Jump to content

கோலம் போட்ட பெண் பாக்., உளவாளியா? ஐ.பி., விசாரணை


Recommended Posts

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் கோலம் போட்ட பெண் பாக். உளவாளியா என மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யும் விசாரணையை துவக்கி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன் சென்னை பெசன்ட் நகரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அனுமதியின்றி அடுத்தவர்கள் வீட்டின் முன் கோலம் போட்டனர். இதற்கு வீட்டு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் தகராறு செய்ததால் போலீசார் எட்டு பேரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் அவர்களோ 'கோலம் போட்டதால் போலீசார் கைது செய்து விட்டனர்' என விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.


கோலம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் ஒருவர் திருவான்மியூரைச் சேர்ந்த காயத்ரி கந்தாடை. இவர் பாக்.கில் உள்ள ஒரு அமைப்பில் ஆராய்ச்சியாளராக இருப்பதாக தன் முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அமைப்புக்களுடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது. எனவே 'காயத்ரி கந்தாடையின் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்போம்' என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் உளவு அமைப்பான ஐ.பி.யும் காயத்ரி கந்தாடை பாக். உளவாளியா என்பது குறித்து விசாரிக்க துவங்கியுள்ளது. காயத்ரி கந்தாடை மனித உரிமை ஆர்வலர் என சில போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். காவல் நிலையங்களில் தன் தந்தை பெயரை குறிப்பிடாமல் அவர் திட்டமிட்டு மறைத்துள்ளார். வழக்கறிஞருக்கு படித்து இருப்பதாக தெரிவித்துள்ள அவர் பாக்.கில் உள்ள சில அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததும், ஓரினச் சேர்க்கையாளர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காயத்ரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண்கள் யார் யார்; காயத்ரி கந்தாடை எத்தனை முறை பாக்.கிற்கு சென்றுள்ளார்; அவர் இந்தியா குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த தகவல்கள் என்ன என்பது குறித்தும் ஐ.பி. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2448967

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?படத்தின் காப்புரிமைFACEBOOK

சென்னையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதியன்று பெசன்ட் நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது குறித்து விசாரிக்கப்படும் என காவல்துறை ஆணையர் தெரிவித்ததற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் டிசம்பர் 29ஆம் தேதியன்று சிலர் தெருக்களில் கோலமிட்டு, அந்தக் கோலத்திற்கு முன்பாக 'No CAA, No NRC' என எழுதி தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

இதையடுத்து இவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், புதன்கிழமையன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்து சென்னை நகரத்தில் நடந்த குற்றங்கள், புலனாய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் கோலம் போராட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பும்போது, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறதே என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த ஆணையர், "`கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சோதனை செய்யப்பட்டன. அவர்களில் காயத்ரி கந்தாடை என்ற பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில், பைட்ஸ் ஃபார் ஆல் என்ற பாகிஸ்தான் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம், அசோஷியேசன் ஆஃப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் என்ற அமைப்பைச் சேர்ந்தது. காயத்ரி எந்த அளவுக்குப் பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ளார் என்ற விவரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது," என்று குறிப்பிட்டார்.

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?படத்தின் காப்புரிமைINSTRAGRAM/GUNAVATHY

மேலும், "அறப்போர் இயக்கம், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா போன்ற இயக்கங்களும் இதற்கு ஆதரவாக உள்ளன. இதுபற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றும் ஆணையர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி வெளியான பிறகு, தங்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்திப் பேசுவதற்கு அறப்போர் இயக்கம் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக ஆணையரால் குற்றம்சாட்டப்பட்ட காயத்ரி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் மூத்த வழக்கறிஞர் வைகை, சுதா ராமலிங்கம், ஆய்வாளர் வ. கீதா, வழக்கறிஞர் மோகன், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோரும் இருந்தனர்.

முதலில் பேசிய வழக்கறிஞர் வைகை, "போராடுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆணையர் செய்தியாளரைச் சந்திக்கும்போது வேண்டுமென்றே இதுபோல கேள்வியைக் கேட்க வைத்து, காயத்ரிக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் இனிமேல்தான் விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஒரு விஷயம் அவருடைய விசாரணையில் இருக்கிறது என்றால், அதைப் பற்றி வெளியில் பேசியிருக்க்கூடாது" என்று கூறினார்.

மேலும், "மனித உரிமை ஆர்வலராக உள்ள ஒரு பெண்ணைப் பார்த்து, பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கிறது எனப் பேசுவது என்ன நியாயம்? அவருக்கு எதாவது நேர்ந்தால், யார் பொறுப்பு?" என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பேசிய சமூக ஆர்வலரும் ஆய்வாளருமான வ. கீதா, "பாகிஸ்தான் என்பது கெட்ட வார்த்தையில்லை. அங்கு செல்லக்கூடாது என ஒரு தடையும் இல்லை. ஆகவே இம்மாதிரியெல்லாம் குற்றம்சாட்டக்கூடாது" என்றார்.

கோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் தொடர்பா?படத்தின் காப்புரிமைFACEBOOK

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் பேசும்போது, "காயத்ரி இந்த கைது விவகாரத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார். ஆனால், தி.மு.கவைத் தொடர்புபடுத்திப் பேசாமல், எங்களை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள்" என்றார்.

பாகிஸ்தானுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என காயத்ரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் தெற்காசியாவில் மத ரீதியாக ஒடுக்கப்படுபவர்கள் குறித்து ஆய்வுசெய்து வருகிறேன். பாகிஸ்தானில் அஹமதியாக்கள், பங்ளாதேஷில் மத ரீதியாக ஒடுக்கப்படுபவர்கள் என ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறேன். அதைத்தான் என் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறேன். இதை ஆய்வுசெய்யவே நான் பாகிஸ்தான் சென்றிருக்கிறேன். இதற்காக என் பெயரைக் குறிப்பிட்டு, என்னைப் பற்றிய தகவல்களை வெளியிடுவது என்ன நியாயம்? எனக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகக் கருதினால், என்னை அழைத்து விசாரித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன?" எனக் கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பாக சட்ட ரீதியாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென ஆலோசித்துவருவதாகவும் சுதா ராமலிங்கம், வைகை உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/india-50987161

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2020 at 7:06 PM, ampanai said:

ஓரினச் சேர்க்கையாளர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதை விட இன்னும் கேவலப்படுத்த முடியும் என்டால் அதையும் செய்வார்கள்..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.