Jump to content

2 மனைவிகளும் பஞ்., தலைவிகள் : கணவர் 'குஷியோ குஷி'


Recommended Posts

LocalBodyElection, ElectionResults, TwoWives, Victory, உள்ளாட்சி, தேர்தல், இருமனைவிகள், வெற்றி, திருவண்ணாமலை, வந்தவாசி 

தி.மலை: அவனவன் ஒரு மனைவியை சமாளிக்க அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஆனால் வந்தவாசியில் ஒருவர், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, இருவரையும் தேர்தலில் நிற்க வைத்து, வெற்றியும் பெற வைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், வழூர் அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள் என்பது தான் சுவாரஸ்யம்.
இரு மனைவிகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வரும் தனசேகர், விவசாயம் செய்து வருகிறார். மனைவிகள் இருவரும் வெவ்வேறு கிராம பஞ்., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால், இருவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என தனசேகர் விரும்பினார்.

வழூர் அகரம் ஊராட்சியில் செல்வியும், பஞ்., தலைவராக இருந்துள்ளார். தனசேகர், தனது இரண்டு மனைவிகளையும் அழைத்துக்கொண்டு இரு ஊராட்சியிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டிச.,30ல் நடந்த தேர்தலின் பதிவான ஓட்டுகள் நேற்று (ஜன.,02) எண்ணப்பட்ட நிலையில், இரு ஊராட்சிகளுக்கும் முடிவுகள் வெளியானது.

இதில், இரு மனைவிகளும் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படவே, தனசேகர், 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்பது போல் 'குஷி'யானார். மனைவிகளுக்கு  மாலையிட்டு ஊர் முழுவதும் மகிழ்ச்சியுடன் வலம் வந்தார்.இதைப் பார்த்து மற்ற கணவன்மார்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டதாக அந்த ஊர் பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2449490

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2020 at 2:40 PM, ampanai said:

தனசேகர், 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்பது போல் 'குஷி'யானார். மனைவிகளுக்கு  மாலையிட்டு ஊர் முழுவதும் மகிழ்ச்சியுடன் வலம் வந்தார்.இதைப் பார்த்து மற்ற கணவன்மார்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டதாக அந்த ஊர் பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

roflphotos-dot-com-photo-comments-20180816180938.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் .. விடுங்கப்பா..😢

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் .. விடுங்கப்பா..😢

சட்டத்தில் இடமுண்டா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ampanai said:

சட்டத்தில் இடமுண்டா ? 

முதல் மனைவி ஒத்து கொண்டால் சட்டபடி பக்கோடா சாப்பிட இடமுண்டு தோழர்.. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு பெண்களின் வெற்றிக்குப்பின்னால் ஒரு ஆண் கம்பீரமாக நிக்கிறான்......!  👍

 யாரங்கே, பஞ்சாயத்து தலைவிகள் வெற்றித் திமிரோடு பஞ்சனையை அலங்கரிக்கட்டும்........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2020 at 2:40 PM, ampanai said:

வந்தவாசியில் ஒருவர், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில்

ஒருவர் மனைவி. மற்றவர் துணைவி. கலைஞர்  கருணாநிதி வாழ்ந்து காட்டி தமிழகத்துக்குச் சொல்லிச் சென்ற செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உறையில் ஒரு வாள் தான் இருக்க முடியும்

Link to comment
Share on other sites

9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முதல் மனைவி ஒத்து கொண்டால் சட்டபடி பக்கோடா சாப்பிட இடமுண்டு தோழர்.. 👍

அதுதான் சுவாமி ஜீக்கள் நாட்டில் நிறைய உள்ளார்கள் 🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.