை மட்டுமே பயன்படுத்தி கொன்றுள்ளது அமெரிக்கா.

தாங்கள் எந்த ட்ரோனை பயன்படுத்தி சுலேமானீயை கொன்றோம் என்பதை அமெரிக்க அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அந்நாட்டு விமானப்படையில் இருக்கும் ட்ரோன்களிலேயே அதிதிறன் வாய்ந்த எம்.கியூ - 9 ரீப்பர் அவரை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அதிதிறன் வாய்ந்த எம்.கியூ - 9 ரீப்பர் ட்ரோன் எப்படி செயல்படுகிறது? எவ்வளவு தூரத்துக்கு, எத்தனை மணிநேரம் அதனால் தொடர்ந்து பறக்க முடியும்? இது ஏவுகணை தாக்குதல்களை எப்படி மேற்கொள்கிறது? இதன் விலை என்ன? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

ட்ரோன்களால் என்னென்ன செய்ய முடியும்?

காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGENERAL ATOMICS

விமானியே இல்லாமல் தனக்கு கொடுக்கப்படும் கட்டளைகளை முதலாக கொண்டு செயல்படும் ஆளில்லா வான்வழி வாகனங்களே ட்ரோன்கள் என்றழைக்கப்படுகிறது.

வானத்தில் இருந்து புகைப்படங்கள் எடுக்கவும், காணொளிகளை பதிவு செய்யவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ட்ரோன்களின் பயன்பாடு துறைக்கு துறை வேறுபடுகிறது. அதாவது, மருத்துவ துறையில் இரத்தம், உடலுறுப்பு ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக எடுத்துசெல்லவும், வணிகரீதியாக பார்க்கும்போது பொருட்களை கொண்டுசேர்க்கவும், பாதுகாப்பு துறையில் நாட்டின் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் மனிதர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எம்.கியூ - 9 ரீப்பர் ட்ரோன்கள் எவ்வளவு அபாயகரமானது?

உலகிலேயே அதிதிறன் மிக்க ட்ரோன்களை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. பல நாடுகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை பெருக்கி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா தனது எதிரிகளை கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கு ட்ரோன்களை பரவலாக பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அமெரிக்க பாதுகாப்புப்படையிலேயே மிகவும் அபாயகரமான ட்ரோனாக எம்.கியூ - 9 ரீப்பர் கருதப்படுகிறது. தானாக மேலெழும்பி, புறப்பட்ட இடத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து சென்று, இலக்கை தொடர்ந்து பல மணிநேரங்கள் கண்காணித்து, தக்க நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தவல்ல ஏவுகணைகளை செலுத்தி, பணியை முடிக்கும் இந்த ட்ரோன் கள்ளத்தனமாக செயல்படுவதில் பெயர்பெற்றது.

அமெரிக்க விமானப்படைக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகள் சிஸ்டம் என்னும் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம்தான் இதை தயாரிக்கிறது.

மணிக்கு 482 கி.மீ. வேகம்; 1701 கிலோ ஏவுகணை

காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோனை "ஒரு ஆயுதமாக, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே நீண்டதூரத்தில் இருக்கும் முக்கியமான இலக்குகளை கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கும், உளவு தகவல் சேகரிப்புக்கும்" பயன்படுத்துவதாக அமெரிக்க விமானப்படையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2,223 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோனின் நீளம் 36 அடி, உயரம் 12.5 அடி. இறகுகளின் நீளம் மட்டும் 66 அடி. மேலும், 1,701 கிலோ எடை கொண்ட ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை தாங்கி செல்லக்கூடிய இந்த ட்ரோனால் அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில், 1,850 கிலோ மீட்டர் தூரத்துக்கு, மணிக்கு 482 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இந்த வகை ட்ரோனில் ஒரே சமயத்தில் 2,278 லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும்.

அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில் பறக்க கூடிய இந்த வகை ட்ரோன்கள், தனது இலக்கை கண்டறிந்தவுடன், குறைந்த பட்சமாக 800 அடி உயரம் வரை கீழிறங்கி தாக்குதல்களை மேற்கொள்ளவல்லது. இவ்வளவு குறைந்த உயரத்தில் சென்றாலும், கிட்டதட்ட எவ்வித சத்தத்தையும் இந்த ட்ரோன்கள் ஏற்படுத்தாததால் ஒருவர் மேல்நோக்கி பார்க்கும் வரை இவற்றை அடையாளம் காணவியலாது.

அமெரிக்காவிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளை

எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோனின் முகப்பு பகுதியில் செயற்கைகோளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட வண்ணம், கருப்பு மற்றும் வெள்ளை டிவி கேமராக்கள், ஒளியை நிர்வகிக்கும் கருவி, ரேடார், குறைந்த ஒளி நிலைகளுக்கான அகச்சிவப்பு படங்கள் மற்றும் இலக்குகளை தாக்கி அழிப்பதற்கான லேசர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த வகை ட்ரோன்கள் தன்னிச்சையாக பறந்து, தரையிறங்க கூடியது என்றாலும், இதை தொலைதூரத்தில் இருக்கும் பணியாளர்களே கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இலக்கு குறித்த தகவல்களோடு கிளம்பும் எம்.கியூ - 9 ரீப்பர் , தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை/ நபரை கண்டறிந்தவுடன் அதுகுறித்த தகவல்களை ஆயிரத்திற்கும் அதிகமாக கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

பெரும்பாலான நேரங்களில், இந்த வகை ட்ரோன்கள் அனுப்பும் புகைப்படங்கள்/ காணொளிகள் மற்றும் தரவுகள் பெறப்பட்டு அமெரிக்காவின் நெவாடாவிலுள்ள விமானப்படை தளத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

மற்ற வகை ட்ரோன்களை போலன்றி, இவை குறிப்பிட்ட இலக்கை தேடி கண்டுபிடிப்பதுடன், கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு கிடைத்த அடுத்த நொடியே குறைந்தபட்சம் 800 அடி முதல் அதிகபட்சமாக எட்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஏவுகணைகளை செலுத்தி இலக்கை துல்லியமாக அழிக்கவல்லது.

இந்த வகை ட்ரோனால் ஒரே சமயத்தில் நான்கு ஏவுகணைகளையும், லேசரின் துணையுடன் செயல்படும் வெடிகுண்டுகளை தாங்கி செல்ல முடியும்.

அதாவது, AGM-114 ஹெல்ஃபைர் ஏவுகணைகளை மட்டும் தனியாகவும், GBU-12 பேவ்வே II மற்றும் GBU-38 ஆகிய இரு ஏவுகணைகளை இணைத்து ஒரே சமயத்தில் இயக்க செய்தும் இந்த ட்ரோனால் தாக்குதல் நடத்த முடியும்.

விலை என்ன தெரியுமா?

எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் இலக்குகளை தேடி கண்டுபிடித்து தாக்கி அழிப்பதுடன், உளவுப்பணிகளில் ஈடுபட்டு, தரைப்பகுதியில் வெடிகுண்டுகள் பதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிவதோடு, அலைபேசி உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக்கேட்பது, எல்லையில் கண்காணிப்பில் ஈடுபடுவது, பல்வேறு ஆயுதங்களை கண்டறிவது, பேரிடர்களின் போது உதவிப்பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மோசமான வானிலையின்போதும் துல்லியமாக செயல்படும் திறன் பெற்றது என்று அமெரிக்க விமானப்படை கூறுகிறது.

காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, 93 எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் அமெரிக்க விமானப்படையின் வசம் உள்ளது. நான்கு ட்ரோன்கள் இருக்கும் ஒரு தொகுப்பு எம்.கியூ - 9 ரீப்பரின் விலை 64.2 மில்லியன் டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் பார்த்தோமானால் ஒரு ட்ரோனின் விலை சுமார் 114 கோடி ரூபாய் ஆகும்.

எம்.கியூ - 9 ரீப்பரை வாங்க ஆர்வம் காட்டுகிறதா இந்தியா?

அமெரிக்கா ட்ரோன்களை பயன்படுத்தி எதிரிகளை கொல்வது இது முதல் முறையல்ல. 2007ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படும் இந்த வகை ட்ரோன்கள், ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்திலேயே பயன்படுத்தப்பட்டாலும், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் தான் இதன் பயன்பாடு பெருகியது.

இந்த நிலையில், டிரம்பின் உத்தரவுப்படி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதன் மூலம், மீண்டும் ட்ரோன்களின் செயல்பாடு, பயன்பாடு குறித்த பேச்சு அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர் இந்தியா எம்.கியூ - 9 ரீப்பரை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/science-51044570

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்கிறோம்' - இஸ்லாமிய அரசு அமைப்பு மற்றும் பிற செய்திகள்

"சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்கிறோம்" - ஐ.எஸ். இயக்கம்படத்தின் காப்புரிமைIS PROPAGANDA

இரான் புரட்சிகர ராணுவ படையின் தலைமை தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்பதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். குழு அறிவித்துள்ளது.

"சுலேமானீயின் மரணம் ஆயுதமேந்திய ஜிகாதிய போராளிகளுக்கு நன்மை அளிப்பதற்காக கடவுள் செய்த குறுக்கீடு," என்று ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கடந்த 3ஆம் தேதி இராக் தலைநகர் பாக்தாத்தில் காசெம் சுலேமானீயை திட்டமிடப்பட்ட ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்ற அமெரிக்கா குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதாவது, சுலேமானீ கொல்லப்பட்டது முதல் அதன் காரணமாக அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற இராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான தொடர் நிகழ்வுகள் தங்களது இயக்கத்தின் செயல்பாட்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அதிகரிப்பதற்கு உதவும் என்பதன் அடிப்படையிலேயே ஐ.எஸ். இயக்கம் இவ்வாறாக கருத்துத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

சுலேமானீயை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று நேற்று (வெள்ளிக்கிழமை) இரான் மற்றும் இரானால் நிதியுதவி அளிக்கப்பட்டு வரும் இராக்கில் இருக்கும் ஆயுத போராளிகள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

https://www.bbc.com/tamil/global-51073624

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.