Jump to content

ரஞ்சன் ராமநாயக்க கைது


Recommended Posts

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ranjan.jpg

சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/72515

ரஞ்சன் வீட்டில் பொலிஸார் சோதனை

 

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை செய்துவருகிறார்கள்.

தனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியோடு பொலிஸார் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக டுவிட் செய்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர், தான் எந்தவொருக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

எனினும் தான் கைது செய்யப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லாது,  சிறைக்கு செல்வேனெனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தனது வீட்டில் இருப்பதாகவே சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரஞசன-வடடல-பலஸர-சதன/150-243469

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய கலா ஆன்ரிக்கு உள்ளூர நல்ல கப்பியா இருக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஒரு நல்ல நடிகர் என்று நிரூபித்து இருக்கிறார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

கைதுகள் பலவிதம் இது புதுவிதம் 🙂 

 

https://www.facebook.com/real.rr/videos/818805718545852/

என்ன இந்தாள் ஏதோ வெளிநாடு பயணம் போறமாதிரி இருக்கு.

யோவ் யெயிலுக்கு கொண்டு போறாங்கையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல சிங்கள நடிகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி-யுமான ரஞ்ஜன் ராமநாயக்க கைது - யார் இவர்?

ரஞ்ஜன் ராமநாயக்கபடத்தின் காப்புரிமைRANJAN RAMANAYAKE / FACEBOOK Image captionரஞ்ஜன் ராமநாயக்க

இலங்கையின் பிரபல சிங்கள நடிகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்காத குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரம் 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் புதுப்பிக்கப்படாமை மற்றும் துப்பாக்கி ரவைகள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆசு மாரசிங்க தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து பெருந்தொகையான இருவெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் வீடு நேற்று மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ரஞ்ஜன் ராமநாயக்கபடத்தின் காப்புரிமைRANJAN RAMANAYAKE / FACEBOOK

வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.

வீட்டை சோதனை செய்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவில், சோதனை செய்வதற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

Presentational grey line Presentational grey line

'நான் எந்தவித தவறையும் செய்யவில்லை. எனினும், ஏதேனும் சந்தர்ப்பத்தில் நான் கைது செய்யப்படும் பட்சத்தில் சிறைச்சாலைக்கு செல்வேனே தவிர, வைத்தியசாலைக்கு செல்ல மாட்டேன். நான் சிறந்த உடல் அரோக்கியத்துடன் உள்ளேன். உண்மையைப் பேசியமைக்கான எந்தவொரு எதிரொலிகளையும் சந்திக்கத் தயார்," என ரஞ்ஜன் ராமநாயக்க தனது ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

'எமது தனிப்பட்ட கணினி, எனது வீட்டில் இருந்த சீ.டி. மற்றும் டீ.வி.டி ஆகியவற்றை அவர்களின் பொறுப்புக்கு எடுத்துள்ளனர். வசிம் தாஜுடீனின் கொலை தொடர்பில் என்னிடமிருந்த ஆவணங்களையும் அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்"" எனவும் ரஞ்ஜன் ராமநாயக்க ட்விட்டர் ஊடாக அறிவித்துள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்கபடத்தின் காப்புரிமைTWITTER / RANJAN RAMANAYAKE

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்களான பட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் பின்னர் பிணையில் செல்ல நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை ரஞ்ஜன் ராமநாயக்க தொடர்ச்சியாக விமர்சித்திருந்தார்.

குறித்த அரசாங்கம் தொடர்பில் நிதி மோசடியை விசாரணை செய்யும் பொலிஸாரிடம் ரஞ்ஜன் ராமநாயக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50997005

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் DVD க்களை வைத்திருந்தமை உள்ளிட்ட ரஞ்சன் மீது 4 குற்றச்சாட்டுக்கள்

81979728_599228730832658_5318002968031657984_o.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
1, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய, 
 
2, சட்டவிரோத துப்பாக்கியை கைவசம் வைத்திருத்தல், 
 
3, மில்லி மீற்றர் 9 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 100க்கும் அதிகமான தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல், 
 
4, ஆபாச காணொளிகள் அடங்கிய டீ.வி.டிக்களை வைத்திருத்தல் 
 
போன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று- 04- மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் மேற்கொள்ளபபட்ட தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
ஹிரு தொலைக்காட்சி
Link to comment
Share on other sites

பிணையில் விடுதலையானார் ரஞ்சன் ராமநாயக்க ; வெளிநாடு செல்லத்தடை !

கைதான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

20200105_175705.jpg

பொலிஸாரினால் நேற்றையதினம் கைதுசெய்ப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் நுகோகொடை நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

20200105_175838.jpg

சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த நேற்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/72558

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

ஆபாச காணொளிகள் அடங்கிய டீ.வி.டிக்களை வைத்திருத்தல் 

 வீட்டிலை வைச்சிருந்தாலும் குற்றமா ஐயா? 😂

Bildergebnis für ஆபாச காணொளிகள்"

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

 வீட்டிலை வைச்சிருந்தாலும் குற்றமா ஐயா? 😂

Bildergebnis für ஆபாச காணொளிகள்"

இவர் வைத்திருந்த ஆபாச காணொளியில் சனத் ஜெயசூரியாவினுடைய காணொளியும் இருந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இதைகேள்விபட்டவுடன் ஒரு முக்கியமான பிரபலமான டிவி நடத்துபவர் அதிர்ச்சியடைந்துவிடடார். இந்த டிவி தான் ரஞ்சனுக்கு எதிராக பரப்புரை செய்து வந்தது. உங்களில் எத்தனைபேருக்கு ஏன் என்று  விளங்குதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ரஞ்சன் ராமநாயக்க - ஷானி  அபேசேகரவின் குரல் பதிவுகள் தொடர்பில் நடுநிலையான விசாரண‍ை அவசியம் - ரோஹித 

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பானர் ஷானி அபேசேகரவும் உரையாடியதாக குறிப்பிடப்படும் குரல் பதிவுகள் தொடர்பில்  பதில் பொலிஸ்மா அதிபர் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என  சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட போது பொலிஸார் செயற்பட்ட விதமும் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தையும், நேற்று நீதிவான் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் நேற்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதவான் நீதிமன்றம்  பிணை வழங்கியதை தொடர்ந்து  சமூக  வலைத்தளங்களில் பல விடயங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.   

குறிப்பாக ஷானி அபேசேகரவும், ரஞ்சன் ராமநாயக்கவும் உரையாடிய   குரல் பதிவுகள் பல வெளியாகியுள்ளன. மரண தண்டனை  கைதியான துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்பும் நோக்கம் தொடர்பில்     இருவரும் அதிகாரததில் இருந்த வண்ணம் உரையாடியுள்ளார்கள். 

இவ்விடயம் தொடர்பில் உரிய  விசாரணைகளை மேற்கொள்வதை விடுத்து பொலிஸார்  சொற்ப விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.   

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க   நீதிபதிகளுடன்  தொலைபேசியில் தொடர்புக் கொண்டு உரையாடிய குரல் பதிவுகளையும் தொடர்ந்து ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவேன் என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/72641

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

இவர் வைத்திருந்த ஆபாச காணொளியில் சனத் ஜெயசூரியாவினுடைய காணொளியும் இருந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இதைகேள்விபட்டவுடன் ஒரு முக்கியமான பிரபலமான டிவி நடத்துபவர் அதிர்ச்சியடைந்துவிடடார். இந்த டிவி தான் ரஞ்சனுக்கு எதிராக பரப்புரை செய்து வந்தது. உங்களில் எத்தனைபேருக்கு ஏன் என்று  விளங்குதோ தெரியவில்லை.

முன்பு ஒரு செய்து வந்திருந்தது - அதாவது கூகிளின் பாலியல் பற்றிய தேடலில் இலங்கை முதல் இடத்தில் இருப்பதாக. எனவே, அந்த தேடலில் விளைவுகள் என ஏதாவது இருந்தாகத்தானே வேண்டும்? 

அத்துடன், அடிக்கடி காணும் இன்னொரு செய்தி : ' விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டது' ; ' முகநூலுடனான 'பார்ட்டி' , ஐஸ் போதைப்பொருள் .. ' என. எனவே இவற்றால் சாதாரண மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் மாட்டுப்படலாம். ஆனால், அவர்கள் பொதுவாக தண்டிக்கப்பட மாட்டார்கள்.

இங்கே, அரசியல் பழிவாங்கலே. ஆனால் கிணறு வெட்ட வெளிக்கிட்டு புதையல் எடுத்த கதையா?  இல்லை பூதம் வந்த கதையா? 

Link to comment
Share on other sites

On 1/5/2020 at 9:44 AM, ஏராளன் said:

வசிம் தாஜுடீனின் கொலை தொடர்பில் என்னிடமிருந்த ஆவணங்களையும் அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்

அது தான் முக்கிய கரணம்!

ராஜபக்ச குடும்பம் செய்த அட்டூழியங்களை அறிந்தவர்கள் கைது செய்யப்படுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Vankalayan said:

இவர் வைத்திருந்த ஆபாச காணொளியில் சனத் ஜெயசூரியாவினுடைய காணொளியும் இருந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இதைகேள்விபட்டவுடன் ஒரு முக்கியமான பிரபலமான டிவி நடத்துபவர் அதிர்ச்சியடைந்துவிடடார். இந்த டிவி தான் ரஞ்சனுக்கு எதிராக பரப்புரை செய்து வந்தது. உங்களில் எத்தனைபேருக்கு ஏன் என்று  விளங்குதோ தெரியவில்லை.

சனத்தின் காணொளியால் அவருக்கு ஏன் அதிர்ச்சி?...அவர்[சனத்] பொம்பிளை விசயத்தில்  எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும் 😊

7 hours ago, ampanai said:

முன்பு ஒரு செய்து வந்திருந்தது - அதாவது கூகிளின் பாலியல் பற்றிய தேடலில் இலங்கை முதல் இடத்தில் இருப்பதாக. எனவே, அந்த தேடலில் விளைவுகள் என ஏதாவது இருந்தாகத்தானே வேண்டும்? 

அத்துடன், அடிக்கடி காணும் இன்னொரு செய்தி : ' விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டது' ; ' முகநூலுடனான 'பார்ட்டி' , ஐஸ் போதைப்பொருள் .. ' என. எனவே இவற்றால் சாதாரண மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் மாட்டுப்படலாம். ஆனால், அவர்கள் பொதுவாக தண்டிக்கப்பட மாட்டார்கள்.

இங்கே, அரசியல் பழிவாங்கலே. ஆனால் கிணறு வெட்ட வெளிக்கிட்டு புதையல் எடுத்த கதையா?  இல்லை பூதம் வந்த கதையா? 

இது எப்ப?...பாலியல் பற்றிய தேடலில் இந்தியா தான் முன்னுக்கு நிற்குது 
 

Link to comment
Share on other sites

2 minutes ago, ரதி said:

இது எப்ப?...பாலியல் பற்றிய தேடலில் இந்தியா தான் முன்னுக்கு நிற்குது 

https://www.emirates247.com/news/sri-lanka/sri-lanka-is-no-1-nation-in-sex-searches-on-google-india-s-bangalore-tops-among-cities-2012-12-27-1.488799

Not many will doubt that one of the most sought after keyword on Internet is “sex”. And Sri Lankans, it seems, are the most search savvy when it comes to Googling that term.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

https://www.emirates247.com/news/sri-lanka/sri-lanka-is-no-1-nation-in-sex-searches-on-google-india-s-bangalore-tops-among-cities-2012-12-27-1.488799

Not many will doubt that one of the most sought after keyword on Internet is “sex”. And Sri Lankans, it seems, are the most search savvy when it comes to Googling that term.

நம்ப முடியவில்லை ...இணைப்பிற்கு நன்றி 
 

Link to comment
Share on other sites

7 hours ago, ரதி said:

சனத்தின் காணொளியால் அவருக்கு ஏன் அதிர்ச்சி?...அவர்[சனத்] பொம்பிளை விசயத்தில்  எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும் 😊

இது எப்ப?...பாலியல் பற்றிய தேடலில் இந்தியா தான் முன்னுக்கு நிற்குது 
 

சனத்தைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்போல இருக்குது. நீங்கள் சொன்னது சரி. இருந்தாலும் அந்த டிவி சொந்தக்காரர் ஏன் அதிர்ச்சியடையவேண்டும். இந்த இடத்தில எழுதுவது சரியாக இருக்காதென்பதால் அதை தவிர்த்திருக்கிறேன். அங்கு சனத்தினதும் பாலியல் சம்பந்தமான வீடியோ பிடிபட்டுள்ளது. அதில் உள்ள பெண்---------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

இங்கே, அரசியல் பழிவாங்கலே. ஆனால் கிணறு வெட்ட வெளிக்கிட்டு புதையல் எடுத்த கதையா?  இல்லை பூதம் வந்த கதையா? 

எனக்கென்னவோ.... கிணறு வெட்ட, பூதம்  வந்த கதை மாதிரிதான் தெரியும்.
ரஞ்சன் ராமநாயக்காவின்  கைதின் பின்.... அவரின் வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதாகவும்,
தம்மையும் கைது செய்யும் படி, சில அரசியல்வாதிகள்  விரும்புகின்றார்களாம்.

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

எனக்கென்னவோ.... கிணறு வெட்ட, பூதம்  வந்த கதை மாதிரிதான் தெரியும்.
ரஞ்சன் ராமநாயக்காவின்  கைதின் பின்.... அவரின் வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதாகவும்,
தம்மையும் கைது செய்யும் படி, சில அரசியல்வாதிகள்  விரும்புகின்றார்களாம்.

இப்போ பெரிய பூதம் வெளிக்கிட்டிருக்கு. இவர் பொலிஸ் அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகளுடன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஒலி வடிவில் வந்துகொண்டிருக்கிறது. அவனை உள்ளே தள்ளு, இவனுக்கு மரண தண்டனை கொடு எண்டு பேசியது எல்லாம் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதாவது இவருடன் தொடர்பு வைத்தவர்கள் எல்லோரையும் கட்டிக்கொடுத்துவிடடார். இப்படியாக முக்கியமான சிடிக்களை கவனயீனமாக வைத்திருந்தது இவருடைய அறிவீனத்தை காட்டுகிறது. இந்த செய்திகள் இங்கு இப்போது பூதகரமாகிக்கொண்டிருக்கிறது. இவர் மீண்டும் கைது செய்யப்படடால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகலா ஆன்ரி இந்தக் கைது குறித்து.. மூச். ஆனால் ஆன்ரியை உள்ளதள்ள இவர் பட்ட பாடு...??! 

Link to comment
Share on other sites

முன்னாள் நீதிபதிக்கு எதிராக முறைப்பாடு

படுகொலை செய்வதற்கு ஊக்கமளித்தல் மற்றும் கொலை சம்பவங்களுக்காக நீதி அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்கவுக்கு எதிராக நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களை அடிப்படையாக கொண்டு, சிங்களே அமைப்பினால் மேற்படி முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.

குறித்த முறைப்பாட்டில் 8 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/231773/முன்னாள்-நீதிபதிக்கு-எதிராக-முறைப்பாடு

Link to comment
Share on other sites

அழுத்தங்கள் ஊடாக வழங்கப்பட்ட தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது அரசியல் அழுத்தங்கள் ஊடாக வழங்கப்பட்டவை என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் கிடைத்த குரல்பதிவுகளில் இருந்து உறுதியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மாத்திரம் இன்றி நீதித்துறையினர், காவற்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையானது அவரிடம் இருந்த துப்பாக்கி தொடர்பானதல்ல. 

பல்வேறு முக்கியமான குரல் பதிவுகளை பெற்றுக்கொள்வதற்காகவே.

அவ்வாறான குரல் பதிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அந்த குரல் பதிவுகள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோரின் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த நாட்டின் நீதித்துறை கடந்த கால செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இதன்மூலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்;ட தீர்ப்பானது அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டவை என உறுதியாவதாக அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/231746/அழுத்தங்கள்-ஊடாக-வழங்கப்பட்ட-தீர்ப்பு

Link to comment
Share on other sites

ஷானி அபேசேகர உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம்!

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் காலி பிரதி பொலிஸ்மாதிபரின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றும்  ஷானி அபேசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய உரையாடல் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

shani.jpg

https://www.virakesari.lk/article/72741

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 10:52 AM, Vankalayan said:

இவர் வைத்திருந்த ஆபாச காணொளியில் சனத் ஜெயசூரியாவினுடைய காணொளியும் இருந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இதைகேள்விபட்டவுடன் ஒரு முக்கியமான பிரபலமான டிவி நடத்துபவர் அதிர்ச்சியடைந்துவிடடார். இந்த டிவி தான் ரஞ்சனுக்கு எதிராக பரப்புரை செய்து வந்தது. உங்களில் எத்தனைபேருக்கு ஏன் என்று  விளங்குதோ தெரியவில்லை.

 எனக்கு ஏன் என்று விளங்கவில்லை. கொஞ்சம் விளங்கப்படுத்தி சொல்லமுடியுமா?

Link to comment
Share on other sites

என்னை கொல்ல ரஞ்சனை ஏவிவிட்டது ரணில் ; சபையில் மஹிந்தானந்த ஆவேசம், மெளனம் காத்தார் சஜித்!

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

என்னை கொலை செய்யுமாறு ரஞ்சன் ராமநாயகவிற்கு  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணையிடும் குரல்பதிவு வெளியாகியுள்ளது. என்னை கொலைசெய்யும்படி ரஞ்சன் ராமநாயகவை ஏவிவிட்டது ரணில் விக்கிரமசிங்க என்பது தெளிவாக தெரிகின்றது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் கூறினார். 

அத்துடன் இது குறித்து பொலிஸில் முறையிடவுள்ளதாகவும் சபாநாயகர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என சபையில் தெரிவித்தும் எதிர்க்கட்சி தலைவர் மௌனம் காத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினை  முன்வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நிமல் லான்சா கூறுகையில்:-  பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு வழங்கப்படும் சட்ட பூர்வமான துப்பாக்கியில் 10 அல்லது  9 தோட்டாக்கள் மட்டுமே கொடுக்க சட்ட அங்கீகாரம் உள்ளது. ஆனால் ரஞ்சன் ராமநாயகவிற்கு மட்டும் 150 தோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு வழங்கப்பட்டது? இது குறித்து தெளிவான விளக்கம் ஒன்று வழங்கப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் தெளிவான பதில் ஒன்றினை கூற வேண்டும் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கூறுகையில்:- இந்த செயற்பாடு மிகவும் மோசமானது, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான் தெளிவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  எனினும் சபையில் இருந்த எதிர்க்கட்சி தலைவர் இது குறித்து எந்தவித கருத்தையும் முன்வைக்காது மௌனமாக இருந்தார். 

https://www.virakesari.lk/article/72744

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.