Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

82642407_10213524184852584_9049062215075

81763350_10213524184572577_2320950977584

82260712_10213524185492600_9112134269379

82095954_10213524186092615_3154242927283

 

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த உறவுகள் மோகன், தமிழினி,நிழலி, இணையவன், ஏராளன், அபராஜிதன், ஈழப்பிரியன், நந்தன், கண்மணி அக்கா, மீரா, ரதி ஆகியோர்க்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சைகள் தந்த உறவுகள் மோகன், தமிழினி,நிழலி, இணையவன், ஏராளன், அபராஜிதன், ஈழப்பிரியன், நந்தன், கண்மணி அக்கா, மீரா, ரதி ஆகியோர்க்கு மிக்க நன்றி.

போட்டோக்கள் முடிஞ்சுதோ இல்லாட்டி இன்னும் கிடக்கோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

போட்டோக்கள் முடிஞ்சுதோ இல்லாட்டி இன்னும் கிடக்கோ? 😎

இன்னும் அரைவாசிக்கு கூட இருக்கு கண்டியளோ. உங்க சிலருக்குப் நான் நிற்கும்  படங்கள் போடுவது பிடிக்காததால என்படங்களைத் தவிர்த்துத்தான் போடுகிறேன். 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் அரைவாசிக்கு கூட இருக்கு கண்டியளோ. உங்க சிலருக்குப் நான் நிற்கும்  படங்கள் போடுவது பிடிக்காததால என்படங்களைத் தவிர்த்துத்தான் போடுகிறேன். 🤓

அவைக்கு எரிச்சல். நீங்கள் யோசிக்காமல் போடுங்கோ. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அவைக்கு எரிச்சல். நீங்கள் யோசிக்காமல் போடுங்கோ. 😄

😂😊

நன்றி சசி பச்சைக்கும் வருகைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான படங்கள் அக்கோய்...
இந்த கட்டுரையை வாசிக்கும் போது ...சின்னதாக ஒரு நெருடல்
பல கோடி மனிதர்களுக்கு கிடைக்காத இந்த அனுபவத்தை கிட்டிய நீங்கள் என்னவோ முழுமையாக அதை அனுபவிக்கவில்லை போல தெரிகிறது.
பல இடங்களில் உங்கள் மனச் சலிப்பு, 5 டொலர், 10 டொலர் போன்ற கட்டுப்பெட்டி வசனங்கள் சற்றே வாசகர் எம்மையும் முகம் சுளிக்கச் செய்கிறது. 
வாழ்க்கையில் மிக உன்னதமான ஒரு காரியம்,  நீங்கள் வாசித்த, உங்கள் முன்னோர்கள், பரம்பரை எப்படியெல்லாம் கொடி கட்டி வாழ்ந்தார்கள் என்பதை அந்த மண்ணில், அதை பாறையில், அதே கோவிலில் நின்று தரிசித்த பாக்கியசாலி நீங்கள் அவ்வளவு தான்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கோயிலில் இடிபாடுகள் அதிகமிருந்தாலும் மேலே உயரத்தில் ஏறிப் பார்க்கவேண்டிய தேவை இல்லாது தரைப்பகுதிகளோடு கட்டடங்கள் இருந்தது மனதுக்கு ஆறுதல் அளித்தது. தொடர்ந்து அடுத்த கோவிலைப் பார்ப்பதற்கு பயணமானோம். சிறிது தூரம் சென்றதும் ஓட்டோ ஓட்டுநர் ஓட்டோவை வீதியின் பக்கவாட்டில் நிறுத்திவிட்டு தன் மொழியில் எதோ உரையாடினார். பின்னர் டொய்லெட்டுக்குப் போகப் போகிறீர்களா என்றுவிட்டு ஒரு ஐந்து நிமிட ஓட்டத்துக்குப் பின் சிறிய கடைகள் அடங்கிய இடத்தில் நிறுத்த நான் மட்டும் போய்விட்டு வருகிறேன்.
நான் வந்தபின்னரும் அவர் ஓட்டோவை எடுக்காது நிற்க ஏன் நிக்கிறான் இவன் எண்டு கேள் என்றேன் மகளிடம். தன் நண்பன் புதிய ஓட்டுநர். அவருக்குப் பாதை சரியாகத் தெரியாது. அவனையும் கூட்டிப்போக நிற்கிறேன் என்றுவிட்டு நிற்க, நானும் மகளும் ஒன்றும் பேசாது இருக்கிறோம். பத்து நிமிடம் ஆனபின்னும் மற்றவனைக் காணவில்லை. இவங்கள் ஏதும் திட்டம் போட்டு ஏதும் செய்யப் போறாங்களோ என்று என் மனதில் ஓடியதை மகளிடம் சொல்ல, மக்கள் சிரித்துவிட்டு அவனை நினைக்க எனக்குப் பாவமாக இருக்கு என்றுவிட்டு மீண்டும் சிரிக்க எனக்கு கடுப்பாக,  இவனை நாம் பிடித்தது எமது வசதிக்கு. இவர் யாருக்கோ வழிகாட்ட எங்களை மினைக்கெடுத்திக்கொண்டு நிக்கிறார் என்று நான் கூறிக்கொண்டிருக்க அவன் மீண்டும் போன் செய்து எதோ சொல்லியபடி ஓட்டோவை எடுக்கிறான். நான் பின்பக்கம் திரும்பிப் பார்க்கிறேன். எந்த வாகனத்தையும் காணவில்லை. நீங்கள் தன்னைத்தான் எதோ சொல்கிறீர்கள் என்று அவனுக்கு விளங்கிவிட்டுதுபோல என்று மகள் சொல்ல, அவனுக்கு தமிழ் சிலவேளை தெரிந்திருக்குமோ என்ற யோசனை ஓடுகிறது. சீச்சீ தெரிந்திருந்தால் எம்மைப் பார்த்தவுடன் அவன் கட்டாயம் கதைத்திருப்பான் என்று மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு போலீஸ் அதிகாரி எம்மை வழிமறிக்கிறார். ஓட்டுநர் அவரிடம் எதோ சொல்ல அவரும் கைகாட்டி எதோ சொல்கிறார். அவர் காட்டிய பக்கம் பெரிய இரண்டு மரங்களுக்கிடையே இன்னொரு அதிகாரி மர வேர்களின்மேல் இருக்கிறான். அவனைப் பார்த்தாலே படங்களில் வரும் வில்லன்களை போல இருக்கிறது. எமது ஓட்டுநர் அவனுக்கு அருகே சென்று எதோ சொல்ல அவனும் எதோ சொல்லிவிட்டு மரத்தின் மற்றப்பக்கம் கைகாட்ட ஓட்டுநர் தன் காற்சட்டைப் பையில் கைவிட்டு பணம் எடுத்து வைத்துவிட்டுவர நான் என்ன பிரச்சனை என்கிறேன். வெளிநாட்டுக்காரர்களை ஏற்றிக்கொண்டு போனால் இவர்கள் உங்களிடம் நாம் நிறைய வாங்குகிறோம்  என்று எண்ணி தமக்குப் பணம் தரும்படி கேட்பார்கள்.  வேறு வழியில்லை என்று சலித்துக்கொள்கிறான். எவ்வளவு கொடுத்தாய் என்றதற்கு பத்து டொலர்ஸ் என்கிறான். அவன் உள்ளதைக் கூறமாட்டான். அவனைக் கேட்காதீர்கள் என்று மகள் சொல்ல அதன்பின் அவனை நான் ஒன்றும் கேட்கவில்லை.  போலீஸ் மேல் கோபம் வந்தாலும் அவனை இரண்டு திட்டுக்கூடத் திட்ட முடியவில்லையே என்ற கவலையுடன் நான் ஒன்றும் பேசாமல் இருக்கிறேன்.

82058200_10213537631228735_8430265613653

82933475_10213537631428740_4936510211725

82939606_10213537632148758_7876850247111

79978735_10213537633028780_3235858056210

82291907_10213537634148808_4623050798245

82984757_10213537635548843_5682882288325

82248494_10213537635788849_1353391766027

83057920_10213537637228885_1615802542552

82061415_10213537621508492_3364486184922

 

சிறிது தூரத்தில் இன்னும் ஒரு கோவில் தெரிகிறது. இக்கோயிலில் சூரியன் மறையும் காட்சி அழகாக இருக்கும் என்று எமது ஓட்டுநர் சொல்கிறார். அப்ப மாலையும் மீண்டும் இங்கே வருவோம்என்று கூறியபடி நான் இறங்குகிறேன். கோபுரங்கள் போன்ற அமைப்புகளாக அவை இருந்தாலும் தமிழர்களது இல்லை என்பது மனதை உறுத்தியபடியே  இருக்கிறது. படிகள் ஏறுவதற்குக் கடினமாக உயரம் கூடியவையாக இருக்கின்றன.சில இடங்களில் செங்குத்தான இரும்புப் படிகளை அமைத்திருக்கின்றனர். மற்றைய கோவில்கள்போல நிறைய ஆட்களைக் காணவில்லை. மாலையில் அதிகமாக வருவார்கள்போல என்று எண்ணியபடி மேலே ஏறுகிறேன். மேலே பாதுகாப்பற்ற இடங்கள் பல காணப்படுகின்றன. அதிக நேரம் அங்கே நிற்கப் பிடிக்காது கீழே வருகிறோம்.

82357066_10213537580467466_8245842685785

82325021_10213537581027480_1415167534776

82035870_10213537584627570_9139149291548

 

 

 

 

 

 

 

 

82149853_10213537584747573_5927387316128

82514715_10213537585507592_1666450441879

81968292_10213537595987854_3413793886949

82543591_10213537597907902_2460759859650

1 hour ago, Sasi_varnam said:

உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான படங்கள் அக்கோய்...
இந்த கட்டுரையை வாசிக்கும் போது ...சின்னதாக ஒரு நெருடல்
பல கோடி மனிதர்களுக்கு கிடைக்காத இந்த அனுபவத்தை கிட்டிய நீங்கள் என்னவோ முழுமையாக அதை அனுபவிக்கவில்லை போல தெரிகிறது.
பல இடங்களில் உங்கள் மனச் சலிப்பு, 5 டொலர், 10 டொலர் போன்ற கட்டுப்பெட்டி வசனங்கள் சற்றே வாசகர் எம்மையும் முகம் சுளிக்கச் செய்கிறது. 
வாழ்க்கையில் மிக உன்னதமான ஒரு காரியம்,  நீங்கள் வாசித்த, உங்கள் முன்னோர்கள், பரம்பரை எப்படியெல்லாம் கொடி கட்டி வாழ்ந்தார்கள் என்பதை அந்த மண்ணில், அதை பாறையில், அதே கோவிலில் நின்று தரிசித்த பாக்கியசாலி நீங்கள் அவ்வளவு தான்.🙏

நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என்றே தெரிகிறது. இத்தனை பணத்தைச் செலவழிப்பவளுக்கு 5,10 எல்லாம் பெரிதா ??? அது எம் முன்னோர்கள் கட்டியது இல்லை என்ற வெப்பியாரம்தானேயன்றி வேறில்லை சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் போக முன்னம் யாழில் ஒருதரம் சொல்லியிருக்கலாம். என்னை கூட்டிபோன அருமையான கைட்டின் தொடர்பை தந்திருப்பேன்.

நீங்கள் டாக்சியில் போய் தனியே கோவிலை பார்த்துள்ளீர்கள் போலப்படுகிறது.

நான் பொதுவாக வழிகாட்டிகளை விலத்தி விடுவேன் ஆனால் இப்படியான இடங்களுக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவை. 

அங்கோவார்ட்டில் மூன்று அடுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் போஸ்கொடுக்கும் படிகட்டால் ஏறிப்போகும் இடம் 3ம் தளம். நீங்கள் இங்கும் இடம் 2ம் தளம். அதற்கு கீழே 1ம் தளம்.

முதல் தட்டு உலகியல் இன்பத்துக்குரியது.

முதல் தட்டில் சுவரெங்கும் கல்லோவியங்கள், மகாபாரதம், ராமாயணக்கதைகள், யுத்தகாண்டம் எல்லாம் தத்ரூபமாக தீட்டப்பட்டிருக்கும்.

பீஸ்மரின் அம்புப்படுக்கை இப்போதும் என் கண்ணில் நிற்கிறது.

மதில் எங்கும் அப்சரசின் சிலைகள்.

வேலேறும் முருகனும் உண்டு.

இரெண்டாம் அடுக்கு தேடலுக்கு உரியது. தியான மண்டபங்கள், புத்தகசாலைகள் இருந்த இடம். நீச்சல் தடாகமும் உண்டு.

மூன்றாம் தட்டில் ஒரு பகுதியை மட்டும் ஏறிப்பார்க்கலாம். இந்த தட்டில் ஏதும் இல்லை. ஏனென்றால் - இது கிட்டத்தட்ட இறைவனுடன் கலந்து கிடக்கும் இடம்.

ஒரு கோயிலில் மட்டும் இவ்வளவும்.

தவிரவும் சம்பா (வியட்நாம்) இனத்தவருடன் கேமர் அரசின் யுத்தம், சீன படைகளின் உதவி, சீயம் படைகளின் வாழக்கை முறை என பல அற்புத சிற்பங்கள், கல்லொவியங்கள் இந்த கோயிலில் மட்டும் உள்ளது.

எனக்கென்னமோ நீங்கள் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு போனமாரி அங்கர்வட் போய் வந்துள்ளீர்ர்களோ எனத் தோன்றுகிறது.

என்னை கேட்டால் - திகட்ட திகட்ட நான் சுற்றிப்பார்த்த இடங்களில் இது ஒன்று.

இந்த கோயிலை நான் முதன் முதலில் கண்ட அந்த frame - மரணப்படுக்கையிலும் மறக்காது.

 

பிகு: உங்கள் எழுதும் பாணிக்கு ஒரு சபாஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2020 at 12:16 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

 

 

81768395_10213498234483841_5749714784064

81872335_10213498234963853_5217094657032

 

இந்த படத்தில் கட்டு போல தென்படுவது ஒரு பாம்பின் உடல் (ஆதிசேசன்). கோவிலின் ஒவ்வொரு வாசலிலுல் படிக்கட்டுக்கு இருபுறமும் பாம்புத்தலைகள் தென்படும். 

இந்த படத்திலும் தூரத்தே இதைக் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2020 at 10:05 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

.

 

 

 

 

81787655_10213523996727881_7347407167516

82026885_10213523997287895_7011990682923

 

 

81792768_10213523998327921_1575599488293

 

 

 

 

 

 

 

 

82929326_10213524003168042_8789338249832

81854018_10213524005128091_9046852540301

 

முதல் 3 படங்களையும் கூர்ந்து கவனியுங்கள். வீதியின் ஒரு புறம் நிற்பது தேவர்கள். மறுபுறம் அசுரர்கள். இரு பகுதியின் முகங்களிலேயே வித்தியாசம் இருக்கும்.

இரு பகுதியும் ராட்சத பாம்பொன்றை பிடித்து கடைகிறார்கள். இருமருங்கிலும் உள்ள ஏரிதான் பாற்கடல்.

கடைசி இரு படங்களும் ஜெயவர்மன் மன்னனின் முகத்தால் ஆன தூண்களை காட்டுகிறது. கோவிலின் ஒவ்வொரு தூணிலும், நாலு பக்கமும் மன்னனின் முகம் ஒரே மாதிரியாக தூண் முழுமைக்கும் செதுக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா.... என்ன அழகான படங்கள்...
இதுவரையிலும் யாருமே  பார்த்திருக்காத கோணங்களில் ...
உண்மையில் இந்த படங்களை பார்க்கையிலே மனம் சிலிர்க்கிறது.
கோஷன் நீங்கள் எழுதி இருந்த கோவில் குறித்த பின் குறிப்புகள் மிக அருமை. முதன் முதல் கேள்விப்படுகிறேன்.
எனக்கென்னமோ அக்கா எழுதியதில்; அவர் போன பயணத்தில் தங்கின ஹோட்டல் , சாப்பிட்ட இடம், அரேஞ் ஜூஸ் , கோழி இறைச்சி குழம்பு, கச்சான் கடலை வறுவல், எல்லா இடத்திலும் கட்டின பில் தொகை இது தான் மனசுக்குள் வந்து போகிறது.

ஆனாலும் அழகான படங்களை போட்டும், மனதில் பட்டத்தை அப்படியே  எழுதி, கட்டாயம் இறப்பதற்கு முன்னர் நாமும் போயே ஆகா வேண்டும் என்ற ஆவலை தூண்டிய  உங்களுக்கு கோடி வணக்கங்கள்.🙏😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் இந்த படங்களைப்  பார்க்க பேரானந்தமாய் இருக்கின்றது. அருமையான படங்கள் சகோதரி. கோஷன் னின் விளக்கங்களும் நன்றாக இருக்கின்றது. போய்ப்பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகின்றது......தொடருங்கள் சகோதரி.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2020 at 9:06 PM, goshan_che said:

சூர்யவர்மனும் ஜெயவர்மனும் தமிழர் என்பதாக நகைச்சுவை பண்ண மாட்டீர்கள் என நம்புகிறேன். 

அப்படியெல்லாம் சொல்லமாட்டார். அவர்கள் லெமூரியாக் கண்டத்தைச் சேர்ந்த சுமேரியர்!😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

நீங்கள் போக முன்னம் யாழில் ஒருதரம் சொல்லியிருக்கலாம். என்னை கூட்டிபோன அருமையான கைட்டின் தொடர்பை தந்திருப்பேன்.

நீங்கள் டாக்சியில் போய் தனியே கோவிலை பார்த்துள்ளீர்கள் போலப்படுகிறது.

நான் பொதுவாக வழிகாட்டிகளை விலத்தி விடுவேன் ஆனால் இப்படியான இடங்களுக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவை. 

அங்கோவார்ட்டில் மூன்று அடுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் போஸ்கொடுக்கும் படிகட்டால் ஏறிப்போகும் இடம் 3ம் தளம். நீங்கள் இங்கும் இடம் 2ம் தளம். அதற்கு கீழே 1ம் தளம்.

முதல் தட்டு உலகியல் இன்பத்துக்குரியது.

முதல் தட்டில் சுவரெங்கும் கல்லோவியங்கள், மகாபாரதம், ராமாயணக்கதைகள், யுத்தகாண்டம் எல்லாம் தத்ரூபமாக தீட்டப்பட்டிருக்கும்.

பீஸ்மரின் அம்புப்படுக்கை இப்போதும் என் கண்ணில் நிற்கிறது.

மதில் எங்கும் அப்சரசின் சிலைகள்.

வேலேறும் முருகனும் உண்டு.

இரெண்டாம் அடுக்கு தேடலுக்கு உரியது. தியான மண்டபங்கள், புத்தகசாலைகள் இருந்த இடம். நீச்சல் தடாகமும் உண்டு.

மூன்றாம் தட்டில் ஒரு பகுதியை மட்டும் ஏறிப்பார்க்கலாம். இந்த தட்டில் ஏதும் இல்லை. ஏனென்றால் - இது கிட்டத்தட்ட இறைவனுடன் கலந்து கிடக்கும் இடம்.

ஒரு கோயிலில் மட்டும் இவ்வளவும்.

தவிரவும் சம்பா (வியட்நாம்) இனத்தவருடன் கேமர் அரசின் யுத்தம், சீன படைகளின் உதவி, சீயம் படைகளின் வாழக்கை முறை என பல அற்புத சிற்பங்கள், கல்லொவியங்கள் இந்த கோயிலில் மட்டும் உள்ளது.

எனக்கென்னமோ நீங்கள் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு போனமாரி அங்கர்வட் போய் வந்துள்ளீர்ர்களோ எனத் தோன்றுகிறது.

என்னை கேட்டால் - திகட்ட திகட்ட நான் சுற்றிப்பார்த்த இடங்களில் இது ஒன்று.

இந்த கோயிலை நான் முதன் முதலில் கண்ட அந்த frame - மரணப்படுக்கையிலும் மறக்காது.

 

பிகு: உங்கள் எழுதும் பாணிக்கு ஒரு சபாஸ்.

கோசான் நான் கோவில்களுக்கு வழிபட என்று போவது கிடையாது.  ஒவ்வொருவர் பார்க்கும் விதமும் அவர்களின் இரசனைகளும் வேறுபாடானதே. ஆனாலும் நீங்கள் கூறுவதைக் கேட்டால் ஒரு வழிகாட்டியைப் பிடித்திருக்கலாம் போலத்தான் தோன்றுகின்றது. உந்த இராமாயண, மகாபாரதக் கதைகளில் எல்லாம் எனக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாததால் உங்களைப்போல் கூர்ந்து, நெகிழ்ந்து பார்க்கவில்லைதான்.

14 hours ago, suvy said:

இன்று காலையில் இந்த படங்களைப்  பார்க்க பேரானந்தமாய் இருக்கின்றது. அருமையான படங்கள் சகோதரி. கோஷன் னின் விளக்கங்களும் நன்றாக இருக்கின்றது. போய்ப்பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகின்றது......தொடருங்கள் சகோதரி.....!   👍

போய் பாருங்கள் அண்ணா.

22 hours ago, Sasi_varnam said:

அப்பா.... என்ன அழகான படங்கள்...
இதுவரையிலும் யாருமே  பார்த்திருக்காத கோணங்களில் ...
உண்மையில் இந்த படங்களை பார்க்கையிலே மனம் சிலிர்க்கிறது.
கோஷன் நீங்கள் எழுதி இருந்த கோவில் குறித்த பின் குறிப்புகள் மிக அருமை. முதன் முதல் கேள்விப்படுகிறேன்.
எனக்கென்னமோ அக்கா எழுதியதில்; அவர் போன பயணத்தில் தங்கின ஹோட்டல் , சாப்பிட்ட இடம், அரேஞ் ஜூஸ் , கோழி இறைச்சி குழம்பு, கச்சான் கடலை வறுவல், எல்லா இடத்திலும் கட்டின பில் தொகை இது தான் மனசுக்குள் வந்து போகிறது.

ஆனாலும் அழகான படங்களை போட்டும், மனதில் பட்டத்தை அப்படியே  எழுதி, கட்டாயம் இறப்பதற்கு முன்னர் நாமும் போயே ஆகா வேண்டும் என்ற ஆவலை தூண்டிய  உங்களுக்கு கோடி வணக்கங்கள்.🙏😀
 

கட்டாயம் போய்வாருங்கள் சசி. கையோடு கோசானிடம் வழிகாட்டியின் விபரமும் வாங்கிக்கொள்ளுங்கள்.

1 hour ago, கிருபன் said:

அப்படியெல்லாம் சொல்லமாட்டார். அவர்கள் லெமூரியாக் கண்டத்தைச் சேர்ந்த சுமேரியர்!😂🤣

லெமூரியாவுக்கும் சுமேரியருக்கும் என்ன தொடர்பு ???😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக்கள் தந்த நுணா,உடையார், ஏராளன்,  புங்கை,நிழலி,  கிருபன் ஆகிய உறவுகளுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சைக்கள் தந்த நுணா,உடையார், ஏராளன்,  புங்கை,நிழலி,  கிருபன் ஆகிய உறவுகளுக்கு நன்றி 

 வசித்து முடிந்தது எங்க மிச்ச சொச்சத்தையும் காணல ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோசான் நான் கோவில்களுக்கு வழிபட என்று போவது கிடையாது.  ஒவ்வொருவர் பார்க்கும் விதமும் அவர்களின் இரசனைகளும் வேறுபாடானதே. ஆனாலும் நீங்கள் கூறுவதைக் கேட்டால் ஒரு வழிகாட்டியைப் பிடித்திருக்கலாம் போலத்தான் தோன்றுகின்றது. உந்த இராமாயண, மகாபாரதக் கதைகளில் எல்லாம் எனக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாததால் உங்களைப்போல் கூர்ந்து, நெகிழ்ந்து பார்க்கவில்லைதான்.

 

எனக்கும் பக்தி இல்லை. ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் வேறுபாடானதே என்பதும் உண்மையே.

சுவி அண்ணா, சசி கட்டாயம் போய்பாருங்கள். மலேசியாவில் இருந்து குறைந்த விலையில் ஏர் ஏசியா பறக்கிறது.

நல்ல தரமான விடுதிகளும் உண்டு.

சுமே அக்காவின் அனுமதியுடன் நான் எடுத்த சில படங்கள் கீழே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்சரசின் சிலை ஒன்று. சிவப்பு சாயம் இயற்கையாகவே பூசப்பட்சதாம்.

large.09040AF3-8497-4DE3-9AE7-0CED441E5DEF.jpeg.cb6a9a8444006f6f9c8e48324a1cc00c.jpeg

இன்றும் தொடரும் இந்து மதம்

large.62F9FACC-B2F5-4915-AC97-2AAFAB4499D3.jpeg.89e72ecbabf435496c0be7453da01512.jpeg

காளிங்க நடனம்

large.93BF361E-14FB-4629-9ED9-9F4DD762A6A1.jpeg.e7b42df43c7e88579f5752bfdbf367f1.jpeg

வாசலில் ஆதிசேசன்

large.BDCF36CD-C762-4DA3-95A4-0BCC549358F8.jpeg.519c4b77d5a66c31fbbc6031ff64288f.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனனனும் கிருஸ்ணரும் குருச்சேத்திரத்தில்.

large.9281EAAA-3293-42E4-AA9F-81035D26683A.jpeg.a14e4262a261826dc046a10cb7f8b43c.jpeg

அம்புப் படுக்கையில் பீஸ்மர்.

large.3000FA34-AE68-4BCC-833B-523B6614EFA3.jpeg.bff29eb123aefce71a7d33c3f5ce3f94.jpeg

அனுமன் 

large.0F2291A0-989E-45FD-ADE2-E69A48CC4B08.jpeg.c56f8727667f56d5fb8d2e1866ef6304.jpeg

ராம லக்ஸ்மணர். கையில் தீயுடன் இலங்கையை எரிக்கும் அனுமன்

large.0AFDEAFA-20C8-4DF8-BB5B-28948574034E.jpeg.10963a9001101f5eaba151179d86ee5e.jpeg

மயிலேறும் பெருமான்?

large.74A56430-C896-4D76-B935-D3A0D66DF9C5.jpeg.5874d01db8b2a07305caa84eec0de55d.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் தடாகம்

large.AD634584-74B0-489E-A2E2-E8B186298200.jpeg.c7557b487e88d66ae7fbc9f2215fd0e7.jpeg

வாசிகசாலை

large.58612572-F3AE-42FA-BBC5-9DE80665B1FF.jpeg.38e8619a745940c80ed76543369fff11.jpeg

முகப்பில் தெரியும் ஜெயவர்மன் முகம்

large.0682A146-F91C-4EDA-B248-A82567D83114.jpeg.9725fa780642f7d947776b9440b1ae87.jpeg

ஜெயவர்மன் தன் தாய் நினைவாக கட்டிய கோவில் எங்கும் தன் முகத்தையே பதித்து வைத்துள்ளார்

large.DF6C0D4E-BD8E-4B95-BD96-D75EA090A95E.jpeg.e044d223ef0229eeab06e18e0c141411.jpeg

பாம்பின் வாலை பிடித்துள்ள தேவர்

large.965ECFC1-6F3F-4B20-AC6E-E54F253A1C34.jpeg.d972aa0ea9b140fedaa20d0cf414df40.jpeg

சூரியக்கடிகாரம்

large.E4616458-1AE3-4066-9EF6-56AD4F4944B7.jpeg.25f6c40c5315c01766a93a2c62435555.jpeg

சம்பா யுத்தம். 

large.3154AD94-7666-49DF-A42B-BE0CFBE1DD73.jpeg.6b910532c388c12bf306a65fdf741058.jpeg

ஆகி கெமர் மொழி

large.CABD816C-14B8-4136-BF33-9D62C4AC0CDB.jpeg.be60836e13c0b0131a370909eed704b5.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2020 at 7:55 PM, goshan_che said:

நீச்சல் தடாகம்

large.AD634584-74B0-489E-A2E2-E8B186298200.jpeg.c7557b487e88d66ae7fbc9f2215fd0e7.jpeg

வாசிகசாலை

large.58612572-F3AE-42FA-BBC5-9DE80665B1FF.jpeg.38e8619a745940c80ed76543369fff11.jpeg

முகப்பில் தெரியும் ஜெயவர்மன் முகம்

large.0682A146-F91C-4EDA-B248-A82567D83114.jpeg.9725fa780642f7d947776b9440b1ae87.jpeg

ஜெயவர்மன் தன் தாய் நினைவாக கட்டிய கோவில் எங்கும் தன் முகத்தையே பதித்து வைத்துள்ளார்

large.DF6C0D4E-BD8E-4B95-BD96-D75EA090A95E.jpeg.e044d223ef0229eeab06e18e0c141411.jpeg

பாம்பின் வாலை பிடித்துள்ள தேவர்

large.965ECFC1-6F3F-4B20-AC6E-E54F253A1C34.jpeg.d972aa0ea9b140fedaa20d0cf414df40.jpeg

சூரியக்கடிகாரம்

large.E4616458-1AE3-4066-9EF6-56AD4F4944B7.jpeg.25f6c40c5315c01766a93a2c62435555.jpeg

சம்பா யுத்தம். 

large.3154AD94-7666-49DF-A42B-BE0CFBE1DD73.jpeg.6b910532c388c12bf306a65fdf741058.jpeg

ஆகி கெமர் மொழி

large.CABD816C-14B8-4136-BF33-9D62C4AC0CDB.jpeg.be60836e13c0b0131a370909eed704b5.jpeg

கோஷன் ....நான் நினைக்கிறன் இதுவரையிலும் யாரும் இவ்வளவு நுணுக்கமாக படங்களையும் அதற்கான குறிப்புகளையும் பதிவு செய்திருப்பார்கள் என்று...
நான் கூட அங்கோர்வாட் பற்றிய சுற்றுலா விவரணம் ஒன்றை பார்த்தேன்...அதில் கூட இவ்வளவு குறிப்புகள் கிடைக்கவில்லை. அருமை சகோதரம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் படங்களையும் போட வேண்டாம் என்று எண்ணினேன்.  துல்லியமாக விளக்கம் தர என்னால் முடியாது  என்பதால்.கோசான் உங்களுக்குத் தெரிந்தவற்றை வந்து எழுதுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

83736090_10213570675694826_4842954571204

83021794_10213570677694876_6471733979484

83145847_10213570682174988_7021827433636

82316729_10213570682895006_4160679989529

82836263_10213570683375018_5964335287688

 

82869523_10213570685615074_8842067760893

82482544_10213570686815104_8341830025120

82480892_10213570687295116_4656772463386

83301740_10213570688375143_3736537250196

82447153_10213570688815154_9055223663489

82986562_10213570696055335_1256139309715

82364687_10213570698255390_6788557387444

82578608_10213570698615399_5231987937167

83408531_10213570698855405_4221645474043

83190278_10213570701215464_4066289798208

82447130_10213570705935582_2980317513667

83551771_10213570706455595_5642191364436

82392304_10213570706695601_7244780697800

82926619_10213570711415719_1758517571289

83727228_10213570712615749_7948604019457

82334471_10213570713495771_9001779517114

82419444_10213570719455920_4500513139317

 

 

இப்ப போட்டவற்றில் ஒரு ஒழுங்கு இல்லாமல் படங்கள் கலந்து இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று மூன்று கோவில்கள் பார்த்ததில் களைத்துவிட்டது. இன்று மாலை இன்னொரு கோவில் பார்க்கலாம் என்று எண்ணியபடி உணவருந்திவிட்டு தங்குவிடுதியில் போய் ஒருமணி நேரம் தூங்கி எழுந்து பார்த்தால் மகள் தன் கணனியில் எதோ எழுதிக்கொண்டிருக்கிறாள். தேநீர் தயாரித்து அருந்திவிட்டு இனி இன்றைக்கு எங்கே போவது என்கிறேன். மசாச் செய்வதற்கான ஒழுங்கு செய்துள்ளேன். இன்னும் அரை மணி நேரத்தில் அறைக்கே வருவார்கள் என்று கூற இங்கேயா என்று நான் சந்தேகத்துடன் இழுக்க, பதிவான கட்டிலில் எப்படித்தான் மசாச் செய்யப்போகிறார்களோ என்று நான் யோசிக்கவாரம்பித்துவிட்டேன்.

சொன்னதுபோல் நேரத்துக்கு வந்த பெண்கள் துவைத்த ஒரு துணியையும் ஆடைகளையும் கொண்டுவந்து துணியை எமது கட்டிலுக்கு விரித்துவிட்டு முழங்காலுக்குமேல் நிற்கக்கூடிய ஒரு மெல்லிய பல அளவுகளிலும் உள்ளவர்கள் அணிவதற்கேற்ற ஆடை ஒன்றைத் தந்து மாற்றிவிட்டு வரும்படி கூற எனக்கு இதை யார் முன்னர் போட்டார்களோ என்ற எண்ணம் ஓட மகளிடம் வாய்விட்டுக் கேட்கிறேன். அம்மா ஆக நுணுக்கம் பாக்காதேங்கோ. பிறகு போய் வடிவாக குளியுங்கோ. நேரத்தை வீணாக்காதேங்கோ என்றதும் உடைமாற்றிக்கொண்டு வந்து கட்டிலில் படுக்க அந்தப் பெண் முழங்காலில் கட்டிலின் பக்கவாட்டில் இருந்துகொண்டு தன் வேலையை ஆரம்பிக்கிறாள்.

ஒரு மணிநேரம் எப்படிப் போனது என்று தெரியாமல் நான் கண்மூடிக் கிடக்கிறேன். முடிந்துவிட்டது என்று அப்பெண் கூறிவிட்டு தன் கைகளைக் கழுவ குளியலறைக்குச் செல்ல எவ்வளவு இவர்களுக்கு என்று கேட்கிறேன். ஒருவருக்குப் பதினைந்து டொலேர்ஸ் என்று கூறியபடி மகள் பணத்தைக் கொடுக்கிறாள்.

அதன்பின் குளித்து வெளிக்கிட மாலை ஐந்துமணியாகிவிட்டது. நடந்து மீண்டும் எங்கள் விடுதிக்கு அண்மையில் உள்ள கடைத் தெருவுக்குள் நுழைய இருட்டிக்கொண்டு வருகிறது. பல கடைகளுக்கு ஏறி இறங்கினாலும் பெரிதாக எதையும் வாங்க மானம் வராமல் ஒரு தெருவுக்குள் பார்த்தால் கண்ணைக் கவரும் ஓவியங்கள் மனத்தைக் கவர்ந்து என்னை இழுக்கின்றன. அத்தெருவில் பல கடைகளில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான ஓவியங்கள் காணப்படுகின்றன. பலரும் எங்கள் கடைக்கு வா என அழைக்கின்றனர். நாம் சிரித்தபடியே கடந்து செல்ல ஓரிடத்தில் ஒரு இருபத்தைந்து வயதுக்குள் இருப்பதுபோல் தோற்றமுடைய ஒருவன் ஓவியம் வரைந்துகொண்டு இருக்கிறான். நான் மேற்கொண்டு நகராது நின்று அவன் வரைவதைப் பார்க்கிறேன். கைவந்த கலை என்பார்களே அதை நான் அன்றும் பார்த்தேன்.

நாம் நின்று பார்ப்பதைக் கவனித்தவன் சிரித்தபடி எதை வாங்கப்போகிறீர்கள் என்கிறான். இதை எப்படிக் கொண்டுபோவது என்கிறேன் நான். ஓவியங்கள் துணியில் வரையப்பட்டு சுற்றிவர பலகை அடித்திருந்தது. பலகையைக் கழற்றிவிட்டு ஓவியத்தைச் சுற்றி நன்றாகப் பாதுகாப்பாகத்  தருகிறேன் என்கிறான் அவன். ஓலைகளில் பின்னப்பட்ட குழாய்கள் போற்ற இரண்டை என்னிடம் காட்டி இதற்குள் வைத்துத் தருகிறேன் என்கிறான். விமான நிலையத்தில் இதை கையில் கொண்டுபோக விடுவார்களா என்கிறேன் நான். எமது நாட்டில் விட்டுவிடுவார்கள். நான் பொய் கூறவில்லை என்று அவன் கூற, நாமிருவர் இருக்கிறோம் அம்மா. வாங்குங்கோ என்கிறாள் மகள். எனக்கே எதைவாங்குவது என்று குழப்பமாக்கிப் போகுமளவு எல்லாமே ஒவ்வொருவித அழகு.  
அங்கோர் வாட் கோயில் வாங்குவது தான் நல்லது என எண்ணி அதில் இரண்டைத் தெரிவுசெய்தால் அதில் புத்தரையும் வரைந்துள்ளார்கள். புத்தர் இல்லாமல் வரைந்த ஓவியம் இருக்கிறதா என்று கேட்க, இது பெளத்த நாடுதானே என்கிறான் அவன். அவன் கூறிய விதம் எனக்குள் கோபத்தை வரவழைக்க சரி அப்ப நான் வேறு கடையில் புத்தர் இல்லாத ஓவியமாகப் பார்க்கிறேன் என்கிறேன்.
அவன் உடனே பொறு பொறு  புத்தர் இல்லாதது ஒன்று இருக்கிறது என்கிறான். ஒரு பத்துப்பதினைந்து ஓவியங்களை நகர்த்திப் புத்தர் இல்லாத ஓவியம் ஒன்றைக் கொண்டு வருகிறான். எவ்வளவு என்றுகேட்க 150 டொலேர்ஸ் என்கிறான். நான் 75 டொலேர்ஸ் என்கிறேன். நீ என்ன இத்தனை குறைவாகக் கேட்கிறாய் இது எத்தனை பெரிய படம். சரி 125 டொலேர்ஸ் தா என்கிறான். அம்மா கீறுவது எத்தனை கடினமென்று உங்களுக்குத் தெரியும் தானே. இது அழகாக இருக்கு. அவன் கேட்பதைக் குடுங்கோ என்கிறாள் மகள்.
நீ பேசாமல் இரு என்றுவிட்டு  சரி நூறு டொலேர்ஸ் என்றால் தா. இல்லை என்றால் நான் வேறு கடையைப் பார்க்கிறேன் என்று கூற சரி தருகிறேன் என்றுவிட்டு நான்கு பக்கமும் இருக்கும் பலகையைக் கழற்றி வடிவாகச் சுற்றி அந்த ஓலைப் பெட்டியில் வைத்துத் தர நான் பணத்தைக் கொடுக்கிறேன்.

அதை வாங்கிக்கொண்டு வீதியில் நடந்து வர மிகப் பெரிய கடை ஒன்றில் மிக அதிகமான ஓவியங்கள் காணப்பட அவசரப்பட்டுவிட்டேனோ என்று மனம் எண்ண, சரி வாங்கியது அழகுதான். அதனால் இனி வேறு எந்தக் கடைக்குள்ளும் சென்று ஓவியங்களை பார்ப்பதில்லை என இருவரும் முடிவெடுத்தபடி நடக்கிறோம். 

82587248_10213571075424819_1452024075072

 

என் வீட்டுச் சுவரில் கணவரின் கைவண்ணத்தில் சட்டகங்கள் செய்யப்பட்டு அந்த ஓவியம்.

 

82517950_10213573160556946_5205851029651

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்  வடிவா இருக்கிறது ஓவியம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.